Saturday, October 19, 2013

நல்ல மாட்டுக்கு!….




GmailInnamburan S.Soundararajan

நல்ல மாட்டுக்கு!….
1 message

Innamburan S.Soundararajan Sat, Oct 19, 2013 at 6:27 PM




நல்ல மாட்டுக்கு!….
  • Friday, October 18, 2013, 5:1
  • இன்னம்பூரான்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதுமாம், சுரணை வர. அசோகர், அக்பர், கரிகாலன் போன்ற நிர்வாகிகளால் ஆளப்பட்ட ‘காமதேனு’ இந்திய மக்களுக்கு எத்தனை சூடுகள், ஆண்டவா! நமது மந்திரிமார் ஆளாளுக்கு ராசா. வச்சதே சட்டம். கொண்டதே கோலம். சராசரி இந்தியன் வருமான வரியை பைசல் செய்து ஜூலை 31க்குள் கட்டி, ஆவணத்தை பதிவு செய்யவில்லை என்றால், நிதி அமைச்சரகம் பிறாண்டிப்பிடும், பிறாண்டி. ஆனா பாருங்கோ. 1966ல் வருமானவரியை அறவே மறந்து வரலாறு படைத்தவர் பாபு ஜகஜீவன் ராம். லஜ்ஜையை இழப்போம் என்று வலுக்கட்டாயமாக கஜ்ஜை கட்டிக்கொண்டு நியாயத்தையும், தர்மத்தையும் செய்கைகளால் குலைக்கும் தலை மாந்தர்களுக்கு சூடும் இல்லை, சுரணையும் இல்லை என்ற தோற்றம் நம்மை அலக்கழிக்கிறதே.
சுதந்திர இந்தியாவில் அமைச்சர்களுக்கான நெறி ஒன்று உளது. அதன் படி மத்திய/மாநில அமைச்சர்பிரான்கள் தங்களின் சொத்து சுதந்திரம், சுற்றத்தின் சொத்து சுதந்திரம், வர்த்தக ஈடுபாடுகள் வகையறா பற்றி பிரதமரிடம்/ முதல்வரிடம் வருடாவருடம் ஆகஸ்ட் 31க்கு முன்னால் அறிவிக்க வேண்டும். போதாக்குறைக்கு இவர்களுக்கு ரிமைண்டர் வேறே. இந்த வருடம், உரிய காலத்தில் அலக்ஷ்யமாக அந்த அறிவிப்பை தராத நம்பர் ஒன் ஆசாமிகள்;
ஜனாப் குலாம் நபி ஆசாத்;
சட்டம் பேசும் சட்டாம்பிள்ளை கபில் சைபல்;
நிலக்கரி சர்ச்சையில் சற்றே மாட்டிக்கொண்டிருக்கும் ஶ்ரீபிரகாஷ் ஜைஸ்வால்;
திரு. பல்லம் ராஜு;
திரு. ஹரீஷ் ராவத்.
அலக்ஷ்யமாக அந்த அறிவிப்பை தராத நம்பர் டூ ஆசாமிகள்;
உலகாளும் ஆசை கொண்டிருந்த திரு.சசி தரூர்.
ஹோம் இலாக்கா ஆர்.பி.என். சிங்.
ஆந்திரா மாமி டி.புரந்தேஸ்வரி.
பிரதீப் ஜைன்.
அதிர் ரஞ்சன்.
இன்றைய தேதி வரை அதை சமர்ப்பித்தவர்கள்: ஏ.கே.அண்டனி, ஷரத் பாவர், சுஷீல்குமார் ஷிண்டே,பி.சிதம்பரம், வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, ஆஸ்கர் ஃபெர்ணாண்டெஸ், சால்மன் குர்ஷித்.
இந்த தொட்டகுறை தொடாதகுறை சமாச்சாரங்கள் மத்திய அரசை சார்ந்தது. மாநில அரசுகளில்  எப்படி நடக்கிறதோ!!! இன்றைய சூடு படி 14 காபினெட் அமைச்சர்கள், 21 உப அமைச்சர்கள் கமுக்கமா இருக்கிறார்கள் போலும். இந்த அழகில் தேர்தல் வரும் சின்னங்கள் தென்படுகின்றன.
 நீங்க என்ன பண்ணுவேள்?

Published in Vallamai on 18 10 2013















John Dewey:அன்றொரு நாள்: அக்டோபர் 20




அன்றொரு நாள்: அக்டோபர் 20
Innamburan Innamburan Thu, Oct 20, 2011 at 10:49 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 20
தேசிகன் சொன்னால் பணிந்து போவது சிலாக்யம். ‘நம்மூர் பக்கம் தலையை சாய்க்காதே. கொய்துடுவார்கள், மலை முழுங்கிகள். எல்லாருக்கும் போர் அடிக்றதாம். ஐஏஎஸ் இண்டர்வ்யூவா போடு.’ என்றார். ‘திசை மாறுமே, சுவாமி. படிச்சவளோல்லியோ’ன்னேன். நோ ரிப்ளை.
இண்டர்வ்யூ ரணகளம். மூன்று மெம்பர்கள். (சின்ஹா, ஐயர், பாசு.) பலிகடா: ராஜூ.
பாசு: இந்திய அரசியல் சாஸனத்தை சமைத்ததில் பெரும்பங்கு யாருக்கு?
ராஜூ: பெனெகல் நரசிங்க் ராவ்.
ஐயர்: சரி தான். ஆனால், நாங்கள் நினைப்பது வேறு.
ராஜூ: (தேவுடா!) அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.
சின்ஹா: தம்பி!
ராஜூ: டாக்டர் அம்பேத்கார்.
பாசு: ரைட். அவர் நம் அரசியல் சாஸனத்திற்கு, ஒரு அமெரிக்க வேதாந்தியிடமிருந்து அடிப்படைக்கருத்துக்கள் எடுத்துக்கொண்டது உனக்கு தெரியுமா?
ராஜூ: (நேரடியாக தெரியாது: என்ன ‘கோன் பனேகா க்ரோர்பதி’ மாதிரி கேக்கறாரு!) பணிவாக: ‘அமெரிக்காவாவது? வேதாந்தியாவது? (இதெல்லாம் அலெளட்.)
பாசு: சரி. ஒரு தத்துவ ஞானி.
ராஜூ: நீங்கள் ஜான் ட்யெவி அவர்களை சொல்கிறீர்கள். அக்டோபர் 20, 1859ல் பிறந்தவர். கல்யாணச்சாவு 93 வயதில். அப்போது மும்முரமாக சில புத்தகங்கள் எழுதி வந்தார். டாக்டர். அம்பேத்கார் மட்டுமல்ல. நான் கூட அவருடைய சிஷ்யன்.
சின்ஹா: சரி. அவரை பற்றி சொல்லு.
(விட்ட கேப்லெ சைகிளை ‘விர்’னு... இனி ராஜூ.)
ராஜூ: இந்த நூற்றாண்டில் கல்வியை பற்றி உயர் கருத்துக்களை போதித்தவர் அவரே. அனுபவம், சிந்தனை,மீள்பார்வை (Reflective Practice), ஜனநாயகம், சமூகம், சூழல் ஆகியவை பற்றி அவருடைய சிந்தனைகள் அபாரம். கோல்ப், லிண்ட்மென், நான் அறிந்திருந்த வால்டெர் லிப்மன், என்னுடைய ஆசான் டொனால்ட் ஷான், க்ரிஸ் ஆர்க்ரிஸ், மேலும், நிஜமாகவே அவருடைய சிஷ்ய -கோடிகள்..
ஐயர்: நன்றி. நீ சொல்லி முடிக்க எத்தனை நேரமாகும்?
ராஜூ: ஒரு வாரம்?
பாசு: (புன்முறுவலுடன்) (ராஜூ: பாதிக்கிணறு தாண்டியாச்சு.) 20 நிமிடங்கள். 
ராஜூ: ஐயன்மீர்! திசை மாற்றவேண்டாம். குறுக்கே பேசவேண்டாமே. (நம்ம ஶ்ரீரங்கம் நண்பர் கூட...)
ராஜூ: ஜான் ட்யெவி ஒரு யுகபுருஷர். ‘ஜனநாயகமும் கல்வியும்’ என்ற நூலை படிப்பது கஷ்டம். தெளிவு காண திரும்பி, திரும்பி படிக்கவேண்டும். ஆனால், அது பொன்வயல். ‘சிந்திப்பது எப்படி? [1933] என்ற நூல் தான், இன்று உலகெங்கும் எல்லாத்துறைகளிலும் வியாபித்து இருக்கும் மீள்பார்வை இலக்கணம்...
சின்ஹா: அதை பற்றி சொல்லு.
ராஜூ: டொனால்ட் ஷான் ஜான் ட்யெவியை புனருத்தாரணம் செய்ததும், பீட்டர் ஸெஞ்ஞே அதை மேனஜ்மெண்டில் கொண்டு வந்ததும் சொல்லவே ஒரு வாரம் பிடிக்கும். இது அம்பேத்கார் காலத்திற்கு பிறகு.
[ஐயர் ~ பாசு: இவன் அதிக பிரசங்கி. ஆடிட் சர்வீஸ்ஸுக்குத்தான் லாயக்குப்படும்!]
சின்ஹா: சரி. ஜான் ட்யெவியை பற்றி சொல்லு.
ராஜூ: அமெரிக்காவின் தவபுதல்வனான வெர்மாண்ட் மாநிலத்தில் பிறந்து,ஜான் ட்யெவி, பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில், ஜார்ஜ் மாரிஸ் அவர்களின் மாணவனாக படித்து, மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பணி தொடங்கி, 1894ல் அது துவக்கப்பட்டவுடனேயே, ஷிகாகோ பல்கலைகழகத்தில் சேர்ந்து, நான்கே வருடங்களில் கொலம்பியா பல்கலைக்கழகம் சென்று, தன் ஆத்மவிசாரணையில் வாழ்நாள் முழுதும், அங்கே, கழித்தார். முதல் கவலை: பள்ளியில் கல்வி: The School and Society (1899), The Child and the Curriculum (1902). விசாலமான சமுதாய முன்னேற்றங்களுக்கு ஆணிவேர் கல்வி என்று கருதிய ஜான் ட்யெவி, பெண்களுக்கு வாக்குரிமை, ஆசிரியர்களின் சங்கம், யுத்தங்களுக்கு எதிர்ப்பு, மக்கள் கருத்து, ஜனநாயகம் ஆகிய விழிப்புணர்ச்சி இயக்கங்களுக்கு தன் சிந்தனாசக்தியின் ஆதரவு அளித்தார். பாருங்களே ~ வெர்சேயில்ஸ் உலக சமாதான உடன்படிக்கையிலிருந்து அஞ்சல் அலுவலகங்களில் கலையார்வம் வரை! அவருடைய சீடர் வால்டர் லிப்மென் ‘பொது ஜனத்தின் கருத்துத்தளம்’ என்று படைத்த அரசியல் இலக்கணத்தின் மூலாதாரமும்/எதிர்மறையும் ஜான் ட்யெவி என்றால் மிகையன்று.
நடுவு நிலை என்றால் ஜான் ட்யெவி எனலாம். சோவியத் ரஷ்யா ட்ராட்ஸ்கியை குற்றம் சாற்றியது ஆதாரமற்றது என்று அவர் கூறியது, அத்தருணத்து இடம், காலம், ஏவல் நோக்கினால், எளிதான விஷயம் என்று சொல்லமுடியாது. ஹங்கேரி விஷயத்தில், நமது மதிப்புக்குரிய பிரதமர் நேருவின் அடி சறுக்கவில்லையா?
ஐயர்: (கோபமாக) நீ நேருவை இங்கு வம்புக்கிழுத்து அரசியல் பேசவந்தாயா?
பாசு: அது வயசுக்கோளாறு, ஐயர். போகட்டும். 17 நிமிடங்கள் ஆயின.
ராஜூ: ஜான் ட்யெவியின் காலத்திற்கு பிறகு, அவர் புகழ் மங்கத்தொடங்கியது ~ சாக்ரெட்டீஸுக்கு ஆன மாதிரி.
ஐயர்: இரு நிமிடம் பாக்கி. திசை மாறினால் உனக்குத்தான் கஷ்டம்.
ராஜூ: சார்! தற்காலம் யுர்கன் ஹாபர்மாஸ்ஸின் தத்துவம் (சுதந்திரமும், பேச்சுரிமை போற்றும் குடியரசும் சமுதாயத்தின் கவசங்கள்.) பெரிதும் பேசப்படுகிறது. அவருக்கு முன்னோடி என்று ஜான் ட்யெவியை சொல்லலாம். ஜனநாயகத்தின் நியதிகளை விவாதிக்கும் போது, அவர்
உரைத்தது:’...மனிதர்கள் தனித்து இருக்கும் துகள்கள் அல்ல. அன்யோன்யமாக உறவாடுவதில் தான் அவர்களின் மனித பண்பு உளது. சமுதாயத்தின் ஒன்றுபட்ட இலக்கையும், ஆர்வத்தையும், அது ஏற்றுக்கொண்டால் தான், மக்கள்~ஆள்பவர் இடையே இயல்பான உறவாடுதல் இருந்தால் தான், அரசு என்ற அமைப்பை மக்களின் பிரிதிநிதியாக கருதமுடியும். (He means the ‘State’ and not the ‘Government’, Sir)...’ அவர் ஜனநாயகத்தை 1. மக்கள் நலன் பாதுகாவலாராக, 2.சமுதாய விசாரிப்பு செய்பவராக, 3.மனிதனின் தனித்துவத்தின் ரக்ஷகராக கணித்து வைத்தார்.
சின்ஹா: நல்லது. தம்பி. போய் வா.
இன்னம்பூரான்
20 10 2011
721cea13f72d4344db0900ea626b082e2b90f88d.gif
உசாத்துணை:

Geetha Sambasivam Fri, Oct 21, 2011 at 12:11 AM

அதான் ஆடிட்லே போட்டாங்களா?
2011/10/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 20
தேசிகன் சொன்னால் பணிந்து போவது சிலாக்யம். ‘நம்மூர் பக்கம் தலையை சாய்க்காதே. கொய்துடுவார்கள், மலை முழுங்கிகள். எல்லாருக்கும் போர் அடிக்றதாம். ஐஏஎஸ் இண்டர்வ்யூவா போடு.’ என்றார். ‘திசை மாறுமே, சுவாமி. படிச்சவளோல்லியோ’ன்னேன். நோ ரிப்ளை.
[ஐயர் ~ பாசு: இவன் அதிக பிரசங்கி. ஆடிட் சர்வீஸ்ஸுக்குத்தான் லாயக்குப்படும்!]
சின்ஹா: சரி. ஜான் ட்யெவியை பற்றி சொல்லு.
இன்னம்பூரான்
20 10 2011

உசாத்துணை:

Wednesday, October 16, 2013

கண்ணதாசன்: அன்றொரு நாள்: அக்டோபர் 17.1





அன்றொரு நாள்: அக்டோபர் 17.1 கண்ணதாசன் (24 06 1927 ~ 17 10 1981)
Innamburan Innamburan Mon, Oct 17, 2011 at 1:52 AM



அன்றொரு நாள்: அக்டோபர் 17.1
கண்ணதாசன் (24 06 1927 ~ 17 10 1981)
கவிஞர் கண்ணதாசன் அவர்களை பற்றி அறியாத, அவரை போற்றாத, தமிழனை காண்பது அரிது. திரைப்பட பாடலோ (‘கோப்பையிலே குடியிருப்பு’), கிருஷ்ண கானமோ, ஏசு காவியமோ, அனார்கலி நாடகமோ, இலக்கிய யுத்தங்களோ, ‘அர்த்தமுள்ள இந்து மதமோ’, அவருடைய படைப்பில் ஆற்றல் தோன்றவில்லை; அது அவருடன் கருவிலேயே, இரட்டைப்பிறவியாக, வளர்ந்ததினால். அவருடைய வனவாசம், நம் மன வாசம். ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை, வடமொழி அறியாத கண்ணதாசன் அவர்கள், மற்றவரின் உதவியுடன் கவிதையாக, தமிழாக்கம் செய்து இருக்கிறார். அதில் ஒரு நுட்பம். அது செய்த பின்னர், தன் செல்வநிலை உயர்ந்தது என்கிறார். அதை என்னிடம் காட்டி, அந்த நூலை எனக்கு அன்பளிப்பாக, ஒரு மதுரை வாழ் காரோட்டி அளித்தார். ஐயா! என் செல்வநிலை உயர்ந்தது! பலருக்கு வாங்கிக்கொடுத்தேன். அவர்களுக்கு அப்படித்தான் என்று தோன்றுகிறது! 
அவரை பற்றி நான் எதிர்பார்த்த அளவு இணைய தளத்தில் ஆய்வுகள், ஏன்? செய்திகள் கூட இல்லை. அவரும் பலமுறை அரைக்கப்படும் மாவாயினார். ஒரு காரணம், மாவரைப்பதில் தமிழனின் ஆர்வமாக இருக்கலாம். மற்றொன்று காப்புரிமை பிரச்னையாக இருக்கலாம். அவருடைய படைப்புகளை நாட்டுடமையாக்க, வாரிசுதார்கள் சம்மதிக்க வில்லையாம். அது அவர்களின் உரிமை. மேலும் ஒரு காரணம். நமக்கு இலக்கிய பார்வை மங்கல்; இலக்கிய ஆய்வுகள் மு.வ. அவர்கள் காலத்திற்கு பிறகு காய்ந்து போயின. ஒப்பியல் என்ற இலக்கிய ஆய்வு முறையை கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் துவக்கி வைத்தார். அந்த முறையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் படைப்புகளை, மகா கவி, கவி மணி, நாமக்கல் கவிஞர்  போன்றோரின் படைப்புகளுடன் ஒப்பியல் செய்தால் தமிழன்னை மகிழ்ச்சி அடைவாள். விட்ட குறை, தொட்டகுறை நீக்குவது உமது கடனே.
இன்னம்பூரான்
17 10 2011

20091212010104.jpg

rajam Mon, Oct 17, 2011 at 2:49 AM



கண்ணதாசன் + விசுவநாதன் + ராமமூர்த்தி + டி. எம். சௌந்தரராஜன் + சுசீலா ... இந்தத் தொகையலுக்குப் பின் வேறு எந்தத் தொகையலையும் என் செவிக்கும் மனத்துக்கும் உணவாகப் பெற்றதில்லை! :-) :-) :-)   கண்ணதாசன் அவர்களுக்கு எப்பவும் என் அஞ்சலி!

rajam Mon, Oct 17, 2011 at 4:05 AM


ஓ ... ஒரு கூடுதல் கருத்து. கண்னதாசன் மகள் அலர்மேலு பாத்திமாக் கல்லூரி மாணவி. கண்ணதாசன் ஒரு முறை கல்லூரிக்குச் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். அப்போதுதான் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" பாடலை இயற்றியிருப்பதாகச் சொல்லி அதைப் பகிர்ந்துகொண்டார். நல்ல நாட்கள் அவை! ! 
[Quoted text hidden]

Geetha Sambasivam Mon, Oct 17, 2011 at 5:48 PM



அருமையான நினைவலைகள்.  கண்ணதாசனின் பாடல்கள் அமரத்துவம் பெற்றவை.  விஸ்வநாதன் ராமமூர்த்தியின்
இசையில் அனைத்தும் என்றென்றும் விரும்பிக் கேட்கும் கீதங்கள்.  உச்சரிப்பு, இசை அமைப்பில் அதிக சத்தம் இல்லாமல் என எத்தனையோ சொல்லலாம்.  நன்றி பகிர்வுக்கு.
அவரோட குமாரன் வெங்கட் என்பவர் கண்ணதாசன் பாடல்களுக்கெனத் தனி வலைப்பதிவு வைத்திருந்தார்.  பார்த்திருக்கேன்.  இப்போ மூடிட்டார்னு நினைக்கிறேன். 
2011/10/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>



Subashini Tremmel Mon, Oct 17, 2011 at 11:48 PM


உண்மைதான்.. தேடியதில் இணையத்தில் அவ்வளாக பதிவுகள் கிடைக்க வில்லை. எனது வலைப்பூ பதிவுகளின் 2003 பதிவுகள் இரண்டு..



கே: பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே? எங்கே ஆண்களைப் பற்றி சிறு கவிதை பாடுங்கள்....

பதில்: என்னுடைய மூதாதையரைவிட நான் கெட்டிக்காரன் அல்ல. ஆண் என்பவனே அபத்தம். அவனைப்பற்றிப்
பாடுவதற்கு என்ன இருக்கின்றது?


மேலும் ஒன்று.. பிடித்த கவிதையின் ஒரு சில பகுதிகள்..

அப்போதெல்லாம் எனக்கு வலையில் கிறுக்க நிறைய நேரம் இருந்த சமயம். அதனால் இப்படி சில பதிவுகள் :-)

நமது மின் நூல்கள் சேகரத்திலும் கண்ணதாசனின் ஒரு நூல் இருக்கின்றதே. எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. வாசித்துப் பாருங்களேன்.

குடும்ப சூத்திரம் என்பது நூலின் பெயர். எண் 271

அன்புடன்
சுபா



Innamburan Innamburan Tue, Oct 18, 2011 at 1:59 AM

To: mintamil@googlegroups.com
Bcc: innamburan88

‘உண்மைதான்.. தேடியதில் இணையத்தில் அவ்வளாக பதிவுகள் கிடைக்க வில்லை.’
~ நன்றி, அன்பின் ஸுபாஷிணி, தேடியதற்கு. எனக்கு,
தேடி, தேடி, பலபட்டறை திறந்து, அன்றைய தலைமாந்தரை/ தகவலை தேர்ந்தெடுக்கும் முன் வெள்ளி கிளம்பி விடுகிறது. ஸ்னானபானாதிகளை முடித்து, தேடி முடிப்பதற்குள், மற்ற ‘தலை’ யீட்டுக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. பசி எடுத்து விடுகிறது. பின்னர் உண்ட மயக்கம். எழுந்தால் தேடல் மும்மரம். மனதில் விஷயத்தை உட்கொள்ள, போவதோ உலாவ. எழுதி முடிக்கும்போது, டயர்டு. இன்று புதிதாக நூல் ஒன்றும் படிக்க வில்லையே என்ற ஏக்கம். 
எனினும், ஒரு நிறைவு. பல விஷயங்கள் எனக்கும் புது வரவு. பகிர்ந்து கொள்ள ஒரு மின் வாய்க்கால். உசாத்துணைகளும், படங்களும் சேகரம். புத்தகம் எப்போது வரும் என்று பார்க்கலாம். இப்போதே 500-600 பக்கங்கள். எல்லாம் உங்கள் ஊக்கம். உங்கள் வலைப்பூ படித்தேன்.
கண்ணதாசன் ஒரு யதார்த்தவாதி. ஆகவே, 
'எல்லாம் அவன் செயலே' என்பதற்கு 
என்ன பொருள்?
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவு 
என்று பொருள்..!
குடும்ப சூத்திரம் படித்தேன். ஸூபர் யதார்த்தம்.
வணக்கம்
அன்புடன் 

Tuesday, October 15, 2013



‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார், மகாகவி பாரதி.  சமுதாயத்தில் பெரிய மீன் சின்ன மீனை விழுங்குவதை ஒழிக்க வேண்டும், கொத்தடிமை போன்ற தீமைகளை ஒழிக்கவேண்டும், தரகாதிபதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்ற அதனுடைய உட்கருத்தை புரிந்து கொள்ளாமலேயே ஒரு நூற்றாண்டை ஓட்டி விட்டோம். ஆனால்,அதை பிரசார பீரங்கியாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கவில்லை. யுத்த காலத்தில் விதிக்கப்பட்ட ரேஷன் முறை மூலம் பதுக்கும் வியாபாரிகள் கொள்ளையடித்தனர். திடீரென்று அந்த முறையை ரத்து செய்து, அவர்களை ராஜாஜி முடக்கினார். அது பழங்கதை. இன்றும் ரேஷன் அரிசி கடத்தப்படும் செய்திகள் வந்த வண்ணம் உளன. இந்த வருடம் மத்திய அரசு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கும் மக்கள் நல திட்டத்தை மனித உரிமையாக உயர்த்தி சட்டம் வகுத்துள்ளது, தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில். நலம் தரும் இந்த ஏட்டுச்சுரைக்காய் நடைமுறையில் என்ன என்ன அவதாரம் எடுக்குமோ என்ற கவலை எனக்கு இருக்கிறது.
இன்னம்பூரான்
16 10 2013 


அன்றொரு நாள்: அக்டோபர் 16 உலக உணவு நாள்

Innamburan Innamburan Sun, Oct 16, 2011 at 6:38 PM



அன்றொரு நாள்: அக்டோபர் 16
உலக உணவு நாள்

பசி வேறு;கடும்பசி வேறு; 
பட்டினி வேறு; கொலை பட்டினி வேறு; 
பட்டினிச்சாவு வேறு. 
பசிக்கு உணவு வேறு; ருசிக்கு உணவு வேறு.
நெல்லும் நாற்றும் வேறு; கரும்பும் அஸ்கா சீனியும் வேறு; 
காய்கறி தோட்டம் வேறு; காஃபி, தேயிலை தோட்டம் வேறு. 
நஞ்சை வேறு; புஞ்சை வேறு; தரிசு வேறு. 
பாசன நடவு வேறு; மானம் பார்த்த பூமி வேறு. 
பல்லாயிரம் ஏக்கர் அமெரிக்க ஐயோவா இயந்திர நடவு வேறு; 
காட்டை பொசுக்கி, விதையை வீசி, விளைந்ததை உண்பது வேறு. 

இவற்றையெல்லாம், பொருத்தமான வகையில் பிரித்து பார்த்து, உரிய காலத்தில், உற்ற நடவடிக்கை எடுக்காமல், பொத்தாம் பொதுவாக, ‘விவசாயம் சோறு போடாது.’,‘அரசே அன்னையும், பிதாவும்.’, ‘சருகுக்கும் தரகு உண்டு.’ ‘மரம் வைத்தவன் நீர் ஊற்றுவான்.’ என்று வீண் பேச்சில் ஒரு நூறாண்டு காலம் கழித்து விட்டோம். இந்த தளைகளிலிருந்து விடுபட்டால் தான், வேளாண்மை வளரும். விவசாயம் கெளரதை பெறும். உணவு உற்பத்தி பெருகும். பசி தணியும். வாழ்வு செழிக்கும். இது நிற்க.

அக்டோபர் 16, 1945 அன்று ஐ.நா. வின் பிரிவாக உணவு & வேளான்மை நிறுவனம் (FAO) தொடங்கப்பட்டு நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 1980 லிருந்து இந்த தினம் உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது. வருடாவருடம் ஒரு கோட்பாடு. 1910ம் வருடம் பசி ஒழிப்பதை பற்றி. எனவே, ‘பசியில்’ தொடங்கினோம். வேளாண்மையில் விடை காண விழைவோம். தொட்ட குறை, விட்ட குறையெல்லாம், உங்களுடைய மேலான கருத்துக்களை உள்ளுறையாக்கி அக்டோபர் 17 அன்று (நாளை) விவாதிக்கலாம். அன்று உலக வறுமை ஒழிப்பு நாள்.

முதலில் கண்ணில் பட்டது: வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் எழுதிய ‘ "ல"கரம் மாறியதால்  விளைநிலம்  விலை நிலமானது!'  என்கிற குறுங்கவிதை [உபயம்: கண்ணன் நடராஜன்]. விளை நிலத்திற்கு என்றும் நல்ல விலை உண்டு. நிலம், நீச்சு நாட்டுடமை. அது குறைந்த விலைக்கு/ இனாமாக/ மான்யமாக தனியாரிடம் போய் விடுகிறது. அதனால் தான் பட்டா,அடங்கல், தண்டல், கிஸ்தி, கிரயம் போன்றவை. இது உலக மரபு. இந்த அடித்தளத்தை குலைக்காமல், விவசாயத்தை மேன்படுத்த முடியும். 

அடுத்த படி கண்ணில் பட்டது: தமிழ்நாட்டு வனத்துறை 1.43 லக்ஷம் ஹெக்டேர் ~ விளைநிலங்களில், 182 கோடி ரூபாய் செலவில், ஐந்து வருடங்களில் 10 கோடி மரங்கள் நடுவார்கள் என்ற அக்டோபர் 16, 2011 செய்தி. ‘காடு வா! வா!’ என்கிறதோ! ஆந்திராவில் புல் வளர்க்கிறேன் பேர்வழி என்று வேலி மட்டும் (ஓட்டைகளுடன்!) போட்டதும், குஜராத்தின் புல் வளர்க்கும் மிஷீனும்[!] தணிக்கை செய்திகள். சொன்னால் அபராதம். பிரதமருக்கு தணிக்கை மேல் ‘முணுக்’ என்று கோபம். இதுவும் நிற்க. 

பல நூலகங்கள் பிடிக்கும் அளவு வேளாண்மையை பற்றி நூல்கள் இருப்பதால், நான் சொல்ல வந்த விஷயத்தை சுருக்கி பட்டியலிட்டு, இது சில துளிகள் மட்டுமே என்று அடக்கத்துடன் கூறி, மேலதிக ஆதாரத்துடன் கூடிய செய்திகளை, அறிவுரைகளை வரவேற்போமாக.
  1. மேல்நாடுகளில் விவசாயிகள் செல்வந்தரே; அங்கும், அவர்களுக்கு மான்யம் கிடைக்கிறது; ஆனால், இந்தியாவை போல் சுற்றி, வளைத்து, தாரதம்யம் தவிர்த்து அல்ல; நாமும் விவசாயத்திற்கு வரி விலக்கு, இலவச மின்சாரம் போன்றவையையும், அவற்றின் துஷ்பிரயோகத்தையும் தவிர்த்து, நேரடி மான்யம்,  ஆங்கிலேயகாலத்து தக்கவி கடன் வழங்குதல் போன்ற முறைகளை பற்றி ஆலோசிக்கலாம்.
  2. தரகர் ராஜ்யம் இந்திய அளவுக்கு எங்கும் பேயாட்டம் ஆடுவதில்லை; அதை முற்றிலும் ஒழித்திடவேண்டும். ஐயம் இருப்போர் மேட்டுப்பாளையம் தேங்காய் மண்டி, கோயாம்பேடு கறிகாய் மண்டி, சேலம் மாம்பழ மண்டி, பண்டார வாடை வெற்றிலை மண்டி, நேந்திரங்காய் வாழைத்தோட்ட அச்சாரம், அரிசி மில்கள் நெல் வாங்கும் வித்தைகள் ஆகியவற்றை பார்வையிடுங்கள். 
  3. இந்தியாவில், ஒரு நூறாண்டாக, ஆண்டையும், நிலச்சுவான்தாரும், ஜமீனும், ஜாகீரும்;, பெரிய/சிறிய/ மைனர் பண்ணைகளும், லேவாதேவியும், தரகும், பார்ப்பன ஆதிக்கமும் இணைந்து, விவசாயியை பெரும்பாலும் வருத்தின என வரலாறு காண்கிறோம். .  ஐயமிருப்போர் சத்யஜீத் ராயின் ‘துக்கி’ என்ற திரைப்படத்தைப் பார்க்கவும். அது கூறுவது உண்மை; அகில இந்தியாவை பிரதிபலிக்கிறது. நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள், ரசிகமணியின் ‘மரக்கால்’ முதலாளியை போல. இது ஒரு பின்னணி. முடிந்தவரை அடித்தளத்தை மாற்றாமல், சீர்திருத்தங்கள் செய்யலாம்.
  4. அரசின் பொறுப்புகள்: அணைக்கட்டு, நீர்நிலை,கண்மாய், வாய்க்கால் பராமரிப்பு, உரிய காலத்தில் நீர் தருவது, வாராந்தாரி சுழற்றல் நீர் பங்கீட்டை ஆவணப்படுத்துவது, விதை தானியம், உரம், ஆகியவற்றின் தரத்துக்கு உத்தரவாதம், ரோடு, மார்க்கெட், விலை நிர்ணய/ அடிப்படை கூலி மேற்பார்வை, விவசாய சமூக நலன், விவசாய திட்டம், கொள்கை.
  5. பாசனம்: நீர் தருவது பருவகாலத்தை பொறுத்து. கண்மாய்களையும், வாய்க்கால்களையும் பராமரித்தால், நிஜமாகவே பாதிக்கிணறு தாண்டிய மாதிரி. கிராமம் தோறும் இதற்கான விவசாயிகள் அறங்காவலர் குழுக்கள் தேவை. 1947க்கு முன் அவை இருந்தன. மாநில நீர்ப்போர்கள் அசிங்கம். பிறகு தான் அவற்றை பற்றி பேசமுடியும். 1947க்கு முன்னால் வாராவாரம் சுழற்றுமுறை நீர் வினியோகம் நியாயமாக நடந்தது. பிற்காலம் அரசை கைப்பற்றி, அதன் மூலம் ஆண்டையும், நிலச்சுவான்தாரும், ஜமீனும், ஜாகீரும்; பெரிய/சிறிய/ மைனர் பண்ணைகளும் ஆன அரசியல் வாதிகளும், அவர்களின் முள்ளுப்பொறுக்கிகளும் அதை துஷ்பிரயோகம் செய்தனர். இதை தடுக்க மக்கள் மானிட்டர் தேவை. 
  6. அறங்காவலர் குழுக்கள் + மக்கள் மானிட்டர்: எப்படி உருவாக்குவது? ஆங்கிலேயரின் ஆட்சியில், லாரன்ஸ் சகோதரர்களும் (பஞ்சாபில்) ரிப்பன் பிரபுவும், டாட்ஹண்டர், ஜனார்த்தன ராவ் (தமிழ் நாடு) போன்றவர்களும் தொடங்கிய கூட்டுறவு இயக்கம் போன்ற சமுதாயசீர்திருத்தங்கள் அரிது. கள்ளர் புனர்வாழ்வுக்கு இந்த இயக்கம் மந்திரக்கோலாக உதவியது. 1947க்கு பிறகு அரசியல்வாதிகளின் தலையீட்டால், கூட்டுறவு காட்டுத்தனமான துஷ்பிரயோகத்தில் சிக்கியது. 1960 களில் சுட்டு சுண்ணாம்பு ஆகிவிட்டது. வேறு எந்த இயக்கமும் வேளாண்மைக்கு உகந்தது அன்று. இன்றுள்ள துண்டு நில விவசாயம் மாறவேண்டும். கிராமீய ‘ஊர் பெரியவர்கள்’+ பஞ்சாயத்து+ கூட்டுறவு சங்கங்கள் + தன்னார்வக்குழுக்கள் + அரசின் எல்லைக்குள் அமைந்த ஈடுபாடு + சமுதாய விழிப்புணர்ச்சி பிரசாரங்கள் + நில சொந்தக்காரர்களின் நற்குணங்கள் எல்லாம் அமையக்கூடிய ஜங்ஷன்: கூட்டுறவு. அந்த வழியை செவ்வனே அமைப்போமாக.
   இன்னம்பூரான்
   16 10 2011
பி.கு. இது அறிமுகத்தின் முதல் பத்தி; முழுமை இல்லை. அதை பெரிது படுத்தாமல்,ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தருக.
Food+for+the+Future.jpg




Nagarajan Vadivel Sun, Oct 16, 2011 at 7:33 PM



சுதந்திர இந்தியாவில் விவசாயத்தில் சில விஷ(ம)ப் பரிசொதனைகள் நடந்ததென்னவோ உண்மை
1. அவரவர் தேவைக்கென்றிருந்த விவசாயத்தை யாருடைய பேராசைக்கோ என்று டில்லி பாபுக்கள் திட்டமிட்டு பசுமைப் புரட்சி என்று தொடங்கி இன்று தொடங்கியவர்களே தவறு செய்துவிட்டோம் அதிக உற்பத்தி என்ற வெறியுடன் வேலை செய்து நிலமகளை நாசப் படுத்திவிட்டோம் என்று இன்று மரண வாக்குமூலம் தரும் நிலை
2. விவசாய வளர்ச்சியை மறந்து தொழில் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி விவசாயியைச் சவலைப் பிள்ளையாக மாற்றிய சாதனை 21 ஆம் நூற்றாண்டின் மகத்தான சாதனை
3. வளமான விளை நிலங்கள் விவசாயிகளிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டு பன்னாட்டுப் பொருளாதார மண்டலங்களாக மாற்றம் பெற்று உழவனுக்கு உரிய வருவாய் பன்னாட்டு வணிகர்கள் லாபமீட்டி வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலை வெற்றிகரமாக நடக்கிறது
4. பன்னாட்டு ஈட்டிக்காரர்கள் விவசாயப் பயிர் வளர ஆரம்பிக்கும்போதே சூதாட்டம் ஆடி அடிமாட்டு விலைக்கு விவசாயப் பொருட்களை வாங்கிப் பதுக்கிவைத்து விளையாடும் மங்காத்தா விளையாட்டு அரசு ஆதரவுடன் நடக்கிறது
5. தேனீ போன்று சுறுசுறுப்புடன் வேலைபார்த்த விவசாயத்தொழிலாளர்கள் நூறு நாள் உணவுக்கான வேலையில் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும் கலையைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்
உலக விவசாயக் கழகம் ஊத வேண்டிய சங்கை ஊதிவிட்டது.  உலகெங்கும் உணவுப் பற்றாகுறை என்ற குமிழி பெரிதாகிக்கொண்டே வருகிறது.
இரண்டு பருவமழை பொய்த்தால் ஒளிரும் இந்தியா அமாவாசையாகிவிடும் என்பதில் ஐயமில்லை
நாகராசன்





Thevan Sun, Oct 16, 2011 at 11:25 PM






ஐயா, 
ஐநாவுக்கும் உலக நாடுகளில் ஏற்படும் பசிக் கொடுமைக்கும் சம்பந்தம் உள்ளதா, குறிப்பாக சோமாலியாவில் உணவில்லாமல் லட்சக்கணக்காக மக்கள் இறந்து வருவதில் ஐநாவின் பொறுப்பு என்ன என்று எழுதுங்களேன்.  



















Innamburan Innamburan Mon, Oct 17, 2011 at 5:16 PM


ஐயா, 

ஐநாவுக்கும் உலக நாடுகளில் ஏற்படும் பசிக் கொடுமைக்கும் சம்பந்தம் உள்ளதா, குறிப்பாக சோமாலியாவில் உணவில்லாமல் லட்சக்கணக்காக மக்கள் இறந்து வருவதில் ஐநாவின் பொறுப்பு என்ன என்று எழுதுங்களேன்.  


~ நண்பர் தேவனுக்கு, 
சோமாலியா மக்களுக்கு நீங்கள்/உங்கள் சுற்றம்/சின்ன சமூகம்/
 பெரிய சமூகம்/மும்பை/மஹராஷ்ட் ரா/இந்தியா செய்த உதவிகளை சொல்லுங்கள், முதலில். 
உமது வினாவுக்கு
விடையளிக்க உதவும்.


இன்னம்பூரான்



Thevan Mon, Oct 17, 2011 at 8:25 PM



ஐயா,
கேள்வியின் மூலம் நல்ல பதிலை கொடுத்ததற்கு நன்றி. 
நான் கூட ஐநா என்பது என்னையும், என் சமூகம், மும்பை, மஹராஷ்டிரா, இந்தியாவை விட பெரியது என்று நினைத்து விட்டேன்.




Innamburan Innamburan Tue, Oct 18, 2011 at 12:06 AM

என்ன அருமையான பதில், தேவன்! எனக்கு நீங்கள் நுட்பம் உணர்ந்ததைக்கண்டு,மிக மகிழ்ச்சி. இன்றைய கட்டுரையை நோக்கி, கருத்து எழுதுக. சில நிமிடங்களில் வரும்
அன்புடன், 

கோளுருளை பதிகம்


Innamburan S.Soundararajan
12:28 PM (6 minutes ago)
to mintamilManramthamizhvaasalதமிழ்vallamaitamilpayanime
கோளுருளை பதிகம் 

இன்னம்பூரான்
15 10 2013

1960ம் வருடம் என்று நினைவு. அஷ்டகோளங்கள் (planets) ஒரே நேர்க்கோட்டில் அமைந்து வலம் வருவதால், அந்த நாளன்று இந்த பூலோகம் அழிந்து விடும் என்று ஜோதிடர்கள் அழிச்சாட்டியமாக அச்சுறுத்த, அச்சமிகுதியால் அடங்கிக்கிடந்தனர், மக்கள் ~ தத்தம் வீடுகளில். நான்கு சுவர்களுக்குள் கோளங்களின் பாதிப்பு புகல இயலாது என்ற கணிப்போ அல்லது போறது போகச்சே கூண்டோடு கைலாசம் போகலாமே என்ற அங்கலாய்ப்போ, யான் அறியேன். நானும் என் மனைவியும், குழந்தையுடன், மாற்றலாகியதால், 271/2 மூட்டை முடிச்சுகளுடன், அன்று மொகல்சராய் பாஸெஞ்சர் என்ற ஸ்லோமோஷன் ரயில் வண்டியில் கல்கத்தாவிலிருந்து சித்தரஞ்சன் சென்று கொண்டிருந்தோம். காஞ்சி பெரியவா உபதேசித்த படி திருஞானசம்பந்தரின் கோளறு திருப்பதிகம் மனனம், வழி நெடுக. சித்தரஞ்சன் ஸ்டேஷனுக்கு வந்த சரோஜ் குமார் மித்ரா,‘ஏண்டா! குடும்பத்துடன் வரே. இந்த கொள்ளைக்காரன் வண்டியிலா வரது’ என்று மென்மையாக கண்டித்தான். ‘ஓஹோ! ஒன்பதாவது கிரகசாரம் வேறே இருக்கா?’ என்று நினைத்துக்கொண்டேன். தலைப்பை விளக்க இப்படி ஒரு சமாளிப்பு!

ஆங்கில சொற்களுக்கு தமிழில் அர்த்தம்; அனர்த்தமாக அமைந்தது. தற்காலம் கோர்ட்டுக்குப் போவது கொல்லைப்பக்கம் போவது போல. ஆண்டிப்பட்டி விஜயலக்ஷ்மி உயர்நீதி மன்றத்தின் ஆராய்ச்சி மணியை அடித்தல்லவா, தவறான கேள்விக்கு சரியான பதில் அளிக்க முடியாது என்று வாதாடியல்லவா 89+ 1 மதிப்பெண்கள் வாங்கினார்! கதை கேளும். நடந்த கதையை காது கொடுத்துக் கேளும்.

ஜூலை 12. 2012 வரலாறு காணாத வகையில் சிறப்பு மிகுந்த தினம். அன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்தது. வந்தது வினை, வினா 117ல்: “ 7 மீ., உள் விட்டமுள்ள ஒரு உள்ளீட்டற்ற உருளை ஒன்றில், ஒரு சக்கர வாகன ஓட்டி சாகசங்களை நிகழ்த்துகிறார். அவருக்கு அந்த வாகனத்தை ஓட்டுவதற்கான உள்ள பரப்பு (ச.மீ.,) என்ன? ஆங்கிலத்தில் உள்ளீட்டற்ற கோளம் (ஸ்பியர்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘உருளை’ என்பதற்கு ஆங்கிலம் சிலிண்டர்; ‘கோளம்’அன்று. உருளையின் பரப்பு கண்டு பிடிக்க விட்டத்தின் அளவும் தெரிய வேண்டும். அதன் உயரமும் தெரிய வேண்டும். ஆக மொத்தம் 117ம் கேள்விக்குறியாகி விட்டது. அதை ஒரு மார்க் என்று ரசவாதத்தீர்ப்பு வாங்கி விட்டார், பெண்ணரசி ஆண்டிப்பட்டி விஜயலக்ஷ்மி. ஜய விஜயீ பவ, விஜயலக்ஷ்மி.

ஆமாம். ஹிந்தியில் தப்புத்தந்தியடிச்ச சேதி தெரியுமோ? கேட்டாச்சொல்றேன்.
-#-









 

Monday, October 14, 2013

ஜனாப் ஆவுல் ஃப்க்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்




அன்றொரு நாள்: அக்டோபர் 15, 1931

Innamburan Innamburan Sat, Oct 15, 2011 at 10:43 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 15, 1931
இந்தியாவின் தென்கோடி முனை ராமேஸ்வரத்தில் பாமரனாய் பிறந்து, சீமானாக உயர் பதவிகளில் இருந்த போதும், பாமரனாக வாழ்ந்து காட்டி, காந்தி அண்ணலின் நினைவை முன் நிறுத்துபவரும், நேருவை போல் சிறாரின் துருவநக்ஷத்ரமாக ஒளி தருபவருமான முன்னால் ஜனாதிபதி பாரத ரத்னா ஜனாப் ஆவுல் ஃப்க்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருடைய வரலாறு பல இடங்களில் உமக்குக் காணக்கிடைக்கும். அவர் ஒரு விழிப்புணர்ச்சி தலைவர் என்பதை யாவரும் அறிவர். அவருடைய பாமரகீர்த்தியின் அறிமுகம் மட்டும் இங்கே. ஆங்கிலத்தில் அவர் எழுதியதின் சாராம்சம் அது. மொழியாக்கத்திற்கும், சுருக்கத்திற்கும் பொறுப்பு எனது. மற்றபடி உசாத்துணை, உங்கள் கையில்.
  1. தன் அன்னையை பற்றி: ‘...1941. இரண்டாவது உலக யுத்தம். பஞ்சப்பாட்டு தான். ஒன்றும் கிடைக்காது. (என் அன்னையும் அரிசி கூட கிடைக்காது என்று எழுதியிருக்கிறார். என் நினைவில்: கருப்பட்டி மல்லி காப்பி, கம்புசாதம், கேழ்வரகு கஞ்சி. ஆபீசில் காகிதம் குத்த கருவேல முள்.) கூட்டுக்குடித்தனம் பெரிது... காலை 4 மணிக்கு குளித்து விட்டுப்போனால் தான் சாமியார் என்ற ஆசிரியர் கணக்கு சொல்லித்தருவார். எனக்கு முன் எழுந்து அம்மா என்னை குளிப்பாட்டி விடுவார்...வயது 10...பிறகு வாப்பா மசூதிக்கு நமாஸ் செய்ய, திருக்குரான் படிக்க, கூட்டிச்செல்வார். அதற்கு பிறகு மூன்று கிலோ மீட்டர் நடந்து ஸ்டேஷனில் அன்றாடம் ரயிலிலிருந்து வீசி எறியப்பட்ட நாளிதழ்களை பொறுக்கி, விநியோகம் செய்வேன்.காலை மணி எட்டு. அம்மா எனக்கு பரிவுடன் அதிகம் உணவு அளிப்பார். ஒரு நாள், என் அண்ணன் அம்மா பட்டினி கிடந்து எனக்கு அதிகம் தருகிறாள் என்று என்னை கண்டித்தான்...மின்சாரம் கிடையாது. 93 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்து, நாள் தோறும் ஐந்து முறை நாமஸ் படித்த தேவதையான அம்மா தான் எங்களுக்கு வெளிச்சம். அதனால் தான் ‘அக்னிச்சிறகுகள்’ என்ற நூலில், நிலா ஒளியில் என் அம்மா.
  2. தன் ஆசிரியர்களை பற்றி: வீட்டில் வந்து என் படிப்பை சிலாகித்த முத்து ஐயர் அவர்களை சொல்வேனா?... அவர் ஆசிரியர் மட்டுமல்ல. அவர் ஒரு முன்னோடி... பக்ஷி பறப்பது என்பதை கடற்கரைக்கு எங்களை அழைத்து சென்று காண்பித்து, சொல்லிக்கொடுத்த சிவசுப்ரமண்ய ஐயரை மறப்பேனா? அதனால் தானே நான் பறக்கும் விஞ்ஞானம் கற்க வந்தேன். அவர் தான் முதல் அக்னிச்சிறகு... பிற்காலம் பேராசிரியர் தோத்தாத்ரி ஐயங்காரும், கால்குலஸ் ஶ்ரீனிவாசனும் எத்தனையோ மாணவர்களின் மின்னல் வருங்காலத்துக்கு வித்து இட்டிருக்கிறார்கள்...உயர்படிப்பின் போது ஆராய்ச்சியின் மதிப்பை, அழுத்தம் கொடுத்து அழ வைத்து, சொல்லிக்கொடுத்த பேராசிரியர் ஶ்ரீனிவாஸனை  மறக்கமுடியுமா?
   *
ஜனாதிபதியாக சிறப்புற பணியாற்றிய ஜனாப் அப்துல் கலாம் அவர்கள் பீஹார் அரசை டிஸ்மிஸ் செய்ததிலும், நாடளுமன்ற அங்கத்தினர்களின் சுயாதீன அதிகரிப்பு விஷயத்தில் இரண்டாம் சுற்றில் ஒத்துப்போனதை பற்றி சர்ச்சைகள் எழுந்தன. ஜனநாயகத்தின் அடித்தளத்தை விட அக்காலத்து அரசின் ஆளுமைக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இடம் கொடுத்து, அரசியலில் தார்மீகம் புறக்கணிக்கப்பட்டதற்கு ஒரு காரணி ஆகிவிட்டாரே என்று எனக்கும் வருத்தம் தான்.
இன்னம்பூரான்
15 10 2011
abdul-kalam-apj-dr.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam Sat, Oct 15, 2011 at 11:33 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

rajam Sun, Oct 16, 2011 at 7:04 AM

திரு அப்துல் கலாம் போன்றவர்கள் நெடுங்காலம் நல்ல நிலையில் வாழ்ந்து பிறருக்கு வழிகாட்டியாக அமையவேண்டும்.
பகிர்வுக்கு நன்றி!