Saturday, April 6, 2013

நோபெல் திருவிழா ~1




நோபெல் திருவிழா ~1
18 messages






நோபெல் திருவிழா ~1
இன்னம்பூரான்
08 10 2012
Inline image 2


2012 வருட நோபெல் பரிசு திருவிழா இன்று தொடங்கியது. இனி சில நாட்களுக்கு, நாள்தோறும் களை கட்டும். வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இவ்வருட பரிசுகளிலிருந்து ஆரம்பித்து, நோபெல் மஹாத்மியத்தை, சுருக்கமாக, கூறுவதாக உத்தேசம். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்கு விஷயம் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு உதவலாம் என்று ஒரு அசரீரி கூறுகிறது. வாசகரோ ரக்ஷது.

இவ்வருட மருத்துவ/உடலியல்(Physiology or Medicine) பரிசு இருவருக்கு:  டாக்டர்  ஸர் ஜான் பி.கார்டன் (கேம்ப்ரிட்ஜ்: இங்கிலாந்து) & டாக்டர் ஷின்யா யாமானகா (க்யோட்டோ: ஜப்பான் & க்ளாட்ஸ்டன் நிறுவனம், சான் ஃப்ரான்சிஸ்கோ)  மூன்றாவது பங்கு கொடுக்கப்படவில்லை. முன்னோடிகளான ஜேமி தாம்சனையும், ரூடி ஜேய்னிஸ்சையும் ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வரும் முன் காப்போன் சிக்கனமாக இருக்கலாம். காலம் கெட்டுக்கிடக்கிறது அல்லவா! இந்த பரிசுகளிலேயே ஐந்தில் ஒரு பங்கு குறைத்துத்தான் கொடுக்கிறார்கள். வட்டி வருமானம் மிகவும் குறைந்து விட்டதாம். பரவாயில்லை. அப்படி குறைந்தாலும், பரிசின் மதிப்பு $ 1.2 மிலியன். 

ஸர் ஜான் தான் செயற்கையாக உயிரூட்டும் வித்தையின் தந்தை. முதல் படைப்பு ஒரு தவளை. ஐம்பது வருடங்களுக்கு முன் ஆற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு, (1962: டாக்டர். யாமனாகா பிறந்த வருடம்) இப்போது பரிசு. அவர் இன்றைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். டாக்டர் யாமானகாவின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு: ஒரு வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றுவதற்கான புரதங்களை தயாரித்தது. இருவரின் சாதனைகள் மனித குலத்துக்கு மாபெரும் ‘இறவா’ வரங்கள் என்றால் மிகையாகாது. உயிர்ப்பு கொடுக்கும் ஆற்றல் வெகு தூரமில்லை. மனித உறுப்புகள் பழுதடைந்தால், அந்த அந்த மனிதரின் உடலிலிருந்தே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய முடியலாம். மரபணு சார்ந்த வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவது எளிதாகலாம். அவற்றின் ‘நதி மூலம்/ரிஷி மூலம்’ கண்டுபிடிக்க முடிகிறது.

ஸர் ஜானின் தவளை வந்த விதம் விந்தை. அவர் போட்டது ‘தூபம்’. தாந்தோன்றியாக வளர்ந்தது, தவளை, சுருக்கமாக சொன்னால். அது எப்படி நேர்ந்தது என்பது புரிய 44 ஆண்டுகள் பிடித்தன. 2006ல், டாக்டர் யாமானகா எலிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு, அந்த தவளை வளர்ந்த விதத்தின் சூக்ஷ்மத்தைக் கண்டுபிடித்தார். அது தான் அந்த நான்கு மரபணு கண்ட்ரோல் புரதங்கள் (Myc, Oct4, Sox2 and Klf4.). அவை வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றும் பணியை செய்தன. இது ஒரு விஞ்ஞான புரட்சி. 

ஒரு வேடிக்கையான கொசுறு தகவல்: ஸர் ஜானின் பள்ளி விஞ்ஞான ஆசிரியர் அவருக்கு சுட்டுப்போட்டாலும் விஞ்ஞானம் வராது என்று கொளுத்திப் போட்டார்! அந்த ஜான் சிறுவனும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ஆழ்ந்து விட்டான். இருந்தாலும், வண்ணத்தி பூச்சிகளின் வண்ண அழகில் மனதை பறி கொடுத்து,1956ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புழு, பூச்சி ஆராய்ச்சியில் புகுந்தார். விஞ்ஞானத்தின் அறைகூவல் அவ்வாறு அவரை பிடித்திழுத்து வைத்துக்கொண்டது. 

டாக்டர் யாமனாகோ ஒரு எலும்பு டாக்டர். டாக்டர் வேலை தனக்கு ஒவ்வாது என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்ட அவர் தன் திறனை இந்தப்பக்கம் திருப்பினார். அமெரிக்கா வந்தார். சாதனை படைத்தார். அவரை ஊக்குவித்தது, டாக்டர் சுசுமு டோனெகவா என்ற மற்றொரு நோபலர் (1987). அவரை பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது. நோபெல் பரிசு வந்த விதமே ஒரு காதை. இந்தியர்களில் நோபெல் பரிசு பெற்றவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

ஸர் ஜான் கர்டனுக்கும், டாக்டர் யாமனாகோ அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

(தொடரும்)
இன்னம்பூரான்



Enlarge This Image


coral shree Tue, Oct 9, 2012 at 5:45 AM
To: Innamburan Innamburan
அன்பின் ஐயா,

கொடுமையிலும்கொடுமை நேற்றிலிருந்து இதுவரை தொடர்ந்து 18 மணிநேரம் மின்சாரம் இல்லை...  அதனால் தான் உங்கள் மடல் பார்க்க தாமதம் மன்னியுங்கள். இன்னும் 20 நிமிடத்தில் இதை வல்லமையில் வெளியிடுகிறேன். உடனடியாக அனைத்து குழுமங்களிலும் வெளியிடுங்கள். நாம் ஒரே நேரத்தில் வெளியிடலாம். வெகு சீக்கிரம் உங்களுடைய தனி கணக்கை வல்லமைக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறேன். வேறு ஏதும் ஐடியா இருந்தாலும் சொல்லுங்கள்.

அன்புடன்
பவளா


coral shree Tue, Oct 9, 2012 at 6:08 AM
To: Innamburan Innamburan
http://www.vallamai.com/paragraphs/27325/

அன்பின் ஐயா,
அருமையானதொரு ஆரம்பம் ஐயா.. நல்ல தொடர். வெகு சுவாரசியமான நடை.. பல மாற்றங்கள் தெரிகிறது. தொடருங்கள் ஐயா. வாசகர்களுக்கு நல்லதொரு விருந்து என்பதில் ஐயமில்லை.

அன்புடன்
பவளா
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Oct 9, 2012 at 6:20 AM
To: 
நன்றி, பவளா. இன்னும் ஐந்த் மணி நேரத்தில் பெளதிக சாத்திரத்துக்கான பரிசு அறிவிக்கப்படும். 
[Quoted text hidden]

coral shree Tue, Oct 9, 2012 at 6:33 AM
To: Innamburan Innamburan
நல்லது சார். அனுப்புங்கள். உடனே போட்டு விடுகிறேன்.

Rishi Raveendran Tue, Oct 9, 2012 at 6:58 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com

>>>>>>>>>>>டாக்டர் யாமானகாவின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு: ஒரு வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றுவதற்கான புரதங்களை தயாரித்தது. இருவரின் சாதனைகள் மனித குலத்துக்கு மாபெரும் ‘இறவா’ வரங்கள் என்றால் மிகையாகாது. உயிர்ப்பு கொடுக்கும் ஆற்றல் வெகு தூரமில்லை. மனித உறுப்புகள் பழுதடைந்தால், அந்த அந்த மனிதரின் உடலிலிருந்தே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய முடியலாம். மரபணு சார்ந்த வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவது எளிதாகலாம். அவற்றின் ‘நதி மூலம்/ரிஷி மூலம்’ கண்டுபிடிக்க முடிகிறது.

<<<<<<<<<<<<<<
இது மிகப்பெரும் சாதனை.
இதனை இன்னும் விவரிக்க இயலுமா ? நடைமுறை உலகில் இது சாத்தியமானால் நீரிழிவுள்ளவர்கள் பாங்க்ரியாஸை மாற்றிக் கொள்ளலாம். விழித் திரையில் ஏற்படும் குறைபாட்டினை மாற்றிக்கொள்ளலாம். இப்படி அனைத்து உறுப்புக்களையுமே நாம் சரி செய்ய முடியுமே !

இந்த சாதனை  கூப்பிடு தூரத்தில்தான் இருக்கின்றது இப்பொழுது.  இன்னும் ஒரு 50 வருடங்களுக்குள்ளாகவே இது சாத்தியமாகலாம்

>>>>>>>>>>> இந்தியர்களில் நோபெல் பரிசு பெற்றவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். <<<<<<<<<

சர்.சி.வி.ராமனும் சந்திரசேகரும்.



--

 

Innamburan Innamburan Tue, Oct 9, 2012 at 7:01 AM
To: vallamai@googlegroups.com
இதனை இன்னும் விவரிக்க இயலுமா ?

~ ரிஷி! நான் கூட நினைத்தேன். நேரமின்மை, உடனடி மொழியாக்கத்தில் சிக்கல். இதோ! பெலதிக பரிசு பற்றி எழுதவேண்டும். மற்றவர் யாரேனும் செய்வதில் எனக்கு ஆக்ஷேபனை இல்லை.
நன்றி,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Oct 9, 2012 at 12:01 PM

பகுதி-2
இன்னம்பூரான்
09 10 2012 ( 11 மணி 49 நிமிடம் 34 வினாடி 8756.78 துகள்)
Inline image 2

பெளதிக உலகினிலே வினாடித்துளிகளில் அரிய நிகழ்வுகள் நிறைவேறி விடுகின்றன. கண்மூடிக்கண் திறக்கும் வினாடியை தொல்காப்பியம் ஒரு மாத்திரை என்று குறிக்கும். அதற்குள் பல்லாயிரம் வினாடித்துளிகள்! ஆகையினால் தான் க்வாண்டம் ஃபிஸிக்ஸ் எனப்படும் நுண்துகள் பெளதிகம், பழங்கால பெளதிகத்தின் எல்லைகளை, அனுமார் சமுத்திரத்தைத் தாண்டியமாதிரி, ஒரே தாவலில், கடந்து விட்டது. இந்த பீடிகை எதற்கு எனில், இன்றைய விஞ்ஞானம், பெளதிகத்திக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்ட வினாடியிலேயே, அதை பிரசுரிக்க வழி வகுத்துள்ளதை மெச்சுவதற்குத்தான்.
அந்த பரிசு ஸெர்ஜெ ஹரோஷ் (Serge Haroche) என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானிக்கும், டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் (David J. Wineland) என்ற அமெரிக்க விஞ்ஞானிக்கும், தனித்தனி நுண்துகள் படைப்புகளை அளந்து, மாற்றியமைக்கக்கூடிய பரிசோதனை வழிமுறைகளை முன்னிறுத்தியதற்காக, இருவருக்கும் சமபங்கில் அளிக்கப்படுகிறது. (“for ground-breaking experimental methods that enable measuring and manipulation of individual quantum systems”.). அவற்றை விஞ்ஞானத்தின் அடித்தளத்தையே புரட்டியெடுக்கும், வரலாறு காணாத பரிசோதனை வழிமுறைகள் என்று நோபெல் கமிட்டி புகழாரம் சூட்டி வாழ்த்தி இருக்கிறது. அதில் ஆச்சரியம் யாதெனில், இருவரும், அவரவர் போக்கில், அவர் ஒரு புறம், இவர் ஒரு புறமாக, இந்த அரிய சாதனையை படைத்துள்ளார்கள். அவர்களின் புத்தம்புதிய வழிமுறை, அந்த நுண்துகள்களை சோதிக்க/கட்டுப்படுத்த/ எண்ண உதவுகிறது. அந்த நுண்துகள்கள் ஒரு வினாடிக்குள் எண்ணற்ற முறைகளில் மாறி வருபவை. அந்த சிக்கலை இவர்கள் இருவரும் கையாண்ட திறன், அபாரம். இருவரின் வழிமுறைகளில் ஒப்புமை மிக இருந்தாலும், அவற்றின் திசைகள் எதிர்துருவங்கள். டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் மின்சாரம் புகுத்தப்பட்ட நுண்துகள்களை, ஒளியின் உதவியால் (‘light or photons’) இற்செறித்து, கட்டுப்படுத்தி, அளந்தார். ஸெர்ஜெ ஹரோஷ், எதிர்மாறாக, இற்செறிக்கப்பட்ட துகள்களை (atoms/ions) ஒரு ‘கூண்டுக்கிளி’ போல் புகுத்தி அடைத்தபின் கட்டுப்படுத்தி, அளந்தார்.
அந்த நுண்துகள்களை அவற்றின் சுற்றுப்புறத்திலிருந்து தனித்துக் காண இயலாது. அவை தத்க்ஷணமே, தன்னுடைய அதிசய குணாதிசயங்களை, நம்ப முடியாத வகையில் (bizarre) இழந்து விடுகின்றன. அவை துரிதமாக இப்படி அழிவதற்கு முன்னால், ‘நீ பாய்க்கு அடியில் புகுந்தால், நாங்கள் கோலத்துக்கு அடியில் புகுவோம்’ என்ற புதிய பாதையில் சோதிக்கும் வழி மகத்தானது. இங்கு தான் நேற்றைய பெளதிகம் பத்தாம் பசலியாக போய்விட்டது. அதனுடைய விதிகள் இங்கு செல்லாது.
இருவருமே, 1980லிருந்து ஆராயப்படும் நுண்-பெளதிகத்தில் ஆழங்கால் பதித்து அல்லவா, இந்த புதிய பாதையை அமைத்துள்ளனர். அதனுடைய நல்வரவாக, புரட்சிகரமான ஸூப்பர்-கணினி ஒன்றை உருவாக்கமுடியும். அது நமது வாழ்வியலை தடபுடலாக, நாம் தட்டச்சு செய்யும் கணினி நம் வாழ்க்கையை கிட்டத்தட்ட பற்பலமுறைகளில் மாற்றி விட்டது. மாற்றி வருகிறது. அதை விட தடபுடலாக, இந்த ஸூப்பர்-கணினி நம்மை கட்டியாளும் என்பதில் ஐயமில்லை. அதா அன்று. இனி, நாம் மிக மிக துல்லியமான கடியாரங்களை படைக்கமுடியும். நேரத்தை அளப்பதே ஒரு புது விஞ்ஞான துறையாக அமைந்து, நமக்கு உதவலாம். அல்லது பாடாய் படுத்தாலும்.
‘ராமசாமி! மீட்டிங் இன்று மதியம் 14 மணி- 58வது நிமிடம்- 17வது வினாடியின் 9482.7 துகளில் ஆரம்பம். அதற்கு சரியான விமானம் பிடித்து வந்து விடுங்கள்’ என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை. இந்தியா தாங்குமா, சாரே!
*



vallamai editor Tue, Oct 9, 2012 at 12:56 PM
To: Innamburan Innamburan
http://www.vallamai.com/paragraphs/27365/

Dear Sir,

Published this hot... hot news. Thank you for sharing.

pavala
[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Oct 9, 2012 at 1:23 PM
To: vallamai editor
Thanks. For the coming few days, expect the next one at about this time or a little late.
I
[Quoted text hidden]

Subashini Tremmel Tue, Oct 9, 2012 at 9:36 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: 
நல்லதொரு தொடர். மிக்க சந்தோஷம்.

சுபா

mayakunar Wed, Oct 10, 2012 at 2:12 AM
To: mintamil@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
Nice and interesting as usual.
Gopalan
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Oct 10, 2012 at 6:25 AM
To: 
கோபாலா! கோபாலா! நன்றி பல & ஸுபாஷிதத்திற்கும் நன்றி.




N. Kannan Wed, Oct 10, 2012 at 11:08 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நிச்சயம் நல்லதோர் தொடர்.

ஆசிய வேதிமவியற் கருத்தரங்கில் ஒரு முறை இரண்டு நோபல் விஞ்ஞானிகள் கலந்து
கொண்டனர். அவர்களோடு பேசி, படமெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

நா.கண்ணன்

No comments:

Post a Comment