Thursday, June 5, 2014

சிரிச்சு மாளலெ 1

சிரிச்சு மாளலெ 1



இன்னம்பூரான்
ஜூன் 6, 2014

பாரதவர்ஷம் என்ற பொன் விளையும் பூமியிலே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்ற சங்கீத வித்வான் ரொம்ப பிரபலம். அவரை, மற்ற உஸ்தாத்களுடன் ஜனாதிபதி மெடல் சூட்டி கெளரவித்தார். உஸ்தாத் -வித்வான் தாரதம்யம் கண்டு கடுப்பில் இருந்தார், அய்யங்கார்வாள். ஜனாதிபதியின் விஐபி எடுபிடியாக (மிஸ்ட்ரெஸ் ஆஃப் செரமனீஸ்) இருந்த நிர்மலா ஜோஷி அம்மையார், அய்யங்காரின் எரிச்சலை கண்டு கொள்ளாமல், இசை கேடாக ‘அய்யங்கார்ஜீ! உங்கள் தோடி பிரபலம். பாடுக’ என்று பணித்தாராம். அய்யங்காரும், ‘சரி தாண்டி, போடீ!’
என்றாராம். சான்று: சுப்புடு.

அந்த மாதிரி பிரியங்காவை ‘என் பொண்ணு மாதிரி’ என்று இணக்கமாக சொன்னதற்கு பதிலடியாக ‘நான் ராஜீவ் காந்தியின் பொண்ணாக்கும். போடா மோடி பிண்ணாக்கு..’ என்று பொருள்பட அந்த பொண்ணு சொல்லிடிச்சாம். பேப்பர்காரங்க சொல்றாங்க. அசோக சக்கரவர்த்தியின் ‘ப்ரியம் வத’ என்ற ஸுபாஷிதம் தான், ப்ரியாங்கா என்ற பெயரின் பின்னணி. தப்பா பேர் வச்சுட்டா, பாட்டி என்று தான் தோன்றது! அம்மாகாரி பொன்னம்மா அந்த வருண் வாண்டுக்கு சரியான புத்தி புகட்டினாராம். அவன் பதவிப்பிரமாணம் எடுத்தவுடனேயே பெரியம்மாவுக்கு படா கும்பிடு போட்டானாம். ‘மொதல்ல பத்திரத்திலெ கையொப்பம் போடு என்றாளாம், பெரியம்மா. அவங்களுக்கு தெரியும், ஆவணங்களின் மகிமை. வருண் கத்துக்குட்டி. 

அடுத்தபடியாக:

சல்மான் குர்ஷீத் தருண் தேஜ்பாலுக்கு வக்காலத்தாம். கபில் சைபால் கல்கத்தாவுக்கு போய் வாதாடறப்போறாரம். ப.சி. யும் எங்காத்து மாமா போல கேஸ்கட்டு எடுத்தக்கப் போறாராம்.
பொழைக்க தெரிந்த மனுஷா. அவா காட்லெ மழை பொழியும்.
*
பி.கு. சுப்புடு சொல்றார்: ‘அய்யங்காரா! கொக்கா! மெடலை தேச்சு பாத்தார். கில்ட்டு!
எடுபிடி மாமி ரசவாதம்னு கொமைஞ்சு போய்ட்டாராம், அய்யங்கார்வாள். 
பாரதவர்ஷம் என்ற பொன் விளையும் பூமியிலே நிலக்கரி கறுப்பாக இருந்தாலும் அயல்நாடுகளில் கொழிக்கும். அலைகற்றை ஆகாசத்தை வளைக்கும். இன்னும் எத்தனையோ!
-x-

சித்திரத்துக்கு நன்றி: http://solvanam.com/wp-content/uploads/2009/12/img430.jpg






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment