Monday, January 20, 2014

சிந்திப்போமே: 5 -8



சிந்திப்போமே: 5 -8

இது பலர் கருத்துக்கள் அடங்கிய நீண்ட தொடர் என்பதால் ஒரு குறிப்பு:


சிந்திப்போமே: 1 -4 : இதற்கு முந்திய பகுதி, இந்த வலைப்பூவில். அடுத்து வருவது ஒரு ஆங்கில பதிவு.


சித்திரத்துக்கு நன்றி: http://www.zenlawyerseattle.com/wp-content/uploads/2011/12/god-versus-science-time-magazine-cover.jpg
இன்னம்பூரான்
20 01 2014

Input 5:

இந்திய மெய்யியல் அணுகுமுறை அறிவியலுடன் போரிடாது; யுக்திக்கும்,
அனுபவத்துக்கும் பொருந்தி வருவனவற்றை முழுமையாக ஏற்கும் பண்புடையது அது.

ஆழ்துயில் காலத்தில் பொருட்களின் தொடர்பு நீங்கிய நிலையிலும் ஓர்
இன்பத்தை,  அமைதியை மனிதன் உணர்கிறான்; விழிப்பு நிலையிலும் அதை ஏன்
தொடரச் செய்யக்கூடாது என்று அறிவியல் பூர்வமாக ஆராய்வது வேதாந்தம்.

தொடர்பு நீக்கத்தின் முதல்படி ‘துறவு பூணுதல்’;  ஆனால் இன்றைய சூழலில்
அது வெறும் சடங்காகிப் போனது.

எந்த ஒரு நேர்மையான ஆராய்ச்சியும் வேதாந்தத்துக்கு முரணாக முடியாது.

ஐயா சொல்வதுபோல் - We need to define precisely what is Science and what
is Religion from a Hindu perspective



தேவ்
Input 6:
>
> எந்த ஒரு நேர்மையான ஆராய்ச்சியும் வேதாந்தத்துக்கு முரணாக முடியாது.
>
>
> தேவ்
>

ஆயிரம் முறை ஆமோதிக்கிறேன்.  இதைத்தான் இணையத்தில் எழுதத் தொடஙகிய நாளாய் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  மோசசுக்கு இறைவன் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தது எந்த மலையில் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.  இதுவரை 14 மலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பத்தாண்டுகளுக்கு முன்னால் ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்தேன்.
பைபிளில் உள்ளதை பூகோள, விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்த முடிகிறது என்றால், மஹாபாரத ராமயணம் சொல்லும் உண்மைகளை அப்படி உட்படுத்த முடியாதா?  உதாரணமாக, மேரு என்று எந்த மலையைச் சொல்கிறோம் என்பதிலேயே நமக்கு இன்னமும் ஒரு தெளிவு இல்லை.  அனுமான் மருந்து மலையை நோக்கிப் புறப்படும்போது ஜாம்பவான் வழி சொல்லி அனுப்புமிடத்தில், இமயமலைத் தொடரைத் தாண்டி, உத்தரகுருவைத் தாண்டி, கைலாச மலையைத் தாண்டி மேருவுக்கு அப்பால் சஞ்சீவி பர்வதம் என்று சொல்லக் காண்கிறோம்.  மேருவுக்கு வடக்கே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து, சில கணங்களுக்கு ‘உதயம் ஆயிற்றோ’ என்ற தடுமாறிப் போய் பிறகு, ‘இது உதயம் இல்லை’ என்ற தீர்மானத்துக்கு அனுமன் வருவதைப் பார்த்தோம் (அனுமன் இலங்கையிலிருந்து கிளம்புகையில் இரவாக இருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்).  அப்படியானால் இலங்கையிலிருந்து நேர்க்கோட்டில் மேரு இருந்திருக்க முடியாது.  கிளிமாஞ்சரோ மலைத்தொடரில் மேரு என்ற பெயரோடு ஒரு மலை இருக்கிறது.  கூகிள் செய்து பாருங்கள்.  இந்த டைம்ஜோன் குறிப்பை வைத்துக் கொண்டு எத்தனையோ இடங்களை அடையாளம் காண முடியும். கட்லர் சொன்னா ஒத்துப்பாங்க.  பட்லர் சொன்னா ‘போய்ட்டு வாய்யா‘ம்பாங்க.  
பாரதத்தில் உள்ள எத்தனையோ குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.  ஆனால் நமக்குதான் ஆத்துல ஒருகாலாச்சே.... இருக்கிற இடம் மதில்தானா இல்லையா என்பதையே இந்தப் பூனை இன்னமும் தீர்மானித்த பாடில்லையே.... என்ன பண்றது!
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
உங்களுக்கு நானும் எனக்கு மற்றவர்களும் அங்கணமாக இருந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.  (திருக்குறளில் வடமொழியே இல்லை என்கிறார்கள்.  கோட்டி என்பது, கோஷ்டி சொல்வது என்ற வழக்கின் அடிப்படையில் தமிழ் வடிவம் பெற்ற சொல் என்று திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு (கி வா ஜகந்நாதன் பதிப்பு) சொல்கிறது.  இதையே நம்ம ஆளுங்க ஒப்புக் கொள்ள மாட்டாங்க.  அப்புறம் என்ன மெய்ஞானத்துல விஞ்ஞானம்?)
மெய்ஞானத்தையும் உள்ளிட்டுக்கொண்டு இயங்கும் அளவுக்கு விஞ்ஞானத்தால் விரிய முடியும் என்கிறேன் நான்.  விஞ்ஞானத்தில் சாணிக்கு இடமில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  அவர்கள் துறையைப் பற்றி அவர்களுக்கு அந்த அளவுக்குதான் நம்பிக்கை இருக்கிறது.  அவ்ளதான். :))  கண்ணுக்கு முன்னால் உள்ள துரும்பு சூரியனை மறைக்கிறது என்றால் பிரத்தியட்ச பிரமாணப்படி, துரும்புதான் சூரியனைவிடப் பெரியது என்ற நிரூபிக்க முடியும்தான.  அப்படித்தான் நிரூபித்திருக்கிறார்களா?  நமக்கு மட்டும்தான் விஞ்ஞானம் தெரியும் என்பது நம்முடைய எண்ணம்.  விட்டுடுங்க.  இருக்கும் இடம் மதில்தானா என்பது பற்றி பூனைக்கு ஒரு நிச்சயம் ஏற்படட்டும்.  அதுக்கு அப்புறம் பேசிக்கலாம். :))
-- 
அன்புடன்,
ஹரிகி.
Input 7:

srirangammohanarangan v

 to indic-roots, mintamil
show details May 18 (5 days ago)
A cat on the wall joke
cat 1 :-- Hi meow!  Can you just tell me whether there is any wall under my feet?

cat 2 :-  Hi brrr you have no problem. may be you stand on nothing....
but  me...  oh  babre...

cat 1:-- why? whats about you?

cat 2:-- I have a feeling that the wall stands on me...and ..
the wall  is invisible and  limitless.
*******
Input 8:

மதில் மேல் பூனை! பூனையின் ஒன்பது வாழ்க்கை! இன்னும் எத்தனையோ?ஆங்கில இடுகைகளுக்கு மன்னிக்கவும். அவற்றை ஒதுக்கவும் முடியாது. மொழிபெயர்ப்பு செய்தாலும் யார் யார் படிப்பார்கள் என்று அறிய இயலவில்லை. நேரமோ போதவில்லை. இயன்றதை செய்வோம். 

இன்னம்பூரான்

5/18/10 5:12 PM

No comments:

Post a Comment