Friday, October 14, 2011

அன்றொரு நாள்: அக்டோபர் 7

அன்றொரு நாள்: அக்டோபர் 7

‘பல கோடி நூறாயிரம் ஆண்டு’ சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், பிரபல மகப்பேறு மருத்துவராகவும் இருந்த ஸர். ஆற்காட் லக்ஷ்மணசாமி முதலியார் விடலை பருவத்திலே முடி திருத்தும் கடை சென்று: உரையாடல்:

ல: முகக்ஷவரம்.

கடைக்காரர்: அம்மாவிடம் சொல்லி விட்டு வந்தாயா? ( அரும்பு மீசை, பூனை மயிர்: இளப்பம்)

ல: எனக்கு தினமும் இருமுறை முகக்ஷவரம் செய்யவேண்டும்; அப்படி வளர்கிறது.

க: ஓ! சாயங்காலம் வா. ஃப்ரீ! (அந்தக்காலத்திலேயே க்ஷவரம் இலவசம்!)

திகைத்துப்போய்விட்டார். அந்த அளவுக்கு அடர்த்தி! வந்தது அண்ணாச்சி ஸர். ஆற்காட் ராமசாமி முதலியார்!

இருவரும் இரட்டைப்பிறவிகள். தாடி மட்டுமல்ல; ஸர் பட்டத்திலும், புகழிலும் இரட்டையர்.

ஒரே முட்டை இரு கருவாக வளர வாய்ப்புண்டு. மரபணு ஒற்றுமையால், அப்படி பிறக்கும் இரட்டையர் ஒரே அச்சு, பல விதங்களில். அவர்களுக்குள், உடல் ரீதியாக, மனரீதியாக வித்தியாசங்கள் தென்பட்டால், அவற்றின் காரணம் சூழல் அல்லது வெளியில் இருந்து வந்த தாக்கம் என நினைக்க முடியும். ஆகையினால், இரட்டைப்பிறவிகளின் வாழ்வியலை நோட்டம் விட்டால், பிறவி/சூழல் தாக்கங்களை இனம் காண இயலலாம்.

அக்டோபர் 7, 1977 அன்று இம்மாதிரியான ‘ஒரே அச்சு’ இரட்டையர்கள் 90 ஜோடிகளை, கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் என்ற புகழ் வாய்ந்த நார்வே பல்கலைக்கழகம், ஆய்வு ரீதியாக, ஒரு ஜாலி ஷாப்பிங்க் கூட்டி சென்றார்கள். கப்பல் பயணம் ஃபெலிக்ஸ்டவ் என்ற ஊருக்கு. இரட்டையர்களுக்கு ஒரே மாதிரியான உடை. குழப்பம், கலாட்டா, குஷி. ஆய்வின் நோக்கம்: சூழலுக்கும், மனித நடத்தைக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்வது. ஏற்பாடு செய்த கேப்டன் டாஹ்ல்ஸ்ட்ரோம் ஒரு இரட்டையர். ஒரு இரட்டை சகோதரிகள் இரட்டை குதிரைகளில் சவாரி செய்ததைக் கண்டு இந்த எண்ணம் உதயமானது என்றார், இவர். 11 ~80 வயது இரட்டையர் கூட்டம், இங்கு. இரட்டையர் ஜோடிகள் ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அல்ல, எனவே, இன்று கூடியதை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார்கள்.

ஸ்வீடனில் இரட்டைப்பிறவிகளின் வரலாற்று புள்ளி விவரங்களை சேகரித்து, ஆய்வுகளுக்கு உதவும் ‘இரட்டையர் பட்டியல்’ என்ற நிறுவனம் 1886 -1990 காலகட்டத்தில் பிறந்த 70 ஆயிரம் ஜோடிகளின் விவரங்களை ஆவணப்படுத்தி, 370 ஆய்வுகளை நடத்த உதவியிருக்கிறது.


என்ன ஆச்சு உமக்கு? தேசாபிமானத்தையும், வரலாற்றுப்பாடங்களையும், வினா~விடை யென்று துவஜாரோகணம் செய்து விட்டு, வியாசங்களுடன் ‘தினாவெட்டாக’ அலைவதையும், ஆன்மிகோபன்யாசம் செய்வதையும் விட்டு விட்டு, துக்கடாவெல்லாம், பக்கோடா போடலாமா? இது தகுமோ? என்று கேட்கிறீர்களா? நேற்று, ஒரு மின் தமிழர் நம்முடம் அளவளாவினார்.

அவர்: என்ன அடுக்குமொழி பறக்குது? அறிஞர் அண்ணா என்று கற்பனையா?

நான்: இல்லை! வந்து!

அ: என்ன இல்லை! வந்து? கொஞ்சம் டல்லடிக்க்குதே! விடாக்கொண்டன் மாதிரி நாட்டுப்பற்றை பற்றி, எந்த இடமாக இருந்தாலும் பேசுகிறீர். கொஞ்சம் இடம் கொடுத்தால், பாமரகீர்த்தி பாடுகிறீர். கிரீன்லாந்தில் பனிமழை! ஸோ வாட்? யாருக்கு வேணும், மிலேச்சர்கள் சரிதம்?

நா: இன்றைய ஜெனெரேஷனுக்கு இதெல்லாம் தெரியணும், ஸ்வாமி. எத்தனை நாள் நாம் கிணத்துத்தவளையாக் இருப்பது...

அ; என்ன சொல்லப்போறேள்னு புரியறது. சார்! நாமெல்லாம் கஷ்டஜீவனம் பண்றோம். மின் வெட். விலைவாசி கூரையை கிளிச்சது. குடக்கூலி அதை பாத்து இளிச்சது. ஏதோ அஞ்சு நிமிஷம் சிரிச்சுப்பேசிக்கலாம்னு வந்தா...

நா. பிடியும் துக்கடா ~1.

லன் கட்.

இன்னம்பூரான்

07 10 2011

அன்றொரு நாள்: அக்டோபர் 8.1

அன்றொரு நாள்: அக்டோபர் 8.1

இன்று நம் விமானப்படை தினம். இந்திய விமானப்படை துவக்கிய தினம்: அக்டோபர் 8. 1932, ஆறு அதிகாரிகளுடனும், 19 ஊழியர்களுடனும், நான்கு சிறிய விமானங்களுடன். முதல் விண் போர் 1937ல், வடக்கு வஸிரிஸ்தானில். நாளொரு சின்ன மேனியாகவும், பொழுதொரு நுண்ணிய வண்ணமாகவும், மெல்ல மெல்ல வளர்ந்தது. ஆகஸ்ட் 1941ல் தான் புது வரவுகள் இடம் பெற்றன. இந்திய விமானப்படைக்கு முதல் சவால், பர்மாவில் ஜப்பானுடன் போரிட நேர்ந்த போது. இன்னல்களும், நஷ்டங்களும் அதிகம் என்றாலும், ரங்கூன் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி இருந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு, இந்திய விமானப்படை என்பதில் ஐயமில்லை. 1942ல் நிறுவப்பட்ட பத்து பயிற்சி மையங்கள் அடுத்த ஆகாய மைல் கல். 1943 வருகை தந்த அமெரிக்க ‘பழிக்குப் பழி’ விமானங்கள் பெரிதும் பேசப்பட்டன, பிரச்னைகள் பல இருந்தாலும். 1944ல் ஹரிக்கேன்/ஸ்பிட்ஃபையர் விமானங்களுடன் பத்து விமானப்படைகள் இயங்கின. ரங்கூன் மே 3, 1945 அன்று கை வசம் ஆக்கும் பணியில் இந்திய விமானப்படை திறனுடன் இயங்கியது. ஆனால், தூசிப்படையின் உதவிக்கரமாகத்தான் கருதப்பட்டது. மார்ச் 1945 காலகட்டத்தில், இதன் முக்கியத்துவம் உணர்ந்து ‘ராயல்’ விருது. ஐந்தே வருடங்களில் அது காணாமல் போய் விட்டது! ஆகஸ்ட் 1947 காலகட்டத்தில் 1600 அதிகாரிகள், 27000 ஊழியர்கள். அக்டோபர் 27, 1947 அன்று காஷ்மீரில் சுதந்திர இந்தியாவின் விமானப்படைக்கு ஆகாயப்போர் வெள்ளோட்டம், அருமையாக நிறைவேறியது. இந்தோ-சீன போரின் போது, நமது விமானப்படை எல்லா சவால்களையும் சந்தித்தது, திறனுடன். 1965 ல் நடந்த இந்தோ-பாகிஸ்தான் போரில் வாகை சூடியது, நம் விமானப்படை. ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் அவர்களால் ஏப்ரல் 1, 1954 அன்று கெளரவிக்கப்பட்ட நம் விமானப்படையின் முதல் இந்திய தளபதி ஏர் மார்ஷல் முகர்ஜி. தபால் தலையில் இருக்கும் நாட் விமானம் சும்மா புகுந்து விளையாடும் ரகம்.

இன்னம்பூரான்

pastedGraphic.pdf08 10 2011

http://www.indianarmedforcesthroughstamps.com/temp/25.jpg


பி.கு. உசாத்துணை ஒரு அதிகாரபூர்வமான இணையதளம். அலுப்பும், சலிப்பும் தட்ட, உறக்கம் வர அதை படித்தால் போதும். நத்தை வேகத்தில் கழுகு புராணம்! அதை படித்து, இதை பிடித்த எனக்கு மின் தமிழர்கள் பரிசுகள் பல அளிக்கவேண்டும்! என்ன சொல்றேள்?

உசாத்துணை:

http://indianairforce.nic.in/


அன்றொரு நாள்: அக்டோபர் 8.2


அன்றொரு நாள்: அக்டோபர் 8.2

அமர காவியங்கள் ஒரு வரியிலும் இருக்கலாம்.

‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி! கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி!’

பிரபல சினிமா டைரக்டர் சி.வி. ஶ்ரீதர் மாதக்கணக்காக மனதில் சுமந்த ‘கல்யாண பரிசு’ கதையை சொல்கிறார். ஒரே வரியில் அதை முழுதும் குறிப்பால் உணர்த்திவிட்டார், கவிஞர். அதுவே சினிமாவின் ஊடுருவும் பாடலாயிற்று. முதலில் வந்தது; நடுவில் வந்தது; முடிவில் வந்தது. இன்றும் நினைவை விட்டு அகலவில்லை. கவிஞர் தான் அல்பாயுசில் போய்விட்டார். ஏதோ ஆபரேஷனாம். ஆள் காலி, 29 வயதில், அக்டோபர் 8, 1959. சார்! ஜீனியஸ்களுக்கு காலம் இல்லை. பாருங்களேன். குலை பட்டினியாக இருந்த போது அவர் இயற்றிய பாட்டு, ‘ஆரவல்லி’ சினிமாவில்:

'சின்னக்குட்டி நாத்தனா

சில்லறைய மாத்துனா

குன்னக்குடி போற வண்டியில்

குடும்பம் பூரா ஏத்துனா!'


‘டவுட் தனபாலுவுக்கு’ ஒரு அவுட்டுச்சிரிப்பு!


'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்

ஐந்தறிவும் நிலைக்குமுன்னா

அதுவுங்கூட டவுட்டு!'

~ ‘நான் வளர்த்த தங்கை’


'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்

தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...

பசியும், சுண்டல் ருசியும் போனால்

பக்தியில்லை பஜனையில்லை'

ஆஷாடபூதிகள் மேல் ஒரு எள்ளல்:

~'நான் வளர்த்த தங்கை'

புதுமைப்பித்தன் கத்தற மாதிரி இல்லெ?


'சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

என்ன பண்ணி கிழிச்சீங்க!'

~ பாண்டித்தேவன்

முண்டாசுக்கவி எதிரொலி கொடுக்கிறானோ?


'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை

வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்

வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு

வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...


எழுதிப் படிச்சு அறியாதவன்தான்

உழுது ஒளச்சு சோறு போடுறான்.

எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி

நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்

சோறு போடுறான் அவன்

~ 'கண்திறந்தது'


'வீரத்தலைவன் நெப்போலியனும்

வீடு கட்டும் தொழிலாளி!

ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்

செருப்புத் தைக்கும் தொழிலாளி!

விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு

காரு ஓட்டும் தொழிலாளி!

விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட

சர்.சி.வி.ராமனும் தொழிலாளி

எதற்கும் உழைப்பு தேவை!

~'சங்கிலித் தேவன்'

'நாடு முன்னேற பலர்

நல்ல தொண்டு செய்வதுண்டு

நல்லதை கெடுக்கச் சிலர்

நாச வேலையும் செய்வதுண்டு

ஓடெடுத்தாலும் சிலர்

ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த

உண்மையை தெரிந்தும், நீ

ஒருவரையும் வெறுப்பதில்லை!'

~‘பாண்டித்தேவன்'



'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி

எடுக்கிற அவசியம் இருக்காது.

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது.

ஒதுக்கிற வேலையும் இருக்காது.

உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டாpastedGraphic.pdf

~ 'திருடாதே'

இவை உசாத்துணையில் சின்னராசு என்பவர் தேர்ந்து எடுத்தவை.

இன்னம்பூரான்

08 09 2011

http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-snc1/hs245.snc1/9218_169769332472_141482842472_2923972_3759807_n.jpg



̀ உசாத்துணை:

http://www.yarl.com/forum/index.php?showtopic=6598




பகிர்வுக்கு நன்றி திரு இ.சார்.

இரை போடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடே! போன்ற வரிகள் உணர்த்துவது எவ்வளவோ.


அன்புடன்

சொ.வினைதீர்த்தான்.

அன்றொரு நாள்: அக்டோபர் 9


*


அன்றொரு நாள்: அக்டோபர் 9

எனக்கு ஒரு மஹரிஷி போல் தோற்றமளிக்கும் தேசாபிமானி, இலக்கிய ஆய்வாளர், நண்பர் திரு.பெ.சு.மணி சொல்வது போல் ‘தமிழ் மரபின் காவலர் வ.வே.சு. ஐயர் அவர்களை பற்றி என் தந்தை அவ்வப்பொழுது சொன்னதெல்லாம், எழுபது வருடங்களாக, உள் மனதில் ஆழங்காணாத கருவறையில், பதிந்துள்ளது. அப்பா என்னை வீர சவர்க்காரை பார்க்க மதுரைக்கு அழைத்து சென்ற போது, சொன்னவை ~ வ.வே.சு. ஐயர் புரட்சிக்காரனாக இருந்த போது மெக்காவுக்கு, முஸ்லீம் மாறு வேடத்தில் சென்றது, கப்பலில் தன்னை வீ.வீ.சிங்க் என்று அடையாளப்படுத்திக்கொண்டு ஏமாற்றியது, வாஞ்சிக்கு உதவியது, பாரதி நண்பனாக புதுச்சேரிக்கு வந்தது, அதுவே அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, காந்தீயவாதியாக மாறியது, அம்பாசமுத்திரம் அருவியில், அருமைப்பெண் சுபத்ராவுடன் எதிர்பாராத விதமாக ஜல சமாதியானது எல்லாம். நான் அவருடைய வரலாறு எழுத வேண்டியதில்லை. நான் எழுதக்கூடியதை விட சிறந்த கட்டுரை (தமிழ்மணி - தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்: ெப. சு.மணி:நன்றி:- தினமணி ) தமிழ் மரபு விக்கியில் இருக்கிறது. உசாத்துணையில் உளது. உங்களை அதை படித்து, தேசாபிமானத்தை, தமிழார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

யாருக்குமே பிறந்த தினம் நினைவில் இருக்கவே இருக்காது. இறக்கும் தறுவாயில் கூட, அநேகருக்கு. ஆனால், யாராவது திருப்புமுனைகளை மறப்பார்களோ? அக்டோபர் 9, 1910 அன்று மாறுவேடத்தில் அவர் புதுச்சேரி வந்தது ஒரு திருப்புமுனை, வ.வெ.சு. ஐயர் அவர்களுக்கு.

சில சமயங்களில் தம்பட்டம் அடித்துக்கொள்வதை அனுமதிக்கலாம். த.ம.அ.வின் தயவினால், என் பெயர் தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பால் சுட்டப்பட்டது எனலாம். என்னால் மின்னாக்கம் செய்யப்பட்ட வ.வே.சு. ஐயர் அவர்களின் கம்பராமாயண ஆய்வு நூல், அங்கு இடம் பெறுகிறது. மலர் அன்றையது. நார் இன்றையது.

இன்னம்பூரான்

09 10 2011

http://i5.ebayimg.com/02/i/000/f5/5e/621b_2.JPG

pastedGraphic.pdf


உசாத்துணை:




http://www.tamilheritage.org/old/text/ebook/THFvavesu.pdf


http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=260&Itemid=346






//சில சமயங்களில் தம்பட்டம் அடித்துக்கொள்வதை அனுமதிக்கலாம். த.ம.அ.வின் தயவினால், என் பெயர் தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பால் சுட்டப்பட்டது எனலாம். என்னால் மின்னாக்கம் செய்யப்பட்ட வ.வே.சு. ஐயர் அவர்களின் கம்பராமாயண ஆய்வு நூல், அங்கு இடம் பெறுகிறது. மலர் அன்றையது. நார் இன்றையது.//


அன்பின் ஐயா,


நல்லதொரு பகிர்வு. நல்ல பல சேவைகள் நிறைவை ஏற்படுத்துவதும் இயற்கையே. அதுமட்டுமன்றி மற்றையோருக்கும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கலாமல்லவா? நன்றி, வணக்கம்.

[பவளசங்கரி]

அன்றொரு நாள்: அக்டோபர் 10:பாபநாசம் சிவன்



அப்டேட்: இதை விட என்ன வேண்டுமையா, சிவனாரே?
The Papanasam Sivan award instituted by the Papanasam Sivan Karnataka Sangeetha Sabha, Madippakkam, was presented to renowned carnatic vocalist K. J. Yesudas at the inauguration of Sabha’s 24th music festival here on Thursday.
The award carried a shawl, a citation and Rs. 10,000.
Mr. Yesudas remarked that his first recording for a film was done in 1961 for which rehearsals were conducted for nearly 10 days. Now, technology had improved and every word in a composition could be changed without much difficulty, he said. 
Deccan N. Krishnamurthi, president of the Thyagabrahma Gana Sabha, said this year, nearly 15 young artistes would perform in the music festival.  V. Maitreyan, Rajya Sabha MP, A. Natarajan, former Director Doordarshan and Radha Vijayasarathy, Managing Director, LIFCO Publications spoke.
~ ஹிந்து செய்தி : 03 01 2014 காப்புரிமை அவர்களுக்கே. நன்றியும்.
இன்னம்பூரான்
03 01 2014


அன்றொரு நாள்: அக்டோபர் 10
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973)

கையேந்தி பவன்களில் உணவருந்தி, மச்சு, குச்சுக்களில் குடக்கூலி இருந்து, காலேஜில் படியாமல் இருந்து வந்த காலகட்டத்தில், கபாலி கோயில் சுத்து வட்டாரத்தில் அஞ்ஞாத வாசம் செய்ததுண்டு. மார்கழி மாதம் அதிகாலையில் குளத்தாண்டே ஜிலு ஜிலு மாருதம் வீச, படா படா பெட்டி ஆர்மோனியம் ஒலிக்க பஜனை இசைத்து வரும் பாபநாசம் சிவன் அவர்களுக்கு, ஜால்ரா போட்டதுண்டு. அது அந்தக்காலம். திரு. கிருஷ்ணன் வெங்கடாசலம் பெரியவரை பற்றி நேர்த்தியாக எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து சில துளிகள். முழுதையும் படிக்க உதவியாக, உசாத்துணை.

“...பாபநாசம் சிவன்: அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவைகள் சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன... தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப்பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை...தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் 1890-ல் பிறந்த இவரது இயற்பெயர் ராமய்யா. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரது இளமைக் காலம் திருவனந்தபுரத்தில் கழிந்திருக்கிறது...் ஏழை பிராமணர்கள் இலவசமாகச் சாப்பிட முடியும். அப்படி அன்னதானம் அளிக்கப்படும் இடங்களுக்கு ஊட்டுப்புரை என்கிற பெயர் உண்டு. இங்கு தான் ராமய்யாவுக்கு சாப்பாடு... பாலக்காடு அருகே நூருணி என்கிற ஒரு ஊர். இந்த ஊரைச் சேர்ந்த பாகவதர் ஒருவரின் நட்பு இங்கே கிடைத்தது. அது இவரது இசை ஞானத்தை வளர்க்க உதவியாக இருந்தது...1939 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யரின் நட்பு கிடைத்தது. சுந்தரம் அய்யரின் மூத்தமகன் எஸ் ராஜம் (ஓவியர்) எஸ் பாலச்சந்தர், மகள் எஸ் ஜெயலட்சுமி மற்றும் சுந்தரம் அய்யர் ஆகியோர் நடித்த 'சீதா கல்யாணம்' என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன்...ைலாப்பூரில் வாசம். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் பஜனை கோஷ்டியில் பிரதான பாடகர். மாட வீதியைச் சுற்றி வரும் இந்த பஜனை கோஷ்டி, கற்பகாம்பாள் பேரில் பல பாடல்களை இயற்றிப் பாடியிருக்கிறார்...பாபநாசம் சிவன் தனது குருவாக பிரபல சங்கீத வித்வான் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யரையே கருதி வந்திருப்பதாக ஒரு பேட்டியில் அவரது மகள் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிவனின் சகோதரன் ராஜகோபாலய்யரின் புதல்வி மறைந்த எம்ஜியாரின் துணைவியார் வி.என். ஜானகி என்கிற பதிவுகள் உள்ளன...இவரது கீர்த்தனைகள் பலவும் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடப் 'சந்திரசேகரா ஈசா', இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசை வித்வான்களால் பாடப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை...இவைகள் தவிர தமிழின் முக்கியமான சில படங்களில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. 1939ல் சேவசதனம். 1943ல் குபேரகுசேலா. இதில் குசேலராக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியம் 'தியாகபூமி'. இப்படத்தில் நடித்த பாபநாசம் சிவன் அவர்களைத் திரையுலகம் மறக்க இயலாது...1961 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது. காமகோடி பீடம் இவருக்கு 'சிவபுண்ணியகானமணி' என்கிற பட்டத்தை வழங்கியது. தமிழ் சினிமா உள்ள காலம் முழுவதம் பாபநாசம் சிவனின் பெருமை திரையுலகில் நிரந்தரமாக இருந்து வரும்.
மிகவும் சிறப்பான சில திரைப்படப்பாடல்களை இப்போது நினைவு கூரலாம்.

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ - அசோக்குமார்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் - அசோக்குமார்
மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
அன்னையும் தந்தையும் தானே - ஹரிதாஸ்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி - சிந்தாமணி
மனமே கணமும் மறவாதே - சாவித்திரி
வதனமே சந்திரபிம்பமோ - சிவகவி
மறைவாய் புதைத்த ஓடு - திருநீலகண்டர்

பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:அசோக்குமார் - 1941லிருந்து செஞ்சுலட்சுமி - 1958 வரை.

திரு. தி. ரா. ச ஒரு நிகழ்வை நினைவுறுத்துகிறார்~ ‘... அவருக்கு சதாபிஷேக விழா நடந்தது.சென்னையில் கிருஷ்ணகான சபாவின் சார்பில் அது 1971வில் நடைபெற்றது... அந்த கொட்டும் மழையிலும் ஒரு சைக்கிள்ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிகொண்டு வந்துகொண்டிருந்தான். கிட்டே வந்தவுடன் "ஐய்யா போலாமுங்களா" என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை."என்ன மாமா கார் வரவில்லயா" என்றேன்."இல்லை அம்பி இவன்தான் எனக்கு எங்கே போனாலும் வந்து இருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டு போகிறான்.
காருக்கு 50ரூபாய் குடுத்தால் 5 நிமிஷத்தில் மயிலை கொண்டு விட்டுவிடுவான்.
ஆனால் அதே 50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்... அந்த இழையில் திரு. தி. ரா. ச.வுடன் நம் மின் தமிழ் முன்னணி கீதா சாம்பசிவம் 2007லியே அரட்டை அடிக்கிறார். நான் புதிசா சொல்றதுக்கு என்ன இருக்கு?
இன்னம்பூரான்
10 10 2011
pastedGraphic.pdf



உசாத்துணை:

‘அம்பா நீ இரங்காயெனில்...’ எம்.எஸ். பாடியது.

*

from
pastedGraphic_1.pdfNagarajan Vadivel radius.consultancy@gmail.com

Papanasam Sivan: The Tamil Tyagarajar (I)

Papanasam Sivan: The Tamil Tyagarajar (II)

Papanasam Sivan: The Tamil Tyagarajar (III)

Papanasam Sivan: The Tamil Tyagarajar (IV)


Papanasam Sivan: The Tamil Tyagarajar (V)

Nagarajan
*
ஆங்கிலத்தில் 'என்ரிச்மெண்ட்' என்றதொரு சொல் உண்டு. நான் எழுதும்போதே நினைத்துக்கொண்டேன், யூட்யூப் உபயம் பேராசிரியரிடமிருந்து வரும் என்று. அது மட்டும் 'என்ரிச்மெண்ட்' அன்று. பழைய நண்பர் சங்கரமேனோன் அவர்களில் குரல் கேட்டது 'அண்ட்யூ 'என்ரிச்மெண்ட்''! என்னுடைய மகனின் திருமண பத்திரத்தில் அவரது சாக்ஷிக்கையொப்பத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டேன்.
நன்றி.
இன்னம்பூரான்
*
இவரது சாகா வரம் பெற்ற கீர்ர்த்தனைகள் சிலவற்றை நான் எந்து சங்கீத ஆசிரியரிடமிருந்து கற்றிருக்கின்றேன்.

என்ன தவம் செய்தனை..
மால் மருகா - வஸந்தா ராகம் :-)
இடது பதம் தூக்கி ஆடும்
கஜவதானா கருணா
சரவணபவ எனும் திருமந்திரம்
மூலாதார மூர்த்தி
தேவி நீயே துணை

பாடல் வரிகள் இசையுடன் சேரும் போது நம்மை மறக்கலாம்.

இப்படி சில .. இன்னமும் ஞாபகத்தில் இருப்பவை!


சுபா
*
இவரது சாகா வரம் பெற்ற கீர்ர்த்தனைகள் சிலவற்றை நான் எந்து சங்கீத ஆசிரியரிடமிருந்து கற்றிருக்கின்றேன்.

என்ன தவம் செய்தனை..
மால் மருகா - வஸந்தா ராகம் :-)
இடது பதம் தூக்கி ஆடும்
கஜவதானா கருணா
சரவணபவ எனும் திருமந்திரம்
மூலாதார மூர்த்தி
தேவி நீயே துணை

பாடல் வரிகள் இசையுடன் சேரும் போது நம்மை மறக்கலாம்.

இப்படி சில .. இன்னமும் ஞாபகத்தில் இருப்பவை!


சுபா
*
100 வருடங்களுக்கு முன் , அக்டோபர் 10, 1911 ல், சீனாவில் பெரும் புரட்சி
ஏற்பட்டது. அன்று சீனத்தில் 3000 ஆண்டுகளாக அரசாண்ட ராஜ வம்சங்கள்
முடிக்கப்பட்டு சீனம் குடியரசு ஆயிற்று. கடந்த 100 வருடங்களாக சீனம்
குடியரசாகத்தான் இருக்கின்றது.

அந்த குடியரசு இயக்கத்தின் மாபெரும் தலைவர் சுன் யாட் சென்

ஆனால் சீனத்தின் நல்லகாலம் அந்த புரட்சியோடு பிறக்கவில்லை. கடைசி ராஜ
வம்சமான சிங் பதவியில் இருந்து தள்ளப்பட்டு, , அதன் பேரரசர் பு யி
வெளியேற்ரப்பட்டாலும், அந்த நாடு இன்னும் பெரிய சமூக கலகங்களுக்கும்,
கலவரங்களுக்கும், உள்நாட்டுப் போர்களுக்கும், குரூரமான ஜப்பானிய
ஆக்கிரமிப்பிற்க்கும் ஆளாயிற்று. கடைசியில் உள்நாட்டுப் போர் 1949ல் மா
சே துங்கின் கம்யூனிஸ்டுகளின் வெற்றியில் முடிந்தது.

1911 சீனப்புரட்சி பற்றியும், அதைத் தொடர்ந்து வந்த கலகங்கள், ஜப்பானிய
படையெடுப்பு பற்றியும்




கடைசி பேரரசர் பு யின் வாழ்க்கை `த லாஸ்ட் எம்பெரர்` என்ற படமாக 1987ல்
வந்தது

last emperor



விஜயராகவன்
*
நல்வரவு. நன்றி, விஜயராகவன்,
நான் சன் யாட் சென் அவர்களின் பிறந்த தினம் இதை எழுதுவதாக இருந்தேன். நீங்கள்
நல்ல ஆவணங்களை இணைத்து இருக்கிறீர்கள்.
இன்னம்பூரான்
*
அரவம் அத்தவானம் என்ற இழிநிலை போக்கி தம் தமிழ்ப் பாடல்காளால் தமிழர் மானமுடன் நெஞ்சுயர்ந்தச் செய்தவர் திரு பாபநாசம் சிவன்
சேசாத்திரி
*
நன்றி, திரு. சேசாத்திரி.
*
அந்த இழையில் திரு. தி. ரா. ச.வுடன் நம் மின் தமிழ் முன்னணி கீதா சாம்பசிவம் 2007லியே அரட்டை அடிக்கிறார். நான் புதிசா சொல்றதுக்கு என்ன இருக்கு?
இன்னம்பூரான்//
சரியாப் போச்சு போங்க,
*
அதெல்லாம் விட்றுமுடியுமா? என்ன?
*

Thursday, October 13, 2011

அன்றொரு நாள்: அக்டோபர் 6 : ஒரு புரட்சியின் சுயசரிதம்

அன்றொரு நாள்: அக்டோபர் 6

ஒரு புரட்சியின் சுயசரிதம்

தற்காலம், இந்தியாவில் பிரிவினை சக்திகள் தேசாபிமானத்தை படுத்தும் பாடு கவலை தருகிறது. இந்திய அரசு முறை ஒரு கூட்டமைப்பு என்றாலும், அடித்தளம் இந்திய தேசாபிமானம் தான். இந்தியர்களாகிய நாம், நுனி மரத்தில் அமர்ந்து, அடி மரத்தை வெட்டி சாய்ந்து வீழ்த்திக்கொள்ளுவோமோ என்ற அச்சம் தான் கவலைக்குக் காரணம்.

டைம்லைன்: முன்னும் பின்னுமாக: அங்குமிங்குமாக:

* 1954

பொட்டி ஶ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்தை போய் பார்த்ததையும், ராஜாஜியின் எதிர்ப்பையும், நேருவின் விட்டுக்கொடுத்த மனப்பான்மையும், மொழிவாரி மாநிலங்கள் தேசாபிமானத்தை குலைக்கும் என்று நான் எழுதிவிட்டு, நேர்காணலில் நடந்த துவந்த யுத்தத்தையும் மறக்கவில்லை.

*2011

இன்று ஒரு பாகிஸ்தானியர் கடையில், அவரும், நானும், ஒரு பங்களாதேசியும், ஒரு பிரிட்டீஷ்காரரும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தோம். இனபேதம் ஒன்றும் தென்படவில்லை.

*1945

செர்பியா,மாண்டெனெக்ரோ,ஸ்லோவெனியா, க்ரோஷியா, பாஸ்னியா-ஹெர்ஸெகொவினியா & மாசிடோனியா ஆகிய மாநிலங்கள் அடங்கிய யூகோஸ்லாவிய சோஷலிச குடியரசின் பிரகடனம். நேருவின் நண்பரான மார்ஷல் டிட்டோ சர்வாதிகாரி. இனவெறியாளர்களை அடக்கி வைத்திருந்தார்.

*1980

மார்ஷல் டிட்டோ மறைவு.

*1990

செர்பிய கொடுங்கோலன் ஸ்லோபடான் மிலோசெவிக் அதிபரான பிறகு, இனவெறி பேயாட்டம் ஆடியது; நாடு குட்டிச்சுவரானது. இனவெறியாளரான இவரது கொடுங்கோலாட்சியில் 20 ஆயிரம் மக்கள் 1991 க்ரோஷியன் போரிலும் மாண்டனர்; 250 ஆயிரம் மக்கள் 1992 -5 பாஸ்னியன் போரிலும் மாண்டனர்.

  • அக்டோபர் 5, 2000

யூகோஸ்லாவிய பார்லிமெண்ட் கட்டிடத்தை மக்கள் இயக்கம் சூழ்ந்து கொண்டு, எதிர்க்கட்சித்தலைவர் கோஸ்டுனிக்காவை அதிபராக பிரகடனம் செய்தது. செர்பிய கொடுங்கோலன் மிலோசெவிக்கின் விலகல் தான் டிமாண்ட். ராணுவம் இதை ஏனோ தானோ என்று தான் பெயரளவில் தடுக்க முயன்றது. ரேடியோ ஸ்டேஷன் கொளுத்தப்பட்டது. புரட்சி ரேடியோ, ராணுவம் தங்களோடு இணைந்து விட்டதாக அறிவித்தது. சொல்லப்போனால், இது சமாதானமாக நடந்த புரட்சி என்றது பீ.பீ.சி.

* அக்டோபர் 5, 2000: காலை மணி 11:

அரசின் கைப்பாவையான ரேடியோ கடந்த மாத தேர்தலின் முடிவு ரத்து செய்யப்பட்டதாகவும், மறு தேர்தல் நடக்கப்போவதாக, உச்சநீதிமன்றம் முடிவு செய்ததாக அறிவித்தது. உள்ளடங்கிய அனர்த்தம் ~ இன்னும் ஒரு வருடகாலம் மிலோசெவிக் நீடிப்பார்.

  • அக்டோபர் 5, 2000: மாலை மணி 3:

புரட்சியாளர்கள் மிலோசெவிக் பதவிலிருந்து விலகக் கொடுத்த கெடு முடிந்தது. அவர் மீது எலெக்ஷன் ஃப்ராட் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பார்லிமெண்ட் அருகில் பிரமாண்டமான மக்கள் கூட்டம். போலீஸ் கண்ணீர்புகை வீச்சு முதலில். பின்னர், அவர்களும் புரட்சியாளராயினர். அமெரிக்காவும், பிரட்டனும் புரட்சியை ஆதரித்தன. அரசின் ஊடகதொடர்பு நிறுவனம், மக்கள் பக்கம் சாய்ந்தது. எதிர்க்கட்சி தலைவர் கோஸ்டுனிக்கா உரை ஆற்றப்போவதாக பேச்சு. ரஷ்யாவின் ஆதரவும், ராணுவத்தின் ஆதரவும் கிடைத்தால், புரட்சிக்கு ஜயம் தான்.

  • அக்டோபர் 6, 2000:

மிலோசெவிக் ராஜிநாமா. கோஸ்டுனிக்கா உலகத்துக்கு நேசக்கரம் நீட்டுகிறார். யூகோஸ்லாவியா சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்குகிறது.

*2001

கொஸாவா,பாஸ்னியா, க்ரோஷ்யா போர்க்கள குற்றவாளியாகவும் பாஸ்னியாவில் இனவெறி படுகொலையாளியாகவும், மிலோசெவிக், ஐநாவின் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, நாடு கடத்தப்பட்டு, ‘த ஹேக்’ என்ற நகருக்கு கொணரப்பட்டார்

*மார்ச் 2006

மிலோசவிக் சிறையில் மாண்டு போனார். செர்பியாவின் பொருள் நிலையையும், அரசியல் ஆளுமையையும் குலைத்த புண்யம் இவரைச்சாரும். இந்த பிராந்தியங்களில், ஐநா சார்பாக பணி புரிந்தவர்களை எனக்கு நன்றாக தெரியும். ஐநா கோர்ட்டு நடவடிக்கைகளை அக்காலம் நான் கவனித்தது உண்டு, தொலைக்காட்சியில்.

*2011: இந்தியா:

இங்கு யூகோஸ்லாவியாவின் வரலாறும் இனவெறிகளும், இந்தியாவின் வரலாறும், பிரிவினை அழுத்தங்களும் ஒப்புமை செய்யப்படவில்லை. இந்திய தேசாபிமானத்தின் சுரத்து இறங்குவதையும், கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.

இன்னம்பூரான்

06 10 2011

pastedGraphic.pdf


http://www.philateca.com/thumbs/stamp_6653.jpg


உசாத்துணை:

http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/5/newsid_2493000/2493021.stm


http://news.bbc.co.uk/1/hi/in_depth/europe/2000/yugoslav_elections/default.stm


http://news.bbc.co.uk/1/hi/world/europe/country_profiles/1039269.stm



pastedGraphic_1.pdfpastedGraphic_2.pdfLK

முன்பு எப்போதையும் விட இப்பொழுது இங்கு பிரிவினைவாதம் ஓங்கி ஒலிக்கிறது :( 2011...

Oct 6 (7 days ago)



pastedGraphic_2.pdfpastedGraphic_1.pdfGeetha Sambasivam to mintamil, me

show details Oct 6 (7 days ago)





தற்காலம், இந்தியாவில் பிரிவினை சக்திகள் தேசாபிமானத்தை படுத்தும் பாடு கவலை தருகிறது. இந்திய அரசு முறை ஒரு கூட்டமைப்பு என்றாலும், அடித்தளம் இந்திய தேசாபிமானம் தான். இந்தியர்களாகிய நாம், நுனி மரத்தில் அமர்ந்து, அடி மரத்தை வெட்டி சாய்ந்து வீழ்த்திக்கொள்ளுவோமோ என்ற அச்சம் தான் கவலைக்குக் காரணம்.//


கவலை தரும் விஷயமே. முக்கியமாய் இனம், மானம், மொழி எனப் பிரிந்து நின்று பேசுவதே. இப்படிப் பேசி மக்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றனர். அதிலும் இளைஞர்கள் அதிகம் ஈர்க்கப் படுகின்றனர். சில சமயம் நினைச்சால் கவலையாய் இருந்தாலும் நம்பிக்கையின் கீற்றும் தெரிகிறது. ஆட்டோவில் போகையில், கால் டாக்சிப் பயணத்தில், நெடுந்தூரப் பயணத்தில், வெளிமாநிலா மக்களிடம் பேசியதில் என்று பார்த்தால் இன்னும் இந்தியர் என்ற உணர்வு அறவே அற்றுப் போகவில்லை என்றும் புரிகிறது. சுயநலம் தலை தூக்கி இருக்கிறது. அது மாறவேண்டும்.


2011/10/6 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: அக்டோபர் 6

ஒரு புரட்சியின் சுயசரிதம்


இங்கு யூகோஸ்லாவியாவின் வரலாறும் இனவெறிகளும், இந்தியாவின் வரலாறும், பிரிவினை அழுத்தங்களும் ஒப்புமை செய்யப்படவில்லை. இந்திய தேசாபிமானத்தின் சுரத்து இறங்குவதையும், கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை.

இன்னம்பூரான்

06 10 2011