Friday, March 29, 2013

அன்றொருநாள்: மார்ச் 29 திருப்புமுனையா? ஒடித்த முனையா?




அன்றொருநாள்: மார்ச் 29 திருப்புமுனையா? ஒடித்த முனையா?
13 messages

Innamburan Innamburan Wed, Mar 28, 2012 at 7:37 PM

To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 29
திருப்புமுனையா? ஒடித்த முனையா?
மார்ச் 29, 1857 அன்று பொழுது நன்றாக விடியவில்லை. வங்காளத்து இந்தியர் படையாகிய 34வது ரெஜிமெண்டில் சிப்பாயாக இருந்த மங்கள் பாண்டே கம்பெனி நிர்வாகத்தை எதிர்த்து, புரட்சி செய்ய வீறு கொண்டு எழுந்த நாள் என்று சொல்லப்படுகிறது. அன்று நடந்த நிகழ்வுகளை பற்றியே ஒருமித்த ஆவணங்கள் இல்லை. அதை சிப்பாய் கலகம் என்றார், சிலர். முதல் இந்திய சுதந்திரப்போர் என்றனர், சிலர். ஆளுக்கொரு வரலாறு படைத்தனர். உண்மை வரலாறு கிடைப்பதற்கு அரிதாயிற்று. லக்னெளவில் லைட்& செளண்ட் காட்சிகள் சிறப்புற அமைக்கப்பட்டிருந்தாலும், அதே ஸ்தலங்களில் பேசாமடந்தையாக நிற்கும் வரலாற்று சின்னங்கள் கூறும் செய்தி வேறு. இது வரை, தக்க சான்றுகளுடன் அளிக்கப்பட்ட வரலாறுகள் நான்கு உலா வருகின்றன. அவை ஒத்துப்போகவில்லை. என்னுடைய ஆய்வு இன்னும் முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க, 1857 வருட புரட்சிக்கு, மார்ச் 29, 1857 அன்றைய நிகழ்வை மட்டுமே திருப்புமுனையாகவே திருப்பிய முனையாகவோ கருத இயலாது என்று தோன்றுகிறது. எனவே, அது பற்றி தக்கதொரு தருணத்தில் எழுதலாம். எனவே, உங்களை திசை திருப்பி, வடக்கு நோக்கி, பஞ்சாப் பிரதேசத்திற்கு அழைத்து செல்கிறேன்.
பாஞ்சாலம் புராதன தேசம். சிந்து நதியும், ஜீலம், சீனாப்,சட்லெஜ், ரவி, பியாஸ் ஆகிய திருவையாறுகளும் மனித நாகரீகத்தின் தொட்டில். பொன் விளைந்த களத்தூர்கள் நிறைந்த நாடு. மதியிழந்த யுதிஷ்டிரன், ‘இரு பகடை’ என்று அடகு வைத்த திருமகள் திரெளபதியின் பிறந்த வீடு, பாஞ்சாலம். பீஷ்மரை வீழ்த்த உதவியாக, முன்னின்று அர்ஜுனனுக்கு பெண்மையின் கவசம் அளித்த சிகண்டி என்ற பெரும்தேர் புரவலனுக்கு பாஞ்சால மண் வாசனை. அது இதிஹாசம் என்று ஒதுக்கினாலும், ஜூலை 12,1799ம் வருடத்தை பற்றி ‘அன்றொரு நாள்: ஜூலை 12’ இழையில் யான் எழுதியதை மறுபடியும் படித்து விட்டு வாருங்கள், இங்கே. 
இன்று ஒரு தேசியத்தின் ( நேஷனாலிடி) சுபஜெனனம். வருடம்:1799: இடம்: பாஞ்சாலம். நிகழ்வு: ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் லாஹூரை ஜூலை 7,1799 அன்று கைப்பற்றி, அன்றே புகழ் வாய்ந்த பாத்ஷாஹி மசூதிக்கு வருகை தந்து, ஜூலை 12, 1799 அன்று முடி சூடினார். அவரது தனிப்பெருமைகள் பல. தன்னுடைய சாம்ராஜ்யத்தில் மரண தண்டனையை தவிர்த்தார்். அவரை கொலை செய்ய வந்தவனும் தலை தப்பினான். 40 வருடங்கள் செங்கோலோச்சிய இந்த மாமன்னர், தனது பாஞ்சால ராஜ்ய விஜய தினமன்றே (நாள்,கிழமை பஞ்சாங்கப்படி) (ஜூன் 27, 1839) இயற்கை எய்தினார்...ஒவ்வொரு பாஞ்சாலக்குடும்பமும் தந்தையை இழந்ததாக வருந்தியது. பாஞ்சாலம் விதவையாகி விட்டது என்றனர்...”
பொன் விழாவுக்கு பதில் தேசமும் போச்சு; அபிமான பங்கமும் ஆச்சு. எல்லாம் போச்சு. ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் இயற்கை எய்தி பத்து வருடங்கள் கூட கழியும் முன், மார்ச் 29, 1849 அன்று ஆங்கிலேயர்கள் பஞ்சாப் களவாடலை பூர்த்தி செய்தனர். விதவையான பஞ்சாபில் அரசின் நிலை குலைந்தது. தன்னலமிகுந்த லஞ்ச லாவண்ய பைசாசங்கள் தலை தூக்கின.  நாட்டுப்பற்றுள்ள ராணுவமோ கட்டவிழ்ந்தக் காளையாகி, குலைந்து போனது. 1809ம் வருட உடன்படிக்கையை உதறிவிட்டு, இந்த பேராசை கிழக்கிந்திய கம்பெனி 1845-46, துரோகிகளின் உதவியுடன், லாஹூரை கைப்பற்றினர். 1846 வது வருட லாஹூர் உடன்படிக்கைகள், பஞ்சாப் அரசை படுக்கப்போட்டது. இரண்டாவது யுத்தம் 1848&-49. முல்தானின் கவர்னர் மூல்ராஜ் செய்த புரட்சியை அடக்கிறேன் பேர்வழியென்று டல்ஹெளசி மார்ச் 29, 1849 அன்று பஞ்சாபை கலோனிய ஆட்சியுடன் இணைத்து, ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களின் மைந்தன் துலீப் சிங்குக்கும் (11 வயது), விதவை ஜிந்த் கெளர் அவர்களுக்கும் பென்ஷன் கொடுத்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து விட்டார்கள்், கொஞ்சம் அங்குமிங்கும் அலைய வைத்து. ராஜகுமாரனை கிருத்துவனாக்கி, விக்டோரியா ராணியின் செல்லப்பிள்ளையாக்கி, தேசாபிமானத்தை ஒழிக்க வேண்டி, மண்ணாங்கட்டியிலும் தெருப்புழுதியிலும் ஆசை காட்டி ( விளயாட்டு, ஆட்டம் பாட்டம்), எங்கிருந்தோ வந்தவளை மணம் முடித்து, செல்லாக்காசாக, ஆக்கிவிட்டனர். அவரை பஞ்சாப் பக்கமே போக விடவில்லை, 1893ல், நாதியில்லாமல், பெருத்த கடனாளியாக பாரிஸ் நகரில் சாகும் வரை. துலீப் சிங் சோகம் வேறு கதை. சொல்ல உற்ற தருணம் கிடைக்குமோ, இல்லையோ?
அடடா! சொல்ல மறந்துட்டேனே! ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் தன்னிடமிருந்த விலைமதிப்பில்லாத கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு நன்கொடை என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதை கடாசி விட்டு, அந்த டல்ஹெளசி, இந்த மார்ச் 29 இழவின் போது, அதை இங்கிலாந்து ராணியிடம் கொடுத்து விடவேண்டும் என்று ஷரத்துப் போட்டான். அதற்கு சால்ஜாப்பும் சொன்னான். அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.
இன்னம்பூரான்
29 03 2012
Inline image 1

The Last Sunset — The Rise & Fall of the Lahore Durbar By Amarinder Singh
உசாத்துணை:

Geetha SambasivamThu, Mar 29, 2012 at 1:06 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil
மைந்தன் துலீப் சிங்குக்கும் (11 வயது), விதவை ஜிந்த் கெளர் அவர்களுக்கும் பென்ஷன் கொடுத்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து விட்டார்கள்், கொஞ்சம் அங்குமிங்கும் அலைய வைத்து. ராஜகுமாரனை கிருத்துவனாக்கி, விக்டோரியா ராணியின் செல்லப்பிள்ளையாக்கி, தேசாபிமானத்தை ஒழிக்க வேண்டி, மண்ணாங்கட்டியிலும் தெருப்புழுதியிலும் ஆசை காட்டி ( விளயாட்டு, ஆட்டம் பாட்டம்), எங்கிருந்தோ வந்தவளை மணம் முடித்து, செல்லாக்காசாக, ஆக்கிவிட்டனர். அவரை பஞ்சாப் பக்கமே போக விடவில்லை, 1893ல், நாதியில்லாமல், பெருத்த கடனாளியாக பாரிஸ் நகரில் சாகும் வரை. துலீப் சிங் சோகம் வேறு கதை. சொல்ல உற்ற தருணம் கிடைக்குமோ, இல்லையோ?//

கொதிக்கும் மனம் அடங்க வழி இல்லை. அதுவும் அந்தக் கோஹிநூர்! அநியாயம், அக்கிரமம், கொள்ளை. திரும்பத் தர மாட்டாங்களானுபல முறை ஏங்கி இருக்கேன்.  திருட்டு வைரத்தை எப்படிக் கிரீடத்தில் மனசாட்சியே இல்லாமல் பதித்துக்கொள்ள முடிந்தது?? இத்தனை சான்றுகளுக்குப் பின்னரும் கொடுக்கவும் மனம் வரலை.

On Thu, Mar 29, 2012 at 12:07 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொருநாள்: மார்ச் 29


கி.காளைராசன் Thu, Mar 29, 2012 at 2:07 AM

To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal@googlegroups.com, Innamburan Innamburan
வணக்கம்.

2012/3/29 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
கொதிக்கும் மனம் அடங்க வழி இல்லை. அதுவும் அந்தக் கோஹிநூர்! அநியாயம், அக்கிரமம், கொள்ளை. திரும்பத் தர மாட்டாங்களானுபல முறை ஏங்கி இருக்கேன்.  திருட்டு வைரத்தை எப்படிக் கிரீடத்தில் மனசாட்சியே இல்லாமல் பதித்துக்கொள்ள முடிந்தது?? இத்தனை சான்றுகளுக்குப் பின்னரும் கொடுக்கவும் மனம் வரலை.
கோகினூர் வைரம், பூரி ஜெகன்நாதர் ஆலயச் சொத்து,
ஜெகன்நாதர் தலையில் இருக்க வேண்டியது,  அதைத் திரும்பப் பெற
அரசு ஏதும் முயற்சி எடுத்துச் செய்துள்ளதா?  அறிந்திருந்தால் அன்புடன் கூறிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

--
அன்பன்
கி.காளைராசன்


s.bala subramani B+veThu, Mar 29, 2012 at 3:04 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


அடடா! சொல்ல மறந்துட்டேனே! ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் தன்னிடமிருந்த விலைமதிப்பில்லாத கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு நன்கொடை என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதை கடாசி விட்டு, அந்த டல்ஹெளசி, இந்த மார்ச் 29 இழவின் போது, அதை இங்கிலாந்து ராணியிடம் கொடுத்து விடவேண்டும் என்று ஷரத்துப் போட்டான். அதற்கு சால்ஜாப்பும் சொன்னான். அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.
இன்னம்பூரான்


உங்களை கண்டால் வியப்பாக இருக்கிறது 
இதை படித்தால் ஒரிசா மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் 

Orissa latest claimant to Kohinoor

 BHUBANESWAR: Orissa is the latest among a legion of claimants to Kohinoor, one of the world's largest diamonds, originally from India, which today adorns the crown of the British monarch. 

An official here said Orissa would stake its claim to the diamond as it is the property of Lord Jagannath, a Hindu god with a wide following in the state. 

The state will soon ask the Central government to bring the diamond back to India, the official, who spoke on condition of anonymity, said. "The jewel is Lord Jagannath's property and should be handed over by the British government to the administration of the temple dedicated to the god in Puri," said the official, who did not want to be named. According to a letter preserved in the National Archives in New Delhi, Maharaja Ranjit Singh, who ruled large parts of northern India in the late 18th and early 19th centuries, had offered the Kohinoor, to Lord Jagannath. The British, however, took away the diamond from Ranjit Singh's son, Dalip Singh, in 1849, the official said. 

"The state government has decided to go through the papers available in various archives about the jewel. Similarly, experts are also reading various other historical evidence to make a strong presentation about its claim," he told IANS. "The microfilm copy of the letter is available with us here," said Bhagirathi Mohapatra, the superintendent of state archives. 

The British government's political agent wrote the letter from a camp near the Khyber pass on July 2, 1829. It was addressed to TA Maddock, the officiating secretary to the Government of India.

 The letter said: "Although the right Hon'ble Governor General of India will have received the melancholy intelligence of the demise of Maharaja Ranjit Singh before my report (on) that event can arrive, I deem it my duty to announce that his highness expired at Lahore on the 27th ultimo." "During the last days of his illness, his highness declared to have bestowed in charity money, jewels and other property to the supposed value of 50 lakhs (5 million) of rupees. Among the jewels, he directed the well-known Coh-I-Nur (Kohinoor) diamond to be sent to the temple of Jagannath," the letter said. The origin and history of the world famous diamond is the subject of an intense debate. According to some historians, it was known originally as the Samantik Mani. Persian king Nadir Shah acquired the gemstone after defeating the then Mughal emperor in 1739 and renamed it as the Kohinoor. Ranjit Singh captured the diamond from Afghan king Shah Shuja in 1813. However, Ranjit Singh's last wishes were not honored as the Kohinoor remained with his son Dalip Singh. After the British annexed Punjab, the then governor-general took possession of the diamond and sent it as a present to Britain's queen Victoria, said Dadhibaban Mishra, a historian. As the diamond was offered to Lord Jagannath, it should be brought to Orissa, said Mishra, a history professor at a government-run college here. A number of priests of the Jagannath Temple have also made a similar demand. (IANS)


Innamburan Innamburan Thu, Mar 29, 2012 at 3:29 AM
To: mintamil@googlegroups.com

The date is July 2, 1839 and not July 2, 1829, as stated.
Innamburan
2012/3/28 s.bala subramani B+ve <sunkenland@gmail.com>
[Quoted text hidden]

renuka rajasekaran Thu, Mar 29, 2012 at 10:29 AM
To: Innamburan Innamburan

செறிவான தொகுப்பு
நல்ல மனமும் நல்ல குணங்களும் கொண்ட மன்னனின் குடும்பம் சின்னாபின்னப்பட சேதி நெஞ்சைப் பிசைகிறது. அதிகாரவெறி - சொத்து வெறி ஆகியன எத்தனை தூரம் செல்லும் என்பதைத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் சித்தரித்திருக்கிகிறீர்கள்.  
மணிமகுடம் மட்டுமா திருட்டுப பொருள் கொண்டது?
இதில் மிகவும் அதிகமான வேதனை தரும் துரோகிகள் துணை!

எனக்கு ஒரு ஐயம் நமது சுதந்திரப போராட்டப் பின்னணியில் -"அண்டா குண்ட்டா செம்பு திருடி ஜெயிலுக்குப் போனவர்களுக்குக் கூட தாமிரப் பத்திரம்" வழங்கப்பெற்று சிறப்பு செய்யப்பட்டதாக ஒரு பேச்சு உண்டு இது உண்மையா?   

[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Thu, Mar 29, 2012 at 12:21 PM
To: 
நன்றி, ரேணுகா! நேற்று நிறைய பேசினோம். மன நிறைவு. துரோகிகள் எல்லாரும் அந்த ராஜ பரம்பரையின் சுற்றம். இதில் டல்ஹெளசி மீன் பிடித்ததில் வியப்பு ஒன்றும். இல்லை.  தாமிரபத்திரம் கேட்காத பாமர சுதேசிகளை எனக்கு தெரியும்.  அவர்களில் நானும் ஒருவன் என்றால், ரொம்ப தப்பில்லை. கொஞ்சம் தான்.தகுதியற்றவர்களும் வாங்கியதை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். எல்லாம் அரசியல்.

நேற்ற மாலை Dr. Vernikos PhD: Siting Kills: Moving Heals (NASA's Life Sciences Division: நூலகத்திலிருந்து வந்தது. உங்களை நினைத்துக்கொண்டேன். குழந்தைகளுக்கு என் ஆசிகள்.
அன்புடன்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

renuka rajasekaran 
ஆம்
உங்களுடன் பேசியது மன நிறைவாய் இருந்தது
"துரோகிகள் எல்லாரும் அந்த ராஜ பரம்பரையின் சுற்றம்"
பல இல்லறங்களிலும் இது சகஜமாய் இறக்கிறது போல 
ராஜாங்கத்திலும்! 
என்று மடியும் இந்த அகப்போர் - அக்கப்போர்?
பேசுவோம்
வணக்கம்
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Subashini Tremmel Sat, Mar 31, 2012 at 8:00 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram


2012/3/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொருநாள்: மார்ச் 29
திருப்புமுனையா? ஒடித்த முனையா?

..அதற்கு சால்ஜாப்பும் சொன்னான். அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.
:-)
இதோ..!
Inline image 1


சுபா



கி.காளைராசன் Sat, Mar 31, 2012 at 11:16 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
////‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் தன்னிடமிருந்த
விலைமதிப்பில்லாத கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு நன்கொடை
என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதை கடாசி விட்டு, அந்த டல்ஹெளசி,
இந்த மார்ச் 29 இழவின் போது, அதை இங்கிலாந்து ராணியிடம் கொடுத்து
விடவேண்டும் என்று ஷரத்துப் போட்டான். அதற்கு சால்ஜாப்பும் சொன்னான்.
அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து
ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.////

ஐயா, அது சரி....
இங்கிலாந்து ராணிப்பாட்டி - எங்களுக்குத்தான் பாட்டி...
உங்களுக்கும் பாட்டிதானா ?

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Apr 4, 2012 at 10:57 PM
To: mintamil@googlegroups.com


ஐயா, அது சரி....
இங்கிலாந்து ராணிப்பாட்டி - எங்களுக்குத்தான் பாட்டி...
உங்களுக்கும் பாட்டிதானா ?

அன்பன்
கி.காளைராசன்
~ நல்ல கேள்வி கேட்டீர்கள், அன்பரே. பக்கிங்ஹாம் அரண்மணையில் பெரிய விருந்து போன்ற நிகழ்ச்சிகள் சிலவற்றின் போது, என் மகன் மருத்துவ கண்காணிப்பாளராக, ஆஜர் ஆவார். மிகவும் உன்னிப்புடன் இருக்கவேண்டும். கடந்த அத்தகைய நிகழ்வில் விண்ட்ஸர் கோமகனும், ராணிப்பாட்டியும் கொஞ்சம் அளவளாவினார்களாம். ராணி உனக்கும் பாட்டி என்றான். அதான். அவனுடைய உத்யோகப்பத்திரத்தில் என்னுடைய பிரியமான பையனே என்று கையொப்பம் போட்டு கொடுத்திருக்கிறார், ராணியம்மை. 1990ல் இங்கிலாந்து போனபோது, அவுக நமக்கு பார்ட்டி வச்சாஹ. அப்போது,'உங்கள் அப்பனுடன் நிழல் சண்டை போட்டேன்' என்று சொன்னேன்.ஒரே சிரிப்பு.
[Quoted text hidden]

கி.காளைராசன் Thu, Apr 5, 2012 at 7:17 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
On 4/5/12, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
 ராணி
> உனக்கும் பாட்டி என்றான். அதான். அவனுடைய உத்யோகப்பத்திரத்தில் என்னுடைய
> பிரியமான பையனே என்று கையொப்பம் போட்டு கொடுத்திருக்கிறார், ராணியம்மை.
இதைக்கேட்டு நாங்களும் மிகவும் பெருமைப்படுகிறோம்.

1990ல்
> இங்கிலாந்து போனபோது, அவுக நமக்கு பார்ட்டி வச்சாஹ.
பார்ட்டி வைத்ததால் பாட்டியா? ‘ஹ்ஹ்ஹா,   ஹ்ஹ்ஹா.

அப்போது,'உங்கள் அப்பனுடன்
> நிழல் சண்டை போட்டேன்' என்று சொன்னேன்.ஒரே சிரிப்பு.
அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

Geetha Sambasivam Sun, Apr 8, 2012 at 3:16 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அருமை.  பாட்டியைப் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கு உங்களுக்கு. பாட்டியை ஒரு பேட்டி கண்டு எழுதலாமோ?  இயன்றால்!


[Quoted text hidden]

No comments:

Post a Comment