Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: 9: வந்தே மாதரம்

அம்மா சொல்படி ராஜூ: (வந்தே மாதரம்...) பகுதி 9: 25 10 2009

(ஆனா பின்ன இருக்காதா...? )

... மறுபடியும், என் மாமனார் லட்டர் போட்டுவிட்டார். உடனே பெண்ணைக் கொண்டு போய் விடுங்கள் என்று எழுதிவிட்டார். அப்பா உடனே என்னையும் அம்மாவையும் திருமங்கலம் அனுப்பி வைத்தார். ஆனால், அம்மா உடனே காரைக்குடி வந்து விட்டாள். நானும் நாத்தனாரும் இருந்தோம் அந்த சமயத்தில் நான் பெரியவளாகிவிட்டேன். (அடித்தல் திருத்தல்) உடனே இன்னம்பூருக்கு தந்தி கொடுத்து, காரைக்குடிக்கும் தந்தி கொடுத்து என் மாமியாரும் என் அம்மாவும் வந்து அந்த ஃபன்க்ஷ்னை (function) செய்துவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு என் அம்மாவுடன் காரைக்குடி போய்விட்டேன். பிறகு ஆறு மாஸம் ஆனபிறகு என் மாமியார் பெண்ணை வீட்டுக்கு நல்ல நாள் பார்த்து அழைக்கப்போகிறோம். அதற்கு முன்னாடி லட்டர் போடுகிறோம்; நீங்கள் அதற்கு தகுந்ததாப்போல் வரலாம் என்று லட்டர் போட்டார். என் மாமானார் தேதியும் தெரிவித்தார். அதற்குள் எனக்குத் தலைதீபாவளி வந்தது. அதற்கு என் மாமானார் எல்லாருக்கும் என் அப்பா லட்டர் போட்டார். அதே சமயத்தில் என் அக்காவிற்கு மூன்றாவது பெண் பிறந்திருந்தது. ஆனால், என் அக்காவிக்கு என் அப்பா வீட்டில் தான் குழந்தை பிறந்தது. அப்போது எல்லாம் என் அத்திம்பேருக்குக் கோபம். அவர் ஸ்வீகாரம் போனதால், அவருக்கு சொத்து உண்டு. அதின் பேரில் கடன் வாங்கு (கி) சைக்கிள் கடை வைத்து நடத்தினார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். எனக்கு நினைவு இருக்கிறது. அக்காவுக்கு சாமான்கள் எல்லாம் நான் தான் வாங்கி தருவேன். இப்படியிருக்கும் போது என்னை நாள் பார்த்துக்கொண்டு விடும்படி லட்டர் வந்தததை பார்த்து, என்னைக் கொண்டுவிட ஏற்பாடு நடந்தது. எனக்கு வெள்ளிப்பாத்திரம், ஈயம், இலும்பு, பித்தளை உள்பட புடவை, மாப்பிள்ளைக்கும் பட்டு, வெல்வெட் மெத்தை, தலைகாணி உள்பட எல்லாம் தைத்து, எல்லாச்சீர்களுடன் எல் லாரும் இன்னம்பூர் போய்ச் சேர்ந்தோம். அந்த ஃபன்ஷனும் நன்றாக நடந்ததது...44

(வந்தே மாதரம்,,,)

44. வெள்ளந்தியாக இருந்தாலும், என்னே நுட்பம் ஒரு ஆங்கிலச்சொல்லை ரத்னமாக பொதித்து !

“ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே ... அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே ... அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே ...இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி, என்

வாயுற வாழ்த்தேனோ ...இதை

‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’

என்று வணங்கேனோ”

- மஹாகவி சுப்ரமணிய பாரதியார்

(வந்தே மாதரம்...)

No comments:

Post a Comment