Friday, October 3, 2014

என்னத்தைச் சொல்ல! – 5

என்னத்தைச் சொல்ல! – 5


இன்னம்பூரான்
அக்டோபர் 3, 2014

சட்டமீறலுடன் உடன்படும் பொதுமக்களின் பேராசையும், குறுக்குவழி அணுகுமுறையும், சுயநலமும் தான், பெரும்பாலும், லஞ்சலாவண்யங்களின் ஊற்று என்று நான் சொல்லிவருவதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. இன்றைய ஹிந்து அப்டேட் செய்தியை (http://www.thehindu.com/news/cities/bangalore/size-of-fake-experience-certificate-scam-growing/article6466529.ece?homepage=true)பாருங்கள். குற்றவியல் துறை பொய் சான்றுரைகளை அளித்ததற்காக ஏழு கம்பெனிகள் மீது படையெடுத்திருக்கிறார்கள், பெங்களூரில். அதை கண்டு வியந்த ஒரு உலகளாவிய ஆய்வுக்களம் அம்மாதிரி 9500 கம்பெனிகள் இந்தியாவில் இருப்பதாகவும், அந்த பிரச்னை பூதாகாரமாக வளர்வதாகவும் கூறியதுடன் நிற்காமல், போலீஸ் கமிஷனருக்கு வரைந்த மடலில் கூறும் தகவல்கள்:
  1. கல்வி, வேலைவாய்ப்பு,முகவரி விஷயங்களில் அவை புகுந்து விளையாடுகின்றன.
  2. படித்த ‘மேதைகள்’ தாம் அவற்றை நடத்துகிறார்கள்.
  3. இம்மாதிரியான ‘டுபாக்கூர்’ கம்பெனிகளில் சில அரசு துறையில் பதிவு செய்து கொண்டவை; சில வருமான வரி கட்டுகின்றன. சில வலைத்தளம் வைத்து கொழிக்கின்றன. ஆனால் அவை யாவும் நிழல் குட்டிச்சாத்தான்கள்.
  4. இவற்றுக்கு பின்னால் ஒரு மாபெரும் மாஃபியா உளது.
  5. போலீஸிடம் புகார் செய்தோம். மேலதிக விவரம் தருவதாக சொன்னோம். எல்லாம் கிணற்றில் போட்ட கல்.
  6. எனவே, இந்த கழிசாடை விவரங்கள் எல்லாவற்றையும் எங்கள் தளத்தில் (http://rezorce.com) போட்டுவிட்டோம். அவை எல்லாம் இப்போது பொது மன்றத்தில்.
  7. போலீஸ் வருமுன்காப்போனாக செயல்பட வேண்டும். அது தான் முக்கியம்

அப்டேட்டுக்கு அப்டேட்: இத்தருணம், குற்றவியல் துறை பொய் சான்றுரைகளை அளித்ததற்காக 50 கம்பெனிகள் மீது கண் வைத்துள்ளார்கள், பெங்களூரில்.

மனிதன் விழைகிறான். இராக்கதன் தருகிறான். தேவன் மெள்ள மெள்ள வருகிறான்.

என்னத்தைச்சொல்ல !
-#-


சித்திரத்துக்கு நன்றி: http://www.freemanart.ca/images/Dali_Certificate_authenticity_web_001.gif

No comments:

Post a Comment