Saturday, May 11, 2013

அன்றொரு நாள்: மே 12: எங்கிருந்தோ வந்தாள்!




அன்றொரு நாள்: மே 12: எங்கிருந்தோ வந்தாள்!
10 messages

Innamburan Innamburan Sun, May 13, 2012 at 4:57 PM

ன்றொரு நாள்: மே 12:
எங்கிருந்தோ வந்தாள்!
சென்னை மந்தைவெளியில் ஒரு குடில். நூறாண்டுகளுக்கு மேல், ஒரு வரலாற்று நாயகனாக, நிறைவுடன் வாழ்ந்து, ஒரு அமைதியான, உலகளாவிய, இந்திய தொன்மை பண்பின் சிகரமாகத் திகழும் யோகமந்திரத்தை நிறுவிய மஹான் திருமலை கிருஷ்ணமாச்சாரியாரிடம், ஒரு சினிமாக்காரி வருகிறாள்.
அந்த யோகமந்திரம் இன்றளவும், மன/தேஹ/ஆத்ம ஆரோக்கியத்துக்கு அரிய சேவை செய்து வருகிறது. தந்தைக்கு உகந்த மகனார், திரு. தேசிகாச்சாரியார். முதுகு வலியா?, நொந்த மனமா?,உளம் குழம்பிய குளம் ஆயிற்றா? நிவாரணம் உண்டு. அங்கு போனால், பதஞ்சலி மஹரிஷியின் ஆசியில், நல்லதெல்லாம் நடக்கும். எல்லா பணியாளர்களும் வாலெண்டியர்கள். ஸ்தாபகரின் மறுமகன் யோக குரு பீ.கே.எஸ். ஐயங்கார் அவர்கள் புவியனைத்திலும் யோகமந்திரத்தை ஒலிக்கச்செய்தார். இது ஒரு பக்கம்.

இந்த தொந்தம் பந்தம் எல்லாம் ஸ்வர்க்கத்தில் படைத்தது என்று நினைக்கிறேன். இல்லாவிடின், பால் ப்ரண்டன் காஞ்சி முனிவரிடம் வருவானேன்? அவர் பால் ப்ரண்டனை பகவன் ரமண மகரிஷியிடம் அனுப்புவானேன்? நரேந்திரன் மஹரிஷியிடம் போவானேன்? அதன் நற்பயனாக, ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் போவானேன்? பாமரர்களான நமது வரத்துப்போக்குகளில் கூட, இது சில சமயங்களில் காணக்கிடைப்பதாக தெரிய வருகிறது. 1926ல், இன்றைய கதாநாயகி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையை கேட்க வருகிறாள். 

(11 05 1918  அவருடைய ஜன்மதினம். எழுத விழைந்தேன், அவரை பற்றி. ‘அன்றொரு நாள்: மே 11: பரிவட்டம் துறந்த ஆசார்யன்’ என்ற தலைப்பில் கண்ணனை எழுத பணிக்கலாம் என்று நினைத்தேன். கண்ணனோ லண்டன் டவுனை ரவுண்ட் அடித்த வண்ணம்! நினைத்ததெல்லாம் நடப்பதில்லை.) 

ஜேகே அவர்கள் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை ஒலிக்கிறார். மகுடிக்கு மயங்கிய அரவம் போல, அவளும் செயலிழந்து விடுகிறாள். 


‘ என்றோ விட்டுப்போன அழைப்பு அல்லவோ இது? எனக்கு பழக்கமானது தான். ஆனால் வெகு தூரத்திலிருந்து, இப்போது. எனக்கு இது வாழ்வின் புதிய அத்யாயம்.புதிய பாதை. ஆம். அவருடைய உரையை கேட்க சென்றதே எனக்கு புரியாத செய்கை.

அந்த அனுபவம் உந்த, இந்தியா முழுதும் பயணம். அவளுக்கு பல இடங்கள் முன் பரிச்சியமாகத்தான் (deja vu ) தோன்றுகின்றன. பிரபல நர்த்தகி ஏனாக்ஷி ராமராவிடம் பயிற்சி. குறுகிய காலத்திலேயே, அவரிடமிருந்து பூரணத்துவம் அடைந்ததாக நற்சான்று. இந்த யோக வாழ்க்கை பாதை, அவ்வப்பொழுது தான், போடப்படுகிறதோ? சென்னை வந்தாள், இந்த நாட்டியக்காரி. பிரும்மஞான சபையில் இவளது நடனம். அது ஜவஹர்லால் நேருவின் கவனத்தை கவர்கிறது. பகவதி பிரசாத் மிஸ்ராவும், பிருத்வி ராஜ் கபூர் கதாநாயகனாக நடிக்கும் ஷேர்-ஏ-அராப் என்ற படத்தில் நடிக்க அழைக்கிறார்.  அந்த படம் ஜனவரி 1930ல் வெளிவந்தவுடன், இந்த நாட்டியக்காரி உலகப்புகழ் சினிமாக்காரியானாள். புதிய புனைப்பெயர்: இந்திரா தேவி, மே 12 1899 அன்று லாட்வியாவின் ரீகா என்ற நகரில் பிறந்த யூஜீன் பீட்டர்சனுக்கு. 15 வயதில் ‘யோகம்: 14 பாடங்கள்’ என்ற நூல் அவளுள் உறைய தொடங்கியது. இந்தியா தான் தன்னுடைய தாயகம் என்று உணர்ந்தாள். தன்னுடைய காதலனிடம் மோதிரத்தைத் திருப்பிக்கொடுத்து விட்டு, தன்னுடைய சில்லரை நகைகளை விற்று, அந்த பணத்தில், இந்தியாவுக்கு கிளம்பி விட்டாள்.
ஜான் ஸ்ட்டிரகட்டி என்ற செக்கோஸ்லாவக்கிய தூதரக அலுவலரை மணந்தாள். ஒரே பார்ட்டி மயம். ரபீந்தரநாத் தாகூர், நேரு, ரோரிச் தம்பதி ( அவர்களை தெரியுமோ?) போன்றோருடன் நட்பு.

ஒரு இனம் புரியாத வகையில் யோகத்தின் மூலமாக ஒரு நண்பரின் இதயநோயை குணப்படுத்துகிறார், பாரதமாதாவின் இந்த அபிமான புத்திரி. ஆனால் தனக்கு வந்த இதயநோய்க்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அவரே சொல்லட்டும்.
இந்திரா தேவி:

‘என்னுடனிருந்த ஒரு யோகா மாணவர் யோகிகளை அணுகச்சொன்னார். திருமலை கிருஷ்ணமாச்சிரியார் அவர்கள் மைசூரில் 1937 காலகட்டத்தில் மைசூர் யோகசாலை நடத்திக்கொண்டிருந்தார். அங்கு போய் சேர்ந்தேன். ஒரு கூரிய பார்வை. உதறிப்போனேன். என்னை திரஸ்கரித்து விட்டார். ‘பெண். அதுவும் விதேசி. தகுதியில்லை’ மூஞ்சியில் அடித்தமாதிரி. அவர் ஒரு யோகபுருஷன். தன் இதயத்துடிப்பை நிறுத்துவார். தொலைவில் உள்ள விளக்கை கண் பார்வையால் ஏற்றுவார். ஆனால், என்னை புறக்கணிக்க முடியவில்லை. மைசூர் மஹாராஜா வேறே சிபாரிசு. தயவு தாக்ஷிண்யமில்லாமல், ஆணென என்னை பாவித்து, கடுமையாக வேலை வாங்கினார்.

ஒரு நாள், ‘நீ பல படிகளை தாண்டி விட்டாய்’ என்று சிலாகித்து, என்னை தனியே அழைத்து சென்று மர்மமும் சிக்கலும் நிறைந்த பிராணாயமம் எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.

கணவனுக்கு சைனாவுக்கு மாற்றல். ‘நீ என் வாரிசு. யோக குரு தகுதி பெற்று விட்டாய். சொல்லிக்கொடு, அங்கே’ என்றார். இது 1938. ஒரே வருடத்தில் உச்சாணிக்கிளையில். 1939: சீனாவின் அதிபர் சியாங்க் கே ஷேக் அவர்களின் வீட்டில் பள்ளி. மாஜி சினிமாக்காரி. மாஜி நர்த்தகி. மாஜி பார்ட்டி கேர்லாக இருந்த யூஜீன் பொண்ணு இப்போது மாதாஜி குரு இந்திரா தேவி. உலகம் முழுதும், அதுவும் ஆன்மிக காழ்ழ்ப்புணர்ச்சி ரஷ்யாவிலும், எதையும் பிடித்துக்கொள்ளும் அமெரிக்கா, எங்கும் மாதாஜி + யோக தரிசனம். சிவப்புச்சட்டை கிராம்யுகோவே மாதாஜி கீர்த்தி பாடுகிறேன். ரஷ்ய அதிபர் தன்னை சிஷ்யன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மாதாஜி புவனமாதா எனினும், பிறந்த ரஷ்யா, பாரதமாதா, புலன்பெயர்ந்த அர்ஜெண்டினா தான் அவருக்கு இஷ்டதெய்வங்கள். திடீரென்று ஒரு நாள், திடகாத்திரமாக இருந்த அவரது உடல் நிலை கவலைக்கிடமாயிற்று. வயது 102: ஏப்ரல் 25, 2002. ஹிந்து மரபு நல்லடக்கம். 
என்னமோ சாதனை இயலுமா என்று கேட்கிறீர்களே. மாதாஜியின் அவதாரத்தை பற்றி என்ன சொல்ல! எழுத எவ்வளவோ இருக்கிறது. ஆனால் மலேஷியா போகவேண்டும். வரேன்.
இன்னம்பூரான்
12/13 05 2012
Inline image 1

உசாத்துணை:



Anna Kannan Sun, May 13, 2012 at 6:14 PM


உலகமயமாக்கம் என்று வருகிறபோது, அது இப்படி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் செல்லக்கூடும். மாதாஜி குரு இந்திரா தேவி பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

யோகக் கலையை உணர்ந்து பயில்வோம். உலகம் முழுதும் கற்பிக்க முயல்வோம். யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Geetha Sambasivam 
இவரும் அறியாதவரே.  யோக ஆசாரியர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் இந்திரா தேவி குறித்து அறிந்ததில்லை.  தகவல்களுக்கு நன்றி.  மலேஷியப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகளுடன்.

Tthamizth Tthenee Mon, May 14, 2012 at 9:07 AM



காரண காரியமில்லாமல் இவ்வுலகில் எதுவும் நடப்பதில்லை.
ஆனால் காரணத்தை  நாம் அறிய இறைவன் இன்னமும் நமக்கு தெளிவை கொடுக்கவில்லை.
அன்புடன்
தமி்ழ்த்தேனீ
[Quoted text hidden]

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
மெய் சிலிர்க்கிறது இ சார்.

அருமையான விஷயத்தை மிக எளிமையாகத் தந்ததற்கு மிக்க நன்றி.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------

Nagarajan Vadivel Mon, May 14, 2012 at 10:56 AM


//ரோரிச் தம்பதி ( அவர்களை தெரியுமோ?)//
தெரிந்தென்ன பயன். இங்கே மலர்களைப் பற்ரிய இழையில் பங்களூருவில் உள்ள அவர்களின் எஸ்டேட்டில் உள்ள மலர்கள் என்று உள்ளே நுழைய இழைக்குத் தேவையில்லை என்று விரட்டி விட்டார்கள்
நாகராசன்

Swaminathan Venkat 
ரொம்ப நன்றி.  பல புதிய விஷயங்கள் அவ்வப்போது உங்கள் எழுத்தில் கிடைக்கின்றன.

ஆனால் இது இன்ற்ய்வரை நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் தூக்கி அடிக்கிறது. இவரைப் பற்றி தெரிவது இப்போது நீங்கள் சொல்லித்தான். 102 வய்து வரி வாழ்ந்து 2002-ல் ஹிந்துவாக மறைந்தவரைப் பற்றி ஒரு வரி கூட எங்கும் படித்ததாக இல்லையே. என் போதாமையா? இல்லை  நம் தகவல் சாதனங்களின் போதாமையா?
[

Nagarajan Vadivel 
மூல ஆவணம் மொழிபெயர்ப்பு கீழே. இன்னும் சில செய்திகளும் புகைப்படங்களும்.  சில தகவல் முரண்பாடுகளைக் காணலாம்

http://wildyogi.info/en/issue/one-who-put-world-head

அவர் பெயர் Zhenechka Peterson
படத்தின் பெயர் மற்றும் தகவல்

A star of “The Arabian Knight”

Indra Devi with friend
Eugenia sells all her not numerous jewelry and furs and again leaves for the Country of Elephants, forever, as she thought that time. The sum she gathered should be sufficient for several months according to her calculations, and after that… Well, you should not think further. “India… Whom do you have there?” – “Nobody”, - an old conversation with her mother in Petersburg is recollected.
Eugenia started to open India for herself, or to be exact, to “recall” it, because often it seemed to her, that all this have already happened to her earlier. So, once, having decided to study classical Indian dance, she went to a known dancer in the country - Inakshirama Rau. Several lessons later the girl was surprised when her teacher said that her training is finished. “You have already know everything”, - the dancer explained.
Once during a meeting of the Theosophical society in Adyar Eugenia was performing Indian temple dance and she was noticed by Jawaharlal Nehru. They got acquainted and an “enamored friendship”, as she called it, between the Russian dancer and Indian pandit was established for long years. In the same place, in Adyar, a known director Bhagvati Mishra offered her a role in a movie “The Arabian Knight”. The main hero was supposed to be played by Prithviraj Kapoor, a well-known founder of the Indian cinematographic dynasty. Eugenia agreed to participate in shootings: she was still short of money. Just in one day, after a premiere of “The Arabian Knight” in January 1930, she became a star of the Indian cinematography. There was no any Peterson-Labunskaya mentioned in captions, of course. Then the world has got acquainted with Indra Devi for the first time. As she recollected, the director Mishra simply gave Eugenia the list and suggested to choose a pseudonym, and she stuck with a finger randomly and became “a heavenly goddess” – that is how “Indra Devi” is translated from Sanskrit.
Events of this period of her life replace each other rapidly. During one of the secular evenings Eugenia got acquainted with the most enviable groom in Bombay, forty-years old chairman of the Club of Bachelors, an employee of Czechoslovak Consulate, Jan Strakati, and soon she became his wife. The next hypostasy of Eugenia is a colonial lady of the world. Receptions, balls, races… The spouses Strakati were invited by Rabindranath Tagore, by a family of Jawaharlal Nehru, the Roerichs, they met with participants of the Indian emancipating movement. “The only thing that I did not want to refuse, - recollected Indra Devi, - was my friendship with Hindus of all castes and ranks though it was breaking strict unwritten rules of the white people living in India. I was meeting with whom I wanted, and was receiving everyone I wanted”. Her spouse, being a person of wide outlook, gave her freedom in this respect.

http://www.youtube.com/watch?v=CNlb6amgbsU&feature=related
Tirumalai Krishnamacharya was 50 when this film was made and is arguably the most influential yogi in establishing what yoga has become today. His students include Pattabhi Jois the founder of Asthanga yoga, BKS Iyengar, Indra Devi, and his son Desikachar. Most of todays leading yogis have studied under one or more of Krishnamacharya students. Krishnamacharya was born in 1888 in a remote Indian village and lived to be over 100 years old until his death in 1989. He is known as not only as a most influential yoga teacher, but a scholar, and a healer. Krishnamacharya was known to be able to voluntarily stop his visible heart beat/ pulse for over two minutes, probably by drastically reducing venous return to the heart.
The Yoga Sutras of Patanajali spoken In Sanskrit by Kausthub Desikachar. This CD can be purchased at the Krishnamachuraya Yoga Mandiram www.kym.org.

'இ’ சார் கடவுள் மோஸசுக்க்குக் காட்சி தந்தமாதிரி
கொஞ்சம் அதுவும் பத்துக் கட்டளைமாதிரி பச்சுன்னு போட்டு விடுவார்.  தேடி எடுப்பது நம் பாடு
நாகராசன்



DEV RAJ Mon, May 14, 2012 at 12:30 PM


இ சார் பதிவும், நாகராஜர்  கொ(எ)டுத்த படமும்
அருமை; அறிந்திராத தகவல்


தேவ்

Innamburan Innamburan 
நாகராஜன் சமத்து.

[Quoted text hidden]
10 messages



No comments:

Post a Comment