Saturday, November 7, 2009

Thiru. Vi. Ka, the Tamil Gandhi & His Times: Ch: 5: Tamil Gandhi

THE TAMIL GANDHI

Date: Sunday, April 6, 1919

This is a sacred day in Indian History - Satyagraha Day. A Sanskrit word, it means what it says – Truth Takes Over. This mantra won Independence for us. It is a basic Gandhian tenet, brought alive that day to protest the infamous Rowlatt Act 1919 authorizing the government to imprison people without trial. Constitutional protests were brushed aside and it became law on March 10, 1919. The whole country was agitated. Ever the organization man, Gandhiji had set the date for the nation-wide Satyagraha Day well in advance, toured the country, extracted promises of patent transgression of the law and manifest good behaviour. The mantra spread like a wild fire.

ThiruViKa, a signatory of this pledge recalls the Madras outcome in his autobiography. The Royapettah and the Labour beats were assigned to him. Kamath partnered him in the former, Dhandapani Pillai in the latter. Toiling day and night, they let posters and pamphlets fly. A monitoring committee, including him and Rajaji, toured the whole city. Tempers, they found, running high at Perambur, a Labour stronghold. VaOosi and Dhandapani Pillai were struggling to keep peace and ThiruViKa delivered a Gandhian oration, lending the inimitable ThiruViKa touch, by citing Vashista, Prahlada, Jesus Christ and Appar. He asked them to disperse and reassemble the next day and keep peace. The mob behaved on both days.

Satyagraha Day was a day of penance, celebration and sacrifice. Bajans at the crack of the dawn (a Madras ‘must’), waves and waves of people pouring at Desabakthan office, a long procession vending its way to Guhananda Nilayam, the saivete centre, the Day was observed with becoming élan. Bharathiyar meandered in and deferred to ThiruViKa, and chanted, ‘Muruga, Muruga’. This was an impromptu Invocation. The effect was electric, moving the gathering to tears and me now.

A massive Labour army joined. Shops magically opened shutters, hastily prepared pots and pots of sweetened water and served to the thirsty army. The Behemoth wended its way to the waterfront and speeches were made. ThiruViKa complements his own vocal chord for being the in-built loud hailer. He expected imminent arrest; he was not arrested and thereby hangs a different tale! This long introduction serves three purposes - introducing the Tamil Gandhi, highlighting the pulse of the people and bringing out ThiruViKa in his elements. Whoever said that he a reticent person? Though not in this context, one cannot, but, record the outrage that stunned the nation on April 13, 1919 – the Jallianwala Bagh Massacre at the Holy City of Amritsar, Punjab. That single week rewrote Indian history.

He called on Gandhiji in his railway coach at Arakonam halt on March 18, 1919, armed with a letter of introduction from Salem Sir T. Vijayaraghavachariar. It was his first darshan of the Mahatma. The meet is best described in his words.

I felt, he says, the presence of Raja Harichandra, the mythological king wedded to truth, Buddha and The Tamil saint, Thiruvalluvar.

Gandhiji asked him to be his interpreter and the first opportunity came a few days later, when he addressed the Labour at Preambur and Pattalam. The Tamil Gandhi, as he was addressed by many thereafter, took to reading Tolstoy to understand Gandhiji. Thus fortified, he authored the book, ‘Mahatma Gandhi & the Human Situation’ in 1921, illuminating Gandhism for the Tamil. He says in his Preface dated the May 1, 1921 that an essay in Desabakthan Annual of 1919 was developed into a pamphlet of fifty one pages and then into a book, “Gandhiji and the Human Situation” in five hundred pages. He wished to revise it for the third edition in 1926. That was not to be, as he was assailed by tragedies in the family. We do not know what he had in mind. He lived that book for the rest of his life, even in food habits and attire out of conviction.

Gnaniyar Adigal, the saintly scholar, once referred to Gandhiji as ‘ThiruViKa from the North’, Dr. Aa. Nagalingam, the only PhD researcher on ThiruViKa, told the writer. Gnaniyar Adigal was no ordinary person. A mystic and Tamil scholar, he was venerated for his wisdom. Pa. Mahalingam, in the Festschrift 1983, traces the Gandhian influence to an earlier talk by Dr. Henry.S. Polak. It was he, who gifted John Ruskin's book "Unto the Last" to Gandhiji in South Africa and thereby shaped the destiny of our nation. ThiruViKa dedicated himself to all the Gandhian values – truth, Satyagraha, non-violence, harijan uplift, prohibition, patriotism and women empowerment, in his writings and speeches. When exactly Gandhiji overtook Marx? We do not know except that the lines are blurred. This much is clear. He wrote in Navasakthi of March 17, 1922 that institutions should be formed for preserving and propagating Gandhian ideals, as the Congress party would forget him.

அம்மா சொல்படி ராஜூ: மின்னல் வேகம்: 22: 07 11 09

அம்மா சொல்படி ராஜூ: (மின்னல் வேகம்): பகுதி 22: 7 11 2009

(புதுக்கோட்டை அழைக்க)

(புதுக்கோட்டைக்கு வந்து விட்டோம்...) ... ஆனால் என் புருஷன் மாத்திரம் குறைந்த பக்ஷம் பதினைந்து வருஷம் ஓட்டலில் சாப்பிட்டு வந்தார்.84 இதற்கிடையில் காரைக்குடி போய் பார்க்கலாம் என்று போனேன். அங்கு என் தம்பிக்கு மூன்றாவது பெண் இருந்தது. அது திடீரென்று இறந்து விட்டது. என் அப்பாவிற்கும் அது ஒரு வருத்தம். அந்த சமயத்தில் என் அப்பாவிற்கும் உடம்பு சரியில்லாமல் இருந்தது. பிறகு அவருக்கு உடம்பு நன்றாகத் தேவலை. புதுக்கோட்டையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இருந்தேன். நமக்கு குழந்தைகள் படிப்பு தான் முக்யம். ஆனால் ஸ்ரீகாரம் (தத்து) கொடுத்த பையனுக்கு கொஞ்சம் நிலம் உண்டு. அதில் நெல் வரும். அதை வைத்துக்கொண்டும், வீட்டில் இரண்டு வீடு உண்டு. 85 இரண்டில் பெரிய வீட்டை வாடகைக்கு வைத்துவிட்டு அந்த வாடகையையும் வாங்கி வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினேன். ஆனால் என் அப்பா அடிக்கடி வந்து பார்ப்பார். என் அப்பாவிற்கு உடம்புக்கு வந்ததால், அவருக்கு பணமுடை ஏற்பட்டு விட்டது. ஏற்கனவே என் அக்கா புருஷன் நிலத்திலிருந்து அரிசியை தான் வாங்கிக்கொள்வார். ஆனால், அந்த பணத்தை ப்யாங்கில் (வங்கி) போட்டு விடுவார். ஆனால் நான் புதுக்கோட்டையில் நல்ல முறையில் குடும்பம் நடத்தினேன். நானும் கிராமத்திற்குப் போய் கிஸ்தி (வரி) கட்டி விட்டு நெல்லை வண்டியில் கொண்டு போடும்படி குடியானவனிடம் சொல்லிவிட்டு புதுக்கோட்டை வந்து விடுவேன். ஆனால், என் பிள்ளையை புதுக்கோட்டையில் அத்தைக்கு ஸ்ரீகாரம் கொடுத்த அடுத்த வருஷம் என் அக்கா மூன்றாவது பெண் - அதாவது என் கல்யாணத்தின் போது உண்டாகியிருந்தாள். என் (தலை) தீபாவளிக்குள் அக்காவிற்கு அக்காவிற்கு பெண் பிறந்தது - அந்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தார், என் அப்பா. அத்திம்பேர் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கல்யாணத்திற்குத்தான் அக்கா பணத்தில் எடுத்து செலவு செய்தார். அப்போது நான் உசிலம்பட்டியில் இருந்து வந்தேன். அப்போது புதுக்கோட்டையிலிருந்து என் அத்தை அவனையும் (ரகு) அழைத்து வந்தார். நான் உன் பிள்ளையை நன்றாக வைத்திருக்கிறேன் என்று சொன்னாள். சரி என்று சொல்லிவிட்டு நானும் என் புருஷனும் உசிலம்பட்டி போய் விட்டோம். ஆனால், அதற்கு பிறகு தான் புதுக்கோட்டை வந்தோம். பெரியவன் எஃப் .ஏ (கல்லூரியில் முதல் நிலை) படித்துக் கொண்டிருந்தான். பெரிய பெண் திருநெல்வேலியில் படித்து விட்டாள். பிறகு அவள் படிக்க முடியவில்லை. 86 ஏன் என்றால் எனக்கு ஏழாவது குழந்தை பிறக்கும் சமயத்தில் உதவிக்கு யாரும் இல்லை. அவள் தான் குடும்பத்தையே பார்க்கும்படி ஆகிவிட்டது. ஆனால் என் அம்மா வந்தாள். அவளால் சமையல் தான் செய்வார். வேறு ஒன்றும் முடியாது. எனக்கு பிள்ளைக்குழந்தை பிறந்தது. அப்போது என் புருஷனை சேலம் பக்கத்தில் தர்மபுரி என்ற ஊரில் மாத்தியிருந்தார்கள். ஆனால், அவர் குழந்தை பிறந்த புண்யாவசனத்திற்கு வரவில்லை. அப்போது அவருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். இப்படி இருக்கும்போது அவரும் அடிக்கடி புதுக்கோட்டை வருவார். நாங்கள் கொல்லையில் (கிச்சன் கார்டென் எனலாம்) கத்திரிச்செடியெல்லாம் போட்டிருப்போம். அவரும் வந்த சமயம் தண்ணீர் கொட்டுவார். இப்படியிருக்கும் போது திடீரென்று அவருக்கு முதுகில் ஒரு சின்ன கட்டி மாதுரி இருந்தது. ஆனால் குத்து வலி ரொம்ப கஷ்டப்பட்டார். நானும் அக்கி என்று எழுதினோம். 87 பலன் இல்லை. பக்கத்தில் டி.வீ.எஸ் கம்பெனி டாக்டர் ஒருத்தர் இருந்தார். அவருக்கு தியாகராஜன் என்று பெயர். அவரிடம் காண்பித்தோம். அவர் ஊசி போட்டார். அது அலர்ஜியாகி முதுகு பூராவும் கொப்புளம் மாதுரி வந்து விட்டது. ஆனால் அதற்கு முன்னாடியே பெண் கல்யாணம் செய்வதற்காக முன் செலவுகள் வரும் என்று தன்னுடைய ப்ராவிடண்ட் ஃபண்ட் பணத்தில் கொஞ்சம் எடுத்துக் கொண்டார். ஆனால் முதுகுக்கு வந்து கஷ்டப்பட்டதை என் அப்பாவிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னார். அது முடிகிற காரியமா? ±ý «ôÀ¡Å¢üÌ ¦¾Ã¢óРŢð¼Ð. ±ý «ì¸¡¨Åì ÜôÀ¢ðÎ ¿£ ÒÐ째¡ð¨¼ §À¡ö Á¡ôÀ¢û¨Ç¨Â «¨ÆòÐ ÅÕõÀÊ «ì¸¡¨Å «ÛôÀ¢ ¨Åò¾¡÷. «ì¸¡×õ Åó¾¡û. À¡÷òÐÅ¢ðÎ ¿£í¸û ¯¼§É ¸¨ÃìÌÊ ÅÕõÀÊ ±ý «ôÀ¡ ¦º¡øÄ¢ Å¢ð¼¡÷; «íÌ ¿øÄ ¨Åò¾¢Âõ ¦ºöÂÄ¡õ ±ýÚ ±ý¨É «ÛôÀ¢ ¨Åò¾¡÷. நீங்¸û ¯¼§É ÒÃ(È)ôÀÎí¸û ±ýÚ ¦º¡øÄ¢ ±ý ¦Àâ ¦ÀñÏõ, ±ý ÒÕ„Ûõ ±ý «ì¸¡×¼ý ¸¡¨ÃìÌÊ §À¡É¡÷. «íÌ ¬ò¾¢ø (Å£ðÊø) «õÁ¡Å¢üÌ ¯¼õÒ ºÃ¢Â¢ø¨Ä ±ýÚ «ì¸¡ ¯¾Å¢ìÌ Åó¾¢Õ츢ȡû. «¾É¡ø ±ý Òரு„¨ÉÔõ «¨ÆòÐô§À¡É¡û. ¿¡ý ÒÐ째¡ð¨¼Â¢ø ÌÆ󨾸ټý þÕó§¾ý. ¸¡¨ÃìÌÊ¢ø ÓÕ§¸ºý ±ýÚ ¬Ô÷§Å¾ ¨Åò¾¢Â ¼¡ì¼÷. «Å÷ ±ý ÒÕ„ÛìÌ ¨Åò¾¢Âõ À¡÷òÐ ¿ýÈ¡¸ò §¾Å¨Ä. ±ý «õÁ¡Å¢üÌõ §¾Å¨Ä. ±ý Òரு„ý ÒÐ째¡ð¨¼ ÅóРŢðÎ ÁÚÀÊÔõ Ä£× ÓÊóÐ ¾÷ÁÒâ §À¡öÅ¢ð¼¡÷. þôÀÊ þÕìÌõ§À¡Ð ±ý «ôÀ¡ ±ýÉ¢¼õ ¿£ À¢û¨Ç¸ÙìÌ âßø88 §À¡¼§Åñ¼¡Á¡? Á¡ôÀ¢û¨ÇÔõ §Àº¡Áø þÕ츢ȡ÷? «¾üÌ ¿¡ý ´Õ §Â¡ƒ¨É ±ýɦÅýÈ¡ø ஸ்ரீகாரம் கொடுத்த பிள்ளைக்கும் உன் பெரிய பிள்ளைக்கும் நானே பூணூல் போட ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கிறேன்? நிற்க. எச்சம்மா (பெரியம்மா) பெண் அம்புலுக்கும் கல்யாணம் செய்வதாக இருக்கிறோம். அதோடு உன் பிள்ளைகள் இரண்டு பேருக்கும் (பூணூல்) போடலாம் என்று நினைக்கிறேன்...

84. இனி ருக்மிணி மின்னல் வேகத்தில் பறக்கிறார். பல வருடங்களை சில பக்கங்களில் அடக்கி விடுகிறார், தொய்வில்லாமல், முக்கிய நிகழ்வுகளை ஒதுக்காமல் கதை தொடர்கிறது. ‘ஆனாலும்’ அதிகரிக்கிறது!

85. இரண்டுமே சிறியவை, ஒரு வீட்டின் இரு பகுதிகள். முதலில் நான் பார்த்தபோதே, நான் எங்கோ கண்ட வீடு எனத்தோன்றியது! Dejavu?

86. மற்றொரு காரணம் பத்தாம் பசலித்தனம். பெண்கள் இந்த அளவு படித்தால் போதும் என்ற மனப்பான்மை. நான் அம்மாவுடன் சண்டைப் போட்டேன். உண்ணா நோன்பு இருந்தேன். பலிக்கவில்லை.

87. Herpes. அக்கி நீக்க, அந்த அவயவத்தில் குயவரை அழைத்து சித்ரம் எழுதச் சொல்வது, கிராமிய வைத்யம்.

88. மூன்று வர்ணத்தோரும் முப்புரி நூல் அணிந்தாலும், பிராமணர்களுக்கு முக்கிய சடங்கு. இதற்கு பிறகு தான் அவன் பிராமணனாக மறு ஜென்மம் எடுக்கிறான்.

(மின்னல் வேகம்)

அம்மா சொல்படி ராஜூ: நெடுங்குறிப்பு: 5 11 2009

அம்மா சொல்படி ராஜூ: (நெடுங்குறிப்பு:1) பகுதி 21: 5 11 2009

இணைப்பு 1

நெடுங்குறிப்பு: 1

பொது:

விளக்கம் தர, விவரமான குறிப்புகள் எழுதியிருந்தாலும், தடம் மாறுமோ, என்னை முன்னிலையில் வைத்துவிடுவோனோ என்ற அச்சத்தில், அவற்றை சுருக்கினேன். அவ்வப்போது, ஒரு நெடுங்குறிப்பு உதவலாம், என இந்த இடுகை. அரும்பதவுரைக்கு, ஒரு glossary அமைக்கப்படும். அது வரை, தக்க பதவுரையை இடுகைகளில் தர முயலுவேன். வாசகர்களின் feedback சீர் செய்யவும், புரிய வைக்கவும் உதவும்.. குற்றம் குறைகள் இருந்தால், தயை கூர்ந்து, சொல்லவும். இப்போ அம்மா மின் தமிழின் கர்ப்பத்தில்னா வாசம் பண்றா.

அம்மா கிட்டத்தட்ட எழுபது வருட வாழ்வை - அவளுக்கு நினைவு வந்ததிலிருந்து நான் ஓய்வு பெறும் வரை - எழுதியிருக்கிறார். தொடர்ந்தும், காலம் தாழ்த்தியும், சுருக்கியும், விரித்தும், எழுதியதாக தோன்றுகிறது. சில விஷயங்கள் போக, போகத்தான் புரியும். கடவுளைப்பற்றியும், அமானுஷ்யத்தைப் பற்றியும் அம்மா ஆங்காங்கே குறிப்பால் உணர்த்தியுள்ளாள். காத்திருந்து நோக்குக. சில விஷயங்கள் இங்கேயும் பேசப்படுகின்றன.

சுற்றம்

அம்மா ‘என் அப்பா’, ‘என் புருஷன்’, ‘பெரியவன்’ என்று தந்தை ஸ்ரீ ரெகுநாத தாத்தாச்சாரியர் அவர்களையும், ‘பட்டப்பா’, ‘தேசிகன்’, ‘ஐ.எஸ்’ என்ற பெயர்களுடன் வரும் கணவன்

ஸ்ரீ. ஐ.எஸ். ஸ்ரீநிவாசன் அவர்களையும், ‘ராஜூ’, ‘பெரிய ராஜூ’ என்ற என்னையும் பெயர் சொல்லாமல் குறிக்கிறார். அவரது வாழ்க்கையில் இந்த மூவரும் தான் பெரிதும் இயங்கியவர்கள். பெயர் கூறா மர்மம் அறியேன். எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லப் பெயர்கள், காரணப்பெயர்கள், கேலிப்பெயர்கள் உண்டு. அப்பா ‘ரூத் (Ruth) ருக்மிணி’ என்று சொன்னால், குஷி அல்லது கிருத்துவ மத போதகர் வியர்த்தமாக (வீணாக) வந்து விட்டுப்போனார் என்று பொருள். எனக்கு ‘போக்குவரத்து சுப்ரமண்யம்’ என்றும் ஒரு பெயர். அடுத்தவள் ஜெம்பகத்திற்கு சில சமயம், ‘கணக்கு ராணி’ என்று பெயர். அடுத்து வந்த ரெகுநாதனுக்கு, ‘நமுட்டு விஷமம்’ என்று பெயர். சத்தமில்லாமல் க்ருத்திரமம் (விஷமம்) செய்வான். அடுத்தவள் கமலா, சவலை/ நீலி. குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தால், மூத்தது ஏங்கும். இளையதும் அடம் பிடிக்கும். அது தான் சவலை; இவள் அழுதால், மூச்சு நிற்கும்; உடல் நீலம் பாரிக்கும். (ரத்த ஓட்டம் தடை படுவதால், உடல் நீல நிறம்.) வீடே surrender. அடுத்தவன் பார்த்தசாரதி கள்ளுளி மங்கன் (பேசாமல் கழுத்தறுப்பான்). களைத்து போய் விட்டோமோ என்னவோ, பிறகு வந்த சந்திரா, முரளி என்ற ஜெகன்னாதன், ஹேமாவுக்கு செல்லப்பெயர்கள் இல்லை. சந்திராவை இப்போது நான் ‘அவ்வையார்’ என்று கூப்பிடுவேன். பார்த்தசாரதி, ரகு, ஜெம்பகம் ஆகிய மூவரை இழந்து விட்டோம்.

எந்தை தந்தை ‘இன்னம்பூர் சிங்கம்’ ‘பட்டாமணியம்’ (village chieftain) ஸ்ரீ. செளந்தரராஜ அய்யங்கார். ஊரை இரண்டு பன்ணுபவர்கள் அவருக்கு பக்ஷணம். அவர்களை மூன்று/ நான்கு கூறாக்கிவிடுவார்! பிறகு, நார், நாராகக் கிழித்து விடுவார். அவருக்கு ஒரு அனுபந்தம். (இணைப்பு) என் தந்தையோ இளகிய சிங்கம்! உணர்ச்சிப்பிரவாகம். 1 அத்தைகள், வேதம், நாமு, கோமளம் நன்முத்துக்கள். கோமளம் என்னை ஆளாக்கினவள். அவளுக்கும் ஒரு அனுபந்தம்,

பார்த்தசாரதி:

அவன் வந்ததும் போனதும் புரியவில்லை. புதுக்கோட்டையில் புதுக்குளம் என்றொரு பெரிய குடிநீர்க்குளம். சுற்றி ஓடினால் ஒரு மைல். அது தான் எனக்கு தேஹாப்பியாஸம், அதி காலையில். ஒரு நாள், 4/5 வயதான பார்த்தசாரதியும் கூட வந்தான். அருகில் இருந்த சுடுகாட்டிலிருந்து ஒரு ஜடாமுனி வந்தார். நான் அஞ்சினேன். அவர் வானை நோக்கி ‘இவன் இந்த நக்ஷத்திரம் போல் ஜொலிப்பான்’ என்றார். இன்னும் ஜொலிக்கிறானோ?

இந்த கள்ளுளிமங்கன், ஒரு நாள் பெந்தகோஸ் என்ற கிருத்துவ சபையில் ஐக்யமாகி விட்டான். திருப்புவது பெரும்பாடாகி விட்டது. இவன் உசிலம்பட்டியில் படித்த கத்தோலிக்க பள்ளியில் ஸ்கேலால் தலையில் அடித்தார்கள் என்று அங்கு போவதை நிறுத்தி விட்டான். கன்யாஸ்த்ரீகள் வீட்டுக்கு வந்து கெஞ்சினார்கள். ஐயா ‘நோ’ என்று விட்டார். அருமையாக இங்கிலீஷ் பேசுவான்: அஃபா, என்றால் அப்பா; ஃபென்சில் என்றால் பென்சில்! பாளையங்கோட்டையிலலிருந்து, அப்பாவை தஞ்சாவூருக்கு மாற்றி விட்டார்கள், எனக்கு ஜுரம் வந்த அன்று. இவன் ஏதோ பழைய பாடப்புத்தகங்களை வாங்கி வந்துவிட்டான். (தமிழ் பாடம் இன்றும் என்னிடம் உள்ளது; மின்னாக்கம் செய்யத் தகும்: 1948). அப்பா, ‘என்னடா! மாற்றல் ஆன சமயத்தில்’ என்றார். மறு நாள் அதையெல்லாம் விற்று விட்டு, அப்பாவிடம், ‘இந்தா உன் பணம்’ என்று கொடுத்தான். வயது 10. அன்று படுத்தவன் எழுந்திருக்கவில்லை. எந்த ஊர் கணக்கு இது? அப்பா கடைசி வரை இதை சொல்லி கண்ணீர் சிந்துவார். அவருக்கு புத்திரசோகம் தீரா வியாதி. அம்மாவோ அசலம். (அசையா மலை; உதாரணம்: அருணாச்சலம்).

கடவுளும், அமானுஷ்யமும்:

புதுக்கோட்டையில் ஒரு சமயம் குழந்தை சந்திரா இரத்த பேதியால் சாகக்கிடந்தாள். அப்பாவுக்கு தெரிந்த மருந்துக்கடைக்குப் போனேன். அங்கு ஒரு சாமியார். அவர் ‘ஏ’ ‘பி’ என்று சில பொட்டணங்கள் கொடுத்தார். அன்றே குணம். மருந்துக்கடை மாமா, சாமியாரைப்பற்றி கேட்டால், மழுப்புவார். சில மாதங்களுக்குள்ளோ என்னமோ, சரியாக நினைவு இல்லை, மாமாவுக்கு பேதி. போய் சேர்ந்தார். ஏன் இந்த விசனம்?

மூன்று சகோதர்களும் ஆஸ்பத்திரியில் கிடந்த போது, கத்தோலிக்க துறவிமார் வருவார்கள். ஃபாதர் ஜாலி என்பவர், ‘Trust in God; Trust Absolutely’ என்று சொல்லிக்கொண்டே வருவார். வார்டே முறுவலிக்கும். ஒரு இஸ்லாமியர் எங்களுக்கு துவா (ஆசி) வழங்குவார். பார்த்தசாரதியின் படுக்கையில் ஒரு காலேஜ் பையனை சேர்த்தார்கள். அப்பா அங்கே வேண்டாம் என்று கெஞ்சினார். வேறு இடமில்லை. அவன் தந்தை ஒரு கத்தோலிக்கர். கேரளாவில் பிரபல வக்கீல். தினந்தோறும் என் படுக்கைக்கு வந்து சத் விஷயங்கள் சொல்வார். மத போதனை செய்யவில்லை. It is he, who cast my moral fibre. அவர் கொடுத்த நூல்கள் என் வம்சாவளிக்கும் உதவியன. பல வருஷங்கள் தொடர்பில் இருந்தார். அவரது பையன் பிழைக்கவில்லை. அவரது மனைவி வரவில்லை. அப்போது தான் அவளுக்கு ஒரு குழந்தை. அவரது மனோதிடத்தைப் பார்த்து, பாளையங்கோட்டையே வியந்தது. ஒரு சமயம் நான் டில்லி போனபோது, ஒரு பிரபல வக்கீல் வந்து என்னைப் பார்த்தார். அவர் தான் அந்த குழந்தை. அவர் குடும்பம் என்னை தான் மூத்த மகனாக கருதியது என்றார்.

அம்மா தெய்வநாயகம் பிள்ளையைப் பற்றி சொன்னது சரியே. வீட்டில் அம்மை போட்டிருக்கிறது. வெளியில் போகக்கூடாது என்று மரபு. வீட்டின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் டோனாவூர் வந்தார். அவர் வந்து நின்றாலே, சாந்தி நிலவும். துள்ளி வருவது வேல் அல்ல. சாக்யமுனியின் ஒளி வட்டம். பல வருடங்களுக்கு பின், ஒரு முதிய அந்தணரைப்போல சென்னை வந்தார். குடும்பத்துடன் சென்று அவரை வணங்கினேன். அவர் சொன்னார், இவர் தான் எனக்கு ‘முத்திரை’ போடுவார் என்று. நெல்லைச்சீமையில் சிறுவர்களையும் பன்மையில் தான் குறிப்பிடுவார்கள்.

டோனாவூரில் 40 வது நாளாக நினைவு இழந்து கிடந்த கமலா ஒரு நாள் காலை (ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் புரிந்தது) இட்லி, மிளகாய் பொடி கேட்டாள். வேறு ஒன்றுமில்லை. கத்தோலிக்க கன்யாஸ்திரீக்கள் கொடுத்த ஸிஸ்டர் (now Saint) அல்ஃபான்ஸாவின் உடையின் ஒரு சிறிய துண்டு கொடுத்தார்கள். அதை தலையணைக்கு அடியில் வைத்தேன், முந்திய இரவில். டோனாவூரோ ப்ராடெஸ்டெண்ட் மிஷன். அவர்கள் சிரித்தார்கள்.

அங்கும் ஒரு கடவுள். ஆண்கள் அண்ணாச்சி, பெண்கள் அத்தை. வாடகை ஒரு ரூபாய் ஒரு நாளுக்கு, அதுவும், ஒரு குடிலுக்கு; சின்னத்தோட்டம் வேறே. பணக்காரனுக்கு ஒரு சார்ஜ்; ஏழைக்கு ஒரு சார்ஜ். இமாலயம் ஏறிய டாக்டர் சோமர்வில், நெய்யூரிலிருந்து அங்கு வருவார். கண்டிப்பாக, வாராவாரம் பில் செட்டில் செய்யவேண்டும். ஒரு வாரம் பில் ரூபாய் 281 போல. நினவு இல்லை. ‘ராஜூ! ஏன் ஒரு மாதிரி பார்க்கிறாய்?’ என்றாள் ஜெர்மானிய நூரானி அத்தை. ‘பணம் இல்லையே’ என்றேன், கண்ணில் நீர் துளிக்க. 15 வயது. ரோஷக்குடும்பம். பில்லை வாங்கிக்கொண்டே, செட்டில் செய்யணும் என்று சொல்லி, பில்லை திருப்பிக்கொடுத்தார். பில்லில் 2, 8 அடிக்கப்பட்டு, 1 மட்டும் தான் இருந்தது. ஒன்றோ, ஒன்பதோ. அது பாயிண்ட் அல்ல. நான் சொன்னேன், ‘அத்தை! இதை வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். எல்லாரிடமும் சொல்வேன்’ என்று. அம்மா சொல்படி, உங்களிடமும் சொல்லிவிட்டேன்.

நேயம் தமிழில் இருந்தால் என்ன? வடமொழியில் இருந்தால் என்ன? ஹீப்ரூவில் இருந்தால் என்ன? கடவுள் எங்கே இருக்கிறான்? தெய்வநாயகம் பிள்ளையும், நூரானி அத்தையும், இடம், பொருள், ஏவல் என்று பேசப்பட்டால், தெய்வம் இல்லையா? ஜடாமுனியும், மருத்துவ சாமியும், ஸைண்ட் அல்ஃபான்ஸாவும், அமானுஷ்யரா? . அது சரி, அமானுஷ்யத்திற்கு தமிழ் என்ன?

பார்த்தேளா? குறிப்பு நீண்டே விட்டது. நானும் பேச ஆரம்பித்து விட்டேன். இது நிற்க.

இன்னம்பூரான்

குறிப்பு 1: அப்பா எனக்கு ‘Home They Brought Her Warrior Dead’ [Alfred Tennyson], ‘Ye know, We stormed Ratisbon’ [Robert Southey], ‘We are Seven’ [Oliver Goldsmith] சொல்லிக்கொடுத்து இருக்கிறார். முடித்தது இல்லை. உணர்ச்சி வசப்படுவார்.

Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: அட்டை: 20:(புதுக்கோட்டை அழைக்க. ...)

அம்மா சொல்படி ராஜூ: (புதுக்கோட்டை அழைக்க. ...)

பகுதி 21: 5 11 2009

(‘டோனாவூர்’)

(அன்று ராத்திரி நல்லபோது ஆகப்போச்சு...) ... தெய்வநாயகம் பிள்ளை ஊருக்குப் போய்விட்டார். வீட்டிற்குப் போய் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னோம். ஆஸ்பத்திரியில் நானும், என் புருஷனும் இருந்தோம். டாக்டர் வந்து டீஸ்மெண்ட் நடந்தது. ஆனால், என் புருஷனுக்கு லீவு போடமுடியவில்லை. அதனால் பெரியபையனை எனக்குத் துணைக்கு அனுப்பிவிட்டு, தான் வேலைக்குப் போய்க்கொண்டும், ஆத்தில் இருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொண்டும், அதோடு வந்து எங்களையும் வந்து பார்த்துவிட்டு சிலவுக்குப் பணம் கொடுத்து விட்டுப் போவார். ஆனால் அப்போது பணம் உதவி யாரும் செய்வார் இல்லை. ஊர் புதிசு. அதனால் என் வளையல் ஒரு ஜோடியை வித்துத் தான் செலவு செய்தோம். 83 தவிர என் அட்டிகையை தெரிந்த ஒரு வக்கீல் அவரிடம் கொடுத்து அதற்கு மேல் பணம் வாங்கி வைத்துக்கொண்டு டாக்டர் செலவு செய்தோம். என் அப்பாவும் கொடுத்தார். அது குழந்தைகள் டைஃபாயட் போது செலவாகி விட்டது. இப்படியே ஒரு நாலு மாஸம் ஆயிற்று. இதிலும் எனக்கு சோதனை கொடுத்தார் பகவான். ஒரு பிள்ளை இறந்த பிறகு கொஞ்ச நாள் ஆனதும் ஏழாவது உண்டாயிருந்தேன். அதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. பிறகு கடவுள் விட்டபடி என்று இருந்து விட்டேன். பிறகு என் பெரிய பெண்ணுக்குத் தொண்டையில் டான்ஸல் இருந்தது. அதை ஆபரேஷன் செய்யவேண்டும் என்று அவளையும் கொஞ்ச நாள் டோனாவூரில் கொண்டு வந்து விட்டார். நல்லபடியாக ஆபரேஷன் நடந்தது. எல்லாம் பகவான் அருளால் இரண்டு பெண்களுக்கும் நன்றாக செளக்யமாகி விட்டது. கமலா என்கிற பென்ணுக்குத் தான் ஜுரம் வந்து நினைவு இல்லாமல் இருந்து டோனாவூர் போய் நன்றாக ஆகிவிட்டது. ஆனால், அவளுக்கு ஆகாரம், மருந்து எல்லாமே மூக்கு வழியாகத் தான் டாக்டர் கொடுத்தார். டோனாவூரிலும் குறைந்த பக்ஷம் மூன்று மாஸம் ஆகிவிட்டது. ஆனால் நான் குழந்தைகளை எல்லாரையும் வக்கீல் மாமா வீட்டிற்குக் கொண்டு விட்டோம். அங்கு நாங்கள் இருக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் அம்மன் கோவில் ஒன்று இருந்தது. எனக்கு ராத்திரி சொப்பனத்தில் அம்மன் ஒரு பெண் மாதுரி (மாதிரி) வந்து பாவாடை வேணும் என்று கேட்ட மாதுரி இருந்தது. அப்போது என் பெண் ஜுரமாக இருந்தாள். நான் அம்மனிடம் என் குழந்தை நல்லபடியாகக் காப்பாத்து என்று வேண்டிக்கொண்டேன். அதனால் உடனே கடைக்குப் போய் பாவாடைத்துணி வாங்கி பாவாடை தைத்து அம்மனுக்கு சாத்திவிட்டு கஞ்சி காய்ச்சி கொடுக்கச் சொல்லி விட்டு வீட்டைக் காலி செய்து விட்டு நேராக புதுக்கோட்டை வந்து விட்டோம்.

83. அம்மாவுக்கு நகைகள் ஜாஸ்தி. அவற்றில் பல, ஒன்றன்றாக 1948ல் கரைந்தன. இந்த நிகழ்வு என் கண் முன் நிற்கிறது. பேச்சு இல்லாமல் நடந்தது. நகைகள் வைக்க, அம்மாவிடம் ஒரு பழுக்கா மரவை (அரக்கினால், சிங்கப்பூரில் செய்தது; ஸிலிண்டர்) இருந்தது. அம்மா அதை எனக்கு கொடுத்தாள், 1985ல். நான் அதை என் மருமகளுக்குக் கொடுத்தேன், 2000த்தில். மிச்சமிருந்த நகைகள் எங்கு போயினவோ!

(புதுக்கோட்டை அழைக்க. ...)

அம்மா சொல்படி ராஜூ: 19: டோனாவூர்

அம்மா சொல்படி ராஜூ: (‘டோனாவூர்’) பகுதி 19: 4 11 2009

(‘ ...’)

திரை போட்டு விட்டார்கள் ... ஆனால், அவன் போவதற்கு முதல் நாள் பகலில் என் மாமனாரும், என் அம்மா, என் மாமா எல்லாரும் வந்தார்கள். அவர்களும் வருத்தப்பட்டார்கள். மற்ற குழந்தைகளை உயிரோடு வீட்டிற்கு அழைத்து வந்தால் போதும் என்றாகிவிட்டது. பிறகு ஒரு மாஸமாகி இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி வீடு வந்தோம். ஆனால் இருவரும் ஸ்கூல் போகவில்லை. பெண்கள் மாத்திரம் ஸ்கூல் போனார்கள். ஆறாவது பெண்ணுக்கும் அப்போது நாலு வயது. பிறகு கொஞ்சநாள் ஏதோ செளகரியமாக இருந்தோம். இருந்தாலும் கஷ்டம் தான். என்ன செய்வது. இப்படியிருக்கும் போது (at Pudukkottai) வீட்டில் இருப்பவர்கள் வாடகை அனுப்பமாட்டார்கள். ஆனால் சின்ன வீட்டிலும் குடி வைத்தோம். அவர்களும் வாடகை சரியாக தர மாட்டார்கள். நாங்கள் குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பணக்கஷ்டப்பட்டோம். அப்போது என் அப்பா தான் 1000 ரூபாய் அனுப்பி வைத்து அம்மாவை கொஞ்சநாள் வைத்துக்கொள் என்று சொன்னதின் பேரில் என் அம்மா ஒரு மாஸம் இருந்தாள். அதே போல் மாமனாரும் ஒரு மாஸம் ஆனதும் இன்னம்பூர் போய் விட்டார். அவர் பிடிவாதக்காரர். என்ன (செய்வது?)

இப்படியிருக்கும் போது கொஞ்சநாள் ஆனதும் நாலாவதாக ஒரு பெண் (கமலா) இருந்தாள். அவள் தான் ஐக்கெளண்ட் (ஹை க்ரவுண்ட்) போய் குடிக்கத் தண்ணீர் கொண்டு வருவாள். அப்படி ஒரு நாள் குடத்தோடு தண்ணியை வைத்து விட்டு ‘அம்மா தலை வலிக்கறது’ என்று சொன்னாள். சரி பார்க்கலாம் என்று இருந்தேன். ராத்திரி நல்ல ஜுரம் வந்தது. என் புருஷன் க்யாம்பு (கேம்ப்) போய் விட்டு வந்தார். அன்று ராத்திரி ஒரு மணி அளவில் நினைவு இல்லாமல் உளறி விட்டாள். (என் ஞாபகம்: கண் தெரியவில்லை என்று சொன்னாள்.) ஜுரம் கொஞ்சம் குறைந்தது. ஆகாரம் பாலாடையால் தான் (கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் நேட்டிவ் ஃபீடிங்க் பாட்டில்) பால் போட்டுவேன். அப்போது ஒரு சத்தம் போடுவாள். அவ்வளவு தான். பிறகு நினைவு இல்லாமல் வீட்டில் ஒரு நாள் வைத்திருந்தோம். ஒரு வைத்தியமும் செய்ய முடியவில்லை. பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் பெண்களை சேர்ப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள். ரொம்பவும் எங்களுக்கு கவலையாக போய்விட்டது. பிறகு என் புருஷன் ஆஃபீஸில் வேலை பார்ப்பவர் ஒருவர் வந்து, நான் கார் தருகிறேன். எங்கு வைத்தியம் செய்யவேண்டுமோ அங்கு போய் செய்யுங்கள். இது முக்யம் என்று அவர் சொன்னார். அந்த சமயம் தெய்வநாயகம் பிள்ளையும் வந்து விட்டார். பையன் போய் 4 மாஸம் கூட ஆகவில்லை. பெண்ணுக்கு ஜுரம் வந்து விட்டது. அந்த சமயத்தில் தான் பெரிய பெண் (ஜெம்பகம்) புஷ்பவதியானாள். என்ன செய்வது? அதற்குள் தெய்வநாயகம் பிள்ளை சொன்னார். ‘பக்கத்தில் டோனாவூர் என்று ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது. அங்கு குழந்தையைச் சேர்க்கலாம்’ என்று சொன்னார். கார் ஒருத்தர் கொடுத்தார். அதில் மாடியிலிருந்து நாலு பேராக காரில் வைத்துக்கொண்டு டோனாவூர் போனோம். (கமலா, ‘கார் டிக்கியில் என்னைப் போட்டு சென்றதாக ஞாபகம்’ என்கிறாள்.) ஆனால் டாக்டர் ஸீரியஸ் என்று சொல்லிவிட்டார். என்னவோ பெருமாள் துணை (பிறகு இந்த வாக்கியத்தை எழுதிருக்கிறார், ருக்மிணி.) சமையல் பாத்திரம் எல்லாம் எடுத்துப் போனோம். வீட்டில் மூன்றாவது பையனும், பெரிய பெண். ஆறாவது பெண் எல்லாரும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் டோனாவூருக்குப் போனோம். நாங்கள் வெளி வராந்தாவில் உட்கார்ந்திருந்தோம். தெய்வநாயகம் பிள்ளை எங்களுடன் வந்தார். உள்ளேயிருந்து ஒரு பெரிய டாக்டர் வந்தார். குழந்தையைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார். எங்களுக்கு கவலையாகப் போய்விட்டது. 6 மணி வரையில் உட்கார்ந்திருந்தோம். பிறகு ஒரு டாக்டர் வந்து உங்களுக்கு ரூம் கிடைத்து விட்டது. அங்கு போய் இருங்கள். நாளை தான் டாக்டர் வருவார் என்று சொல்லி விட்டு போய் விட்டார். நாங்கள் அந்த ரூமுக்குப்போனோம். அது வரையில் தெய்வநாயகம் பிள்ளை இருந்தார். திடீரென்று ஒரு டாக்டர் வந்து பார்த்து விட்டு, நாளை முதல் டீஸ்மெண்ட் (ட்ரீட்மெண்ட்) பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். அன்று ராத்திரி நல்லபோது ஆகப்போச்சு...

(‘டோனாவூர்’)

அம்மா சொல்படி ராஜூ: அட்டை:18: ...

அம்மா சொல்படி ராஜூ: (‘...’) பகுதி 18: 3 11 2009

(‘எழுத முடியல்லையே ...’)

(அப்போது என் புருஷன் க்யாம்பு போயிருந்தார் ...) என்ன செய்வது என்று கவலைப்பட்டேன். மறுநாள் வந்து விட்டார். அவர் உடனே டாக்டரை அழைத்து வந்தார். டாக்டர் பார்த்து இது டைபாயிட் மாதிரி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்வது நல்லது என்று சொன்னார். என் புருஷனுக்கு அந்த ஊர் புதுசு. நாம எப்படி ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்று கவலைப்பட்டார். ஆனால், அங்கு ஒரு முதலியார் ஸ்டாம்பு வாங்கி எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருப்பார். அவரிடம் நாங்களும் கவர், கார்ட் எல்லாம் வாங்குவோம். அதனால் அவர் தான் கொஞ்சம் தெரிந்தவர். அவர் எதிர்பாராதபடி பெரிய பையனுக்கு ஜுரம் என்று கேழ்விப்பட்டேன். பார்க்கலாம் என்று வந்தேன் (என்று) எங்கள் வீட்டு மாடிக்கு வந்தார். அவர் பெயர் தெய்வநாயகம் பிள்ளை. அவர் வந்தவுடன் நான் தெய்வநாயகமே84 வந்தாச்சு; கவலையில்லை என்று சொன்னேன். அவர் பார்க்கும்போது மூன்று பேருக்கும் ஜுரம். அதனால் அவர் தான் போய் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் பெட் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன் என்ரு சொன்னார். தவிற, எனக்கு தெரிந்த டாக்டர் பரமசிவம் இருக்கிறார். அவரைப் பார்த்து வந்து சொல்கிறேன் என்ரு சொல்லிவிட்டு அவர் ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்து வந்து சொன்னார். பெட் மூன்று பேருக்கும் இல்லை. ஆனால் போய் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனார். மறுநாள் தான் போவதாக அவர் சொன்னார். அதற்குள் மூன்றாவது பிள்ளைக்கு ஜாஸ்தியாகி மூளையில் செப்டிக் ஆகி உளருகிறான். எனக்குப் பயமாக இருக்கிறது. கவலையாகவும் இருக்கிறது. என் புருஷன் என்ன செய்வார். மறு நாள் தெய்வநாயகம் பிள்ளை வந்து ஆஸ்பத்திரி போகலாமா என்று கேட்டார். உடனே புறப்பட ஏற்பாடு. அவரே போய் இரண்டு மாட்டு வண்டி அழைத்து வந்தார். ஒரு வண்டியில் பெரியவனையும், இரண்டாவது பிள்ளையையும் சேர்த்து கொண்டு போகிறோம். மற்ற ஒரு வண்டி மூன்றாவது, பார்த்தசாரதியைக் கொண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்த்தோம். ஏதோ பெருமாளோட அருளால் பெட் கிடைத்தது. மூன்று பேரையும் சேர்த்துத் துணைக்கு என் புருஷன் தான் இருந்தார். நான் போகமுடியாது. ஆனால் குழந்தைகளைப் பார்க்கப் போவேன். அப்போது பெரிய பையனுக்கு தலையில் ஐஸ் வைத்திருந்தார்கள். அடுத்தவன் நினைவு இல்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தான். மூன்றாவது பையனுக்குத்தான் ரொம்பவும் ஸீரியஸ்ஸாக இருந்தது. அபோது85 நான்

அவனைப் பார்த்துக்கொள்கிறேன் என்று என் புருஷனை வீட்டுக்கு அனுப்பி சாப்பாடு சாப்பிட்டு விட்டு எனக்குக் காப்பி மாத்திரம் (கொண்டு) வாருங்கள் என்று அனுப்பி விட்டு நான் மூன்றாவது பையனை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் பையன் பிழைப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும் பாலை வாயில் ஸ்பூனால் ஊத்திக்கொண்டிருந்தேன் . வீட்டில் சமையல் காப்பி இதெல்லாம் செய்வதற்கு பெரிய பெண் இருந்தாள் அவளுக்கு 13 வயது இருக்கும். அவள் தான் எல்லாம் செய்து கொடுத்து அனுப்புவாள். ஆஸ்பத்திரிக்கு அதே போல் காலை 6 மணி சுமாருக்கு என் புருஷனிடம் காப்பி கொடுத்து இருந்தாள். நான் சாப்பிட்டுட்டு பிள்ளையிடம் உட்கார்ந்திருந்தேன். ஆனால் பையன் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. அதற்கு 7 மணி சுமாருக்கு என்னை என் புருஷன் நீ சாப்பிட்டு வா என்று வீட்டுக்குப் போகச் சொன்னார். நான் வேண்டாம் என்று சொன்னேன். அவர் கேழ்க்கவில்லை. பிறகு நான் வீட்டிற்குள் போவதுற்குள் என் புருஷன் வந்து அவன் இறந்து விடுவான் போலிருக்கிறது என்று சொல்லிவிட்டு காரைக்குடிக்கும், இன்னம்பூருக்கும் தந்தி கொடுத்தார். ஆனால் நான் போய் பார்ப்பதற்குள் பையன் இறந்து விட்டான், அவனை அவர்கள் வெளியில் கொண்டு விட்டு திரை போட்டு விட்டார்கள் ...

(‘...’)

அம்மா சொல்படி ராஜூ: அட்டை:17: எழுத முடியல்லையே

அம்மா சொல்படி ராஜூ: (‘எழுத முடியல்லையே ...’) பகுதி 17: 2 11 2009

(‘படிப்பு தான் முக்யம்’)

(முதலில் குழந்தைகள் படிப்பு தான் முக்கியம்...) ... உன் (புருஷன்) எப்போதாவது வந்து பார்த்துவிட்டு போகட்டும் என்று லட்டர் போட்டார். உடனே என் புருஷன் நான் சாப்பிட்டிற்குக் கஷ்டப்படமுடியாது. நான் போய் ஊர் எப்படி இருக்கிறது என்று லட்டர் போடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். நானும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டையும் காலி செய்து விட்டு சாமான்களை டீ.வி.எஸ்ஸில்79 ஏத்தி காரைக்குடி வரும்படி செய்துவிட்டோம். நானும் காரைக்குடி வந்து விட்டேன். அப்போது எல்லாம் சாப்பாடு கஷ்டம். உடனே என் அப்பா புதுக்கோட்டை போய் பெரிய வீட்டைக் காலி செய்யச்சொன்னார். அவர்கள் வாடகையும் கொடுக்காமல் காலியும் செய்ய மறுத்தார்கள்? ஆனால் வீட்டில் அத்தையுடைய தம்பி இருந்து கொண்டு காலி பண்ண மாட்டேன் என்று சொன்னான். என் பெரிய வீட்டில் இருக்கும் குடியிருப்பவர்கள் பேரில் கேஸ் போட்டுவிட்டார். கேஸ் போட்டதினால் உடனே கோர்ட் மூலம் வீட்டை காலி செய்ய ஏற்பாடு ஆகிற்று. அதன் படி காலி செய்து விட்டார்கள். பிறகு என் அப்பா எங்களை புதுக்கோட்டைக்கு அழைத்து அந்த வீட்டில் நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி சாப்பிட்டோம். அப்புறம் நான் புதுக்கோட்டையில் வந்து ராஜா காலேஜ்80 என்று ஒன்று இருந்ததது. அதில் பெரியவனை சேர்த்தேன். ராணி ஸ்கூலில் பெண்களைச் சேர்த்தேன். அப்போது எனக்கு மூன்று பெண்கள் பிள்ளை மூன்று. எல்லாரையும் படிக்கவைத்துக்கொண்டு 14 வருஷம் இருந்தேன்81 (?) ஆனால் பெரிய வீடு ரொம்ப மோசமாக இருந்தது. அதனால் (ஆனால்?) என் அப்பாவுக்கு அப்போது பணவசதி உண்டு. அவர் வந்து நன்றாக வீடுகளை கட்டிக்கொடுத்து, நிலத்தையும் நன்றாக கவனித்தார். நிலம் இருப்பது கீர்நூர் (கீரனூர்) என்ற ஊருக்கு பக்கத்தில் நாஞ்சூர் என்று இருந்தது, அதற்கு நானும் போய் நெல்லுகள் வீட்டிற்கு வரும்படி குடியானவனிடம்82 சொல்வேன் அவன் கொண்டு வந்து போடுவான். இப்படியாக 14 வருஷம் பெண்கள் குடுத்தனமாக இருந்தேன். ஆனால் இப்படி இருக்கும்போது என் புருஷன் ஊர் நன்றாக இருக்கிறது. நல்ல காலேஜ் ஸ்கூல் எல்லா (ம்) இருக்கிறது. அதனால் இங்கேயே எல்லாரையும் ஸ்கூலில் சேர்த்து விடலாம் என்று நினைக்கிறேன். நானும் சாப்பாட்டுக்கு கஷ்டபடவேண்டாம் நீங்கள் பெரிய லீவுக்கு ஒரு தரம் வந்து விட்டுப் போங்கள் என்று என் புருஷன் லெட்டர் போட்டார். என்ன செய்வது. அவருக்குக் கோபம் வந்து விடுமே என்று என் அப்பாவிடம் சொல்லிவிட்டு கையில் ஏதோ சில பாத்திரங்களை83 எடுத்துபோய் ஒரு மாஸம் லீவுக்கு போய்விட்டு வந்தேன். அப்போது ஆத்தில் குடி வைத்து விட்டுத்தான் போனேன்? அடுத்த வருஷமும் அதே போல் என் புருஷன் லட்டர் நாமெல்லாரும் திருநெல்வேலியில் இருப்போம். அதனால் நீங்கள் வீட்டை வாடகைக்கு வைத்து விட்டு வாங்கள் என்று லட்டர் போட்டு விட்டார். என்ன செய்வது என்று பெரியவன் மற்ற எல்லாரும் திருநெல்வேலி போனோம். உடனே வீடு கிடைக்காமல் ஒரு முதலியார் வீடு வண்ணாத்தங்கரை என்ற இடத்தில் இருந்தது.

வீடு சின்னது தான். கிணறு கிடையாது. குழாய் கிடையாது. தாம்பரவர்ணிக்குப் போய் குழந்தைகள் குளித்துவிட்டு வருவார்கள். நானும் அங்கு போய் குளித்துக் குடத்தில் ஜலம் எடுத்து வந்து தான் சமையல் செய்யவேண்டும், ரொம்பவும் கஷ்டப்பட்டேன். என் புருஷனிடம் சொன்னேன். வேறு வீடு பாருங்கள். அப்படி கிடைக்காவிட்டால் புதுக்கோட்டை போகிறோம் என்று சொன்னேன். அது கூட அவருக்கு கோபம் தான். அவர் புதுப்பேட்டை தெரிவில் ஒரு வீடு பார்த்து அங்கு போனோம். போய் ஸ்கூல் திறந்தவுடன் பெரியவனிலிருந்து ரகு, பார்த்தசாரதி பெண்கள் எல்லாரையும் ரொம்ப சந்தோஷமாக ஸ்கூலில் சேர்த்து விட்டு வந்தார், என் புருஷன். ஆனால் வீடு எப்படி என்றால், கீழே சமையல் மாடியில் படுக்கை, இப்படியே குழந்தைகளும் ஸ்கூல் போய் வருவார்கள். ஆனால் அங்கும் தண்ணீர் கஷ்டம் தான். வாய்க்கால் ஒன்று போகும். அதில் போய் குழந்தைகள் எல்லாம் குளிக்கவேண்டும். என்ன செய்வது. குடிப்பதற்கு ஐகரெவுண்ட் என்ற பார்க். அதில் போய்த்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும். அப்படியும் கஷ்டம் தான். கிணறு இருக்கும் இடத்திற்குக் கயறு வாங்கி எடுத்துப்போய்த்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும். என்னோடு லீவு நாளில் சின்னப்பெண் பெரிய பெண் ஆத்தைப் பார்த்துக் கொள்வாள். இப்படியாக இருக்கும்போது ஜூன் ஜூலைகளில் குழந்தைகள் ஸ்கூலுக்குப் போய் கொண்டிருந்தார்கள். (ஒரு) பெரிய பையன் தலைவலி சாப்பாடு வேண்டாம் என்று காலேஜ்ஜிலிருந்து சாப்பாடை எடுத்து வந்து விட்டான். ராத்திரி லேசாக ஜுரமாக இருந்தது. டாக்டரிடம் காண்பித்தோம். அவர் ஏதோ மருந்து கொடுத்தார். மறு நாள் மற்றவர்கள் மற்றவர்கள் ஸ்கூல் போனார்கள். ஆனால் சாயங்காலம் திரும்பி சாப்பிடாமல் தலை வலி என்று வந்து விட்டார்கள். டாக்டரிடம் அவனையும் காண்பித்து ஏதோ மருந்து கொடுத்தார். மூன்றாவது பையன் ஸ்கூலிலிருந்து வந்துவிட்டான். அவனூக்கும் தலைவலி ஜுரம் வந்து வீட்டில் மூன்று பிள்ளைகளும் ஜுரமாக படுத்து விட்டார்கள். அப்போது என் புருஷன் க்யாம்பு போயிருந்தார் ...

79. பெரிய அய்யங்கார் போக்குவரத்து நிறுவனம். இன்று அதன் விழுதுகள் பல.

80. குறுநில மன்னர்கள் செய்த நற்காரியங்களில் ஒன்று.

81. அதில் 4-5 வருடங்கள் நானும் அங்கு இருந்தேன், சிறகு முளைக்கும் வரை.

82. அவர் பெயர் ஸ்டனிஸ்லாஸ். கிருத்துவ ஆதிக்கம். ஒரு நாள் அங்கு இருந்த பங்கு தந்தையிடமிருந்து (கிருத்துவ போதகர்) அராபியன் நைட்ஸ் என்ற நூலை இரவல் வாங்கி படித்து விட்டு, ஒரு கத்தோலிக்க மாதாகோயில் நூலகத்தில் இத்தகைய நூல்கள் இருக்கலாகாது என்று அறிவுரை வழங்கி, அவரிடம் செம்மையாக வாங்கி கட்டிகொண்டேன்.

83. அம்மாவிடம் ஒரு ரயிலடுக்கு என்ற பாத்திர ஸெட் இருந்தது. எல்லாமிருக்கும், சிறிய அளவில்.

(‘எழுத முடியல்லையே ...’)

அம்மா சொல்படி ராஜூ: 16: படிப்பு தான் முக்யம்

அம்மா சொல்படி ராஜூ: (‘படிப்பு தான் முக்யம்’) பகுதி 16: 1 11 2009

(‘நம்பினால் நம்புங்கள்’)

... நானும் ஆறாவது பிரஸவமாகி 3 மாஸத்தில் உசிலம்பட்டி போய்விட்டேன். அங்கு என் நாத்தனார்கள் ரொம்பவும் குழந்தைகளை கவனித்தார்கள். நான் வந்த பிறகு அவர்கள் இருவரும் ஊருக்குப் போய்விட்டார்கள். மைத்துனர் தஞ்சாவூரிலிருந்து புனா போனார். அவருக்கும் இரண்டு பெண். அவருக்கும் புனா போய் ஒரு பிள்ளை பிறந்து அம்மையில் இறந்துவிட்டதாம். பிறகு வெகு நாள் கழித்து என் ஓர்ப்படி77

குழந்தை உண்டாகி இருந்தது தெரியாமல் புனாவிலிருந்து நான் புறப்பட்டு உசிலம்பட்டி வருகிறேன் என்றும், என்னை மதுரை வந்து அழைத்துப் போங்கள் என்று அவள் என் புருஷனுக்கு லட்டர் போட்டாள். ஆனால், அவள் வருவதற்கு முன்பு தீபாவளி அன்று என் புருஷன் குழந்தைகளுக்கு துணிமணிகள் வாங்கி வந்தார். தீபாவளிக்கு நான் ஆத்தில் இல்லை. அதனால் குழந்தைகளுக்கு ஓட்டலில் வாங்கி வந்தார். (அன்றைக்கு). என் பெரிய பிள்ளை கள்ளர் ஹைஸ்கூலில் படிக்கிறான். அவன் தீபாவளி அன்று வாத்தியாரை புதுசு உடுத்திக்கொண்டு நமஸ்காரம் செய்யப்போகிறேன் என்று அதிகாலையில் வெளிச்சம் வருவதற்குள் போனான். அத்தக் கள்ளர் ஸ்கூல் தாண்டித்தான் போகவேண்டும். அதனால் தான் வாத்தியார் வீட்டுக்குப் போய் வரும்போது ஒரு வேப்பமரத்தைப்பிடித்து (கிளையை) இழுத்திருக்கிறான். வழுக்கிக் கீழே விழுந்துவிட்டான். அதில் கையில் நல்ல அடி. அவனோடு இரண்டொரு சிநெகிதன் போயிருக்கிறான். அவர்கள் கொண்டு விட்டார்கள். வாயில் அடிபட்டு ரத்தம் வந்து அவர்கள் நன்றாக வாயை அலம்பிவிட்டு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள். உடனே ஆஸ்பத்திரியில் காண்பித்து கையில் பார்த்தால் இரண்டு பிளாச்சு கையில் போட்டு கட்டி விட்டார்கள். ரொம்பவும் கஷ்டப்பட்டான். இரண்டு வாரம் ஆகி கட்டு அவிழ்த்து கைக்கு தூளி போட்டார்கள். ஆனால் அவன் ரொம்ப நாள் சாப்பிடமுடியாமல் கஷ்டப்பட்டான். நான் சாதம் ஸ்பூனில் கொடுப்பேன். இப்படியிருக்கும்போது புதுக்கோட்டை அத்தைக்கு ஸ்ரீகாரம் கொடுத்த அடுத்த வருஷம் அந்த அத்தை மூன்று நாள் ஜூரத்தில் இறந்து விட்டாள் என்றும் அதற்கு என் அப்பா தான் அந்த செலவுகள் செய்தார். ஆனால் அந்த சமயம் ரகுவுக்கு டபிள் நிமோனியா என்ற ஜுரம் வந்ததாம். உடனே எனக்கு லட்டர் வந்தது.

என்ன செய்வது. குழந்தைகளுக்கு சமையல் செய்து விட்டு பியூன் பெரியாண்டியிடம் சொல்லிக் குழந்தைகளை நான் வரும் வரையில் கவனிக்கும்படி செய்து விட்டு நான் போகலாம் என்று இருந்த சமயத்தில் புனாவிலிருந்து நான் வருகிறேன், நீங்கள் மதுரை வந்து அழைத்துப்போங்கள் என்று லட்டர் வந்தது. என்ன செய்வது என்று மதுரை வந்து காரைக்குடி பஸ்ஸில் என்னை ஏத்திவிட்டுட்டு புனாவிலிருந்து வருகிறவர்களை அழைத்துக்கொண்டு என் புருஷன் உசிலம்பட்டி போய்விட்டார். நான் நேராக காரைக்குடி போனேன். அங்கு யாரும் இல்லை. உடனே புதுக்கோட்டை போனேன். அம்மா தான் இருந்தாள். ரகுவிற்கு ரொம்ப ஜூரமாக இருந்ததால் என் அக்கா புருஷன் அத்தை காரியங்களை செய்தார். எனக்குக் கவலையாகப் போய்விட்டது. இதில் என்ன என்றால் என் அத்தைக்கு வேறு ஸ்ரீகாரத்தம்பி இருந்தான். அவனைத் தனக்குத் துணையாக ஆத்தில் ஒரு போர்ஷனில் குடியிருக்கச் சொன்னாள். ஆனால் அவன் கவனிக்கவில்லை. அத்தை இறந்த சமயத்தில் அவனுடைய அக்கா அத்தை பாத்திரம் எல்லாம் எடுத்துவிட்டாள். திருடு போய்விட்டது என்று எங்களிடம் சொல்லிவிட்டாள். ரகுவிற்கு நல்ல டாக்டர் வந்து பார்த்து நன்றாகத் தேவலை. அங்கு நான் ஒரு மாஸம் இருந்து என் புருஷனை வரும்படி லட்டர் போட்டு அவர் வந்து எல்லாம் நடந்தபிறகு ரகுவை என் அப்பா கொண்டு டிவிஷன் (tuition) வைத்து அடுத்த வருஷம் ஸ்கூலில் சேர்க்கலாம் எங்களுக்கு லட்டர் போட்டார்? நான் உசிலம்பட்டிக்கு வந்தால் என் மைத்துனர் ஆம்படையாள் இருக்கிறாள். வீடுகளை சரியாக கவனிக்காமல் குழந்தைகள் சட்டை எல்லாம் தோய்க்காமலும் இருந்ததது, ஏன் இப்படியிருக்கிறது என்று கேட்டால் எனக்கு ஜூரம் வந்து விட்டது என்று சொல்லி விட்டாள். ஆனால் அவள் குழந்தை உண்டாகி இருக்கே அதனால் மசக்கை வந்து ஜுரம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். ஆனால் அவள் பத்து நாளில் பூனா போய்விட்டாள். நானும் மற்ற குழந்தைகளுடன் இருந்தேன். அப்படியே அத்தை போய் ஒரு வருஷம் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் என் புருஷனுக்கு சப்ரிஜிஸ்ட்ரார் பெரோமோஷன் பேரில் திருநெல்வேலி மாத்தியிருந்தார்கள். என் புருஷன் என்ன செய்வது என்று கவலைப் பட்டார். நான் என் அப்பாவிற்கு லட்டர் போட்டேன். மாப்பிள்ளையை திருநெல்வேலி மாத்தல் ஆகியிருக்கிறது என்ன செய்வது என்று கவலைப்படுகிறார். குழந்தைகள் வேறு படிக்கவேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று லட்டர் போட்டேன். அவர் லட்டர் பார்த்தவுடன் என் அப்பா, நீ குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரைக்குடி வந்து விடு. உன் புருஷன் திருநெல்வேலி போய் வேலை பார்க்கட்டும்? புதுக்கோட்டையில் பெரிய வீட்டில் குடியிருப்பவர்களை காலி செய்யும்படி சொல்லியிருக்கிறேன். அவர் காலி செய்தவுடன் குழந்தைகளை படிக்கவைத்துக்கொண்டும் வீட்டையும் நிலத்தையும் கவனிக்கலாம். முதலில் குழந்தைகள் படிப்பு தான் முக்கியம்78 ...

77. கணவனின் சகோதரனின் மனைவி.

78. இது தான், ஏழையோ, பணக்காரனோ, பிராமண குடும்பங்களின் தாரகமந்திரமாக இருந்தது. இந்த இலக்கை அடைவது, பல இன்னல்களுக்கு நடுவே, அவர்களுக்கு வேள்வியாக அமைந்தது.

(‘படிப்பு தான் முக்யம்’)

அம்மா சொல்படி ராஜூ: 15: நம்பினால் நம்புங்கள்

அம்மா சொல்படி ராஜூ: (‘நம்பினால் நம்புங்கள்’)) பகுதி 12: 31 10 2009

(ஸீ. ஈ. ஓ)

... உசிலம்பட்டியில் இருக்கும்போது தஞ்சாவூரிலிருந்து லட்டர் வந்தது. என்னவென்றால் என் நாத்தனார் எழுதி இருந்தார். என் மைத்துனர் வரதாச்சாரியார் தஞ்சாவூர் வீட்டை விற்கப்போவதாகவும்,71 பையன் இருவரையும் நான் வைத்துக் கொள்கிறேன் என்றும், நீ கொஞ்சநாள் ஆனதும் உன்னை வரும்படி எழுதுகிறேன் என்றும் லட்டர் என் புருஷனுக்கு வந்தது. 72 ஆனால் நாத்தனார் மூத்த பிள்ளைக்கு கல்யானம் ஆகிவிட்டது. வீடு வாங்கின பிறகு நீ வரலாம். நீ அது வரையில் உன் அண்ணா வீட்டில் இருக்கலாம் என்று வரதாச்சாரியார் எழுதிவிட்டார். பிறகு நாமு நாத்தனார் பிள்ளையை நாமு நாத்தனார் மைத்துனர் வீட்டில் கொண்டு விட்டார். பிறகு என் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு உசிலம்பட்டிக்கு நாத்தனார் வந்து ஒரு வருஷம் போல் இருந்தார். அப்போது என் பிள்ளை நான்காம் வகுப்பு படித்திருந்தான். அப்போது கல்கத்தா நாத்தனார் வந்திருந்தாள். ஆறாவது பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு போகவேண்டாம் என்று இரண்டு நாத்தனார்களும் சொன்னார்கள். இது விஷயத்தை என் அப்பா வீட்டிற்கு தெரிவிக்கவில்லை. அந்த சமயம் இரண்டாவது யுத்தம் நடந்து கொண்டிருந்தது. எப்படியோ என் அம்மாவிற்கு தெரிந்து விட்டது. உடனே என் அம்மா வந்து அழைத்துப் போனாள். நான் என் ஐந்தாவது பையனை அழைத்துக்கொண்டு மற்ற குழந்தைகளை இரண்டு நாத்தனாரிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு நான் காரைக்குடி போனேன். போய் பத்து நாள் ஆனதும் பெண் பிறந்தது. ஆறாவது பெண் பிறக்ககூடாது என்று சொல்லுவார்கள். ஆறாப்போகும் நீராய்ப் போனால் போகும் சொன்னார்கள். அதே போல் அந்த பெண் பிறந்து 13 நாளுக்குள் புதுக்கோட்டையிலிருந்து அத்தை வந்து என் அப்பாவிடம் கட்டாயம் உன் பேரனைத்தான் ஸ்ரீகாரம் எடுத்துக் கொள்ளப் போகிறேன் (என்று) சொல்லிவிட்டாள். உடனே என் அப்பா நாள் பார்த்து என்னுடைய மாமாவைப் போய் உசிலம்பட்டியிலிருந்து ரகுவை73 அழைத்து வரும்படி சொல்லி அவர் அழைத்து வந்து விட்டார். ஆனால் நாங்கள் யுத்த சமயத்தில் கிராமத்தில் தான் இருந்தாலும் சாப்பாடு அரிசியே கிடைக்காது. இந்த சமயத்தில் என் புருஷனுக்கும் லட்டர் போட்டு குழந்தை ரகுவை ஸ்ரீகாரம் கொடுக்க நல்லநாள் பார்த்து ஏற்பாடு செய்திருக்கிறேன். அவன் ஜாதகரீதியாக வேறு குடும்பத்தில் போவது நல்லது74 என்று ஜாதகத்தை சரியாகப் பார்த்து செய்கிறோம். நீங்கள் தான் இருந்து கொடுக்கவேண்டும். ருக்மணிக்குக் குழந்தை பிறந்து நாளாகததனால், நீங்கள் இருந்து கொடுப்பது நல்லது. உடனே புறப்பட்டு வரவும். மற்றவை நேரில் பேசிக்கொள்ளலாம் என்று லட்டர் போட்டு அவர் வந்து விட்டார். புதுக்கோட்டைக்குப் போய் குழந்தை பிறந்து கொடுப்பது போல் கொடுக்கும்போது என் அப்பா, அம்மா இவர்களுடன் இருந்து என் புருஷன் ஸ்ரீகாரம் அத்தைக்கு கொடுத்தும் பெயரும் திருமலாச்சாரி என்று நாமகரணம் வைத்தார்கள். எனக்கு விரை தானம் கொண்டு வந்து கொடுத்தார்கள். இது மாதிரி என் அப்பா இரண்டு பெண்கள் குடும்பத்தைப் பொறுப்பாகச் செய்வதால் சிலருக்கு என் அப்பா பேரில் கோபம். தவிற புதுக்கோட்டை அத்தைக்கு ஒரு நாத்தனார் இருந்தாள். அவள் தன் பேரனை ஸ்ரீகாரம் எடுத்துக்கும்படி தொந்தரவு செய்தாள். அத்தை மறுத்து விட்டு என் பிள்ளையை எடுத்துக்கொண்டதில் (என் அப்பா) கோபமாக என் அப்பாவை அடிக்கக் கூட வந்தார்கள். எல்லாவற்றையும் என் அப்பா பொறுத்துக்கொண்டார். அப்போதும் என் தம்பி ஆத்தில் தான் இருந்தான். அப்போது மூன்றாவது ஒரு பெண் பிறந்தது. ஆனால் ஸ்ரீகாரம் கொடுக்கும்போது என் பிள்ளை மூன்றாவது பிள்ளை. அவனுக்கு பத்து வயது. அவனை புதுக்கோட்டை அத்தை தானே வைத்துக் கொண்டு தம்புடு சார் ஸ்கூல்75 என்று ஒன்று இருந்தது. அதில் அவனை சேர்த்து விட்டாள். அவன் நான்காவது படித்தான். இப்படியிருக்கும்போது என் மாமனாருக்கு உங்க பேரனை ஸ்ரீகாரம் கொடுப்பதாக ஏற்பாடு செய்திருக்கிரது. நீங்கள் வந்து நடத்தி குழந்தையை ஆசீர்வாதம் செய்யும்படி என் அப்பா போட்டதற்கு அவர் வரவில்லை. அவருக்கு கோபம்? அதனால் ஸ்ரீகாரம் கொடுப்பதற்கு முன்னாடி என் மாமனார் என் புருஷனுக்கு லட்டர் என்னவென்றால் என் மாமியாருடைய அம்மா இருந்தாள். அவளுக்கு பிள்ளைகள் இருந்தும் அந்த பாட்டி இறக்கும் தறுவாயில் பிள்ளைகள் இல்லை. அதனால் அவருக்கு கருமம் செய்வதென்றால் மூத்தப்பெண்ணுடைய பிள்ளை தான் செய்யவேண்டும். அது விஷயத்திற்கு ஆண்டாளிடமிருந்து லட்டர் வரும். ஆனால் நீ அதைப்போய் செய்யவேண்டாம்? ஏனென்றால் சின்னிக்கும் ஆண்டாளுக்கும்76 தகராறு நடக்கிறது. அதனால் நீ அந்த கருமத்தை செய்யவேண்டாம் என்று எழுதிவிட்டார் என் மாமனார். ஆனால், தன் பேரனை ஸ்ரீகாரம் கொடுப்பதர்கு வரவில்லை. அதற்காக என் புருஷன் கவலைப்படவில்லை. .

71. போன வருடம் அந்த வீட்டை பார்க்கபோனேன். இப்போதைய இஸ்லாமிய வீட்டுக்காரர், வரதாச்சாரியார் அவர்களிடம் தான் கிரயம் செய்து வீட்டை வாங்கியதாக சொன்னார். என்னை வெகுவாக உபசரித்தார்.

72. அத்தைக்கு வந்த கடிதத்தின் நகல் என்று நினைக்கிறேன்.

73. என் தம்பி.; இப்போது அவன் இல்லை.

74. ‘நம்பினால் நம்புங்கள்’: கிரகங்களை ஏமாற்றுவது கடினமோ? முதல் ஐந்து குழந்தைகள் போய்விடுமோ என்று எங்கள் குடும்பம் தவித்த சோகக்கதையை சொல்லி மாளாது. அப்பா நிலைகுலைந்து போனார். அம்மா ஸ்த்திப்ரதிங்க்ஞையாக இருந்தாள், வாசகர்கள் விரும்பினால், விவரம் வரும். ஒளித்து மறைக்க ஒன்றுமில்லை. நீண்ட கதை.

75. மூன்று தலைமுறைக்கு ஆசிரியர் என்றால், குலபதி என்ற பட்டம். இவரும், புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் அவர்களும் நடத்திய நரஸிம்ஹ ஜயந்தி உலப் பிரிசித்தம். பாலையா ஸார் மற்றொரு குலபதி.. இவர்களின் மாணவர்கள் உலகம் எங்கும் உள்ளனர்.

76. என் பாட்டியின் சஹோதரிகள்.

(‘நம்பினால் நம்புங்கள்’)

அம்மா சொல்படி ராஜூ: 14: ஸீ.ஈ.ஓ

அம்மா சொல்படி ராஜூ: (ஸீ. ஈ. ஓ) பகுதி 12: 30 10 2009

(அந்த நாளும் வந்திடாதோ!)

... நாதன் கம்பெனியும் நடந்து கொண்டிருந்தது. இதிலும் இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ் வேலையை என் அப்பா விடவில்லை. குமாஸ்தா ஆராவமுது இருந்து கொண்டிருந்தார். (அடித்தல் திருத்தல்) என்னை ஊருக்கு கொண்டு விடுவதென்றால், அவர் தான் கொண்டு விடுவார். இதோடு நிற்கவில்லை. என் அப்பா ரோடு கண்டார்க்ட் எடுத்தார். தவிற நம் ஆசாரியர் ஒரு முக்கூர் ஆண்டவன் என்கிறவரை என் அப்பா அவரை அரியக்குடியில் ஒரு வருஷத்திற்கு மேலாக வைத்து காலக்ஷேபங்கள் நடத்தினார். நான் ஐந்தாவது பிரஸவத்திற்கு வந்த சமயத்தில் என் பெரிய நாத்த்னார் பெண்ணுக்கு கல்யாணம். அதற்கு நிறை மாஸத்தோடு போய்விட்டு வந்து ஒரு வாரத்தில் எனக்குப் பிள்ளை பிறந்தது. ஆனால் பிள்ளைகள் மூன்று, பெண்கள் அப்போது இரண்டு தான் ? பிரஸவம் ஆகி, மூன்று மாஸம் ஆனதும் நான் உசிலம்பட்டி போய்விட்டேன். இப்படி இருக்கும்போது என் புருஷனை மதுரைக்கு மாத்தலாகி இருந்தது. அவர் மதுரையில் இருந்தார். நான் மாத்திரம் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக இருந்தேன். அப்போது என் பெரிய பையனை வரும்படி என் புருஷன் தஞ்சாவூருக்கு லட்டர் போட்டு வந்து விட்டான். அவரும் இல்லாத சமயத்தில் என் ஐந்தாவது பையனுக்கு வயது ஐந்து இருக்கும். அப்போது குழந்தைகளுக்கு ஏதாவது தின்பதற்கு வேணும் என்று தட்டை என்ற பக்ஷணம் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் என் புருஷனுடைய ஆஃபீஸ்காரர் விஸ்வநாத பிள்ளை என்கிறவரும் சுப்பையா என்கிறவரும் வாசலில் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். என் ஐந்தாவது பையன் அவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பான். ஆனால் அவன் ரொம்பவும் விஷமம் ஜாஸ்தி. பாத்திரம் எல்லாம் கிணற்றில் போட்டு விடுவான். அவ்வளவு விஷமம். நான் பக்ஷணம் செய்யும்போது அடுப்பில் எண்ணையில் போட்டு எடுக்கும்போது என் கையில் இருக்கும் துடுப்பைத் தட்டிவிட்டான். அந்த எண்ணைய் அப்படியே அவன் உடம்பில் ஒரு பாகத்தில் கொட்டிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், அந்த சமயம் அந்த ஆஃபீஸர் இருவரும் வாசலில் இருந்தார்கள். அவர்களுக்கும் பக்ஷணம் அவனே கொண்டு கொடுத்து வந்தான். என் தோளைப் பிடித்தான். அப்போது அவன் உடம்பில் எண்ணைய் கொட்டிவிட்டது. ஆனால் என் புருஷனுக்குத் தெரியாது. மதுரைப்பக்கம் கள்ளர் ரெக்ளமேஷனில் கோவப்ரேட்டிவ் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார். அதனால் போலீஸ் கான்ஸ்டேபிள் ஹேட் உள்பட எனக்குத் துணை வைத்து விட்டுத் தான் என் புருஷன் மதுரை போனார். ஆனால், அவருக்கு குழந்தை பையனுக்கு எண்ணைய் கொட்டினது தெரியாது. அவருடைய ஆஃபீஸர் யாரோ சொல்லிவிட்டார். அவர் பையனை நான் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி வரவில்லை.65 ஆனால் அந்த ஆஃபீஸர்களும், ப்யூன் பெரியாண்டியும்66 சேர்ந்து ஆஸ்பத்திரிக்குப் போய் உடம்பில் கட்டுப் போட்டுக்கொண்டு வந்து விட்டார்கள். எனக்கு பயமாக இருந்தது. என்ன செய்வது. ஆனால் அன்று ராத்திரி பூராவும் பியூன் பெரியாண்டியும், மற்ற கிராமத்து கள்ளர்களும் விசிறிக்கொண்டும் இருந்தார்கள். 67 மறு நாள் காலையில் என் புருஷன் வந்து விட்டார். அவருக்கும் என்ன செய்வது என்று கவலையாக இருந்தது. மாத்தலாகி இருக்கிறதே என்று சாமான்கள் எல்லாம் பாக் செய்து இருந்தேன். ஆனால் என் புருஷன் கணக்குகள் பார்ப்பதற்கு என்று ஒரு தெலுங்கு அய்யர் இருந்தார். அவர்கள் வீட்டில் (இருந்து) தான் எங்களுக்கு சாப்பாடு வரும். பிறகு நான் என் புருஷனிடம் சொன்னேன். கவலைப் படவேண்டாம். என் அப்பாவிற்கு தந்தி கொடுங்கள். யாராவது வந்து என்னை அழைத்துப் போவார்கள். அதன்படி செய்யுங்கள் என்று சொன்னதின் பேரில் தந்தி கொடுத்துவிட்டார். ஆனால் என் அப்பா வீட்டில் என்ன ஆச்சரியம் என்றால் என் அக்கா தனியாகத்தான் இருந்தாள். அவளுக்கு ஐந்து பெண்களுக்கு பிறகு அபூர்வமாக பிள்ளை பிறந்து இருக்கிறது. புண்யாவசனம்68 செய்கிறார்கள். அதற்கு மாப்பிள்ளைக்கு வேஷ்டி வாங்கிக்கொண்டு அங்கு போயிருக்கிறார்கள். அந்த சமயத்தில் நாங்கள் கொடுத்த தந்தி போயிருக்கிறது. அப்போது அப்பா வீட்டில் இருந்திருக்கிறார். அவர் உடனே என் அம்மாவையும், ஆராவமுது என்கிற குமாஸ்தாவையும் அனுப்பி வைத்தார். என் தம்பிக்கு இரண்டாவது குழந்தை எட்டு மாஸத்தில் பிறந்து போயிற்று. என் அம்மாவுடன் நான் குழந்தையையும், மற்ற குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரைக்குடி வந்தேன். வந்தால் ஆத்தில் ஒருவரும் இல்லை. நான் இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு அக்கா வீட்டிற்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். இது அக்காவிற்குத் தெரிந்து (தால்) பரவாயில்லை. அவனை அழைத்து வாருங்கள் என்று சொன்னதின் பேரில் அக்கா வீட்டிற்குப் போனேன். நான் மாடியில் வைத்துக்கொண்டேன். மறுநாள் காலை என் அப்பா வீட்டிற்கு வந்தேன். உடனே என் அப்பா டாக்டரை ஆத்திற்கு வரும்படி செய்து வீட்டிலேயே அவனுக்கு ட்ரீட்மெண்ட் நடந்தது. ஆனால், கைவிரல் எல்லாம் ஒன்றாகப்போய்விட்டது. பிறகு டாக்டர் கைவிரல்களை கட் பண்ணி நன்றாக ஆகிவிட்டது. ஆனால் எண்ணைய் கொட்டின தழும்பு மாறவில்லை. என்ன செய்வது என்று டாக்டரை கேட்டோம். அவர் சமுத்திரத்தில் இருக்கு சோழியை எலுமிச்சம்பழச்சாற்றில் தேய்த்துத் தடவச்சொன்னார். 69 அதே போல் தடவி வந்தேன். மதுரையில் வீடு பார்த்து உன்னையும், குழந்தைகளையும் அழைத்துப் போகிறேன் (என்று) என் புருஷன் எனக்கும் என் அப்பாவிற்கும் லட்டர் போட்டார். ஆனால், மதுரை டவுனில் வீடு கிடைக்கவில்லை. டவுனைத் தள்ளி ஷெனாய் நகர் ஒரு காலனியில் தனி வீடு பார்த்து விட்டது. உங்கள் பெண்ணையும், குழந்தைகளையும் அனுப்பி வைக்கவும். பெரிய பையனை தஞ்சாவூர் யார் போகிறார்களோ அவர்களோடு என் தங்கை வீட்டில் கொண்டுவிடச் சொல்லவும் என்று என் புருஷன் லட்ட்ர் போட்டு விட்டார். பிறகு அப்பா என் செய்வார். ஆராவமுதுவோட என் அம்மாவையும் என்னோடு மதுரைக்கு அனுப்பி வைத்தார். அங்கு கொஞ்சநாள் இருந்துவிட்டு, மறுபடியும் செக்காணூரணிக்கு என் புருஷனை மாத்திவிட்டார்கள். அதனால் நாங்கள் அங்கு கொஞ்சநாள் இருந்தோம். 6 மாசம் ஆனதும், என் புருஷனை உசிலம்பட்டிக்கு மாத்திவிட்டார்கள். அங்கு இருந்தோம். அப்போது என் ஐந்தாவது பிள்ளைக்கு ஐந்து வயது இருக்கும். அப்போது ஆறாவது உண்டாயிருந்தேன். அப்போது என் அக்காவிடைய புருஷன் சைக்கிள் கடை நஷ்டமாகி விட்டது. அதனால், அவருடைய சொத்திற்குக் கட்டவேண்டிய கடனை கட்டிவிட்டு அவருக்கு செளகரியம் செய்தார் (என் அப்பா). சைக்கிள் கடையை வித்து விட்டார். ஆனால் என்ன செய்தார் என்றால், மாப்பிள்ளையுடைய நிலத்தில் வரும் அரிசியை தான் வாங்கிக் கொண்டு அதற்குள்ள பணத்தையும் மற்ற அரிசியை வித்து பணமாக ப்யாங்கில் போட்டார். அக்காவிற்கு சாப்பாட்டிற்கு அரிசி கொடுப்பார். இப்படியெல்லாம் பெண்களுக்கு உதவி செய்வார் 70

65. !

66. உசிலம்பட்டிலே பெரியாண்டி, செக்காணூரணீயிலே மாயாண்டி. பேருக்குத்தான் ப்யூன். இருவருமே ‘எங்கிருந்தோ வந்தானின்’ இனம். எங்கள் குடும்பம் இவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு பிறகு மதுரைக்கு போன சமயம், இவர்களையும், என் மெய்க்காப்பாளர் ரவணப்பனையும் (ஹெட் கான்ஸ்டபிள்: வேங்கையை சுட்டவர்: என்னை காங்கிரஸ் மீட்டிங்க் போகவிடாமல் தடுப்பது அவர் கடன்.) ஹெட்மாஸ்டர் யாகூப்கான் அவர்களையும், மரியாதை நிமித்தம் பார்த்துவிட்டு வந்தேன். மேலதிகாரிகள் என்னை பவ்யமாக விளித்ததும், மாயாண்டியும், பெரியாண்டியும் உரிமையுடன் ஒருமையில் விளித்ததும், படா தமாஷ்.

67. பிரமலைக்கள்ளர்களின் உயர்பண்புகளுக்கு இணையில்லை, மனித நாகரீகத்தில்.

68. குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா.

69. கீதா, கமலம், சுகுமார்ன் நோக்குக.

70. தாத்தா ஒரு ஸீ.ஈ.ஓ.

(ஸீ. ஈ. ஓ)

அம்மா சொல்படி ராஜூ: 13. அந்த நாளும் வந்திடாதோ?

அம்மா சொல்படி ராஜூ: (அந்த நாளும் வந்திடாதோ!)

பகுதி 12: 29 10 2009

(இடி விழுந்தது)

... அப்போது என் முதற்பிள்ளைக்கு 4 வயது இருக்கும். 55,56 பிறகு ஒரு பெண் எனக்கு 57, அந்த பெண்ணை என் அம்மாவிடம் விட்டு இருந்தேன். நாங்கள் போய் என்ன செய்வது. ஆனால் நாத்தனாருக்கு நிறைய நகை 58 போட்டிருந்தார் அவர் புருஷன். என் நாத்தனார் சொன்னாள். உனக்குப் பெண் இருப்பதால் நீயே எடுத்துக்கொள் என்று சொன்னாள். ஆனால் என் புருஷன் வரதாச்சாரியாரை கேட்காமல் நான் வாங்கிகொள்வது தப்பு என்றும் சொல்லிவிட்டார். ரொம்ப நல்லதாகப்போச்சு. 59 இப்படியிருக்கும் போது நான் நாலாவது பிரஸவத்திற்கு போனேன், என் அப்பா வீட்டிற்கு. அப்போது எனக்குப் பெண் பிறந்தது. 60 அதே மாஸத்தில் என் அப்பாவிற்கு (அடித்தல், திருத்தல்)... அப்போது செட்டியார் வீட்டு வேலை விட்டு விட்டார். நாதன் கம்பெனி என்று பிஸினஸ் நடத்தினார். அந்த சமயத்தில் தான் 60வது கல்யாணம் நடந்தது. ரொம்ப நன்றாக நடந்தது. அரியக்குடியிலிருந்து யானை மேல் பூர்ணகும்பத்துடன் புடவை வேஷ்டி எல்லாம் என் அப்பாவிற்கு வந்தது. 61 அதிலிருந்து எனக்கு ஆறாவது குழந்தை பிறக்கும் வரையில் செழிப்பாக இருந்தது. என் தம்பி சரியாக படிக்கிறதில்லை. இருந்தாலும், அவனுக்கும் கல்யாணமாகி இரண்டு குழந்தை பிறந்து இறந்தது.

பிறந்து இறந்துவிட்டது. அப்பா தான் என்ன செய்வார்? இப்படியிருக்கும்போது, என் அப்பா மாஸம் ஒரு தரம் ஸ்ரீரங்கம் வருவார். அப்போது வீட்டில் கார் இருந்தது. டைரவர் நாரயணன் என்று இருந்தான். அவன் தான் ஒரு தரம் ஸ்ரீரங்கம் அழைத்துப் போனான். அப்போது பெருமாள் சேவித்து விட்டு திரும்பும்போது ஒண்ணுக்குப் போகலாம் என்று காரை நிறுத்தச்சொல்லி, இறங்கி அங்கு ஒரு இடத்தில் ஒண்ணுக்கு போய்விட்டு எழுந்தார். அப்போது காலில் முள்ளு தைத்துவிட்டது என்று ஊருக்கு வந்துவிட்டார், ஒரு வாரம் ஆனதும் காலில் பெரியதாக வீங்கிவிட்டது. வலி தாங்காமல் டாக்டர் நாராயனசாமி என்கிறவர் எங்கள் குடும்ப டாக்டர். அவர் வந்து பார்த்து ஆபரேஷன் செய்தாராம். அது நன்றாகத் தேவலை. ஆனால், ஏதோ ஒரு உடம்பு வந்து ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டாராம். 62 அப்போது எல்லாம் நான் என் புருஷனுடன் உசிலம்பட்டி என்ற ஊர் மதுரை அருகில் இருக்கிறது. அங்கு தான் இருந்தேன். என் அப்பா உடம்பு விஷயம் பற்றி எனக்கு லட்டர் வரும். நான் வருகிறேன் என்றால் வரவேண்டாம் என்று போடுவார்கள். இப்படியிருக்கும்போது தான் நான் ஐந்தாவது உண்டாகியிருக்கிறேன். என்ன செய்வது? ஆனால் முதல் குழந்தை பிறக்கும்போது எனக்கு 17 வயது? இரண்டு வயது வித்யாஸமாக எனக்கு குழந்தை பிறக்கும். என் மாமியாரும் இல்லாததினால் என் அப்பாவே கவனிக்க முடிய ஆயிற்று. என் மாமனார் மாத்திரம் இன்னம்பூரில் இருக்கிறார். இப்படியிருக்கும் போது தஞ்சாவூரில் இருந்த நாத்தனார் லட்டர் போட்டார். என்ன என்றால், என் மைத்துனர் இரண்டு பையன்களையும் தான் படிக்க வைத்துக்கொள்வதாகவும், உன் பிள்ளை பெரியவனை என்னிடம் விட்டால் என் பிள்ளை இருவருடன் நன்றாகப் படிக்கலாம். தவிர, கல்கத்தாவிலிருந்து நாமு என் பிள்ளையை நீ வைத்துக்கொண்டு படிக்க வை; நான் பணம் அனுப்புகிறேன் என்று லட்டர் போட்டிருக்கிறாள். நீ என்ன சொல்கிறாய் என்று அந்த நாத்தனார் லட்டர் போட்டாள். அதற்கு பதில் போட்டுவிட்டார். பிள்ளையை அனுப்பி வைக்கிறேன் என்று. எனக்கு மூன்றாவது பிள்ளை பிறக்கும்போது தான் என் மைத்துனருக்குக் கல்யாணம். அவர் கல்யாணத்தை தஞ்சாவூர் மாப்பிள்ளை செய்து வைத்தார். அவர் திடீரென்று இறந்து விட்டதால், நாத்தனார் தனியாக இருக்க வேண்டாம் என்றும், என் புருஷன் தன் பிள்ளையை தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தார். அதே போல் நாமு என்கிற நாத்தனாரும் அவள் பிள்ளையை அனுப்பிவைத்தாள். இவர்களையும், தம்பியையும் வைத்துக்கொண்டு63 நாத்தனார் கொஞ்ச நாள் தஞ்சாவூரிலேயே இருந்தாள். பிறகு, நான் மூன்றாவது குழந்தை பிறந்து 3 மாஸத்தில் உசிலம்பட்டி போய்விட்டேன். அப்போது எல்லாம், என் அப்பா நன்றாக இருந்தார். நல்ல பணம் சம்பாத்தியம் உண்டு. இப்படி காலம் போய்க்கொண்டிருந்தது. இப்படியிருக்கும் போது நான் ஐந்தாவது உண்டாகியிருந்தேன். அப்போது என் அப்பாவிற்கு ஏதோ கொஞ்சம் தேவலை. என்னைக் கவலைப்படவேண்டாம். ஆராவமுதுவை அனுப்பிவைக்கிறேன். அவனோடு ருக்மணியை அனுப்பி வையுங்கள் என்று என் அப்பா லட்டர் போட்டார். அதே போல் நான் ஒன்பதாவது மாஸம் என்னிடம் இருக்கும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரஸவத்திற்கு காரைக்குடி வந்தேன். அந்த சமயத்தில் என் அப்பா நடத்துகிற அரியக்குடி உத்ஸவ வேத பாராயணமும் நடந்து கொண்டிருந்தது. 64 அதோடு நம்ம ஆசாரியன் ஆக்கூர் ஆண்டவனை ஒரு வருஷம் வைத்து ஆராதனை நடத்தினார்...

(அந்த நாளும் வந்திடாதோ!)

55. அன்று:

தஞ்சாவூர் ஸ்டேஷனில் இஞ்சின் தண்ணி குடித்ததை வியப்புடன் பார்த்ததும், படியேறி ஜட்கா வண்டி பிடித்ததும், வீடு பூரா நான் அத்திம்பேரின் சடலத்தைத் தேடியதும் நினைவில் இருக்கிறது. அன்று மதியம் மச்சிலிருந்து பெரும்கூச்சல் கேட்டு ஊரெல்லாம் ஓடி வந்தது. (என்னடா என்று தும்பி - அவரின் இரண்டாவது மகன் - கேட்டான். மச்சிலே போட்டிருக்குன்னு சொன்னான். ஏறி தேடியிருக்கிறேன். இறங்கத்தெரியவில்லை. சடலம் எழுந்தா வம்புன்னு கூச்சல். செக்காணூரணிப்பாட்டி மோர் காச்சி கொடுத்து, கட்டி கொண்டாள். (அவள் என் அம்மாவுக்குப் பாட்டி. எனக்கு காவல் தெய்வம். காரைக்குடி முத்தூரணீக்கரை திண்ணைப்பள்ளிக்கூடத்தில் வித்யாப்யாஸம். ... வாத்தியார் [பேர் வேண்டாம் - பாஸ்வெர்ட்] அடிச்சார். பாட்டிட்டே சொன்னாள். அவரை வைதாள், “... கட்டேலே போக! குழந்தை மேல கை வச்சே, கண்டங்கண்டமா வெட்டி குளத்தலே போட்ருவேன்.” அப்பறம் ஐயா தான் ஹீரோ!).

56. இன்று:

அக்கால வரதக்ஷிணைக்கொடுமைக்கு பலியானார், என் அத்தை என்ற வ்யாகூலம். ஆயுசுக்கு கண்ட கண்ட இடங்களில் பிள்ளைப்பேறுக்கு உதவி, என் பெண் பிறந்தபோது கூட. அவள் பெண் தெய்வம். சுயகல்விக்கு அவருக்கு ஈடு கிடையாது. எப்படியோ இருக்கவேண்டியவள் எங்கள் நல்ல குடும்பத்திலேயே, இன்னல்களுக்கு இரையானார் என்று வருந்துகிறேன். ஆறுதல்: அவருக்கு பக்கபலம் வஸந்தா, என் மனைவி.

57. அவள் ஜெம்பகம், என் உயிர்த்தோழி. இப்போது இல்லை.

58. அதன் மேல் எத்தனை பேருக்கு கண்!

59. ஆண்கள் முடிவு எடுப்பார்கள். பெண்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.

60. கமலா. அவள் வீட்டில் தான் வாழ்கிறேன். இன்று சில நண்பர்களைத்தவிர, என்னை ‘டா’ போட்டு அழைக்கும் உரிமை, அவளுக்கு.

61. எனக்கு நினைவு இருக்கிறது. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கச்சேரி. ரொம்ப நாளுக்கு பிறகு தான் தெரியும், அவரும், நாடகச்சக்கரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் அவர்களும் தாத்தாவுக்கு நண்பர்கள் என்று.

62. செய்வினையோ என்று பேசிக்கொண்டார்கள் என்று நினைவு.

63. இதில் ஒரு நுட்பம். அத்தைக்கு வருமானம் இருக்க ஒரு உத்தி, இது.

64. உத்ஸவம்னா, பசங்களுக்கு கொண்டாட்டம். மேற்பார்வை கிடையாது. விடியல் காலத்திலே, தேசாந்திரி மாதிரி, கோயில்லே தோசை; குளத்திலேயே வாசம்; தாத்தா உபயதாரர் என்பதால், வெள்ளித்தடி ஒன்று தாங்கி வருவார், பெருமாள் ஊர்கோலம் வரச்ச. அதை பிடுங்கிண்டு, நானும், என் தம்பியும், பேண்ட்மாஸ்டர் மாதிரி, சுழுற்றிண்டு வருவோம். அப்பப்போ தேவதாசிகள் மேலே ஒரு கண்ணு. புரியாது; ஆனா புரியும். வேத பாராயாணகோஷ்டியோட நடந்து தாகசாந்தி. உடனே ஓடிப்போய், பின்னாலே வரும் திவ்யபிரபந்தகோஷ்டியோட தாகசாந்தி.. அந்த நாளும் வந்திடாதோ!