மோடியும், நீயும், நானும். 3
இன்னம்பூரான்
ஜூன் 11, 2014: 20:38 IST/21.00 IST
இந்திய ஜனநாயக மரபின் படி ஜனாதிபதியின் சொற்பொழிவு, மோடி அரசின் கொள்கையின் எதிரொலியே என்றாலும், பிரதமரின் நன்றி நவிலலும் இந்திய ஜனநாயக மரபே. அந்த தருணத்தில் பிரதமர் மோடி கூறிய கருத்துக்களின் சாராம்சம்.
- மாநிலங்களும், மத்திய அரசும் ஆரோக்கியமான கூட்டுறவுடன் இயங்கினால், நாடு வளரும்;
- பலமான அடித்தளம் வேண்டுமென்ற மக்களின் கோரிக்கை சம்பிரதாயமானது அல்ல.
- ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு நன்றி நவின்ற பிரதமர், இருள் நீங்கும் என்றார்;
- குறுகிய/பிராந்திய பாகுபாடுகளை களைந்து, அரசியல் முரண்களை பெரிது படுத்தாமல், வெற்றி, தோல்வி ஆகியவற்றை மறந்து நாம் யாவரும் தேசநலனை பாராட்டவேண்டும்;
- எங்கெங்கும் பரந்த நோக்கமுடைய சமத்துவமே வேண்டும்;
- தேசத்தின் எல்லா அவயவங்களும் அத்தியாவசியமானவை; கட்டுப்பெட்டி திட்டங்கள் அதற்கு உதவா;
- ஜனநாயகம் கணக்குக்கேட்கும்; நாட்டின் நலன், பாதுகாப்பு தான் முக்கியம்; வலிமை வேண்டும்;
- பாலியல் வன்முறைகளை அரசியல் கருவியாக நோக்கக்கூடாது; மாவோயிஸ்ட் பிரச்னை பற்றி அந்தந்த மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்;
- லஞ்ச வாவண்யம் ஒழிக்க கொள்கை அடிப்படை வகுக்கவேண்டும், முதலில், என்றார்; அதன் பொருட்டு இயங்குவதில் மூடி மெழுகுவது கூடாது என்றார்;
- நாடாளுமன்ற உறுப்பினர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டால், ஒரு வருடத்துக்குள் தீர்வு காணவேண்டும் என்ற அவர், கறுப்புப்பணம் பற்றிய கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டினார்.
- முந்தைய அரசுகள் தேசீய வளர்ச்சிக்கு பணி புரிந்திருந்தை சுட்டிக்காட்டி, அதன் வேகம் போதாது என்றார்;
- மட்டமான அரசு நிர்வாகம் நீரழிவு நோயை விட மோசம் என்ற பிரதமர், மக்களுக்கு சுபிக்ஷம் கிடைத்தால் தான் நாடு வளரும் என்றார்;
- நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கை குலைந்து விட்டது என்ற பிரதமர், அதை மீட்பது தான் அவசரம் என்றார்;
- அரசியல் கட்சிகளை விட தேசம் தான் முக்கியம் என்ற பிரதமர், தான் எல்லா கட்சிகளின் ஒத்துழைப்பை நாடுவதாக சொன்னார்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.sobernation.com/wp-content/uploads/2011/12/gratitude.jpg
No comments:
Post a Comment