Friday, July 19, 2013

வஸந்த் குமார் :அன்றொரு நாள்: ஜூலை 9: I




அன்றொரு நாள்: ஜூலை 9: I


Innamburan Innamburan Sat, Jul 9, 2011 at 6:12 AM



அன்றொரு நாள்: ஜூலை 9: I
உங்களுக்கு ஜூலை 9, 1925 அன்று பிறந்த வஸந்த் குமார் சிவசங்கர் படுகோண் என்ற கொங்கணி சரஸ்வத் பிராமண சாதனையாளரை தெரியுமோ?  ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஜப்பான் அங்கெல்லாம், ஐயா ரொம்ப பிரபலம். சாதனை என்ன சாதனை? கூடப்பிறந்த அதீத கற்பனாசக்தி, அருமையான படைப்பாற்றல், கூர்மையான சிந்தனைக்களம், உன்னதமே இலக்கு. ஆங்கிலத்தில் கல்ட்/ஐகான் என்பார்கள். அவ்வகையில் இவருக்கு ஆத்மார்த்தமான விசிறிகள். அமெரிக்காவில் ஆர்ஸன் வெல்லஸ் என்று ஒருவர் இருந்தார். ஹெ.ஜீ. வெல்ஸ்ஸின் ‘உலகங்களின் யுத்தம்’ என்ற நூலை (வெளியுலகத்திலிருந்து நமது பூமியின் மீது படையெடுப்பு) ரேடீயோ நாடகமாக்கி இயக்கவே, நிஜமாகவே நடக்கிறது என்று பீதியடைந்து, மக்கள் அங்குமிங்கும் ஓடினா
ர்கள். அது பற்றி ஒரு நாள் எழுதவேண்டும். பார்க்கலாம். நம் படுகோண் ஐயாவும், இந்தியாவின் ஆர்ஸன் வெல்லஸ் எனப்படுவார். ஆர்ஸன் வெல்லஸ் பிரபல நடிகை ரீட்டா ஹேவொர்த்தை மணந்ததைப் போல் இவரும் ஒரு பிரபலத்தை மணந்தார். ஐயோ பாவம்! ஒர்க்கவுட் ஆகவில்லை. 
1950களில் ஹிந்தி சினிமா கொடி கட்டி, பட்டொளி வீசி, பறந்தது. உலகெங்கும் இவருடைய புகழ் மூலமாக இந்திய சினிமாவின் புகழ் பரவியது. பிரபல அமெரிக்க இதழ் ‘டைம்’ ன் நிரந்தர புகழ் பெற்ற 100 சினிமாக்களின் பட்டியலில் இவருடைய ‘ப்யாஸ்’ (தாகம்) & காகஸ் கா பூல் (காகிதப்பூ) அடக்கம். சீ.என்.என். தேர்ந்தெடுத்த 25 சிறந்த ஆசிய நடிகர்களில் ஒருவர், இவர். இப்போது புரிந்து விட்டது, இவர் சினிமாக்காரன் என்று! ‘ஸாகேப், பீபீ அவ்ர் குலாம்’ என்ற இவருடைய சினிமாவை பார்த்து விட்டு வரும் போது கால் நொண்டியது! பின்னெ! மனம் நொண்டும்போது, கால் என்ன, உள்ளங்கை கூட நொண்டும்! என்ன சொல்ல வர்ரேன் என்றால், இவருடைய சினிமாப்படங்களில், ஒவ்வொரு காட்சியும் நம்மை உலுக்கி எடுத்து விடும். புதுமை பித்தன் சொல்வார், ‘என் கதை காகிதத்தை பொசுக்கி விடும்’ என்று. அந்த மாதிரி இண்டென்ஸிடி -அடர்த்தியான உணர்ச்சிக்களம், இவருடைய சினிமாக்கள். அப்பப்பா! அந்த ‘ஸாகேப், பீபீ அவ்ர் குலாம்’ல் சாகேப் குடித்து விட்டு, தொய்ந்து வருவார். அந்த காட்சி 50 வருடங்கள் கடந்தும், கண்முன் தத்ரூபமாக நிற்கிறது, இந்த க்ஷணம். அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் அவருடைய படங்களுக்கு மவுசு தான் -ஃபுல் ஹெளஸ்.
புரிஞ்சுடுத்து. எழுதறது, குரு தத் அவர்களை பற்றி என்று. ஆம். அவருடைய இயற்பெயர் தான் படுகோண். பலகோணங்களில் சினிமாவுக்கு இலக்கணம் வகுத்தவர். கேமரா கோணங்களில் புதுமை; அமரத்துவம் பெற்ற தனிக்காட்சிகள்;இசைநுட்பம், இசையும் சித்திரமும், அருமையான உரையாடல்கள், நவீன கருத்துக்கள், குணாதிசயங்கள், ஒளியும் நிழலுமாக, முகபாவங்கள் ஆகியவற்றின் வண்ணக்கலவை தான் இவருடைய சினிமா ரஸவாதம். இவரின் நடிப்புத்திறனும் அபாரம்.
விதி யாரை விட்டது? 1953. வருடம் கீதா ராய் என்ற பிரபல பின்பாடகியை காதலித்து மணந்தார். ஒத்து வரவில்லை. போதாக்குறைக்கு, வஹீதா ரஹ்மானுடன் இவரை இணைத்து வதந்திகள். பத்தே வருடங்களில் தனிமைப்படுத்தப்பட்டார். குடிப்பழக்கம் வேறு. அக்டோபர் 10, 1964: தூக்கமாத்திரை அதிகம். அமரரானர். அமரராகவே நம் மனதில் வாழ்கிறார்.
இன்னம்பூரான்
09 07 2011
உசாத்துணை:
pastedGraphic.pdf

Dhivakar Sat, Jul 9, 2011 at 7:18 AM


இன்னாது இது இ  சார் இப்படி படுகோனே பத்தியெல்லாம் எழுதி இருக்காரே நமக்கு தீபிகா மட்டும்தானே தெரியும் நு நினைச்சுகிட்டே இருந்தா அட, நம்ம குருதத்து .. ஆஹா இன்னா ஆக்ட் கொடுப்பாரு.. இன்னிக்கும் பாத்துக்கினே இருக்கலாமே .. தாங்க்ஸ் இ சாரு!

தி


Geetha Sambasivam Sat, Jul 9, 2011 at 12:13 PM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
புரிஞ்சுடுத்து. எழுதறது, குரு தத் அவர்களை பற்றி என்று. ஆம். அவருடைய இயற்பெயர் தான் படுகோண்//

அட??? அப்படியா?? இன்னிக்குத் தான் தெரியும்.  குருதத் நடிச்ச படங்களா இருக்கே பேரெல்லாம்னு நினைச்சுட்டே படிச்சேன்; புரிஞ்சுக்க முடியலை. :( கொங்கண் என்றும், உண்மைப்பெயரும் இன்று தான் தெரியும்,. வங்காளி என நினைத்திருந்தேன்.

2011/7/9 Innamburan Innamburan <innamburan@gmail.com>

புரிஞ்சுடுத்து. எழுதறது, குரு தத் அவர்களை பற்றி என்று. ஆம். அவருடைய இயற்பெயர் தான் படுகோண். பதனிமைப்படுத்தப்பட்டார். குடிப்பழக்கம் வேறு. அக்டோபர் 10, 1964: தூக்கமாத்திரை அதிகம். அமரரானர். அமரராகவே நம் மனதில் வாழ்கிறார்.

இன்னம்பூரான்
09 07 2011
உசாத்துணை:
pastedGraphic.pdf
Image Credit Google

Thursday, July 18, 2013

எலிஹு யேல்: அன்றொரு நாள்: ஜூலை 8



அன்றொரு நாள்: ஜூலை 8


Innamburan Innamburan Fri, Jul 8, 2011 at 7:36 AM


அன்றொரு நாள்: ஜூலை 8


என்னை கேட்டால்? சென்னையிலிருந்து வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, உபகாரச்சம்பளம் அளித்து, அமெரிக்காவின் தலை சிறந்த மேற்கல்வி ஸ்தாபனமான யேல் யுனிவர்சிடி அவர்களையெல்லாம் கெளரவிக்க வேண்டும் என்பேன். அவரது நினைவு தினமான இன்று மட்டுமாவது மகா கனம் பொருந்திய எலிஹு ஹேல் (05 ஏப்ரல் 1649 - 08 ஜூலை 1721) அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். முதல் பாய்ண்ட்: அவர் அந்த பல்கலைக்கழகத்தை, பலர் நினைப்பது போல், ஸ்தாபிக்கவில்லை. காசு கொடுத்தார். புத்தகங்கள் கொடுத்தார். பேர் வச்சுட்டாங்க. அவருக்கு காசு எங்கேயிருந்து வந்தது? அங்கே தான் சூக்ஷ்மம்!

ஆங்கிலேயரான அவரது தந்தை அமெரிக்காவுக்கு ஓடி வந்தவர் என்றலும், எலிஹு யேலின் பாலப்பருவத்திலேயே, இங்கிலாந்து திரும்பியாச்சு. ஒரு பாடாக, அங்கு கல்வி கற்றபின், ‘கழுதை கெட்டா குட்டிச்சுவர்’ என்ற கணக்கில், இந்தியாவை கட்டி காபந்து செய்து, செல்வம் திரட்டிய கிழக்கிந்திய கம்பேனியில் ஊழியம் சேர்ந்து, சென்னை பிராந்திய கவர்னர் ஆனார். அதுவும் இரு முறை. முந்திய கவர்னரின் விதவையை மணந்து கொண்டது மட்டுமல்லாமல், மற்றும் இரு துணைவிகளையும் அமர்த்திக்கொண்டு 27 வருடங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்தார். கனகச்சிதமாக, வைர வியாபாரத்தைத் திருட்டுத்தனமாக பல்லாண்டுகள் செய்து எக்கச்சக்க கறுப்புப்பணம் சேர்த்து, இங்கிலாந்து சென்று மாடமாளிகை என்ன? தோட்டம் துரவு என்ன? பெரிய, சின்ன வீடுகள் என்ன? என்று படோடாபமாக வாழ்ந்தார். அதான் கறுப்பு மசி!

அக்காலம் அமெரிக்காவின் கனக்டிக்கெட் கல்லூரிக்கு இவரிடம் காட்டன் மேத்தர் என்பவர் 1718ல் நன்கொடை கேட்டார். ஐயாவும் துணிமணிகளென்ன, அணிகலன்கள் என்ன, புத்தகங்கள் என்ன என்று பலதானம் செய்தார். தேறிய செல்வம்: 562 பவுன் + புத்தகங்கள். நன்றிக்கடனாக, கனக்டிக்கெட் கல்லூரி பொறுப்பாளர்கள் இவரது பெயரை அந்த கல்லூரிக்கு நாமகரணம் செய்து வைத்தார்கள். அது பிற்காலம் கற்பக விருக்ஷமாக வளர்ந்தது யாவரும் அறிந்ததே. 

இது எல்லாம் பெரிது அல்ல. பீ.பீ.ஸீ. இவரை பற்றி எழுதியதும், உலகமெங்கிலிருந்தும், சொந்தம் கொண்டாடியவர்கள், பலர்.

நாய் விற்ற காசு குரைக்குமா என்ன?
இன்னம்பூரான்
08 07 2011
உசாத்துணை:


Geetha Sambasivam Fri, Jul 8, 2011 at 7:43 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நாய் விற்ற காசு குரைக்குமா என்ன?//

சரிதான். என்றாலும் சேர்த்த செல்வத்தில் இந்தியச் செல்வத்தின் பங்கும் இருக்கணும்.  ஆகவே பல்கலைக் கழகத்தை  நமக்கும் சொந்தம் கொண்டாடிக்கலாம் இல்லையா?? 

2011/7/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஜூலை 8



நாய் விற்ற காசு குரைக்குமா என்ன?
இன்னம்பூரான்
08 07 2011

மஹாராஜா ரஞ்சித் சிங்:அன்றொரு நாள்: ஜூலை 12





அன்றொரு நாள்: ஜூலை 12
Innamburan Innamburan Mon, Jul 11, 2011 at 9:43 PM



அன்றொரு நாள்: ஜூலை 12
     இன்று ஒரு தேசியத்தின் ( நேஷனாலிடி) சுபஜெனனம். வருடம்:1799: இடம்: பாஞ்சாலம். நிகழ்வு: ‘பாஞ்சால சி
ங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் லாஹூரை ஜூலை 7,1799 அன்று கைப்பற்றி, அன்றே புகழ் வாய்ந்த பாத்ஷாஹி மசூதிக்கு வருகை தந்து, ஜூலை 12, 1799 அன்று முடி சூடினார். அவரது தனிப்பெருமைகள் பல. தன்னுடைய சாம்ராஜ்யத்தில் மரண தண்டனையை தவிர்த்தார்். அவரை கொலை செய்ய வந்தவனும் தலை தப்பினான். 40 வருடங்கள் செங்கோலோச்சிய இந்த மாமன்னர், தனது பாஞ்சால ராஜ்ய விஜய தினமன்றே (நாள்,கிழமை பஞ்சாங்கப்படி) (ஜூன் 27, 1839) இயற்கை எய்தினார். பாத்ஷாஹி மசூதிக்கும், குருத்வாரா டேஹ்ரா சாஹிப்புக்கும் அருகில் தகனம் ஆகும் போது, இரு புறாக்கள் தீயில் விழுந்து மாய்த்துக்கொண்டதாகவும், மழைத்தூறல் விழுந்ததாகவும் ஒரு வரலாறு கூறுகிறது, இது என்னமோ ஊரறிந்த விஷயம். ஒவ்வொரு பாஞ்சாலக்குடும்பமும் தந்தையை இழந்ததாக வருந்தியது. பாஞ்சாலம் விதவையாகி விட்டது என்றனர்.
     ஆங்கிலேயர் எழுதிய வரலாறு கூட அவரது பெருந்தன்மை, வீரம், மக்கள் நல ஆர்வம் ஆகியவற்றை பதிவு செய்தன. இவரும் மக்களை நேசித்தார்; மக்களும் இவரை நேசித்தனர். தந்தை மட்டுமல்ல; தன்னவன் என்றனர், மக்கள், இவரை, நாட்டில் சாந்தி நிலவியது. முகலாய சக்ரவர்த்தி அக்பருக்கு பிறகு சமய வெறி, மத பித்து இல்லாத ஆளுமை அளித்தவர் என்ற பெருமை இவரை சாரும். அவருடைய அதிகாரிகளில் பட்டியலே, இந்த உண்மைக்குக் கட்டியம் கூறும். வெளி நாட்டினர் கூட (62) தகுதிக்கேற்ப. மேலும் ஒரு ஆளுமை நுட்பம். அரசு தலையீடு எதிலும் குறைவு.
     பல வரலாற்று ஆசிரியர்கள் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களை ஷேர்ஷா ஸூரி, நெப்போலியன், பிஸ்மார்க், அப்ரஹாம் லிங்கன், சிவாஜி மஹராஜ், ஹைதர் அலி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியுள்ளனர். அவருடைய அரசியல் திறன், ராஜ தந்திரம், நிர்வாஹத்திறன் எல்லாமே உன்னதமானவை. ஆஸ்ட்ரிய பயணி சார்லஸ் ஹ்யூகல் பிரபு: “உலகிலேயே வியப்புக்குரிய பொருள் யாதெனில், அது மஹாராஜா ரஞ்சித் சிங் ஸ்தாபித்த பாஞ்சால நாடு...இத்தனை மாபெரும் நாட்டை, குற்றம் ஒன்றும் செய்யாமல், இவர் ஸ்தாபனம் செய்ததை பற்றி சொல்லி மாளவில்லை. அவர் புழங்கியதோ, நாகரீகமற்றவர்களுடன் ( ஆங்கிலேயரை சொல்கிறார் என்று நினைக்கிறேன்!). எனவே, இவரது மென்மையான ஆளுமையை, அதிசயமாக நோக்குகிறேன்.”
     உண்மை: ஆங்கிலேயர்களுடன் 1806, 1809, 1838 ஆகிய வருடங்களில் செய்து கொண்ட உடன்படிக்கைகளில், தனது, தன் ஆளுமையின், தன் எல்லையின், தன் மக்களின் பரிபூரண காபந்துகளை சிரத்தையாகக் காப்பாற்றிக்கொண்டார். ஆஃப்கனிஸ்தான் ஷாவுடன் உறவுகள் வலுத்தபோது, சாமர்த்தியமாக, சமந்தக மணியான (வைரங்களின் மன்னன்) கோஹினூரை, பக்குவமாகப்பேசி, தன்வசப்படுத்தினார். அது பிற்காலம் இங்கிலாந்து ராணியின் தலையில் அமர்ந்து கொண்டது வேறு கதை.
இன்னம்பூரான்
12 07 2011
உசாத்துணை:
படம்: பெண்டிங்க் துரையுடன் உடன்படிக்கை

   
pastedGraphic.pdf

Geetha Sambasivam Tue, Jul 12, 2011 at 2:09 AM

ஆங்கிலேயர் எழுதிய வரலாறு கூட அவரது பெருந்தன்மை, வீரம், மக்கள் நல ஆர்வம் ஆகியவற்றை பதிவு செய்தன//

John Masters என்பவர் எழுதிப் படித்த நினைவு.

2011/7/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>


     ஆங்கிலேயர் எழுதிய வரலாறு கூட அவரது பெருந்தன்மை, வீரம், மக்கள் நல ஆர்வம் ஆகியவற்றை பதிவு செய்தன. இவரும் மக்களை நேசித்தார்; மக்களும் இவரை நேசித்தனர். தந்தை மட்டுமல்ல; தன்னவன் என்றனர், மக்கள், இவரை, நாட்டில் சாந்தி நிலவியது. முகலாய சக்ரவர்த்தி அக்பருக்கு பிறகு சமய வெறி, மத பித்து இல்லாத ஆளுமை அளித்தவர் என்ற பெருமை இவரை சாரும். அவருடைய அதிகாரிகளில் பட்டியலே, இந்த உண்மைக்குக் கட்டியம் கூறும். வெளி நாட்டினர் கூட (62) தகுதிக்கேற்ப. மேலும் ஒரு ஆளுமை நுட்பம். அரசு தலையீடு எதிலும் குறைவு.
   
இன்னம்பூரான்
12 07 2011
உசாத்துணை:
படம்: பெண்டிங்க் துரையுடன் உடன்படிக்கை


Innamburan Innamburan Tue, Jul 12, 2011 at 6:04 AM
To: thamizhvaasal
ஆமாம். John Masters was not exactly a historian, but an excellent raconteur - கதை சொல்லி, வரலாற்றை விட்டு அதிகம் விலகாமல். இங்கு நல்ல நூல்கள் உள்ளன. சில பெயர்கள் அனுப்புகிறேன். உதாரணமாக: Copland, Ian (2002), Princes of India in the Endgame of Empire, 1917-1947
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்




Geetha Sambasivam Tue, Jul 12, 2011 at 8:37 AM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com

John Masters was not exactly a historian,//

அப்படியா?? ஆனால் அவரின் புத்தகங்கள் மூலமே பல விஷயங்களைத்தெரிந்து கொண்டேன்.  திபேத் லாமா பற்றிய ஒரு புத்தகம் எனக்கு ரொம்பவே ஆர்வத்தைத் தூண்டியது. பெயர் நினைவில் இல்லை.  ரொம்பவே பிரபலமான புத்தகம் Bhowani Junction அப்படினு நினைவு.  படித்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன.  எல்லாம் ராணுவ நூலகத்தில் இருந்து எடுத்து வந்து படித்தவை. 


2011/7/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஆமாம். John Masters was not exactly a historian, but an excellent raconteur - கதை சொல்லி, வரலாற்றை விட்டு அதிகம் விலகாமல். இங்கு நல்ல நூல்கள் உள்ளன. சில பெயர்கள் அனுப்புகிறேன். உதாரணமாக: Copland, Ian (2002), Princes of India in the Endgame of Empire, 1917-1947
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



Wednesday, July 17, 2013

அன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்




அன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்

அப்டேட்.
நான் சொன்னதை யாரும் புரிந்து கொள்ளவில்லை, பார்த்தீர்களா? அவர்கள் சொன்னதிலும் உண்மை உளது.
இன்னம்பூரான்
17 07 2013

Innamburan Innamburan Mon, Jul 11, 2011 at 6:18 AM




அன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்.
     கஃபூர் என்னை தள்ளிவிட்டான்! அவனுடைய வாப்பா ஜனாப் மஜீத்கான் ‘நீயும் கறி சாப்பிடு ராஜூ. பலம் வரும்’ என்று சொல்லி சிரித்தார். நான் முறைத்தேன். வயது மூன்று இருக்கலாம். அதற்கு மேல் நினைவில்லை. 
     கண் கலங்க வந்த அப்பா, பிருத்வி ராஜ் கபூரின் ‘படோசி’ சினிமாவை பற்றி சொன்னார். மதகின் வெளிப்புறம் சாய்ந்த நிலையில் ஹிந்து-முஸ்லீம் அண்டை வீட்டுக்காரர்கள், சடலமாக. சூழ்ச்சி செய்தது ஆங்கிலேயன் என்று அப்பா சொன்னதாக நினைவு. அப்பா ஏன் கலங்கினார்? ஆப்த நண்பன் மஜீத்கானிடம் துக்கம் விஜாரித்து விட்டு வந்திருந்தார். வீட்டிற்குள் போகக்கூட அனுமதியில்லை. வைசூரியில் அவரது குழந்தைகள் மாண்டு போயினர். எந்த குழந்தை? நினைவில் இல்லை. கஃபூரை பிறகு பார்க்கவும் இல்லை. என்ன வாழ்க்கை இது?
     தாயாதி சண்டை கொடிது என்பர். அண்ணன் - தம்பி அடிச்சுண்டா ஆகாயமே கவுந்துடும்டா என்பாள் அந்த நூத்துக்கிழவி. அந்த மாதிரி தான் இருக்கு, இந்த இந்தோ-பாகிஸ்தான் உரைசல். தீவிர வாதம் என்ற சொல்லே தப்பு. தீவிரம் ஒரு வாதம் ஆகலாமோ? பயங்கரம் ஒரு வாதம் ஆகலாமோ? இரண்டுமே அநியாயம், அட்டூழியம், அதர்மம். அநாகரீகம், அசிங்கம். ஆபத்பாந்தவா! நீ தான் இந்த பூலோகத்தை ரக்ஷிக்கணும்.
     ஐயா! ஹிந்துக்களுக்கு ‘ஓம்’ எப்படி தாரகமந்திரமோ, அதே மாதிரி ‘ரஹம்’ ஒரு இஸ்லாமிய தாரகமந்திரமையா. அதற்கு ‘கருணை’ என்று பொருள் ஐயா! மிகவும் இக்கட்டான நிலையில், பகையும், புகைச்சலும் பேயாட்டம் ஆடக்கூடிய வேளையில், ஒரு ஹிந்துவும், ஒரு இஸ்லாமியரும் ஆரத்தழுவிய நிகழ்வு ஒன்று உண்டு. தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன். திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா? எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்! அது போகட்டும்.
      ஜூலை, 11, 2006: பதினோறு நிமிடங்களில்: 18 24/கார்; 18 24/பாந்த்ரா;18 25; ஜோகேஷ்வரி; 18 26: மாஹீம்: 18 9: மீரா ரோட்; 18 30: மாதுங்கா: 18 35: போரிவிலி => விரைந்தோடும் லோக்கல் ரயில்களில் ஐந்து குண்டுகள்; ஸ்டேஷன்களில் இரண்டு.   210 பயணிகள் கொலை.714 படுகாயம்.

இதே மும்பையில் மார்ச் 1993ல் 13 வெடிகுண்டுக்கள் பல இடங்களில் வடித்து 250 மக்கள் கொலை. கோவையில் ஃபெப்ரவரி 1998ல் 33 பேர் கொலை. ஜூலை 11, 2006 குண்டுவெடிப்புக்கு லஷ்கர் ஏ காஹ்ஹர் என்ற தீவிர அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

     அன்றிரவே ரயில்வே தன் பணியை தொடங்கியது. பொழுது விடிந்ததும், ஊழியர்களும், மாணவர்களும் ரயிலை பிடிக்க, வழக்கம் போல் ஓடினர். இருந்தும், நூற்றுக்கணக்கானவர்கள், ரேகை படிந்த நெற்றியும், வாடிய முகமும் ஆக, தொலைந்த உறவினர்களையும், நண்பர்களையும், தேடி, தேடி, அலைந்தனர். சவக்கிடங்குகளில் கிடந்த உருக்குலைந்த சடலங்களின் சட்டையில் சலவைக்குறி, உடைந்த பல், கைவளை, கால் கொலுசு என்றெல்லாம், தொட்டு, தொட்டு, தேடினர். உணர்ச்சி மரத்துப்போய், இயந்திரமாக, நடை  பிணமாக, இயங்கியவர்களை கண்டு, மற்றவர்கள் குரலெடுத்து அழுதார்கள். 
     குருதி வெள்ளப்படங்களை போட மனம் வரவில்லை. ரத்ததானம் வாங்கும் போது, இனமும், ஜாதியும், குலமும், கோத்திரமுமா கேட்கிறார்கள், இந்த மனித ஜந்துக்கள்? ஒரு மனித நேயப்படம் போதுமடா, சாமி!
இன்னம்பூரான்
11 07 2011

pastedGraphic.pdf

  But witnesses spoke of Mumbai pulling together, with local people handing out water and food. (Photo: Urdu Times)

Geetha Sambasivam Mon, Jul 11, 2011 at 8:46 AM



தீவிரம் ஒரு வாதம் ஆகலாமோ? பயங்கரம் ஒரு வாதம் ஆகலாமோ? இரண்டுமே அநியாயம், அட்டூழியம், அதர்மம். அநாகரீகம், அசிங்கம்.//

மனதின் வருத்தம் பிரதிபலிக்கும் வரிகள். :(((((((((
தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன்//

எல்லாருமே படிக்கிறாங்க. நிச்சயமா. ஆனால் நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் யாருக்கும் எதுவும் எழுதத் தோன்றவில்லை.  படிப்பவர்களை அந்தக் கால கட்டத்துக்கே எடுத்துச் செல்லும் பதிவுகள் இவை. 


2011/7/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>





     
     குருதி வெள்ளப்படங்களை போட மனம் வரவில்லை. ரத்ததானம் வாங்கும் போது, இனமும், ஜாதியும், குலமும், கோத்திரமுமா கேட்கிறார்கள், இந்த மனித ஜந்துக்கள்? ஒரு மனித நேயப்படம் போதுமடா, சாமி!
இன்னம்பூரான்
11 07 2011




செல்வன் Mon, Jul 11, 2011 at 9:14 AM



இது அண்ணன் தம்பி அடிதடி அல்ல.

காலம் காலமாக நீதிக்கும் அநீதிக்கும் நடக்கும் சண்டை

இதை இந்து மதம் எதிர் இஸ்லாம் என பிரித்து பாராது  நம்பிக்கைக்கும் (Hope) VS. நம்பிக்கைக்கும் (faith) இடையே நடக்கும் போர் என புரிந்து கொள்வோம்.

(ஆனால் என்று ஜஸ்வந்த்சிங் தனது விமானத்தில் மசூத் அசாரை ஏற்றிகொண்டு போய் ஆப்கானிஸ்தானில் இறக்கிவிட்டுவிட்டு. கூட வெடிகுண்டு வைக்க கைசெலவுக்கு ஒரு ஆயிரம் கோடியையும் கொடுத்துவிட்டு ஏர் இந்தியா விமானத்தை மீட்டுகொண்டு வந்தாரோ...

அன்று முதல் எனக்கு ஹோப் மீதான ஹோப் போய்விட்டது)

ஆயிரம் தான் பொருளாராதார அரசியல் ரீதியாக மோசமான ஆட்சி நடத்தியிருந்தாலும் இந்திரா காந்தி என்ற வீராங்கனை மேலான மதிப்பு அன்று பலமடங்கு கூடிவிட்டது.

இந்திரா மேல் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவர் கோழை என்ற குறையை யாராலும் சொல்ல முடியாது அல்லவா?
--
செல்வன்

"வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்



]

Innamburan Innamburan Mon, Jul 11, 2011 at 10:08 AM

இரு பின்னூட்டங்களும் எனக்கு ஊக்கம் தருகின்றன. இந்திரா காந்தியை கோழை என்று சொல்ல இயலாது. எனினும், லாஹூரை  கைபற்றும் வேளையில், அமெரிக்க அழுத்தத்துக்கு பணிந்து, விட்டுக்கொடுத்தார். இது பற்றி சரியான விளக்கத்தை வரலாறு கூற நாளாகும். 
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்



Geetha Sambasivam Mon, Jul 11, 2011 at 10:24 AM



(ஆனால் என்று ஜஸ்வந்த்சிங் தனது விமானத்தில் மசூத் அசாரை ஏற்றிகொண்டு போய் ஆப்கானிஸ்தானில் இறக்கிவிட்டுவிட்டு. கூட வெடிகுண்டு வைக்க கைசெலவுக்கு ஒரு ஆயிரம் கோடியையும் கொடுத்துவிட்டு ஏர் இந்தியா விமானத்தை மீட்டுகொண்டு வந்தாரோ//

ஏற்கெனவே கொலைகள் நடந்துவிட்டன. மக்களை மீட்கவேண்டும், அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.  என்றாலும் அதன் பின்னர் வேண்டிய கவனம் எடுத்துக்கொண்டார்கள்.  இது ஒன்றும் முஃப்தி முஹமத் நடத்திய கடத்தல் நாடகம் இல்லை.  ஒரிஜினல் அக்மார்க் கடத்தல்; பிரயாணிகள் எத்தனை பேர் உயிர் பணயம் வைக்கப் பட்டிருந்தது?? அதற்காக வேறே வழியே இல்லாமல் செய்யப் பட்ட ஒன்று.  அந்த நேரம் அதைச் செய்யவில்லை எனில் பிரயாணிகள் அழிக்கப் பட்டிருப்பார்கள்.  அப்போதும் அந்தக் குறிப்பிட அரசைத் தான் குற்றம் சொல்லிக்கொண்டு இந்திராகாந்தியாய் இருந்தால் எதையானும் கொடுத்து மீட்டிருப்பார் என்று சொல்வோம். 




செல்வன் Mon, Jul 11, 2011 at 3:32 PM





2011/7/11 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
ஏற்கெனவே கொலைகள் நடந்துவிட்டன. மக்களை மீட்கவேண்டும், அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.  என்றாலும் அதன் பின்னர் வேண்டிய கவனம் எடுத்துக்கொண்டார்கள்.  இது ஒன்றும் முஃப்தி முஹமத் நடத்திய கடத்தல் நாடகம் இல்லை.  ஒரிஜினல் அக்மார்க் கடத்தல்; பிரயாணிகள் எத்தனை பேர் உயிர் பணயம் வைக்கப் பட்டிருந்தது?? அதற்காக வேறே வழியே இல்லாமல் செய்யப் பட்ட ஒன்று.  அந்த நேரம் அதைச் செய்யவில்லை எனில் பிரயாணிகள் அழிக்கப் பட்டிருப்பார்கள்.  அப்போதும் அந்தக் குறிப்பிட அரசைத் தான் குற்றம் சொல்லிக்கொண்டு இந்திராகாந்தியாய் இருந்தால் எதையானும் கொடுத்து மீட்டிருப்பார் என்று சொல்வோம். 
ஆக இன்னொரு விமான கடத்தலை நடத்தினால் அப்சல்குருவையும், கசாப்பையும், அபுசலீமையும் ஒப்படைத்துவிடுவீர்கள்.

வருசா வருசம் தீபாவளிக்கு மாப்பிள்ளையையும், பொண்ணும் வீட்டுக்கு விருந்துக்கு வருவது போல் எல்லைதாண்டி வரும் பயங்கரவாதிகள் சாவகாசமா மும்பை வந்து குண்டு வைத்துவிட்டு போகிறார்கள்.மக்களூம் அதை துடைத்துபோட்டுவிட்டு அடுத்தநாளே வேலைக்கு போகிறார்கள். பத்திரிக்கைகளும் "மும்பை தீவிரவாதத்தை மறந்து மீண்டும் இயங்க துவங்கியது" என புகழாரம் சூட்டுகின்றன.

இஸ்ரேலில் வெறும் ரெண்டே ராணுவ வீரர்கள் கொல்லபட்டதுக்கு லெபனான் மேல் போரே தொடுத்தது இஸ்ரேல். லெபனான் தலைநகர் தரைமட்டமாக்கபட்டது.ஆனால் நாம்??


Geetha Sambasivam Mon, Jul 11, 2011 at 4:20 PM



ஆக இன்னொரு விமான கடத்தலை நடத்தினால் அப்சல்குருவையும், கசாப்பையும், அபுசலீமையும் ஒப்படைத்துவிடுவீர்கள்.//

சேச்சே, நிச்சயமா மாட்டோம்.  அன்னை சோனியாவின் ஆணையைச் சிரமேற்கொண்டு பிரதமர் வன்மையாகக்கண்டிப்பார். இதை நாங்கள் சகித்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பார். போதாது??

அதே பிஜேபி அரசு அக்ஷர்தாம் ஊடுருவலை எப்படிக் கையாண்டது என நினைத்துப் பாருங்கள்.  காந்தஹார் விமானக் கடத்தலில் தவிர்க்க முடியாமல் தான் அவர்கள் சொன்னபடி செய்ய வேண்டி வந்தது.  அப்சல் குருவை தூக்கில் போடாமல் நிறுத்தி வைத்திருப்பது யார்?? நீங்க சொன்ன இந்திரா காந்தி என்னும் தைரியசாலியின் பரம்பரையினரும், அவங்க கட்சிக்காரங்களும் தான்.  நாட்டை இந்த அளவுக்கு மோசமாக வெளிநாட்டினர் அனைவரும் காறித்துப்பும் அளவுக்கு மோசமான ஊழல் புரிந்து வருவதும் இந்த ஆட்சியில் தான். ஆனாலும் இவங்களுக்கு அதெல்லாம் உறைக்கவும் இல்லை.

இன்னும் நடுத்தர மக்களின் முதுகில் சுமையை ஏற்றுவதிலேயே குறியாய் இருக்கின்றனர்.  எரிவாயு சிலிண்டர் விலை எண்ணூறு ரூபாய் ஆக்கப்போகின்றனர்.  ஒரு வருடத்திற்கு நாலே நாலு சிலிண்டருக்குத் தான் மான்யம்.  சொந்த வீடோ, இரண்டு சக்கர வண்டியோ வைத்திருந்தால் அவங்களுக்கு சிலிண்டர் எண்ணூறு ரூபாய். மத்தவங்களுக்கு ஐந்நூறு ரூபாய்.  அதுவும் வருடத்திற்கு நாலே சிலிண்டர்கள் மட்டும்.  மிச்ச நாட்கள் வயிற்றில் துணியைப் போட்டுக்கணும்.

இதை விட மோசமான ஒரு அரசை இது வரை இந்தியா பார்த்ததே இல்லை.  பிஜேபி அரசில் புதிய எரிவாயுப்பதிவுகளுக்கும் சுலபமாக வாங்க வழி செய்தனர்.  எரிவாயு சிலிண்டரும் சுலபமாக மாற்ற முடிந்தது. தடையில்லாமல் கிடைத்தது.  இந்தியன் ஆயிலில் வேலை செய்யும் மெகானிக் கூட இந்த அரசைத் திட்டிட்டுப் போனார்.  எங்க வீட்டில் எரிவாயு கசிவு இருந்ததால் கூப்பிட்டிருந்தோம். பிட்டுப் பிட்டு வைக்கிறார். எல்லாம் ஆஃப் தி ரெகார்ட்! 




செல்வன் Mon, Jul 11, 2011 at 4:35 PM


காங்கிரஸும் குப்பை லாரி கட்சிதான். இந்திராவுக்கு இருந்த தைரியம் அவர் கட்சியினருக்கு இருக்கும் என நம்ப தான் தயாரா இல்லை.

பாஜக தீவிரவாதிகள் விஷய்த்தில் காங்கிரசை விட சற்று அக்ரசிவா இருப்பார்கள் என நம்பினேன்.வலதுசாரி கட்சிகள் பொதுவா தேச பாதுகாப்பில் கோட்டை விட மாட்டார்கள்.பாஜகவுக்கு அதில் பெயில் மார்க் தான் கொடுப்பேன்.

காங்கிரஸ் கோமாளிகள் ஆட்சியை பாஜக ஆட்சி பரவாயில்லை எனினும்
காந்தகார் கடத்தல், பாராளுமன்ற தாக்குதல் என இந்திய வரலாற்றில் அசிங்கமான சரணாகதிகள் பாஜக ஆட்சியில் நடந்தன. தனியார் மயத்தை ஊக்குவிக்கிறேன் என்றவர்கள் நாலைந்து கம்பனிகளை மட்டும் தனியார் மயமாக்கினர்.காங்கிரசை விட பரவாயில்லை என்பது தான் நாட்டை ஆள குவாலிபேகேஷனா?


Dhivakar Mon, Jul 11, 2011 at 4:43 PM



செல்வன்,

ராவணனா அல்லது கும்பகர்ணனா என்று இரண்டுதான் சாய்ஸ் உங்களுக்கு.




செல்வன் Tue, Jul 12, 2011 at 8:06 AM





இருவரையும் விபீஷணன் ஆக்கலாம் என நம்பிக்கை இருக்கு ஐயா

அரசியல் அமைப்பில் மாறுதல் கொண்டு வந்து, உட்கட்சி தேர்தலும் அமெரிக்காவில் இருப்பதுபோன்ற பிரைமரி முறையும், குறிப்பிட்ட தேதியில் தான் தேர்தல் நடக்கும் என்ற முறையும் வந்தால் பழம்பெருச்சாளிகளை, ஊழல் பேர்வழிகளை இக்கட்சிகளீல் இருந்து ஓட்டலாம்,புதிய ரத்தத்தை பாய்ச்சலாம்.

இப்பத்துக்கு இதெல்லாம் நடப்பது இல்லை..அதனால் நீங்க சொன்னமாதிரி அம்மாவா, ஐயாவா என்ற இரு சாய்ஸ்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்த்துக்கணும்:-))

--
செல்வன்

கி.காளைராசன் Tue, Jul 12, 2011 at 8:35 AM

வணக்கம்
கர்மவீரர் காமராசருக்கு சுவிசுவங்கியில் கணக்கு இருக்கு என்று சொன்னதையெல்லாம் கேட்டு உண்மை யென நம்பி ஓட்டுப் போட்ட மக்கள்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்“

காங்கிரசையும்
பிசேபியையும்
நாம எப்படி வேண்டுமானாலும் பேசலாம்

ஆனால் நாம ஒரு சின்ன வார்டுல கூட நின்னு செயிக்க முடியுமா.  சொல்லுங்க பார்ப்போம்,.

இதுதான் இந்திய அரசியல்.

அன்பன்
கி.காளைராசன்



கி.காளைராசன் Tue, Jul 12, 2011 at 8:38 AM



சேசன் தேர்தலில் ஏன் தோற்றார்.

அன்பன்
கி. காளைராசன்

[Quoted text hidden]

Geetha Sambasivam Tue, Jul 12, 2011 at 8:39 AM



காங்கிரஸ் ராவணனாய் இருக்கலாம். இருக்கிறது.



Geetha Sambasivam Tue, Jul 12, 2011 at 8:42 AM



ம்ம்ம்ம் வெளிப்படையான சில விஷயங்களை மட்டுமே வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள். பாராளுமன்றத் தாக்குதல் நடந்தாலும் அதை முறியடித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது மும்பை முற்றுகை நடந்ததே, அப்போது ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சிறப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையைத் தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேருமாறு  ஒளிபரப்பினார்களே அம்மாதிரி எதுவும் நடக்க முடியாது பிஜேபி ஆட்சியில்.


2011/7/11 செல்வன் 
.

பாஜக தீவிரவாதிகள் விஷய்த்தில் காங்கிரசை விட சற்று அக்ரசிவா இருப்பார்கள் என நம்பினேன்.வலதுசாரி கட்சிகள் பொதுவா தேச பாதுகாப்பில் கோட்டை விட மாட்டார்கள்.பாஜகவுக்கு அதில் பெயில் மார்க் தான் கொடுப்பேன்.

காங்கிரஸ் கோமாளிகள் ஆட்சியை பாஜக ஆட்சி பரவாயில்லை எனினும்
காந்தகார் கடத்தல், பாராளுமன்ற தாக்குதல் என இந்திய வரலாற்றில் அசிங்கமான சரணாகதிகள் பாஜக ஆட்சியில் நடந்தன. 





கி.காளைராசன் Tue, Jul 12, 2011 at 8:43 AM


Reply-To: mintamil@googlegroups.com

To: mintamil@googlegroups.com
ஐயா “இ“னா அவர்களுக்கு வணக்கம்.

...ஒரு ஹிந்துவும், ஒரு இஸ்லாமியரும் ஆரத்தழுவிய நிகழ்வு ஒன்று உண்டு. தருணம் வரும்போது சொல்கிறேன்.....

ஐயா,   அவசியம் எழுதுங்கள் ஐயா.

நாங்களும் அறிந்து கொள்வோம்.

அன்பன்

செல்வன் Tue, Jul 12, 2011 at 8:49 AM


Reply-To: mintamil@googlegroups.com

To: mintamil@googlegroups.com



பார்லிமெண்டில் தாக்குதல் நடந்தபிறகு என்ன நடவடிக்கை எடுக்கபட்டது? ஒண்ணும் இல்லை. எல்லையில் ராணுவத்தை நிறுத்தி வைத்து, உடல்பயிற்சி செய்ய வைத்து திருப்பி அனுப்பினார்கள்.
--
செல்வன்

Innamburan Innamburan Tue, Jul 12, 2011 at 11:45 AM
To: mintamil@googlegroups.com
காளை ராஜன் ஸ்பெஷல்:



அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971 


‘...தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன்//... திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா? எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்!

‘எல்லாருமே படிக்கிறாங்க. நிச்சயமா. ஆனால் நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் யாருக்கும் எதுவும் எழுதத் தோன்றவில்லை.  படிப்பவர்களை அந்தக் கால கட்டத்துக்கே எடுத்துச் செல்லும் பதிவுகள் இவை.’

அப்றம் என்ன? நல்ல விஷயங்களை உடனுக்குடன் சொல்லிவிடுவது தான் அழகு. காலம் போறப்போக்கில், யார் கண்டா, சொல்லுங்கோ? மண்ணாசை. பிறந்த மண்ணாசை. தூலியை தலையில் ப்ரோக்ஷணம் செஞ்சுக்கணும். 81 வயசிலே அப்படி ஒரு ஆசை. கை கூடி வந்ததே. அந்த ப்ராப்தத்தை சொல்லணும்லெ. அன்னிக்கு சொந்த மண்ணு. இன்னிக்கு அயல் தேசம். பாஸ்போர்ட், வீஸா, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் ஏற்பாடு பண்ணித்தரா, ஃப்ரெண்ட்ஸ். முன்னை பின்னத் தெரியாத பெரிய மனுஷன் ஒத்தர் முகமன் கூறி கனிவுடன் வரவேற்று, உபசாரங்கள் பல செய்து, சொந்த மண்ணுக்கு கிழவரை அழைத்துச்செல்கிறார். பிறகு தன் வீட்டில் வைத்து விருந்து. செல்வாக்கானா ஆசாமி போல. புருஷன், பொண்டாட்டி, பசங்க, பந்து ஜனங்கள், ஊழியம் செய்வோர், எல்லாருமா, இப்படி கண்ணும், கருத்துமா! எல்லாம் நன்னாருக்கு. ஆனா, ஒண்ணு புரியலே. எதுக்காக, இப்படி விழுந்து, விழுந்து கொண்டாடரா? ஊருக்கு திரும்பற நாளும் வந்துடுத்து. வர, வர, பேச்சுக்குறையறது. நீண்ட மெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா! இனம் தெரியாத அழுகைன்னா வரது. 

போறும். போறும். விஷயத்துக்கு வாங்கோ. விஷயம் இப்போத்தான், அப்பா!, வர்ரது. நானா கட்டிப்பிடிச்சு வச்சிருக்கேன்? அவா கிட்டயே கொடுத்துட் றேன். உங்க பாடு! அவா பாடு!

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.

இது உரையாடலோ? உருக்கமான இரங்கலோ? அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள்!, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?, இந்தியனே!) எல்லாமே ஒரு  ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்!

என்றோ ஒரு நாள் சொன்னேன். அது ஞாபகத்தில் வந்தால், நானா, பிணை?

‘மனம், மனது, மனசு போன்ற சொற்கள் ஒரே சொல்லின் திரிபுகள் என்று இலக்கணத்தார் உரைத்தாலும், என் மனம், மனது, மனசு சொல்வது வேறு. மனம் யோசிக்கும்; மனது அசை போடும். மனசு அடிச்சுக்கும். ஒன்றை மற்றொன்று பாதிக்கும். சிலது புலப்படும். சிலது தேடினால் சிக்கும். சிலது ஆழ்மனதில் (அது என்ன ஆழம்!) புதையுண்டு கிடக்கும். திடீரென்று விஸ்வரூபமெடுத்து, ஆட்டி படைக்கும். இத்தனைக்கும் திரை மறைவில் ‘மனோதர்மம்’ இருக்குமாமே! ‘

நான் இனி பேசப்போவதில்லை. பேசவும் தெரியாது.

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர் தொடருகிறார்: ‘ அருண் பால்மணம் மாறாத இளைஞன் என்று பிறகு தான் எனக்கு தெரிந்தது. என்ன தான் ராணுவ கட்டுக்கோப்பு இருந்தாலும், மனிதநேயம் ஆத்மதரிசனம் செய்ய விழைகிறது. உங்களிடம் பாவமன்னிப்பு கேட்க நினைத்தேன். அதற்கு பதில், அருணுக்கு வீரவணக்கம் செய்கிறேன், ஐயா. வாழ்வின் இறுதியில் நெறி ஒன்றுக்குத் தான் அமரத்துவம்.

என்றோ படித்தது அவர்களுக்கும், எனக்கும் ஞாபகத்தில் உறைகிறது.
‘போர்க்களம் நிறுவவது அரசியலர்; அதிகார மையங்கள் போர்க்களங்களை கிளறுகின்றன. போராடுவது, சிப்பாய்!’

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரிடமிருந்து ஃபோட்டோக்களுடன் ஒரு மடல் பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலுக்கு டில்லியில் பிறகு வந்தடைந்தது.  வாசகம்:
‘... 13 லான்ஸர்ஸ்: பாகிஸ்தான் ராணுவம்: நாங்கள் ‘பர்ராபிண்ட்’ என்கிறோம். இந்தியாவின் பூனா புரவிகள் படை ‘பஸந்தர்’ என்கிறது. அந்த யுத்ததில் மலை போல் நின்று உயிர் தியாகம் செய்த ஷஹீத் இரண்டாம் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத் ரபாலுக்கு வீரவணக்கம்....’
 பால்மணம் மாறாத இளைஞன் தான். இனி எழுத எனக்கு திராணியில்லை.
இன்னம்பூரான்
ஜூலை 11, 2011
pastedGraphic.pdf
உசாத்துணை:
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

2011/7/12 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
ஐயா “இ“னா அவர்களுக்கு வணக்கம்.

...ஒரு ஹிந்துவும், ஒரு இஸ்லாமியரும் ஆரத்தழுவிய நிகழ்வு ஒன்று உண்டு. தருணம் வரும்போது சொல்கிறேன்.....

ஐயா,   அவசியம் எழுதுங்கள் ஐயா.

நாங்களும் அறிந்து கொள்வோம்.



அன்பன்

கி.காளைராசன்

கி.காளைராசன் Tue, Jul 12, 2011 at 12:44 PM



ஐயா  “இ“னா அவர்களுக்கு வணக்கம்.எவ்வளவு ஞாபகசக்தி,  எவ்வளவு தேசபக்தி... வணக்கம் பல.

ஒருமுறையல்ல, பலமுறை படித்தேன்.

யுத்ததில் மலை போல் நின்று உயிர் தியாகம் செய்த இரண்டாம் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத் ரபாலுக்கு வீரவணக்கம்....’‘
Flag2.jpg
ஐயா அந்த வீரனின் படம் இருந்தால் அன்புடன் பதிப்பியுங்களேன்.

‘‘போர்க்களம் நிறுவவது அரசியலர்; அதிகார மையங்கள் போர்க்களங்களை கிளறுகின்றன. போராடுவது, சிப்பாய்!’‘கள்தான்.

ஞாபக பகிர்வுக்கு நன்றியுடையேன்.

அதிபர் முசுராபும் ஒரு முறை இந்தியா வந்து சென்றதும் ஞாபம் வருகிறது.

அன்பன்
கி. காளைராசன்

[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Jul 12, 2011 at 1:01 PM


2011/7/12 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
ஐயா  “இ“னா அவர்களுக்கு வணக்கம்.
[Quoted text hidden]

செல்வன் Wed, Jul 13, 2011 at 4:24 PM


இன்று மும்பையில் குண்டு வெடிப்பு.மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.இந்திய முஜாகிதீன் தககுதலுக்கு பொறுப்பேற்றது.

இதை கண்டித்து இன்னும் மன்மோகன் அறிக்கை வெளியிடவில்லை.ஆனால் விரைவில் கண்டிப்பார் என தெரிகிறது.அவர் கண்டித்துவிட்டால் என்ன செய்வது என பாகிஸ்தான் பதறிபோய் உள்ளது.


--
செல்வன்

Tuesday, July 16, 2013

அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971




அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971
அப்டேட்:
அருணின் படம் போட கை வரவில்லை. அவனை வணங்குகிறேன்.
இன்னம்பூரான்
16 07 2013

Innamburan Innamburan Mon, Jul 11, 2011 at 1:46 PM


அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971 

‘...தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன்//... திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா? எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்!

‘எல்லாருமே படிக்கிறாங்க. நிச்சயமா. ஆனால் நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் யாருக்கும் எதுவும் எழுதத் தோன்றவில்லை.  படிப்பவர்களை அந்தக் கால கட்டத்துக்கே எடுத்துச் செல்லும் பதிவுகள் இவை.’

அப்றம் என்ன? நல்ல விஷயங்களை உடனுக்குடன் சொல்லிவிடுவது தான் அழகு. காலம் போறப்போக்கில், யார் கண்டா, சொல்லுங்கோ? மண்ணாசை. பிறந்த மண்ணாசை. தூலியை தலையில் ப்ரோக்ஷணம் செஞ்சுக்கணும். 81 வயசிலே அப்படி ஒரு ஆசை. கை கூடி வந்ததே. அந்த ப்ராப்தத்தை சொல்லணும்லெ. அன்னிக்கு சொந்த மண்ணு. இன்னிக்கு அயல் தேசம். பாஸ்போர்ட், வீஸா, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் ஏற்பாடு பண்ணித்தரா, ஃப்ரெண்ட்ஸ். முன்னை பின்னத் தெரியாத பெரிய மனுஷன் ஒத்தர் முகமன் கூறி கனிவுடன் வரவேற்று, உபசாரங்கள் பல செய்து, ஸர்கோடா சொந்த மண்ணுக்கு கிழவரை அழைத்துச்செல்கிறார். பிறகு தன் வீட்டில் வைத்து விருந்து. செல்வாக்கானா ஆசாமி போல. புருஷன், பொண்டாட்டி, பசங்க, பந்து ஜனங்கள், ஊழியம் செய்வோர், எல்லாருமா, இப்படி கண்ணும், கருத்துமா! எல்லாம் நன்னாருக்கு. ஆனா, ஒண்ணு புரியலே. எதுக்காக, இப்படி விழுந்து, விழுந்து கொண்டாடரா? ஊருக்கு திரும்பற நாளும் வந்துடுத்து. வர, வர, பேச்சுக்குறையறது. நீண்ட மெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா! இனம் தெரியாத அழுகைன்னா வரது. 

போறும். போறும். விஷயத்துக்கு வாங்கோ. விஷயம் இப்போத்தான், அப்பா!, வர்ரது. நானா கட்டிப்பிடிச்சு வச்சிருக்கேன்? அவா கிட்டயே கொடுத்துட்றேன். உங்க பாடு! அவா பாடு!

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.

இது உரையாடலோ? உருக்கமான இரங்கலோ? அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள்!, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?, இந்தியனே!) எல்லாமே ஒரு  ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்!

என்றோ ஒரு நாள் சொன்னேன். அது ஞாபகத்தில் வந்தால், நானா, பிணை?

‘மனம், மனது, மனசு போன்ற சொற்கள் ஒரே சொல்லின் திரிபுகள் என்று இலக்கணத்தார் உரைத்தாலும், என் மனம், மனது, மனசு சொல்வது வேறு. மனம் யோசிக்கும்; மனது அசை போடும். மனசு அடிச்சுக்கும். ஒன்றை மற்றொன்று பாதிக்கும். சிலது புலப்படும். சிலது தேடினால் சிக்கும். சிலது ஆழ்மனதில் (அது என்ன ஆழம்!) புதையுண்டு கிடக்கும். திடீரென்று விஸ்வரூபமெடுத்து, ஆட்டி படைக்கும். இத்தனைக்கும் திரை மறைவில் ‘மனோதர்மம்’ இருக்குமாமே! ‘

நான் இனி பேசப்போவதில்லை. பேசவும் தெரியாது.

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர் தொடருகிறார்: ‘ அருண் பால்மணம் மாறாத இளைஞன் என்று பிறகு தான் எனக்கு தெரிந்தது. என்ன தான் ராணுவ கட்டுக்கோப்பு இருந்தாலும், மனிதநேயம் ஆத்மதரிசனம் செய்ய விழைகிறது. உங்களிடம் பாவமன்னிப்பு கேட்க நினைத்தேன். அதற்கு பதில், அருணுக்கு வீரவணக்கம் செய்கிறேன், ஐயா. வாழ்வின் இறுதியில் நெறி ஒன்றுக்குத் தான் அமரத்துவம்.

என்றோ படித்தது அவர்களுக்கும், எனக்கும் ஞாபகத்தில் உறைகிறது.
‘போர்க்களம் நிறுவவது அரசியலர்; அதிகார மையங்கள் போர்க்களங்களை கிளறுகின்றன. போராடுவது, சிப்பாய்!’

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரிடமிருந்து ஃபோட்டோக்களுடன் ஒரு மடல் பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலுக்கு டில்லியில் பிறகு வந்தடைந்தது.  வாசகம்:
‘... 13 லான்ஸர்ஸ்: பாகிஸ்தான் ராணுவம்: நாங்கள் ‘பர்ராபிண்ட்’ என்கிறோம். இந்தியாவின் பூனா புரவிகள் படை ‘பஸந்தர்’ என்கிறது. அந்த யுத்ததில் மலை போல் நின்று உயிர் தியாகம் செய்த ஷஹீத் இரண்டாம் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத் ரபாலுக்கு வீரவணக்கம்....’
 பால்மணம் மாறாத இளைஞன் தான். இனி எழுத எனக்கு திராணியில்லை.
இன்னம்பூரான்
ஜூலை 11, 2011
pastedGraphic.pdf
உசாத்துணை:

Geetha Sambasivam Mon, Jul 11, 2011 at 2:02 PM


எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா! இனம் தெரியாத அழுகைன்னா வரது. //


கொஞ்சம் லா.ச.ரா. அதுவும்  மனதின் பிரிக்க முடியாத சிக்கல்களைக் குறித்து எழுதுகையில் லா.ச.ரா. மானசீகமாக வந்து உட்கார்ந்து கொள்கிறார். பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள், எது முந்தி? எது பிந்தி?? சொல்லத் தெரியலை. படிக்கையில் அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் நாமும் மூழ்கிப் போகிறோம்.  மீண்டு வந்து பார்த்தால் எங்கே இருக்கிறோம்? என்ற மாயாத் தோற்றம்.

இழுத்துக்கொண்டு போகிறது நடந்த காலத்துக்குள்ளேயே.  மீண்டும் அந்த நாட்களில் வாழ்ந்துவிட்டு வருகிறோம்.

2011/7/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>
மெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா! இனம் தெரியாத அழுகைன்னா வரது. 

உசாத்துணை:


Subashini Tremmel Mon, Jul 11, 2011 at 8:15 PM


ஏதும் சொல்லலைன்னா யாரும் படிக்கலைன்னு ஆகிடுமா என்ன...

ரெண்டாவதா சொன்னீங்களே அதுதான் சரி.. நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் அனைவரும் அமைதியாக ...

-சுபா

2011/7/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Tthamizth Tthenee Mon, Jul 11, 2011 at 8:30 PM



சிவாஜியோட நடிப்பு மாதிரி,  ஒரு  மந்திரவாதி சர்க்காரோட மந்திரம் மாதிரி,
பத்மினி, வைஜயந்தி மாலா நடனம் மாதிரி, வேலுக்குடியின் சொற்பொழிவு மாதிரி,
லயிக்க வெச்சுட்டா எப்பிடி படிக்கறவாளுக்கு  பதில் எழுத வரும்னேன்?
படிச்சுட்டு லையிச்சு மனசுக்குள்ளேயே ஸ்லாகிச்சு ஆழ்ந்து போகவேண்டியிருக்கு
அப்புறம் எப்பிடி [அதில் எழுதறது
அரங்கனார் எழுத்துமாதிரி, இன்னம்புராரின்   நடை மாதிரி, ஹரிகி அவர்களின் நையாண்டி கலந்த வித்தை கலந்த  எழுத்துமாதிரி
இன்னும் சொல்லிண்டே போகலாம்
ப்ரமிப்பு தட்டி லயிச்சு படிச்சிண்டே இருக்கத் தோன்றுகிறது
பதில் எழுதலேன்னாலும் பரவாயில்லை, லயிப்பிலிருந்து மீண்டு வர மனமில்லாமல்
இருக்கும்  யோகம் நல்லா இருக்கு
அதுனாலே  ...................
அன்புடன்
தமிழ்த்தேனீ