Saturday, June 1, 2013

நீயும், நானும், விஞ்ஞானமும்: 1அ:


நீயும், நானும், விஞ்ஞானமும்: 1அ:
விஞ்ஞான திருவிழாக்கள்


செல்டன்ஹாம் விஞ்ஞான விழா சில நாட்களில் நடக்கவிருக்கிறது. அதை பற்றி எழுதவதற்கு முன், இன்றைய உலக விஞ்ஞான திருவிழா பொருட்டு, ந்யூ யார்க்கில் இன்று நடந்து கொண்டிருக்கும் நிகழ்வில் பிரபல விஞ்ஞான பிரமுகர்கள் (எவான் ஜெலிஸ்ட்ஸ், கண்ணன்) அளவளாவிய கருத்தரங்கம் எடுத்துக்கொண்ட மைய கருத்து:

‘... விஞ்ஞானம் மிகவும் நுட்பமான கருத்துக்களை வடிகட்டி, வடிகட்டி, ஆய்வுகள் பல செய்கிறது. அவற்றை அறிந்து பயன் பெறுவது பற்றி பொதுஜனங்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது ஒரு சவால். விஞ்ஞானத்தின் உள்ளே உறையும் உட்கருத்தாகிய வித்துக்கு ஹானியில்லாமல், அதை பாமர மொழியில் விளக்க முடியுமா? அவ்வாறு விளக்க முயலும் விஞ்ஞான விவரணைகள் எவ்வாறு அமைய வேண்டும்...’.

என்பதை பற்றி, ஜான் ஹோக்கென்பெர்ரி (John Hockenberry) என்ற விஞ்ஞான இதழியலாளரும், லோன் ப்ஃரேன்க்க் (Lone Frank Ph.D) என்ற விஞ்ஞான நூலாசிரியரும், ஜேம்ஸ் க்ளைக் (James Gleick) என்ற உலகபுகழ் வாய்ந்த விஞ்ஞானம்/விஞ்ஞானிகளின் வரலாறு ஆகிய நூல்கள் படைத்தவரும், நுட்பங்களை விளக்குவதில் நற்பெயர் பெற்ற பேராசிரியர் ப்ரையான் க்ரீன் (Brian Greene) அவர்களும் விவாதித்ததின் விவரங்கள், இன்னும் சில நாட்களில் காணொளியில் கிடைக்கும்.

இந்த 1அ பகுதியை பற்றி ஒரு தன்னிலை விளக்கம். முதுசொம் கல்விமேடையில்  சுபாஷிணி சொன்னது போல, எங்கோ, எப்போதாவது, ஏதாவது ஒரு மாணவர் தேடினாலும் செய்தி கிடைக்கட்டுமே என்ற அணுகுமுறை. நூறு வருடங்களுக்கு முன் சிவக்கொழுந்து சார் அப்படி செயல்பட்டதினால் தானே கரியமாணிக்கம் உதித்தது! இல்லையா?
இன்னம்பூரான்
01 06 2013
Image Credit: http://twi-ny.com/blog/wp-content/uploads/2011/05/world-science-festival.jpg

உசாத்துணை:

தமிழ் இலக்கியம் 4: தொல்காப்பியப் பதிப்புக்களும் பாடவேறுபாடுகளும்




தமிழ் இலக்கியம் 4
 தொல்காப்பியப் பதிப்புக்களும் பாடவேறுபாடுகளும்



திசை மாறாமல், குறி தவறாமல், மடலாடுவது ஒரு பண்பு, ஒரு நெறி, ஒரு கலை, அரிது. தமிழுலக இலக்கிய பிரசுரம் பற்றிய இந்த தொடர் நன்கு அமைந்து இருந்ததால், இதை பகிர்ந்து கொள்கிறேன். தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.
சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizCPN7hRgtymsQ_jgz0LMQ-CkdXWwHvle7IICjIr84UpiQ45rVCosMiLJFQ15tKFc-MFiRfrunfOCptxh2L7TIRikTWjTRWHERyW7B4jXQPlXFRd-je98rVmE8lHgHMD-LtfdA442i7l8/s1600/tholkappiya+pathippugal+1847.JPG
இன்னம்பூரான்

ஜூன் 1, 2013

_______________________________________________________________________________

தமிழ் இலக்கியம் 4
தொல்காப்பியப் பதிப்புக்களும் பாடவேறுபாடுகளும்





Innamburan Innamburan 
Tue, Aug 17, 2010 at 7:46 AM

மாணவனாகிய எனக்கு, திரு. ஆராதி கூறி, திரு ழான் அவர்களால் விளக்கப்பட்ட தமிழ்மொழியின் அருமையை அரண் அமைத்து பாதுகாக்க வேண்டிய நிலை, மிகவும் விசனத்தைக் கொடுக்கிறது. இத்தனைக்கும் தொடக்கத்த்தில் சி.வை.தா., நாவலர்,உ.வே.சா. ஆகிய சான்றோர், பல இடர்பாடுகளை கடந்து, பிராயாசையுடன், வகுத்த நெறி, பின் வந்தவர்களுக்கு தெரியாதது அன்று. பதிப்பிக்க அவகாசம் ஒரு எல்லை என்பது, 'இலை போட்டாச்சு; வேகாத சாதம் படைக்கலாம்' என்பது போல இருக்கிறது. ஆங்கிலத்தில், அன்றாடம் க்ரிடிகல் எடிஷன்ஸ் வருவதை பார்த்துக்கொண்டது தான் இருக்கிறேன். இந்த பின்னணியில், செம்பதிப்பு/செம்மொழி என்பதால் வாய்பேச்சாகத் தான் இருக்கிறது.
தொடருக, திரு ஆராதி
நண்பன்,
இன்னம்பூரான்

2010/8/17 Jean-Luc Chevillard
 Dear Sir,

what you say is absolutely true.

srirangammohanarangan v Tue, Aug 17, 2010 at 7:58 AM

You must understand another aspect of the publishing world in Tamil.
Any book which is not popular religion, cooking, astrology and some
pulp fiction doesnot sell.
 
People resent the habit of buying books. Bookfairs have become rather museums of papyrus. So necessarily publishers have to rely heavily on Library orders of the governments.
 
This fever wiil start from September to March. So any work delayed may lose the chance of being selected. Not selected may mean heavy loss sometimes. Loan on interest may be killing. But you have to stay in the field even to survive.
So this indirectly reflects to some extent on the quality of editions and publishing.
 
If only the people of Tamilnad take it to their heart to buy serious literature even as a religious duty (hey hey thats why we have buried religion deeppp ) things will change a lot.

Jean-Luc Chevillard Tue, Aug 17, 2010 at 8:25 AM

 Dear Srirangammohanarangan,

would you say that if not everything is perfect in the modern world
of Tamil edition and scholarship,
it is because the articulation between the two groups of people
described in குறள் 374
is not as it should be in modern society?

That குறள் 374 reads:

இருவே  றுலகத்  தியற்கை  திருவேறு
தெள்ளிய  ராதலும்  வேறு.

Best wishes

அன்புடன்

-- ழான்  (Jean-Luc Chevillard)


srirangammohanarangan vTue, Aug 17, 2010 at 8:44 AM
Definitely not, Mr Jean-Luc,
A passion for excellence becomes sometimes conspicuous by its absense in the Tamil world. But what I want to say is that it is not the whole story and I will choose to think that it is not also the main one.
 
Rather is not the couplet
 
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
 
Is it far-fetched to understand the second part of the couplet by improvising as பொருளில்லார்க்கு பதிப்புலகம் இல்லாகியாங்கு.?
 
Even the great expertise can become rare in a continuous climate of labour of love.   Even love! . Is it not?
:--)

Jean-Luc Chevillard Tue, Aug 17, 2010 at 9:19 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
 Dear Srirangammohanarangan,

before discussing the possibility to adapt Kuṟaḷ 247 (which you have quoted),
I would like to be sure that we understand Kuṟaḷ 374 in the same way.

For a long time, I thought Kuṟaḷ 374 had to do with the choice of an individual person
(i.e. somebody asking himself "what shall I try to do with my life?"),
and then later I though it had to do with the way a society shares the tasks
between its members and with the solidarity between the various components.

I was recently  reading an article in Volume XIV (dated 1932-1933)
of the /Annals of the Bhandarkar Oriental Research Institute/ (Poona),
by H.D. Velankar about the "Gāthālakṣaṇa of Nanditāḍhya [a treatise on Prakrit meters]".

On page 11-12, he writes:


As a rule, Jain Pandits were Yatis and in many cases had adopted the robe of Śramaṇa at a very tender age. [...] It appears that this distinction between the Śramaṇas who were solely devoted to learning and the Śrāvakas who pursued with equal devotion the 'art of earning' was scrupulously maintained from the beginning in the Jain community. [...]


When reading that, I was reminded of Kuṟaḷ 374 ...

I am sure this may all sound very naive, but .....

Best wishes

-- ழான் (Jean-Luc Chevillard)

Innamburan Innamburan Tue, Aug 17, 2010 at 9:25 AM

I am afraid that reading "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு." in isolation in the present context begs the question. தரம் குறைந்த நெய் எதற்கு?
இன்னம்பூரான்



srirangammohanarangan v Tue, Aug 17, 2010 at 9:47 AM

Yea . But as Selvan would have it right,
you have to pay for tharam.
 We like to pay for a pitza.
Not for serious literature.
:--))

Jean-Luc Chevillard Tue, Aug 17, 2010 at 11:16 AM

 Dear இன்னம்பூரான் and dear Srirangammohanarangam,

an additional parameter is of course that:
-- after the age of (mainly) oral transmission,
-- after the age of printing,
we now live in the world of internet
(which topic is especially of interest to the MinTamil list members and to the THF).

This has many consequences, including consequences on the financial sides.

One of the possible targets of scholars is now to work towards *electronic critical editions*.

An important reference site for that is the TEI web site.

TEI = "Text Encoding Initiative"

See:
<http://www.tei-c.org/index.xml>

See especially the section on "Critical Apparatus":
<http://www.tei-c.org/release/doc/tei-p5-doc/en/html/TC.html>

I hope this is useful

அன்புடன்

-- ழான் (Jean-Luc Chevillard)

[Quoted text hidden]

srirangammohanarangan v Tue, Aug 17, 2010 at 11:19 AM

Yea thank you dear Jean-Luc

Jean-Luc Chevillard Tue, Aug 17, 2010 at 11:30 AM

 Dear Srirangammohanarangan,

you might want to have a look at the PDF
of a powerpoint presentation which I gave at the INFITT 2009 conference
in Köln (Germany) on 25th October 2009.

The link is:
<http://www.infitt.org/ti2009/papers/presentations/Infitt_Koeln_2009J-L_Chevillard_final.pdf>

The title of my presentation was:
"Critical editions of Tamil works: exploratory survey and future perspectives".

I tried to apply the TEI mechanism
to the text of Tēvāram,
and especially to its metrics.

This is of course only a very small sketch.

I am currently  working towards developping it.

Best wishes

-- ழான் (Jean-Luc Chevillard)

Innamburan Innamburan Tue, Aug 17, 2010 at 11:50 AM
To: mintamil@googlegroups.com
Thank You, very much, Jean. I am enthused, have visited the URLs and shall explore my potential in this direction, with earnestness.

Warm Regards,
Innamburan


srirangammohanarangan v Tue, Aug 17, 2010 at 12:20 PM
>>I tried to apply the TEI mechanism
to the text of Tēvāram,
and especially to its metrics.<<
 
Mr Vinodh will be also very much interested in this, I think.
 
But online how to go about the critical apparatus is something
interesting to know. If the online apparatus is made conversant and
simple, we can enlist quite some volunteers to do their mite every now and then, by way of editing. 
 
I am a member in Distributed Proofreading, have done some forms so far, before I was transferred to a distant place. Now that I have come back I think of taking that up again.
 
Lets be in touch. Thank you.
 
Srirangam V Mohanarangan
 
(You need not take pains to address me fully every time as what I sign.  Mohanarangan or Rangan will do.)
:--))

ஆராதி Fri, Aug 20, 2010 at 1:02 AM

மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் தொல்காப்பியப் பொருளிலக்கணப் பகுதிக்கு உரைவளம் வெளியிட்டுள்ளது. அகத்திணை இயலுக்கு மு.அருணாசலம் பிள்ளை பதிப்பாசிரியராக இருந்தார். புறத்திணை இயல் முதலாக மரபியல் ஈறாக உள்ள எட்டு இயல்களுக்கு வெள்ளைவாரணர் பதிப்பாசிரியராக இருந்து உரைவளப் பதிப்புக்களை வெளிக் கொணர்ந்தார்.
பல்கலைக் கழகப் பதிப்பு எனில் அதற்கெனத் தனித் தன்மை, பிழை இன்மை பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கிப் பாடபேதம் காட்டுதல் முதலிய பண்புகள் நிறைந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கை. ஒரு சில எடுத்துக்காட்டுக்களைப் பாருங்கள்.
    பரிடா டல்லே
    நாலீ ரைம்ப துயர்படியாக
    ஐயைந் தாகும் இழிபடிக் கெல்லே

என்பது இப்பல்கலைக் கழகப் பதிப்பில் உள்ள செய்யுளியல் நூற்பா.
பரிபாடலே என்பது சீருக்காக லகர ஒற்றை விரித்துப் பரிபாடல்லே என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நூற்பாவின் முதல் அடியில் உள்ளது போல்அது பரிடா டல்லே  என டல்லடித்து இருக்கிறது.
இப்பல்கலைக் கழகப் பதிப்பின்  செய்யுளியலில் 11ஆம் நூற்பா காணப்படாது. கண்டுபிடிக்க இளம்பூரணர் உரையில் அமைந்த வேறொரு தொல்காப்பியப் பதிப்பைத் தேடிப் போக வேண்டும். இல்லை என்றால் முதல் நூற்பாவிலிருந்து சரிபார்த்துக் கொண்டு வர வேண்டும். 9ஆம் நூற்பா உள்ள பக்கத்தின் தலைப்பில் 8ஆம் நூற்பா என்று அச்சிடப்பட்டிருக்கும். 9ஆம் நூற்பா என இரண்டு நூற்பாக்களுக்கு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டுதான் அந்த நூலைப் பயன்படுத்த முடியும்.    
கீழ்வரும் செய்தியைப் பாருங்கள்
“அச்சுத் தாள்விலை மிகுந்துள்ள இந்நாளில் உரையாசிரியர்கள் உரையிற் காட்டப்பெற்றுள்ள உதாரணப் பாடல்கள் எல்லாவற்றையும் முழுவடிவில் உள்ளபடியே வெளியிடுவதானால் புத்தகத்தின விலைமிகுதியாகும் என்பதனாலும் தொல்காப்பியத்திற் கமைந்த உரைவேறுபாடுகளை ஒப்புநோக்கி ஆசிரியர் தொல்காப்பியனார் சூத்திரத்திற் சொல்லக் கருதிய பொருள் இதுவென ஆராய்ந்து தெளிந்துணரும் முறையில் ஆய்வாளர்க்குப் பயன்படு முறையில் வெளியிடப்பெறுவது இவ்வாராய்ச்சிப் பதிப்பாதலானும் உரைகளிற் காணப்படும் உதாரணப் பாடல்களின் முதற் குறிப்பும் நூற்பெயரும் பாடல் எண்ணும் சுருக்கித் தரப்பெற்றுள்ளன. “
என்பது புறத்திணை இயலின் வெள்ளைவாரணரின் முகவுரையில் வரும் பகுதி.
ஒரு பல்கலைக் கழகம், தாள் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி, உரையாசிரியர்கள்  மேற்கோளாகக் காட்டிய பாடல்களின் முதற்குறிப்பும் எண்ணும் மட்டுமே தரப்பெற்றுள்ளன என்பது சரியாகுமா?
மறைந்து போன பல நூல்களைப் பற்றிய தகவல்களை இப்படிப்பட்ட உரைகளினாலேயே அறிய முடிந்தது. சான்றிற்கு முத்தொள்ளாயிரத்தின் இன்று கிடைத்துள்ள பாடல்கள் உரைகளின் வழியாகக் கிடைத்தவை என்பதை அனைவரும் அறிவர். இப்படி எத்தனையோ நூல்கள் உரைகளால் தெரியவந்துள்ளன.
 மேற்கோள் பாடல்களும்  பாடபேத ஆய்வுக்குத் துணை செய்வன என்பதை இப்பேராசிரியர்களோ, பல்கலைக் கழகமோ, அரசோ அறியாரோ? தாள் விலை ஏற்றத்தால் மேற்கோள் பாடல்களை ச் சேர்க்கவில்லை என்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே புரியவில்லை.

நீண்ட காலமாக மாணவர், ஆய்வாளர், ஆசிரியர்களுக்குப் பெரிதும் துணை செய்தவை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்புக்களே. அவற்றின் நிலையைச் சற்றுப் பார்க்கலாம்.
நச்சினார்க்கினியரின் உரையோடு அமைந்த பொருளதிகாரத்தின் அகத்திணை இயல், புறத்திணை இயல் இரண்டையும் ஒரு நூலாக 1947இல் கழகம் வெளியிட்டது. அதில் பதிப்பு முறை பற்றியோ நெறி பற்றியோ எந்தத் தகவலும் இல்லை. நூற்பகுதியில் அடிக்குறிப்பாக ஆங்காங்கே ஒரு சில உரைகளில் அமைந்த பாடபேதங்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றை எந்தச் சுவடியில் இருந்து எடுத்தாண்டார்கள் என்னும் தகவல் இல்லாமையால் சரிபார்த்துக் கொள்ள இயலாது.
    நச்சினார்க்கினியர் உரையில் களவியல், கற்பியல், பொருளியல் என்னும் மூன்றையும் சேர்த்துத் தனி நூலாக 1950இல் முதற்பதிப்பாக வெளிவந்தது. அதன் பதிப்புரையில்,
 "ஒப்புநோக்கித் திருந்திய பாடம் கொள்ளப்பட்டுள்ளது. இன்றியமையாத இடத்துப் பாட வேறுபாடு தரப்பட்டுள்ளது"
எனக் கூறப்பட்டுள்ளது. அதற்குமேல் இதில் பதிப்புப் பற்றிய வேறு தகவல்கள் இல்லை. எந்தெந்தச் சுவடிகளை ஒப்புநோக்கினார்கள்? என்னென்ன திருத்தங்களைச் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்?  என்னும் தகவல்களை இப்பொழுது எப்படி அறிவது?

தொடரும்

அன்புடன்
ஆராதி
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Aug 20, 2010 at 1:10 AM
To: mintamil@googlegroups.com
'என டல்லடித்து இருக்கிறது.'
யான் என்றும் அனுபவிக்கக்கூடிய சொற்றொடர். மறுபடியும் படித்து விட்டு, எழுதுகிறேன்.
இன்னம்பூரான்

srirangammohanarangan v Fri, Aug 20, 2010 at 2:43 AM

மிக அரிய உதவி கற்றவர்க்கும், மாணவர்க்கும். நன்றி ஐயா.
 
>>>ஒரு பல்கலைக் கழகம், தாள் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி, உரையாசிரியர்கள்  மேற்கோளாகக் காட்டிய பாடல்களின் முதற்குறிப்பும் எண்ணும் மட்டுமே தரப்பெற்றுள்ளன என்பது சரியாகுமா?<<
 
மிகச் சரியான கேள்விதான்.
 
Your analysis will be of immense help to Professore and students of Tamil grammar. 'Is it justified for a University to give the excuse of price rice for the incompleteness in its execution?' is a very relevant question.


 
[Quoted text hidden]

Subashini Tremmel Fri, Aug 20, 2010 at 8:28 AM



2010/8/20 ஆராதி
...
ஒரு பல்கலைக் கழகம், தாள் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி, உரையாசிரியர்கள்  மேற்கோளாகக் காட்டிய பாடல்களின் முதற்குறிப்பும் எண்ணும் மட்டுமே தரப்பெற்றுள்ளன என்பது சரியாகுமா?
மறைந்து போன பல நூல்களைப் பற்றிய தகவல்களை இப்படிப்பட்ட உரைகளினாலேயே அறிய முடிந்தது. சான்றிற்கு முத்தொள்ளாயிரத்தின் இன்று கிடைத்துள்ள பாடல்கள் உரைகளின் வழியாகக் கிடைத்தவை என்பதை அனைவரும் அறிவர். இப்படி எத்தனையோ நூல்கள் உரைகளால் தெரியவந்துள்ளன.
 மேற்கோள் பாடல்களும்  பாடபேத ஆய்வுக்குத் துணை செய்வன என்பதை இப்பேராசிரியர்களோ, பல்கலைக் கழகமோ, அரசோ அறியாரோ? தாள் விலை ஏற்றத்தால் மேற்கோள் பாடல்களை ச் சேர்க்கவில்லை என்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே புரியவில்லை.
 
நல்ல கேள்வி திரு.ஆராதி அவர்களே. தாள் விலை ஏற்றத்தைக் காரணம் சொல்லி குறைந்த தகவல்கள் மட்டுமே தருவது  ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. இவ்வகை போக்கினால் சரியான ஆதாரங்களைத் தேடி அதனை சரிபார்த்து முறையாக பதிப்பித்தலில் பெறும் சிரமம் தான் மிஞ்சும்.
-சுபா

ஆராதி Fri, Aug 20, 2010 at 2:44 PM
"சாமிநாதையர் சங்க இலக்கியப் பதிப்புகளைப் போன்று ஒன்று கூட அமையவில்லை." எனச் ச.வே.சுப்பிரமணியன் குறைபட்டுக்கொண்டார். மேலும்,    
 “இச்செம்பதிப்புக்கு மிகத் தெளிவான ‘முகவுரை’ எழுதப்படல் வேண்டும். உ.வே.சாமிநாதையரின் பதிப்பு முகவுரைகளைப் போல் அமைய வேண்டும். (அ) கிடைக்கப் பெற்ற சுவடிகள், கையெழுத்துப் படிகள் எங்கெங்கிருந்து கிடைத்தன?, யார் வழிக் கிடைத்தன?, மூலம் மட்டுமுள்ள சுவடியா? உரையுடன் கூடிய சுவடியா? யார் உரையுடன் கூடிய சுவடி? எத்தனை இயல்கள் அச்சுவடியில் உள்ளன போன்ற செய்திகள் தரப்படல் வேண்டும். இவ்வாறு தரப்பட்டுள்ள தொல்காப்பியப் பதிப்பு ஒன்று கூட இல்லை.”
என 19 ஆண்டுகளுக்கு முன் கூறிய கருத்து இன்று வரை வெளிவந்துள்ள எல்லா பதிப்புக்களுக்கும் பொருந்தும். இக்கருத்து ச.வே.சு.வினுடைய பதிப்புகளுக்கும் பொருந்தும்.

அவர் தொல்காப்பியக் கையடக்கப் பதிப்பு நூலை மணிவாசகர் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டுள்ளார். பல பதிப்புக்கள் கண்டுள்ள இந்த நூலில், நூல் அமைப்பைப் பற்றியோ, பாடபேதங்களைப் பற்றியோ, யாருடைய பாடம் இதில் இடம் பெற்றுள்ளது என்பதைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை.

இவரே 2007இல், மெய்யப்பன் பதிப்பகம் வாயிலாகத் 'தமிழ் இலக்கண நூல்கள்' என்னும் பெயரில் தமிழில் உள்ள 49 இலக்கண நூல்களையும் மறைந்துபோன இலக்கண நூல்களின் பட்டியலையும் தந்துள்ளார். இவற்றில் எந்த நூல் பற்றியும் விளக்கமோ, அவற்றிற்குப் பயன்படுத்தப்பட்ட சுவடிகளைப் பற்றிய தகவல்களோ, பாடவேறுபாடுகளோ இல்லை.
ஆனால் பிழை மலிந்த பதிப்புக்களில் இதுவும் ஒன்று. சான்றுக்கு ஒரு பத்தி.

 "தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள நீடூர் சிவன் கோவில் தெற்குத் திருமதிலில் உள்ள கல்வெட்டு பாடல்களில் ஒன்றில் அமுதசாகரர் என்றும், மற்றொன்றும் அமிர்தசாசரர் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன." (ப.125)

இந்தப் பத்தியில் இரண்டு ஒற்றுப் பிழைகள்(நீடூர்ச் சிவன்; கல்வெட்டுப் பாடல்களில்). ஒரு தொடர்ப் பிழை(குறிக்கப்பெற்றுள்ளது), ஒரு கருத்துப் பிழை(மற்றொன்றில்) காணப்படுகின்றன. இது அவர் நூலில் ஒரு பக்கத்தில் ஒரு பத்தியில் மட்டும காணப்படும் பிழைகள்.

ச.வே.சு. தொல்காப்பியத்தைப் பற்றித் தந்திருக்கும் தகவல் மற்ற பதிப்புக்களோடு ஒத்துப்போவதாக இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
ச.வே.சு, 'தமிழ் இலக்கண நூல்கள்' என்னும் நூலில், இளம்பூரணர் உரைப்படி தொல்காப்பிய நூற்பாத் தொகை 1585 எனக்  குறிப்பிடுகிறார். பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்  இளம்பூரணர் உரைப்படி தொல்காப்பிய நூற்பாத் தொகை என 1595 எனக் குறிப்பிடுகிறது. மர்ரே பதிப்பும் 1595யே குறிப்பிடுகிறது. ச.வே.சு. பத்து நூற்பாக்களைக் குறைத்துக் காட்டுகிறார். அதற்கான காரணம் தெரியவில்லை.

ச.வே.சுவின் 'தமிழ் இலக்கண நூல்கள்' பட்டியலில் 'இலக்கணச் சூடாமணி' என்னும் நூல் இடம்பெறவில்லை. இந்நூல், த.கோ. பரமசிவத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, 1990இல், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால், வெளியிடப்பட்டுள்ளது. இருந்தும் ச.வே.சு. தன் நூலில் குறிப்பிட்டுள்ள மறைந்த போன நூல்கள் பட்டியலில் இந்த நூலைச் சேர்த்துள்ளது வியப்பாக உள்ளது.

தொடரும்

அன்புடன்
ஆராதி

ஆராதி Sat, Aug 21, 2010 at 1:41 PM

திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தின் இயக்குநராக, ஆய்வுலகம் பெரிதும் மதிக்கும் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் இருந்தார். அப்பொழுது இவர் மூல நூல் பதிப்புக்களில் ஆர்வம் காட்டினார். பல்வேறு சுவடிகளையும் பதிப்புக்களையும் ஒப்புநோக்கித் தொல்காப்பியத்தைச் செம்பதிப்பாகக் கொண்டுவர விரும்பினார். வ.சுப.மாணிக்கம், ச.வே.சுப்பிரமணியம், கே.எம்.வேங்கடராமையா, ப.வெ.நாகராசன் என்னும் பெரும் பேராசிரியர்கள் பலரையும் இப்பணியில் ஈடுபடுத்தினார். இத்திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இதனைச் செய்து முடித்தவர் ப.வெ.நாகராசன்.  இப்பதிப்பையும் நாகராசன் பணியையும் பற்றிக் குறிப்பிடும் வ.அய்.சு.
"பழைய இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சியுள்ள அறிஞர் ப.வெ.நாகராசனார் கையெழுத்துப் படியை மீண்டும் பரிசோதித்து, மூல பாடத்தையும் பாடவேறுபாடுகளையும் புதிதாக எழுதி, சில நூலகங்களுக்குச் சென்று, அச்சான நூல்களைப் பார்த்து உறுதி செய்து, அச்சுப் பிழை ஏதுமின்றிச் சிவகாசியில் சண்முகா அச்சகத்தில் லேசர் படி ஒன்றை உருவாக்கினார்"
என்று குறிப்பிட்டுள்ளார்.  இப்படிப்பட்ட பதிப்பில் தந்துரை என்னும் பகுதியில் அமைந்த  இரு வாக்கியங்களைப் பாருங்கள்.
1. "ஆனால் இந்நாளில் அதிகப்படியான பாடல்களுடன், பாடவேறுபாடுகள் மிக்குக் காணப்பெறுகிறது."
2. "மிகப் பெரும்பாலும் இப்பதிப்பில்  மிகப் பழமையான பதிப்புக்களின் மூலபாடம் ஏற்கப் பெற்றுள்ளன"
இரண்டு வாக்கியங்களிலும் ஒருமை பன்மை மயக்கம் உள்ளது. முதல் வாக்கியத்தில் எழுவாய் பன்மையில் இருக்க வினைமுடிபு ஒருமையில் அமைந்துள்ளது(காணப்பெறுகின்றன) . இரண்டாம் வாக்கியத்தில் எழுவாய் ஒருமையில் இருக்க வினை முடிபு பன்மையில் உள்ளது(பெற்றுள்ளது).

பாடவேறுபாடுகளை ஒப்பு நோக்கும் பதிப்பிலேயே பிழை என்றால் என்ன செய்வது? அதுவும் முதல் நூற்பாவின் விளக்கப் பக்கத்திலேயே தவறான தகவல்.
    "பதிப்புகள் 13, 14, 15, 25, 38 ஆகியவற்றில்,
    எழுத்தெனப் படுவ
    அகர முத
    னகர விறுவாய் முப்பஃ தென்ப
    சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே
என நான்கடிகளை உடையதாக உள்ளது.
 "
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறான செய்தி அடிக்குறிப்பில்,
"படுப என்பதனைப் பால(சுந்ரனார்) பதிப்பு 77 இல் படுவ எனத் திருத்திப் பாடங் கொண்டுள்ளார். இதற்குச் சுவடிச் சான்று இல்லை"
எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது படுவ என்பதற்குச் சுவடிச் சான்று இல்லை என்று அடிக்குறிப்பும், உள்ளது என்று ஐந்து சுவடிகளின் எண்களைக் குறிப்பிட்டுப் பாடபேதப் பகுதியும் குறிப்பிடுகின்றன. அடுத்துக் காட்டியுள்ளதற்கு இது எவ்வளவோ தேவலாம்.

சொல்லதிகாரப் பகுதியில்
    "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.
பா.வே.
1. மொழிபொருட்  - சுவடி 951. எழுத்துப் பிழை யெனக் கொள்ளலாம்.
மொழிக்குப் பொருள் என்று வேற்றுமைத் தொகையாகவே உரையாசிரியர்கள் கொண்டுள்ளனர். யாரும் மொழியப்படுபொருள் என வினைத்தொகையாகக் கூறவில்லை
"
எனக் காணப்படுகிறது.
உரையாசிரியர்கள் மொழிக்குப் பொருள் (மொழி + கு + பொருள்)எனக் கருதியிருந்தால் அத்தொடர் நான்காம் வேற்றுமைத் தொகையாக அமையும். நான்காம் வேற்றுமைத் தொகையில் ஒற்றுமிகாது என்பது இன்று பத்தாம் வகுப்பில் சரியாகத் தமிழ்படிக்கும் மாணவனுக்கும் தெரியும். ஆனால் நூற்பாவில் ஒற்று மிகுந்துள்ளது.
ஒற்று மிகுந்துள்ளதால், உரையாசிரியர்கள், அதனை நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடராக, மொழிக்குப் பொருள் எனப் பொருள் கொண்டிருக்க வாய்ப்பில்லை.  நான்காம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டிருந்தால், நூற்பாவை ஒற்று மிகாமல், 'மொழிபொருட் காரணம்' என்றே விளக்கம் அளித்திருப்பார்கள்.
அப்படியானால் மொழி, பொருள் என்னும் இரு சொற்கள் இந்த நூற்பாவில் சேரும் போது ஒற்று மிகுமா? மிகாதா? என்பதற்கு விடை காணவேண்டியதாகிறது. மூலபாடத்தில் ஒற்று மிகுந்து இருப்பதால், ஆறாம்வேற்றுமைத் தொகையாக இதனைக் கொள்ள வேண்டும். அதாவது மொழியினது பொருள் என்பது அதற்கான விளக்கம். மொழியினது பொருளுக்கான காரணம் வெளிப்படத் தோன்றாது என்பது இந்த நூற்பாவின் பொருளாகும். ஆறாம் வேற்றுமைத் தொகை அஃறிணையில் ஒற்று மிகும்.

தொடரும்
அன்புடன் ஆராதி
[Quoted text hidden]

srirangammohanarangan v <Sat, Aug 21, 2010 at 2:09 PM

Thiru Araathi Sir,  What an incisive analysis you are making!! 
 
After all Jean-Luc seems to be right in quoting 
 
திரு வேறு, தெள்ளியர் ஆதலும் வேறு. 
:--(( 

 

Friday, May 31, 2013

13.திமிலோகம்:தணிக்கை




13.திமிலோகம்:தணிக்கை

Innamburan S.Soundararajan 01 06 2013



தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை 13 : திமிலோகம்

அப்டேட்: விக்கிலீக் ஆனாலும், ஆடிட் லீக் ஆனாலும், கசிவினால் யாருக்கு ஆதாயம் என்பதை கவனிக்கவேண்டும். இந்த கரடி வித்தையெல்லாம், தவறு செய்பவர்களுக்கு உதவலாம்! விஷயம் தீர்ந்தபாடில்லை. ஆனால், நிழல் யுத்தம் ஆயத்தம்.
இன்னம்பூரான்
01 06 2013
******

இன்னம்பூரான்
Thursday, June 23, 2011, 9:49t
‘...சீட்டுப் பதிவை திரும்பக்கூட்டித் துரைமுன்
கேட்டுக் கழித்து எல்லாம் கிண்டிப்பார்த்து – ஏட்டுக்கு
இலக்காத் தொகையிட்டு எழுதியே நெஞ்சைக்
கலக்காத வண்ணங்கலக்கி – அலக்கழிக்கும்…’
-பண விடு தூது (1908)
‘தொகைவகையோடு ஏற்றிப் பணச்சோறு இடுவாரை’ பற்றி மணி அடித்தால், பேரிகையே ‘டும் டும்‘ என்று முழங்குகிறது, ‘இலக்காத் தொகையிட்டு… அலக்கழிக்கும் ’கச்சா’ எண்ணைத் துறையை பற்றிய ‘பக்கா’ குற்றச்சாட்டுகளை! ஆண்டவா!
இந்த 2ஜி விவகாரம் சந்து பொந்துகளில் புகுந்து, கொட்டு மேளம் கொட்ட, கொம்பு ஊத, பறை தப்பட்ட, மலையாளத்து செண்டை மேளம் ஒலிக்க, வருஷ நாட்டு நையாண்டி மேளம் பிளந்து கட்ட, பம்பை, உடுக்கை, சொல்லுக்கட்டுக்கள் எல்லாம் படபடக்க, இந்த தணிக்கைத்துறை, அரசை இத்தனை பாடு படுத்துதா? என்று மக்கள் வியக்கத் தொடங்கினராம்.
ஊடகங்களும், விழுந்து, விழுந்து, ஆடிட்டர் ஜெனெரல் சொன்னாரு; அக்கவுண்டண்ட் ஜெனெரல் எழுதினாரு என்றெல்லாம்,  பக்கம், பக்கமாக எழுதத் தொடங்கினவாம். ஊரெல்லாம் இதே தான் பேச்சு. ஹிந்து பத்திரிகையில் தலையங்கம் (16-06-  2011); அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் அலசல். கூகிளில் இது பற்றி நூற்றுக்கணக்கான குறிப்புகள். அந்தத் துறையின் அமைச்சர் பிரதமரிடம் விளக்கம் தர அவகாசம் கேட்பதாகவும், அவரும் இசைந்து விட்டால், ஆடிட் ரிப்போர்ட்டை காலாகாலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாமல் போகலாம் என்று ஒரு செய்தி.  இது என்ன வரைவு (Draft)  ரிப்போர்ட் தானே! நாங்கள் இன்னும் பதில் சொல்லவில்லையே! அதற்குள் என்ன இந்த ஆர்ப்பாட்டம்? இது தகுமோ? இது அடுக்குமோ? என்று காங்கிரஸ் கட்சி அங்கலாய்க்கிறதாம். சரி தான்!
வரைவு ஆடிட் ரிப்போர்ட்டுகளைப் பற்றி செய்திகள் வாரா.  அந்த அந்த துறைகளின் உயர்நிலை விளக்கங்கள் பெற்று, அவர்களுடன் விவாதித்து, அவர்களின் கூற்றையும் சோதித்துத் தான், ஆடிட் ரிப்போர்ட்டுகள் தயாரிக்கப்படும்.  கையொப்பங்கள் இடப்பட்டு, ஆடிட் ரிப்போர்ட்டுகளை, நாடாளுமன்றத்தில்/சட்டசபையில் வைப்பதற்காக,  ஜனாதிபதி/கவர்னர் ஆகியோருக்கு அனுப்பப்படும். நாடாளுமன்றத்தில்/சட்டசபையில் வைக்கப்பட்ட பிறகு தான் அவை பொது  மன்றத்துக்கு வரலாம். ஆனால், இன்றோ, கச்சா எண்ணைத் துறையை பற்றிய வரைவு ஆடிட் ரிப்போர்ட்டு, ஊடகங்களில்  ஆடிப்பாடி, ஓடி வருகிறது, திமிலோகப்படுகிறது.  அரசு கேட்டுக்கொண்டதால் தான் இந்த தணிக்கை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  ‘ஆடிட்டர் ஜெனெரல்’  என்று வரிக்கு வரி, இந்த ஊடகங்கள் பேசுவது சரியல்ல. அவர் இன்னும் கையொப்பம் இடவில்லை.
சில புலன் விசாரனைகள் சொல்வது யாதெனின்:
1.  கச்சா எண்ணைத் துறையின் ஹைட்ரோகார்பன் பிரிவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனிக்கு ஒப்பந்தத்தை மீறிய சலுகைகள் அளித்தது;
2. ஆங்கிலத்தில் ‘sweetheart deals’ என்பர். எல்லாம் ஒரு காதல் மயக்கம் போல்! அந்த கம்பெனிக்கு ‘இனி ஏற்படக்கூடியச் செலவுக்கு ஈடான முன்வரவுக்கு’ ஏற்பாடு செய்து கொடுத்தனர்!;
3.  கைர்ன் என்ற கூட்டுக் கம்பேனிக்கு (ரிலையன்ஸ் + பிரிட்டீஷ் காஸ் + ஓ.என்.ஜீ.சீ) கொடுத்த சலுகைகளை பற்றி, ஆடிட்டிடம் கதை விடறாங்க; ஒரு பெரிய நிலப்பரப்பை, ஒப்பந்தத்தை மீறி கைர்ன் வைத்துள்ளது.
4.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ‘தங்கமுலாம்’ பூசிய கணக்கு வழக்குகளை எஸ்டிமேட் ஆக கொடுத்ததாக புகார்: அதாவது, செலவுகளை கற்பனையால் கூட்டுவது! ஆந்திரா ஆஃப் ஷோர், பர்மார் என்ற இரு ஒப்பந்தங்களிலேயே, 10 பில்லியன் டாலர் (450 பில்லியன் ரூபாய்!)  முதலீடு செய்ய வேண்டியிருக்கலாம். அவற்றில் ‘தங்கமுலாம்’!!!!   இது தான் ஆடிட் தேடும் சிதம்பர ரகசியம்;
5.  கிருஷ்ணா-கோதாவரி என்ற தளத்தில், இந்த ரிலையன்ஸ் கம்பெனி முதலில் ரூபாய் 12 ஆயிரம் கோடி என்றது.  அதை பிற்பாடு 45 ஆயிரம் கோடி என்கிறது. ஹைட்ரோகார்பன் உற்பத்தி இரு மடங்கு என்கிறது.  என்ன? கணக்கு உதைக்குமோ? இதனால், அரசுக்கு வரவும் குறைந்ததே, என்கிறது, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்ற பொருள் பட பேசும் ஹிந்து தலையங்கம்.
6.  இதற்கெல்லாம் பின்னணி யாதெனில், ஒப்பந்தத்தில் காட்டப்பட்ட / அதற்கு மேலும் அளிக்கப்பட்ட சலுகைகள் –  பரிக்ஷார்த்தமாக சோதிப்பதற்கு வழங்கவேண்டிய சலுகைகளை, ஒப்பந்தம் முழுவதற்கும் அளித்தது.
7.  இதன் விளைவாக, செய்யப்படாத சோதனைக் கிணறுகளுக்கும் ஈட்டுத் தொகை கொடுக்கப்பட்டதா?
8.  பாம்பே -ஹை தளத்தின் பன்னா-முதி-தாப்தி பகுதி வேலைப்பாடுகள் பற்றிய ஆவணங்கள் ஆடிட்டுக்குக்  கொடுக்கப்படவில்லை; ஆடிட் செய்ய இயலவில்லை.
9. 2008/9 காலகட்டத்திலியே, இந்த முறைகேடுகள் வெளி வந்தும், அரசு வாளாவிருக்கிறது.  ஆடிட்டர் ஜெனெரல் ஒரு துளை மூலம் ‘பயாஸ்கோப்’ (என் சொல்) காட்டியிருக்கார்.  அரசு தான் கிணறு வெட்டி, ‘பூதங்களை’ வெளியேற்றவேண்டும் என்கிறது, ஹிந்து.
10. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பே ஆடிட் முடியும் தருவாயில் இருப்பதாக செய்தி வந்தது.  ஹைட்ரோகார்பன் துறையோ,  ஜூன் 8, 2011 அன்று தான் வரைவு ஆடிட் ரிப்போர்ட்டு வந்ததாக சொல்கிறது.  இரு தரப்பும் மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப் பட்டுள்ளனர். எத்தனை நாட்களாக இழுபறியோ?  http://www.forum4finance.com/2010/08/09/cag-ril-gas-field-cost-audit-completed-report-will-take-time/
வரைவு ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் இப்படி பொது மன்றத்துக்கு வருவது நல்லதில்லை.  இனி நடக்கவேண்டிய ஆய்வுகள் பாதிக்கப்படலாம். ஹைட்ரோகார்பன் துறையின் சில விளக்கங்கள், இந்த சிக்கலான விஷயங்களில், ஏற்கப்பட்டு, ஆடிட் ரிப்போர்ட் மாற்றப்படலாம். ஆனால், எழுந்த சர்ச்சை தீராமல் போகலாம்.  மேலும், அரசியல் சாஸனத்தை அசட்டை செய்யலாமோ?  நான் ஆடிட்டர் ஜெனெரலாக இருந்தால், வரைவு ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் இப்படி அலசப்படுவது பற்றி, மிகவும் கவலைப்படுவேன்.
வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைக்கலாமோ?

(தொடரும்)



படத்திற்கு நன்றி :
  • Geetha Sambasivam wrote on 23 June, 2011, 11:38
    இந்தச் செய்தியைக் குறித்துக் கடந்த இரண்டு நாட்களாய்த் தான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இன்னமும் முழு விஷயமும் புரிந்து கொள்ளவில்லை. என்றாலும் தவறு நேர்ந்திருக்கிறது என்ற அளவில் புரிகிறது. செய்தியை அவசரப் பட்டு ஊடகத்திற்கு எவரோ கொடுத்திருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. ; மற்றவை நன்கு படித்துப் புரிந்து கொண்ட பின்னர். நன்றி.

12 : பண விடு தூது:தணிக்கை

12 : பண விடு தூது:தணிக்கை

Innamburan S.Soundararajan Wed, May 31, 2013 at 2:21 PM

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை 12 : பண விடு தூது 

அப்டேட்: 
டைம்லைன் 2013.
அதாவது பீஸ் ஸால் கே பாத்: அதாவது கிட்டத்தட்ட இரண்டு மாமாங்கங்கள் தாண்டி:

அந்தோ பரிதாபம்! தற்கால தனியார், தனியார்-அரசு கூட்டணி அடிக்கும் கூத்துக்கள் பயங்கரம். 
கோடிக்கணக்கில் புழக்கம். எல்லாம் மக்கள் பணம். எல்லாம் கொள்ளையர் கையில்.
~ கிரிக்கெட் சூதாட்டமும், 2ஜீ குட்டை குழப்பலும்,
~ பாரத தேசமே! எங்கே போகிறாய்?
இன்னம்பூரான்
31  05 2013

இன்னம்பூரான்

Thursday, June 16, 2011, 0:56
….சோற்றுக்கு அரைக்கால் கால் என்று
தொகைவகையோடு
ஏற்றிப் பணச்சோறு இடுவாரும் —-காற்றுக்கும்
வெய்யிலுக்கும் அஞ்சாமல் வேற்றூரில்
கொண்டுவிற்றுப்
பைமுதற்கு மேல்வரத்துப்பார்ப்பாரும் —–கை சலிக்க…’ [288, 289]
பண விடு தூது (1908)
ஔவ்வையார்திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற ஒளவைப்பாட்டி, கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கவும் சொல்லவில்லை. அதை கடைந்தெடுத்துத் தேங்காய் பால் அருந்தவும் சொல்லவில்லை. தற்காலம், பணம் படுத்தும் பாடு என்ன என்பதை, அதாகப்பட்டது

~ ‘மேருமலையை அணுவாகவும், அணுவை மேரு மலையாகவும்,உறவிலே பகையையும், பகையிலே உறவையும் உண்டாக்கும் என்றும்,

~ காட்டை நாடாக்கும், நாட்டை காடாக்கும் என்றும்,

~ தேடுங்கால் வாராது; வலியவரும் என்றும்,

~ வந்தாலும் தங்காது என்றும்,

ஒருவன் பணத்தை புதைத்து இறந்து போக, ஆடு முதலியன பலி கொடுத்து அதை ஒருவன் தேடிப்பார்த்தால், கல்லாகவும், கரியாகவும் காட்சி தரும்’ என்றார், நூறு வருடங்களுக்கு முன்னால், ஒரு அநாமதேயப்புலவர், ‘பண விடு தூது’ என்ற சிற்றிலக்கியத்தில். ‘மேல்வரத்து’ என்ற சொல்லை, அவர் கையாண்ட திறனை மெச்சாமல் இருப்பது தகுமோ?
பீகார் மாநிலத்தில் கோசி என்று ஒரு நதியில் வருடாவருடம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் -பணவெள்ளம்! வாராத சகதியை  வாரியதாகக் கணக்குக்காட்டி. நிலக்கரிச்சுரங்கங்கள் நிறைந்த அசன்சால் பகுதியில், வீடுகளுக்கு அடியில் நிலக்கரி தணல் பற்றி எரிவதால், தாங்கொண்ணா சூடு. அதைத் தணிக்க மணல் நிறப்பவேண்டும். இது வரை ‘கொட்டிய மணல்’ தார் பாலைவனத்தின் பரப்பளவை விட அதிகம்!!! நம்ம ஊர் பக்கம் கண்மாய்களில் தூர் வாரும் (?) ‘துர்நாற்றம்’ நாம் யாவரும் கண்கூடாக அறிந்ததே. மேற்படி வகைகளும், மற்றும் பல முறைகேடுகளும், பண விடு தூது (1908) சொல்லும் ‘மேல்வரத்துப்பார்ப்பாரின்’ கைவண்ணம் என்று அறிக. சமூகவிரோதச்செயல்களில், இவை முதலிடம் பிடிக்கின்றன. அதற்கு காரணம், அவற்றின் இருமுனை தாக்குதல். செய்யாத பணிக்கு பெற்ற ‘மேல்வரவு’, வரிப்பணத்தை கொள்ளையடித்தது தான் என்பது ஒன்று, இரண்டாவது முனை: விட்டுப்போன பணியினால் -வாரப்படாத சகதி, தணிக்காத நெருப்பு வகையறா – மக்களின் தவிப்பு. எனது தணிக்கைத்துறை அனுபவங்களில், யான் கண்டவற்றை மட்டுமே பட்டியலிட்டால், ஒரு தடிமனான புத்தகம் ரெடி. 150 வருடங்களாக, அதுவும் கடந்த 50 வருடங்களுக்குள் அந்தத்துறையின் மத்திய/மாநில தணிக்கை அறிக்கைகளில்  கிளறி எடுக்கப்பட்டவற்றை மட்டுமே தொகுத்தால், ஒரு நூலகம். அவற்றை மக்கள் யாவரும் புரிந்து கொண்டால், அரசை உருப்படியாக செயலியற்றுமாறு வற்புறுத்த முடியும்.
சிறு துளி பெருவெள்ளம் என்பதற்கு ஒரு சான்று. இந்த ஆடிட்காரன் கண்ணில் மட்டுமே இவையெல்லாம், எப்படித்தான் சிக்குகிறதோ என்று நான் வியப்பது உண்டு. ஆயிரம் விஷயங்களை அலசும்போது ஒரு ‘தம்மாத்தூண்டு’ சமாச்சாரமும், தவறாமல், கண்ணில் பட்டு உறுத்துகிறது. 
டைம்லைன்: 1981. 
ஆந்திராவில் வேலை. சித்தூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் ஒரு தாலுக்கா ஆஸ்பத்திரி. ரொட்டி வாங்குகிறார்கள், ஒரு ரொட்டிக்கத்தை எட்டு ரூபாய் என்று. அது தான் டெண்டர் கேட்டதில் கிடைத்த மலிவு விலையாம்! அக்காலம், அது ஒரு ரூபாய்க்கு ஹைதராபாத் மார்க்கெட்டில்! ‘மேல்வரத்துப்பார்ப்பாரின்’ கைவண்ணத்தில் ஒரு வகை, இது. கொஞ்சம் கொஞ்சமாக அடித்தால், மற்றவர் கண்ணில் படாது என்ற தகரியம். வாஸ்தவம். லக்ஷக்கணக்கில் முறைகேடுகளை ஆராயும்போது, இது எடுபடாது. ஆகவே, கலெக்டருக்கு ஒரு ஃபோன் போட்டேன். விஷயத்தை கிரகித்துக்கொண்ட அவர், சினமிகுந்து, ஒரு கெட்ட வார்த்தையை உகுத்தார். ‘அதை காரியத்தில் காட்டு’ என்றேன். சில நாட்கள் கழித்து, அவரிடமிருந்து வந்த ஃபோன் உரையாடல்:
‘விசாரித்தேன். சப்பைக்கட்டு கட்டினான். நார் நாராக கிழிச்சுப்போட்டேன். அவன் கதறியவையின் சாராம்சம், பெரிய கழுதைகளை முன் நிறுத்துகிறது. கடுமையாக தண்டிப்பேன்.’ என்றார். ‘உனக்கும் மாற்றல் வரும்.’ என்றேன். அவ்வாறே நடந்தது. ஆவணங்கள் ஒன்றும் இல்லை. அவரும் நானும் நண்பர்கள் ஆனோம். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், எல்லா துறைகளிலும் நேர்மையான அதிகாரிகள் உண்டு என்பதை, எடுத்துக்காட்ட.  அண்மையில் ஹிந்து இதழில் ஒரு கட்டுரை படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு கலெக்டர் மஸ்டர் ரோல் ஊழலை களையப்போய், பத்மவியூகம் ஒன்றில் மாட்டிக்கொண்ட கதை.
அப்போதைக்கு, இப்போதே சொல்லி வைத்தேன் என்ற வகையில் மற்றொரு காட்சி, ஒரிசாவில். குர்தா ரோடு என்ற சின்ன ஊர். மின்கட்டணம் பில் கலெக்டர்கள் மூலம் வசூலிக்கப்படும். நாள்தோறும் வசூலை பட்டியலிட்டு வங்கியில் கட்டிவிடுவார்கள். சில பட்டியல்கள், சுள்ளெறும்பு போன்று நுணுக்கமாகவும், கட்டை எறும்பு போல் தடித்தும், இடதும் வலமுமாகவும், வலமும் இடதுமாகவும் கோணல் மாணலாக இருக்கவே, ஒவ்வொன்றையும் பிரயாசையுடன் கூட்டிப்பார்க்க வேண்டியிருந்தது. அடடா! என்னே நேர்த்தி! ஒவ்வொரு இடுகையும், ரசீதுத்தொகையும் சரி தான். கூட்டல் கணக்கில் தான், 23 + 36 = 97 என்ற வகையில்! பகல் கொள்ளை! என்னடா இது? 59 என்றல்லவா இருக்கவேண்டும். எல்லா பட்டியல்களையும் சரி பார்ப்போம் என்று இரவு முழுதும் கண் விழித்து தணிக்கை செய்தால், ஒரு வருடத்தில் ஒரு சிறிய ஊரில் ‘மேல்வரத்து’ பல்லாயிரம், பல்லாயிரம் ரூபாய்கள்!  விளக்கம் யாது? என்று கேட்டவுடன் ஓடோடி வந்த மாவட்ட பொறியாளர், ‘என்னங்க இது? கை எழுத்து மோசம் என்பதற்காக, இப்படியெல்லாம் குற்றம் சாற்றலாமோ? இது தகுமோ? அந்த பில் கலெக்டர் எம்.எல்.ஏ.யின் சகலை. மானஸ்தன். இன்றே தவறியத்தொகையை கட்டி விடுவார். நீங்களும் விட்டு விடுவது உங்களுக்கும் தான் நல்லது.’ என்றார். புவனேஸ்வரம் திரும்பினால், அக்கவுண்டெண்ட் ஜெனெரல், ‘யாது செய்தாய் நீ? மின்வாரியத்தலைவர் ஃபோனுக்கு மேல் ஃபோன் போடுகிறார். அமைச்சரும் அழுத்தம் கொடுக்கிறார்.’ என்றார். விஷயம் தெரிந்தவுடன், தீவிரம் காட்டச்சொன்னார். செய்தோம். கையாடல் செய்ததை பறிமுதல் செய்து, வழக்கும் பதிவு செய்யச்சொன்னோம். இது எல்லாம் வரப்போகும் ‘தொகைவகையோடு
ஏற்றிப் பணச்சோறு இடுவாரும்’ எனப்படும் செய்திக்கு முன்னால் வரும் மெல்லிய மணியோசை என்க.
டிங்க் டாங்க் பெல்!
(தொடரும்)
பண விடு தூது’ என்ற சிற்றிலக்கியத்தில்.
அதையும் படிச்சுறுங்கோ.
படம் 1: இங்கே: ஒளவைப்பாட்டி
படம் 2: இங்கே: ரொட்டி வாங்குகிறார்கள்

பிரசுரம்: வல்லமை

Thursday, May 30, 2013

நீயும், நானும், விஞ்ஞானமும் -1




நீயும், நானும், விஞ்ஞானமும் -1

Innamburan S.Soundararajan Fri, May 31, 2013 at 6:19 AM

நீயும், நானும், விஞ்ஞானமும் -1

இன்னம்பூரான்
Friday, May 31, 2013, 5:15
கல்விக்கடலின் விசாலம் பெரிது; ஆழம் அதிகம்; அலை ஓசை ஓயாது. திகைத்து ஓடி விடுவது எளிது; அப்படி ஓடினால், அது அறியாமையின், சோம்பலின், அசட்டையின் விளைவே. அக்கடலின் மூலாதாரமோ ஒரு சிறுதுளி தான். தலைக்காவேரி; கங்கோத்ரி, சிறுதுளி பெருவெள்ளம். கல்விக்கடலை கடக்கத் தோணிகள் உண்டு பல. கலங்கரை விளக்குகளும் ஒளி வீசி இருளையும், மருளையும் விலக்கும். தமிழில் விஞ்ஞானத்தை விளக்கும் நூல்கள் சொற்பம். வழக்கறிஞர் பெ.நா. அப்புசாமி அவர்கள் இந்த வகையில் ஒரு முன்னோடி. இடைவிடாமல் 70 வருடங்களுக்கு மேல், பாமர விஞ்ஞானம் படைத்தார்.
‘…படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம் அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமை தரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல் எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது…’(திரு. இரா. முருகன் இந்தியா டுடே 2001)
படைப்புகளும், படைப்பாளர்களும் வித விதமான மெய்ப்பாடுகளை முன்னிறுத்தினாலும், சராசரி தமிழன் வாழ்நாள் முழுதும் விஞ்ஞானத்தின் அருமையான போக்குவரத்துக்களை எளிதில், ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர்கள் அரிது, அரிது. பெ.நா. அ. அவர்களும் மறைந்து விட்டார். மேலும் தேடி அறிந்துகொள்ளும் திறனை, நாம் வளர்த்துக்கொள்ளமுடியும். அதன் துணைகொண்டு அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். வாரிசுகளின் முன்னேற்றத்தை வசதியாக அமைத்துக்கொள்ள இயலும். இத்தகைய சிந்தனைகள் என்னை ஆட்டிப்படைத்த வண்ணம். அதனால் தான், நோபல் பரிசு, விஞ்ஞானிகள், என்றெல்லாம் எழுதிய யத்தனங்கள் விழலுக்கு இறைத்த நீர் என்றாலும், அத்தகைய ஆர்வங்கள் மடிந்து போகவில்லை. சாக்ஷி, இந்த தொடர்.
நேற்று (29 05 2013) லண்டனில் ஒரு மருத்துவ ஆய்வாளர் ராயல் சொஸைட்டி எனப்படும் மையத்தில் ஒரு உரையாற்றினார். இலவசம். க்யூ கட்டாயம். காணொளி பிறகு கிடைக்கும். முதலில் அதனுடைய பூர்விகம் கேளும். வில்லியம் க்ரூன் (1633-1684) என்ற அங்கத்தினரின் நன்கொடை இந்த க்ரூனியன் பிரசங்கத்தை 1738 லிருந்து வருடாவருடம் நடத்த உதவுகிறது.
இவ்வருடம் : ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட் (Professor Frances Ashcroft FRS)நேற்று மாலை 6 30லிருந்து 7 30 வரை அளித்த ‘சிசுவை பாதிக்கும் டயப்பிட்டீஸ்’ என்ற பிரசங்கத்தின் சாராம்சம்:
“… ஒரு பெட்டி சாக்லெட்டை ஒரு பிடி பிடித்தாலும் சரி, கொலைப்பட்டினி போட்டாலும் சரி, நமது மண்ணீரல் (பாங்கிரியாஸ்) தனக்குத்தானே, சுரக்கும் இன்சுலினை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தில் இருக்கும் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்கும். இந்த இயற்கை வரைமுறை தடுமாறினால், இன்சுலின் சுரப்பதில் தகராறு. சர்க்கரை ஏறும். அது தான் டயபிட்டீஸ். ஒரு நுட்பமான புரத அமைப்பு (ATP-sensitive potassium (KATP) channel) எப்படி இந்த இன்சுலின் ஆளுமையை துல்லியமாகவும், அனாயசமாகவும், தடுமாறாமல் கையாளுகிறது என்பது பற்றிய ஆய்வு விவரங்களை யாவருக்கும் புரியுமாறு, ஆதாரங்களுடன் கூறுவது தான் இந்த பிரசங்கத்தின் முதல் படி. அடுத்தது, மரபு அணு முரண் காரணமாக, பிறந்தவுடன் சில சிசுக்களுக்கு, அபூர்வமாக, இந்த வரைமுறை தடுமாறும் சிக்கல் இருப்பதை கண்டறிந்து, புதிய சிகிச்சை பற்றி விழிப்புணர்ச்சி அளிப்பது. இந்த துறையில் அவர் செய்த ஆய்வுகளின் பயனாக, மருத்துவ உலகத்துக்குக் கிடைத்த புதிய பாதையை பாராட்டி, அவருக்கு இந்த கெளரதை அளிக்கப்பட்டது.
சில உபரி செய்திகள். ராயல் சொஸைட்டியில் நான் முதலில் தேடியது பூகோள சாத்திரம், தீர்க்க ரேகைகள் பற்றி; நோபலை விட அதிகமாக மதிக்கப்படும் கோப்லி என்ற சிறிய ஆனால் பெரிய பரிசு. அது எடுத்துச் சென்ற இடம், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்ற பிரபல அரசியல்வாதி / விஞ்ஞானியின் ‘மின்சாரக்கனவுக்கு’ அளிக்கப்பட்ட கோப்லி மெடல். அது எடுத்து சென்றவிடம், பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட். ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை. இந்தியாவிலேயே சிறந்த விஞ்ஞானக்கூடங்களும், விஞ்ஞானிகளும் உண்டு. ஆனால், விஞ்ஞான விழிப்புணர்ச்சி, மிகக் குறைவு. எது எப்படி இருந்தாலும், வாசகர்களின் விருப்பம் தான் ராஜா. ராணியும் அதுவே.
உசாத்துணை:
Notes Rec. R. Soc. Lond. 1960 15, doi: 10.1098/rsnr.1960.0020, published July 1, 1960:Downloaded from rsnr.royalsocietypublishing.org on May 30, 2013
சித்திரத்துக்கு நன்றி: http://www.york.ac.uk/media/news-and-events/publiclectures/Frances%20Ashcroft.jpg

இன்னம்பூரான்
Published:http://www.vallamai.com/?p=35703


கனம் கோர்ட்டார் அவர்களே!-5


கனம் கோர்ட்டார் அவர்களே!-5

Innamburan Innamburan Fri, Nov 11, 2011 at 10:41 PM

கனம் கோர்ட்டார் அவர்களே!-5
இன்னம்பூரான்
சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின், சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும். வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும். கோர்ட்டுக் கச்சேரியிலிருந்து சற்றே நகர்ந்து, மரத்தடி உபதேசம் எதற்கு என்றால், இன்று ‘நவம்பர் 9′ தேசியச் சட்ட ஆலோசனை தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பதே. The Legal Services Authorities Act, 1987 அமலுக்கு வந்த தினம், 1995-ல். இந்திய அரசாளும் மரபு செங்கோலைப் போற்றுகிறது. பாண்டியன் சபையில் கண்ணகி வழக்காடுவதே மனித உரிமையின் போர்க்கொடி. பாவை மன்றம், சதுக்கப்பூதம், ஆராய்ச்சி மணி, சிபிச்சக்ரவர்த்தியும் புறாவும், ஜஹாங்கீரின் துப்பாக்கி என்பெதல்லாம் ‘தர்மம் தலை காக்கும்’ பாரதபூமியின் சங்கேதங்கள்.
தற்கால வரலாற்று நோக்கில் பார்த்தால், 1851-ல் பிரான்சு நாட்டில் ஏழைகளுக்கு இலவசச் சட்ட ஆலோசனை திட்டமிடப்பட்டது. இங்கிலாந்தில் 1944-ல் உரிய நடவடிக்கைகள் தொடங்கின. தற்காலம், நான் பணி புரிந்த மக்கள் ஆலோசனை மன்றத்தின் மூலமாக இந்த வகையில் ஒரு மாபெரும் மக்கள் பணி, திறம்பட, நாடு முழுதும், தன்னார்வக் குழுக்களால், இலவசமாக, இயங்குகிறது. குடும்பப் பெண்மணிகள்தான் இதன் முதுகெலும்பு. வழக்கறிஞர்களும் வந்து உதவுகிறார்கள். அரசின் திட்டமும் செவ்வனே நடைபெறுகிறது. அமெரிக்காவில் இத்துறையில் தன்னார்வப் பணி இயங்குவதை லாஸ் அஞ்செலசில் ஆய்வு செய்ய முடிந்தது.
ஜனநாயக இந்தியாவில் அடித்தள/கீழ்ப்படுத்தப்பட்ட/நசுக்கப்பட்ட சமுதாயத்திற்கு,(தலித், பெண்ணினம், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலாளிகள், சிறைப்படுத்தப்பட்டவர்கள், குறைந்த வருட ஊதியம் பெறுபவர்கள் – அநேக மாநிலங்களில் தற்காலம் இது ஒரு லக்ஷம் ரூபாய்). இலவசச் சட்ட ஆலோசனை/உதவி அரசியல் சாஸனத்தின் 39 A பகுதி 1950-ல் அளித்த உரிமை. ஆனால், எல்லாமே நத்தை வேகத்தில் நகர்ந்தன. 1952-லிருந்து 1960 வரை சட்ட அமைச்சர் மாநாடுகள், சட்டக் கமிஷன், அங்குமிங்கும் இது பற்றி விலாவாரியாக பேசிக் கொண்டே இருந்தார்கள். 1960-லிருந்து 1980 வரை இருபது வருடங்களுக்கு, சில மாநிலங்களில் பரிக்ஷார்த்தமாக, சட்ட ஆலோசனை மன்றங்கள், அது சம்பந்தமான போக்குவரத்துக்கள், (என் கணிப்பில் ‘ஏனோ தானோ’ என்று) நடந்த வண்ணம் இருந்தன. 1980-ல் ஜஸ்டிஸ் பி.என்.பகவதி அவர்கள் தலைமையில், ஒரு மேற்பார்வைக் கமிட்டி அமைக்கப்பட்டது. லோக் அதாலத் முறையும் தலை தூக்க ஆரம்பித்தது. அப்பாடா! 1987-ல்  ‘The Legal Services Authorities Act, 1987’ என்ற சட்டமே இயற்றி விட்டார்கள், அரசியல் சாஸனம் பிரகடனப்படுத்தி 37 வருடங்களில். அதற்கப்பறம் கிடப்ஸில் கிடந்த இந்தச் சட்டத்திற்கு, திடீரென்று கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அரசு, 1994-ல், சில பிரேரணைகளை நிறைவேற்றி, நவம்பர் 9, 1995 அன்று, அடேங்கப்பா!, அரை நூற்றாண்டு கடப்பதற்கு முன், அமலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். ரோஷம் பொத்துக் கொண்டு, டிசம்பர் 5-1994 அன்றே, ஒரு மாதத்திற்குள், தேசியச் சட்டப் பணி மையம் நிறுவி விட்டார்கள். அதனுடைய கிளைகள் மாநிலங்களில்/மாவட்டங்களில்/தாலுகாக்களில் உள்ளன. உங்களுக்குத் தெரியுமோ?



கி.காளைராசன் Sat, Nov 12, 2011 at 7:24 AM


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
கனம் கோர்ட்டார் அவர்களே!-5
இன்னம்பூரான்
சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின், சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும். வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும்.

 சத்தியமான வார்த்தைகள்.
சில தீர்ப்புகள் வருவதற்கு முன்னால் மனுதாரர் மரணம் எய்தி விடுகிறார்.  அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அன்பன்
கி.காளைராசன்



R.M. Paulraj 


> சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின்,
> சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும்.
> வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும்.


நான் சுவைத்து ரசித்து அசை போட்டுக்கொண்டிருந்த வரிகள் நண்பர் கா.ரா.வையும் கவர்ந்திருக்கின்றன.

அன்புடன்,
ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj



சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTvoz3KzoO2kEuMqNSxe8Mi74ChCFOh8fqnvB640-vJqCi3jXTVnHdlQHvKLYvc_M5QZubzpsv52bHFp3A1peuWZoouoM4CWcbgsETk1NdVzINnrb_hCjyw_Q0eMknB5WsBMDesRlU5IN3/s1600/DSCF4747.JPG
இன்னம்பூரான்
29 05 2013