Sunday, September 29, 2013

தடையும் விடையும்: அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 24




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 24

Innamburan Innamburan Sat, Sep 24, 2011 at 7:17 PM


அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 24
தடையும் விடையும்

பரிக்ஷைக்கு வராததை படிப்பதின் சுவையை ஏவாள் கடித்த ஆப்பிளுக்கு ஒப்பிடலாம். ஒரு கையில் அறிஞர் அண்ணாவின் ‘கம்பரசம்’ ~காப்பியத்தில் மெனக்கட்டுப் பொறுக்கிய காமம் தூண்டும் வரிகள். மற்றொரு கையில் ‘Brave New World’ ~ Aldous Huxley யின் தத்துவ போதனை. முதலாவது தடுத்தாட்கொள்ளபட்டது; இரண்டாவது தடை செய்யப்பட்ட நூல். அரசியலரும், சமய போதனை/பிரசாரம் செய்பவர்களும், தமக்கு ஒவ்வாத கருத்துக்களை சிரச்சேதம் செய்ய விழைவார்கள். முதல் பலிகடா, நூல்கள். அமெரிக்காவில் ஸெப்டம்பர் 24 லிருந்து அக்டோபர் 1 வரை தடை செய்யப்பட்ட நூல்களுக்கு விழா எடுப்பார்கள். இந்தியாவிலும் விழா எடுக்கலாமே!

சில பார்வைகள்:
  1. சைனாவில் தொன்மை இலக்கியத்தில் சன்வோகோங்க் என்ற குரங்கு தேவர்களை எதிர்த்ததால், ‘புத்தரின் கையினால்’ உருவாக்கப்பட்ட மலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டதாம். முது மொழி: ‘என்ன குதி குதித்தாலும், புத்தரின் கைக்குள் அடங்கித்தானே ஆகணும்.”  டேனியல் வூ என்ற பாமரர் தன்னை பற்றி அப்படித்தான் சொல்லிக்கொள்ளுகிறார்.அவருடைய இடுகைகளை சைனாவின் அரசு குண்டாம் தடியெடுத்து அடித்தி, நசுக்கி, பொசுக்கி விட்டது. அவர் செய்த குற்றம்: அமைச்சர்கள் போகுமிடமெல்லாம் கவனித்து, அவர்கள் அணியும் விலை உயர்ந்த கைக்கடியாரங்களை படமெடுத்து, அவற்றின் விலையை குறிப்பிடுவது. லஞ்சலாவண்யத்தைப் பற்றி பேச்சு எழவில்லை; வெள்ளிடை மலை.புரிந்து விட்டது, மக்களுக்கு. அமோக வரவேற்பு. கருத்துத்தடை துறைக்கும் இவருக்கும் ஒரு நிழல் உடன்படிக்கை? மிகவும் விலை உயர்ந்த கைக்கடியாரங்களையும், பெரிய மீன்களையும் விட்டு விட்டால், சின்ன மீன்களை பற்றி எழுதலாம்! அதையும் தூக்கி அடித்து விட்டார்கள். மற்ற குரல்களையும் அடக்கியாச்சு.. சைனாவில் கால்ஃப் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது, முதலாளித்துவ விளையாட்டு என்று. ஆனால், விதிகளை மீறிய பிரம்மாண்டமான கால்ஃப் விளையாட்டு மைதானங்கள் உருவாகின்றன. அதிகார பலசாலிகள் ரோலக்ஸ் வாட்சு, பெரிய காரு, தாட்டு பூட்டு தஞ்சாவூர்னு அங்கு வந்து வெளயாடுகிறார்கள். கேட்டால், தடா!
  2. ஊதிக்கெடுப்பவர்கள், விக்கி லீக்கு, தகவல் உரிமை சட்டம் எல்லாம் உங்களுக்கு தெரிந்த விஷயங்களே. காலம் மாறிக்கிட்டு இருக்கு. தடைக்கு ஒரு தடா போடணுமோ? அந்த தடாவுக்கு விதி விலக்கு தேவைப்படும் என்பதற்கு ஒரு உதாரணம், அடுத்த பகுதியில்.
  3. பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடி இம்ரான் கான் ‘பாகிஸ்தானின் வரலாறு’ என்று எழுதிய புத்தகம், இந்தியாவில் வாபஸ்ட். எல்லைகள் தவறாக வரையப்பட்டன என்று குற்றச்சாட்டு எழக்கூடும் என்று, முன்சாக்கிரதையாக, ராண்டம் ஹெளஸ் என்ற பிரசுரகர்த்தா, அவற்றை தடுத்து விட்டது. அவர்களுக்கு இதே பிரச்னை பாகிஸ்தானிலும் எழுந்தது, நிக்கலஸ் ஷ்மிடில் என்பவர் எழுதிய நூலை பற்றி. 
  4.  செய்திகளுக்கு ‘வருமுன் பூட்டு’ : சோனியா காந்தியின் சிகிச்சை: ஸூப்பர் கமுக்கம்! பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் உடல்/மன நலம் பற்றி பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஒரு கட்சி. லார்ட் மொரான் என்பவர் சர்ச்சிலின் டாக்டர். சர்ச்சிலின் மன ஓட்டம்/அழுத்தம்/சஞ்சலம் எப்படி அவருடைய அரசியல் பணிகளில் தாக்கம் அளித்திருக்கும் என்ற கவலை. அவர் எழுதிய நூல் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. தடை செய்யப்படவில்லை. அமெரிக்க அதிபர் பீடி பிடிப்பது முதற்கொண்டு பொது மன்றத்தில். இங்கிலாந்தில், பிரதமர் கண் பரிக்ஷை செய்து கொண்டால், ஊடகத்தில் அறிவிப்பு. ஏன். பிரதமர் மன்மோஹன் சிங்கின் இதய ஆபரேஷன் கூட மறைக்கப்படவில்லை. ஏன் சோனியா காந்தியின் உடல் நிலை பரமரகசியம், அவர் திரும்பி வந்த பிறகும்? 1982 ல் சோவியத் ரஷ்யாவில் ப்ரெஸ்னவ் உடல் நிலை பற்றி மூடுமந்திரம் முணுமுணுத்த மாதிரி, இது இருக்கு.
  5.  ஆனால், என்ன பேச்சுரிமை வேண்டிக்கிடக்கு? காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் உடைந்த இல்லறவாழ்க்கையை பற்றி இந்த தொல்லைக்காட்சிகள் படாதபாடு படுத்தி விட்டன?

நூலறுப்பது எப்படி?
அக்கவுண்டட் ஜெனரல்களை தணிக்கை செய்ய இன்ஸ்பெக்ஷன் பிரிவு ஒன்று உண்டு. அவர்கள் டேரா போட்டு, தோண்டித் துருவி, நம்மை வறுத்தெடுப்பார்கள். ஒரு ஆவணப்போர்:
அ:அக்கவுண்டட் ஜெனரல்; இ.பி: இன்ஸ்பெக்ஷன் பிரிவு
இ.பி: ஏஜி ‘Roses in December’ என்ற நூலை வாங்கியிருக்கிறார். ஆக்ஷேபணை.
அ: புத்தகங்கள் வாங்க ஏஜிக்கு முழு அதிகாரம் உண்டு. எதற்கும் உங்கள் மேலான பார்வைக்கு அதை முன் வைத்திருக்கிறோம். (அது எம்.சி.சக்லா என்ற இந்தியாவின் பிரபல தலைமை நீதிபதியின் வரலாற்று நினைவுகள். தணிக்கைத்துறை பிரபலங்கள் சிலாகித்த புத்தகம் என்று சொல்லவில்லை.)
இ.பி: அந்த நூலை பிரிக்க நேரமில்லை. கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும்.
அ: கேட்ட கேள்வி என்ன? ஆக்ஷேபணை என்ன?
[அங்கும் கடப்ஸ். இங்கும் கடப்ஸ். புத்தகம் அலமாரியில்.]
சீன் மாறுகிறது ~ டில்லி அக்கவுண்டட் ஜெனரல் கான்ஃபரன்ஸ்.
அ: சுருக்கமாக, கதை சொல்கிறார்.
இ.பி: அது சரி. அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
மேலா: (ஆவணங்களை வாங்கி பார்த்து): ‘அ’ நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காதது சரியல்ல!
(ஆடிட் உள்குத்தே இப்டின்னா, கச்சா எண்ணெய், 2ஜி, கா.வெ.கேம்ஸ் கும் குமா குத்து எல்லாம் எப்டி இருக்கும்? by the way.)
அமெரிக்க உள்குத்து ஒரு பார்வை:
அமெரிக்காவில் வருடக்கணக்காக பெரிதும் பேசப்படும் நூல்களில் நான்கு: 1. அல்டஸ் ஹக்ஸ்லியின் Brave New World, ஜே.டி.சலிஞ்சரின் Catcher in the Rye, ஜான் ஸ்டைய்பெக்கின் The Grapes of Wrath & ஃபிட்ஸ்கெரால்டின் The Great Gatsby. அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் தற்காலிகமாக ஆகஸ்ட் 6, 2009 ல் தடை செய்யப்பட்டன, பள்ளிகளில். அந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் பலவற்றை உசாத்துணையில் காணலாம். ஒரு செய்தி: இறுதியில் சொல்லப்பட்ட The Great Gatsby என்ற நூலை மதிப்பீடு செய்யச்சொல்லி  14 வயது மாணவ மாணவிகளுக்கு ஹோம் ஒர்க், இங்கிலாந்தில்! ஹூம்.தடை, தடா, தட்தடா எல்லாம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும், சைனாவிலும் அதிகப்படி. தமிழ் நூல்கள் ஏதாவது ~ திருக்குறளின் காமத்துப்பாலை போல ~ஏதேனும் தடை செய்யப்பட்டது உண்டோ?
இன்னம்பூரான்
24 09 2011 
1stamendposters2_copy.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam Sun, Sep 25, 2011 at 6:08 AM


அமெரிக்காவில் ஸெப்டம்பர் 24 லிருந்து அக்டோபர் 1 வரை தடை செய்யப்பட்ட நூல்களுக்கு விழா எடுப்பார்கள்.//

இது கேள்விப்பட்டதே இல்லை. மற்றவை அனைத்துமே புதிய செய்திகள்.  நன்றி.

2011/9/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 24





rajam Sun, Sep 25, 2011 at 6:41 AM


எனக்கும் இதுபற்றித் தெரிந்ததில்லை. பள்ளிகள் திறக்கும் நேரத்தில் கவனமாக இருப்பதற்கான முயற்சியோ?


coral shree Sun, Sep 25, 2011 at 12:01 PM
To: Innamburan Innamburan

சுவாரசியமான தகவல்களுக்கு நன்றி ஐயா. தங்களுடைய பார்வை மிக வித்தியாசம்........ 



Innamburan Innamburan Sun, Sep 25, 2011 at 10:21 PM

To: mintamil
Bcc: innamburan88
எனக்கென்னமோ மணிமேகலை, இனியவை நாற்பது, நாலடியார். கொன்றைவேந்தன் ஆகிய நூல்களையாவது தடை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றை தேடிப்பிடித்து படிப்பார்கள்;மறக்கமாட்டார்கள். ரகுவம்சத்தின் சில பாடல்களை நீக்கித்தான் பாடப்புத்தகம். தேடிப்பிடித்து அவற்றை படித்ததால் தான் இன்னும் நினைவில் உள்ளன, ஸ்ருங்கார ரசமான பகுதிகள். 
நூல்களை தடை செய்வது, பகுதிகளை நீக்குவது, இடைச்செருகல், மூளைச்சலவை, தடுத்தாட்கொள்வது, ஆகிய ஒவ்வாத செய்ல்களை பற்றி  விரிவாகவே அலசுவதால், நன்மை பயக்கும்.  

பள்ளிகள் திறக்கும் நேரத்துக் கவனம் ஏடாகூடமாக செயல்படுகிறது, ராஜம். யாரோ ஒரு தந்தையோ, தாயோ குறை கூறினால், தள்ளி வைத்து விடுகிறார்கள். மீள்பார்வை வருவதற்க்குள்,பையனுக்கு பேரன் பிறந்து விடுகிறான். நான் பட்டியலிட்ட நூல்கள் அமரத்துவம் பெற்றவை. அவற்றை மூளைஹீனன் தான் தடை செய்வான். ஒரு வாரம் பூராவும் இதை பற்றி, இவ்வவையின் சான்றோர்கள் அலசுவார்கள் என்ற ஆர்வம் எனக்கு. யாராவது தூபம் போடலாமே. பேராசிரியரே! உறக்கத்தில் ஆழ்ந்தீரோ? செமினார் முடிந்தததோ, செல்வன்? தேவ வாக்கு என்னதோ? அரங்கத்தில் என்ன பேசப்படுகிறது?
இன்னம்பூரான் 
25 09 2011

rajam Mon, Sep 26, 2011 at 12:58 AM


உண்மைதான், இல்லையா! எது தடை செய்யப்பட்டதோ அதின்மேல் மக்கள் பார்வை போகலாம்!

N. Ganesan Mon, Sep 26, 2011 at 1:17 AM




On Sep 25, 11:51 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> எனக்கென்னமோ மணிமேகலை, இனியவை நாற்பது, நாலடியார். கொன்றைவேந்தன் ஆகிய
> நூல்களையாவது தடை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றை தேடிப்பிடித்து
> படிப்பார்கள்;மறக்கமாட்டார்கள். ரகுவம்சத்தின் சில பாடல்களை நீக்கித்தான்
> பாடப்புத்தகம். தேடிப்பிடித்து அவற்றை படித்ததால் தான் இன்னும் நினைவில் உள்ளன,
> ஸ்ருங்கார ரசமான பகுதிகள்.
> நூல்களை தடை செய்வது, பகுதிகளை நீக்குவது, இடைச்செருகல், மூளைச்சலவை,
> தடுத்தாட்கொள்வது, ஆகிய ஒவ்வாத செய்ல்களை பற்றி  விரிவாகவே அலசுவதால், நன்மை
> பயக்கும்.
>
மகாகவி காளிதாசன் சங்க இலக்கியம் அறிந்தவரா? அவர் அக மரபுகள் நிறையப்
பாடுகிறார் என்கிறார்கள்.

தமிழிலும் நீங்கள் சொல்வதுபோல் உண்டு. புலவர் குழந்தை எழுதிய
இராவண காவியம் காங்கிரஸ் ஆட்சி தடைசெய்தது. திராவிட கட்சியினர்
நிறைய அதை வாங்கினர். அண்ணா ஆட்சி கட்டில் ஏறியதும் தடைநீக்கினார்.

நா. கணேசன்


> பள்ளிகள் திறக்கும் நேரத்துக் கவனம் ஏடாகூடமாக செயல்படுகிறது, ராஜம். யாரோ ஒரு
> தந்தையோ, தாயோ குறை கூறினால், தள்ளி வைத்து விடுகிறார்கள். மீள்பார்வை
> வருவதற்க்குள்,பையனுக்கு பேரன் பிறந்து விடுகிறான். நான் பட்டியலிட்ட நூல்கள்
> அமரத்துவம் பெற்றவை. அவற்றை மூளைஹீனன் தான் தடை செய்வான். ஒரு வாரம் பூராவும்
> இதை பற்றி, இவ்வவையின் சான்றோர்கள் அலசுவார்கள் என்ற ஆர்வம் எனக்கு. யாராவது
> தூபம் போடலாமே. பேராசிரியரே! உறக்கத்தில் ஆழ்ந்தீரோ? செமினார் முடிந்தததோ,
> செல்வன்? தேவ வாக்கு என்னதோ? அரங்கத்தில் என்ன பேசப்படுகிறது?
> இன்னம்பூரான்
> 25 09 2011

[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, Sep 26, 2011 at 1:49 AM

மகாகவி காளிதாசன் சங்க இலக்கியம் அறிந்தவரா? அவர் அக மரபுகள் நிறையப்
பாடுகிறார் என்கிறார்கள்.


"தாமங்கம் ஆரோப்ய..." என்று அவர் சீதாகல்யாணம் பாடத்தொடங்கினால், கலித்தொகை தலையாட்டும். அவர் ஸ்ருங்கார ரச மன்னர். ராஜா பர்த்ருஹரி என்றொரு ராஜரிஷி இருந்தார். அவர் நீதி சதகம் + வைராக்ய சதகம் + சிருங்கார சதகம் எழுதினார். 
[Quoted text hidden]

செல்வன் Mon, Sep 26, 2011 at 1:52 AM



2011/9/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
சைனாவில் தொன்மை இலக்கியத்தில் சன்வோகோங்க் என்ற குரங்கு தேவர்களை எதிர்த்ததால், ‘புத்தரின் கையினால்’ உருவாக்கப்பட்ட மலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டதாம். முது மொழி: ‘என்ன குதி குதித்தாலும், புத்தரின் கைக்குள் அடங்கித்தானே ஆகணும்.” 
அது வேறு யாருமல்ல நம் ஹனுமான் தான்.பவுத்தம் இந்துகடவுள்களை உள்வாங்கிகொண்டது.அதில் ஒருவர் ஹனுமன்.

ஜாக்கி சான், ஜெட் லி நடித்த "பார்பிட்டன் கிங்க்டம்" படத்தில் சன்வோகுங் கதாபாத்திரம் இடம்பெறும்

Innamburan Innamburan Mon, Sep 26, 2011 at 1:58 AM
To: mintamil@googlegroups.com
உம்மை பிடித்திழுக்கத்தான், அப்படி மையமாகப்போட்டேன். மையமாக எழுதுவது என்றால் என்ன என்று தெரியுமோ, விஸ்கின்ஸனாரே!

செல்வன் Mon, Sep 26, 2011 at 2:02 AM




2011/9/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
உம்மை பிடித்திழுக்கத்தான், அப்படி மையமாகப்போட்டேன். மையமாக எழுதுவது என்றால் என்ன என்று தெரியுமோ, விஸ்கின்ஸனாரே!
தெரியாதுங்க. அப்படின்னா என்ன?
[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, Sep 26, 2011 at 2:11 AM
To: mintamil@googlegroups.com
சிலபேர் சுத்தி வளைப்பாங்க. ராமன் சீதையை கல்லாணம் பண்ணிக்கிட்டான் என்று சொல்லாமே, ராமனின் அப்பனுக்கு மூணு பொண்டாட்டி என்று கதையை வளர்ப்பாங்க. என் மாதிரி ஆளுங்க நுட்பத்தையும் நுணுக்கமாக, குறிப்பால் உணர்த்தி, ஆளுக்கு தகுந்தார் போல், ப்ளேட்டை திருப்பிப்போடுவார்கள், நம்ம ராஜாவுக்கு ஜோஸ்யர் சொன்ன மாதிரி. அந்தக்கதை தெரியுமோ, செல்வா?
[Quoted text hidden]

செல்வன் Mon, Sep 26, 2011 at 2:28 AM




2011/9/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
சிலபேர் சுத்தி வளைப்பாங்க. ராமன் சீதையை கல்லாணம் பண்ணிக்கிட்டான் என்று சொல்லாமே, ராமனின் அப்பனுக்கு மூணு பொண்டாட்டி என்று கதையை வளர்ப்பாங்க. என் மாதிரி ஆளுங்க நுட்பத்தையும் நுணுக்கமாக, குறிப்பால் உணர்த்தி, ஆளுக்கு தகுந்தார் போல், ப்ளேட்டை திருப்பிப்போடுவார்கள்
நீங்க இம்மாதிரி கலைகளில் வல்லவர் இ சார்.என்னை மாதிரி அப்பாவிகளுக்கு தான் இம்மாதிரி டெக்னிக் எல்லாம் தெரியாது:-)


நம்ம ராஜாவுக்கு ஜோஸ்யர் சொன்ன மாதிரி. அந்தக்கதை தெரியுமோ, செல்வா?
தெரியாதுங்க...
[Quoted text hidden]

செல்வன் Mon, Sep 26, 2011 at 2:29 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
http://sino-platonic.org/complete/spp081_monkey_sun_wukong.pdf

Comparison between sunwokung and hanuman,. Interesting read and very informative for history enthusiasts
[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, Sep 26, 2011 at 3:01 AM

1. நான் சின்ன மீன் பிடிக்கப்போய், நீவிர் டால்ஃபினையே கொண்டு வந்து விட்டீர்கள். நன்றி. நல்லதொரு ஆய்வு. நிதானமா படிக்கணும். பேராசிரியர் மெச்சுவார். கண்ணன் இன்னொரு கட்டுரைக்கு கச்சம் கட்டுவார்.
2. அந்த இரண்டு வானரங்களும்  shapeshifing skill experts.
3. ஒரு உரையாடல்:
மன்னர், மன்னி, ஜோஸ்யர்.
மன்னர்: தட்டுக்கள் நிறைய பழங்கள், புஷ்பங்கள், ஜெர்மன், அமெரிக்கன், பிர்ட்டீஷ், சைனீஸ், தமிழ் அறுசுவை பலகாரங்கள்  எல்லாம் சிப்பந்தினிகள் மூலம் சமர்ப்பிக்கிறார்.
மன்னி: ஒரு பொன் தட்டில் ஆபரணங்கள் சமர்ப்பிக்கிறார்.
ஜோ: பஞ்சாங்கத்தால் விசிறிக்கொள்கிறார். 

மன்னர்: மஹாராணி உண்டாயிருக்காங்க.
ஜோ: அதான் தெரியுதே என்று பொருள் பட தலையாட்டுகிறார்.
மன்னி: வெட்கி தலை குனிகிறார்.
மன்னர்:  இல்லே. ஆணா? பெண்ணா?
ஜோ: மெளனம். விரல்கள் மூலம் சிக்னல் காட்றாரு. [இன்று மெளனவிரதம்]
மன்னர்: ஓ! 
மன்னி: ஓ!
ஸ்திரீ ப்ரஜை சுபஜனனம்.
மன்னர். இழுத்து வரப்பட்ட ஜோஸ்யரிடம். உன் ஜோஸ்யம் பொய்த்து விட்டது. உன் தலையை சீவப்போகிறேன்.
ஜோ: அவசரப்படேல். என் ஜோஸ்யம் பலித்து விட்டது. மன்னியை கேளுங்கள்
மன்னி: ஆமாம். அவர் பொண்ணு தான் பிறக்கும்னு சிக்னல் கொடுத்தாரு.
இது தான் மையமா பேசறது.
இன்னம்பூரான்
25 09 2011

shylaja Mon, Sep 26, 2011 at 6:08 AM




2011/9/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

-- <<<<<<<.:):)
சுமாராப்புரியுது இசார்!:):)


Tthamizth Tthenee Mon, Sep 26, 2011 at 2:34 PM



மையமாகப் பேசுவதில் நீர் ஜோசியர்
அல்ல அல்ல  மன்னர்!
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Nagarajan Mon, Sep 26, 2011 at 2:44 PM



//பேராசிரியர் மெச்சுவார். கண்ணன் இன்னொரு கட்டுரைக்கு கச்சம் கட்டுவார். அந்த இரண்டு வானரங்களும்  shapeshifing skill experts.
//
ஐயோ எங்க ரெண்டுபேரையும் வானரங்கள்னு சொல்லீட்டாரு
நாகராசன்
2011/9/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]


No comments:

Post a Comment