Monday, July 1, 2013

இன்னம்பூரான் பக்கம் – 20




இன்னம்பூரான் பக்கம் – 20

Innamburan S.Soundararajan Mon, Jul 1, 2013 at 5:56 PM


பிரசுரம்: http://www.atheetham.com/?p=5300 : 01 07 2013
Inline image 1

மனிதர்களால் இயங்கும் அரசு இயந்திரத்தின் ஆயுதம் அதிகாரம்; அதிகாரமே அதற்குத் துரு. துருப்பிடித்த கத்தியால் அறுவை சிகிச்சை செய்தால், அது தான் துஷ்பிரயோகம். அதிகாரத்தின் அந்த ‘அன்பளிப்பு’ மக்களை வாட்டும். ஜனநாயகம் வாடி, அழுகி, துர்நாற்றம் வீசும். அதன் மரணம் சம்பவிக்கும். பேராசை பிடித்த யதேச்சதிகாரத்தின் தூள் பறக்கும்.   இம்மாதிரியான தொடர்கருத்துக்களைத் தொகுத்து, அலசி, விடை தேடுகிறது ‘த ரிபப்ளிக்’( ) என்ற அரசியல் இலக்கண நூல். அதை எழுதிய ப்ளேட்டோ, சாக்கிரடீஸ்ஸின் சிஷ்யர். குருவந்தனம் சொல்லிக்கொண்டே, முரணாயினும், தன் சுய சிந்தனையை முன் வைத்த ஞானி, அவர். அந்த நூலில்:
ஒரு வாசகர்,’ Callicles & Thrasymachus கவலைப்படாமல், அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது என்கிறார்கள்.’ என்று கூறியதை விளக்கி எழுதச் சொன்னார். Callicles & Thrasymachus  இருவரும் அந்த நூலில் வலம் வருகின்றனர். ஆங்கில பெயர்களே இருக்கட்டும். ஆள் அடையாளம் காட்ட உதவும். Thrasymachus  நிஜமனிதர். Callicles ப்ளேட்டோவின் கற்பனை பாத்திரம் என்று தான் ஊகிக்க வேண்டியிருக்கிறது. ‘சம்பிரதாயமாக போற்றப்படும் நன்னெறியை’ அவர்கள் இருவரும் உதறிவிட்டனர். சாக்கிரட்டீஸ்ஸால் பெரிதும் போற்றப்பட்ட ‘நியாயத்தை’ கவைக்கு உதவாது, இது; தற்காப்பு சுயநலத்துக்குக் கூட முட்டுக்கட்டை போடுகிறது, இது; புத்திமான்கள் எளிதில் இதை இனங்கண்டு கொள்வார்கள் என்று இவர்கள் கூறியதின் சுருக்கம்: ‘அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது.’
கில்பெர்ட் முர்ரே அவர்களின் நூலொன்று இணையதளத்தில் கிடைத்தாலும், நான் தேடியது கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பேராசியர் ராஸ்சேல் பார்னி சொல்லும் நுட்பம் தான் இந்த இழையின் அடித்தளம். ‘…கிரேக்க சிந்தனைகளுக்கு நாம் யார் முத்திரை போட? ‘சம்பிரதாயமாக போற்றப்படும் நன்னெறிக்கு அடி பணிய’ காரணங்கள் வேண்டும். ‘இல்லையெனில், நம் போக்கில் செல்லலாம் என்று அவர்கள் கூறுவதாக எழுதப்பட்ட இந்த நூலுக்கு சாக்கிரட்டீஸ்ஸின் சிந்தனைகள் ஒத்திகை போல’ என்கிறார். பேராசியர் ராஸ்சேல் பார்னி. Callicles & Thrasymachus இரட்டை நாயனங்கள் அல்ல. ப்ளேட்டோவின் ஆழமான கருத்துக்களை புடம் போடுவதாக அமைகிறது இவர்களின் அளவளாவுதல். இருவருக்கும் இடையே கருத்து பரிமாற்றங்கள். எப்போதும் உடன்பாடு கிடையாது. அதாவது, குருமஹராஜ் ஸாக்கிரட்டீஸ், தத்துவ போதகர் ப்ளேட்டொ, Thrasymachus என்ற நிஜ மனிதர், Callicles என்ற கற்பனை தலைமாந்தர்,Glaucon, Antiphon என்ற பழமை வாதி ஆகி ஆறு சிந்தனையாளர்களின் தாக்கம், இந்த ஒரு வரியில் பிரகாசிக்கிறது.
முதலில் தர்மோபதேசத்தின் சுருக்கம் காண்போம். மற்றவை அடுத்த சில இழைகளில். Thrasymachus and Callicles எதை உதறினார்கள் என்ற வினாவே சிக்கலானது – dikaiosunê எனப்படும் நன்னெறியையா?/dikê எனப்படும் தர்மதேவதையையா?/dikaion எனப்படும் மனிதர்கள் இயற்றிய சட்டமளிக்கும் நியாயத்தையா? தற்காலம் போல கிரேக்கர் காலத்திலும் நன்னெறிகளை பற்றிய நிலைப்பாடுகள் தெளிவாக இல்லை. எதற்கும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாகிய ஹெஸியத் (c. 700 B.C.E.) நியாயம் என்ற சொல்லை விளக்காமலே, லஞ்சம், வாக்குத் தவறுதல், பொய்,புரட்டு, திருட்டு, சூது, மட்டமான தீர்ப்பு மாய்மாலங்களை அநியாயம் என்றார்.
இந்த பட்டியல் பொதுப்படையாக சொல்லப்படவில்லை. திட்டமிடப்பட்ட பட்டியல், அது. அவை ஒவ்வொன்றுக்கும் இரண்டு கால்கள். ஒன்று nomos ( இன்றைய Rule of Law  ); மற்றொன்று அதற்கு முரணான pleonexia (பேராசை). ஒன்று கிழக்கே போகும் ரயில் என்றால், மற்றது மேற்கே செல்லும் ஊர்தி. nomos தான் வேதபாடம். சில பகுதிகள் எழுதப்பட்டன. சில எழுத்தில் இல்லாவிடினும், முன்னுரிமை பெறும். அப்படியானால் அரசு ஆணைகளை திரஸ்கரிப்பது கடினம். அதை விட முக்கியம்.  பட்டியலில் உள்ள அநியாயங்கள், nomos இட்ட சட்டப்படி தான். காலப்போக்கில் இதன் பொருள், திரள் திரளாக வேறுபட்டது. அந்த பிரச்னைக்கு பிறகு வருவோம்.
இந்த pleonexia -பேராசை இருக்கிறதே, அதனுடைய அவலக்ஷணங்கள்:
  1. எனக்கு எல்லாம் அதிகமாக வேண்டும் [pleon echein];
  1. அண்டை வீட்டுக்காரனை விட அதிகம் வேண்டும்;
  2. எனக்கு எது தகுதியானது என்பதை விட அதிகம் வேண்டும்;
  3. ஆக மொத்தம், எல்லாமே வேண்டும்.
இந்த பட்டியலை எழுதி இரண்டாயிரத்து ஐன்னூறு வருடங்கள் ஆன போதிலும், பிற்காலம் அரிஸ்டாட்டில் வகுத்து, இன்று வரை கோலோச்சி வரும் Nicomachean Ethics V என்ற கிரேக்க ‘அர்த்த சாத்திரத்தின்’ வித்து, இது தான்.
படிப்பவர்களுக்கு தத்துவம் பேசினால் அலுத்து விடுகிறது. அதனால் மெதுவாகத்தான் பயணிக்க வேண்டியிருக்கிறது.
(தொடரும்)



No comments:

Post a Comment