Thursday, November 13, 2014

வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை! ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 4

Dear Friends,

Today, we shall be celebrating the birthday of our First Prime Minister, Pandit Jawaharlal Nehru in different fora. The Congress party, of which he was a pillar,, is introducing a peevish element into it; To my mind, he’d frown upon this misadventure. Let us leave it aside and turn our attention to his favorite theme -children. today is ChIldren Day as well. Perchance, the quote in Neighbors 3, my thread in English is about bringing up children. I place below my note on him, three years ago.

With warm greetings
Innamburan

14 11 14


அன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
22 messages

Innamburan Innamburan Sun, Nov 13, 2011 at 7:31 PM

To: mintamil 

அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)

விடுதலை வீரர். மஹாத்மா காந்தியின் அரசியல் வாரிசு. இந்தியாவின் நீண்டகால முதல் பிரதமர். குழந்தைகளின் நண்பர். இன்று குழந்தைகள்   தினமாக விழா எடுப்பது முற்றிலும் பொருத்தமே. குமரியிலிருந்து லடாக் வரை, மேற்குக்கோடி ‘ரன் ஆஃப் கட்ச்’ லிருந்து கிழக்குக்கோடி24 பர்காணா வரை பெரும்பாலான இந்திய குடும்பங்கள் இவரை உறவினராகப் பாவித்தன. அவரை பற்றி எதை எழுதுவது? எதை விடுவது? எது தான் உங்களுக்கு தெரியாதது!  அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு. ஒரு காலகட்டத்தில் இதழியல் மேதை ராமானந்த சட்டர்ஜி ( அவர் மூன்று தலைமுறைகளின் விழிப்புணர்ச்சியை உரம் போட்டு வளர்த்தவர்)  பிரசுரித்த மாடர்ன் ரிவ்யூவில் நேருவை கண்டிக்கும் போக்கில் ஒரு கட்டுரை வந்தது; ஒரே எதிர்ப்பு. பிறகு தான் தெரியவந்தது, அது அவரே எழுதியது என்று.  அந்த நேரு தற்கால விமர்சனங்களை, அவை உரிமை பிரகடனங்கள் என்று அனுமதித்து விடுவார்.
மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.

என்றோ படித்தது: ஜவஹர் கல்யாணத்திற்கு, அலஹாபாதிலிருந்து ஒரு பிரத்யேக ரயில் வண்டியில் மாப்பிள்ளை வீட்டார் டில்லி சென்றார்கள் என்று.
மெளண்ட்பேட்டனிடம் நேருஜி அமைச்சர்கள் பட்டியல் இருந்த கவரை கொடுத்தார். பிரித்தால் வெத்துப்பேப்பர்! அத்தனை நெருக்கடி. ஞாபகமறதி. இந்த மாதிரி 500 பக்கங்கள் எழுதலாம், இன்றே.

அப்பா சொன்னது: மோதிலால் நேருவின் மாளிகை ‘ஸ்வராஜ்பவன்’ அவரால் ஒரே மகன் ஜவஹர் பேரில் கிரயம் செய்யப்படுகிறது. மகனாக அல்ல. காங்கிரஸ் கட்சியின் அக்ராசனராக. பார்த்தது: நான் நேருஜியை ஆவடி காங்கிரஸ்ஸில் முதல் முறையாக பார்த்தேன். ஜன வெள்ளம். ஜிப்பா ஜேபியில் இருந்த மூக்குக்கண்ணாடியை தேடி, அமர்க்களப்படுத்தி விட்டு, அது கிடைத்தவுடன் அவர் சிரித்த அசட்டுச்சிரிப்பின் வசீகரம் அபரிமிதம், போங்கள்!. பிறகு, 1961-2 என்று ஞாபகம். ஆம். சொன்னதை எல்லாம் மறுபடியும் சொல்கிறேனோ? வயசு ஆயிடுத்தோல்லியோ! மின் தமிழில் புதியவர் வருகையும் உளது. சித்தரஞ்சன் ரயில் இஞ்சின் தொழிற்சாலைக்கு வந்திருந்தார். தேனீர் விருந்தின் போது என் மகனை தூக்கிவைத்துக்கொண்டார். இருவரும் ஒரே சமோசாவை சுவைத்தனர். இரவு விருந்தில் ரொம்பவும் சகஜமாகப் பழகினார். அப்பாவும் பொண்ணுமாக, அவரும் வஸந்தாவும் பேசி மகிழ்ந்தனர். என் கையில் கட்டு. கேலி செய்தார். மறு நாள், அசன்சால் ரயில் நிலையத்தில், வரும் ரயில் வண்டியில், கதவைத் திறந்து கொண்டு நிற்கிறார்! செக்யூரிடியாவது! மண்ணாங்கட்டியாவது! ஒரே ஆரவாரம். மக்களுக்கு அவர் வண்ணாத்தி. அவருக்கு மக்கள் வண்ணன். அப்படி ஒரு ஆசை. 

அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை தெரிவிப்பார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக பார்த்துக்கொண்டபோது, அவருடைய சிவந்த முகம், கருப்பாக, குழம்பிக்கிடந்தது. அத்வானத்தைப்பார்த்து நடந்தார். மரியாதையுடன் தள்ளி நின்ற நாங்கள் யாருமே அவர் கண்ணில் படவில்லை. பிறகு தான் தெரிந்தது, ராணுவ அமைச்சர் வீ.கே.கிருஷ்ணமேனனிடன் ராஜிநாமா கடிதம் வாங்கச்சென்றார், என்று. வீ.கே.க. அவருடைய நண்பர். சைனா யுத்தம் உச்சகட்டம். யாருக்கும் வீ.கே.கே. மீது நம்பிக்கை இல்லை. இருந்தும், பண்புடன் நண்பரை நடத்தினார், பிரதமர்.

எனக்கோ பார்லிமெண்ட் ட்யூட்டி. ஓடினேன். ஒய்.பி.சவான் புதிய ராணுவ அமைச்சர் என்று பிரதமர் அறிவித்தவுடன் கரகோஷம் வானை பிளந்தது. அருகில் இருந்தேனா! அவருடைய அகத்தில் மகிழ்ச்சி இருந்ததாக, முகத்தில் தெரியவில்லை. குடியரசு தினவிழா. சைனா யுத்தம். உச்சகட்டம். பிரதமரின் தலைமையில் ராஜ்பத் ராஜபாட்டையில் நடை ஊர்வலம். இப்படியெல்லாம் தற்காலத்தலைமுறையால் கற்பனை கூட செய்யமுடியாது. ஜான் லால் ஐ.சி.எஸ். தலைமையில் ஒரு இருவர் குழு, பிரதமரை அடை காத்து, மேடைக்கு அழைத்து வர. அடியேன் இரண்டாமவன். அந்தக்காலத்தில் தடால் புடால் ஏற்பாடுகள் கிடையாது. துணியாய் துவண்டு வந்து சேர்ந்தார், நேருஜி. கவலையுடன் டாக்டர்கள். அவருடைய பழைய கேடிலக் காரில் ஏற்றி செல்ல வேண்டும் என்று திட்டம். அது வசமாக கேட்டுக்கதவில் சிக்கிக்கொண்டது. ஏதோ குருட்டு அதிர்ஷ்டம், என் வசம் ஒரு ஜீப் ரகஸ்யமாக இருந்தது. காரிலிருந்து இறக்கி, இவரை ஜீப்பில் ஏற்றிக்கொள்வதற்குள் அவசரம். ஜனாதிபதியின் சாரட் மேடையை நெருங்கிவிட்டது. பிரதமர் அவரை வரவேற்கவேண்டும். கைபேசியாவது, கால் பேசியாவது! எப்படியோ சங்கேதம் செய்து சாரட் புரவிகளை சற்றே தாமதப்படுத்தினோம். ஜீப்பில் ஏறியவுடன் புன்முறுவல். களைத்த புன்முறுவல். அந்தக்காலத்து அதிகாரிகளின் பண்பு போற்றத்தக்கது. திரு.ஜான் லால் என்னை அறிமுகப்படுத்தி, ஜீப் ரகசியத்தை உடைத்தார். ‘ஹோஷியார் லட்கா ஹை’ என்றார், நேருஜி. எனக்கு உச்சி குளிர்ந்தது.

பிறகு ஒரு நாள், நேருஜி மீது திரு.ராம் மனோஹர் லோஹியா நம்பிக்கையில்லா தீர்மானம் கொணர்ந்தார். உத்தியோகஸ்தர் வரிசையில் எக்கச்சக்ககூட்டம். முண்டியடித்துக்கொண்டு , ஒத்தைக்கால் தவத்தில் நின்று குறிப்பு எடுத்தேன். கடுமையான தாக்குதல். லோஹியாவும் நேருவும், விடுதலைப்போரில் தோளுக்குத் தோள் கொடுத்த நண்பர்கள். லோஹியா வீசிய கடுஞ்சொற்களின் சூடு தகித்தது. நேருவின் முகத்தில் உணர்ச்சி கொப்பளித்தது. ஆனால், பாருங்கள். தேதி/தொடர்பு நினைவில் இல்லை. லோஹியா சிறையில். ஜன்ம தினம். ஒரு கூடை அல்ஃபான்சா மாம்பழம். அனுப்பியது, அவரை சிறையிலிட்ட நேருஜி.
ஒரு நாள் வசமாக மாட்டிக்கொண்டோம். ஒரு ஆவணத்தில், வரிசையாக, மூன்று ஸெளந்தரராஜன்கள்! பிரதமரின் வியங்கோள் வினா: Who are these Soundararajans?. எங்கள் உயரதிகாரி ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ் அவர்கள் பிரதமரிடம் நல்ல பரிச்சியம் உள்ளவர். அவர் ஒரு நாள், ஏதோ ஒரு பிரமேயமாக, இவர்கள் தான் அந்த திரிமூர்த்திகள் என்று சொல்லி வைத்தார். கொள்ளை சிரிப்பு.

நான் 1964ல் மாற்றல் செய்யப்பட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன். 25 வருடங்கள் கழித்து நேருபூமியான அலஹாபாத்தில் வேலை. அக்காலம் ஸ்வராஜ் பவனில் ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி, வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன். என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன், இப்போது.
இன்னம்பூரான்
14 11 2011

GSun, Nov 13, 2011 at 8:23 PM

பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடிக்களித்த பறவைகளே
என்று பாடலாம் போல் இருக்கிறது உங்கள் நினைவலைகள். 
அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு//
இதில் நானும் உண்டு.  ஆகவே உங்களுக்குத் தெரிந்ததை சொல்லக் கூடியவற்றைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்வுக்கு நன்றி.

2011/11/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!

இன்னம்பூரான்
14 11 2011

செ Sun, Nov 13, 2011 at 11:01 PM

இந்த இழை ஒரு வரலாற்று பேழை.

Mon, Nov 14, 2011 at 2:09 AM

நன்றி ஐயா நினைவுகளைப் பகிர்ந்து பதிப்மைக்கு. இளைஞர் படித்துப் பயன் பெற வேண்டிய தகவல்கள் பலவும்... இவ்விழைகளில் வருகின்றன.
“இந்த இழை ஒரு வரலாற்றுப் பேழை“ மட்டுமல்ல நினைவுகளின் சுரங்கமும் கூட..... தோண்டத்தோண்ட தங்கக்கட்டிகள்....
தொடருக....


--

rMon, Nov 14, 2011 at 2:21 AM

நல்ல, கூர்மையான, இளமைக்கால நினைவுகள்!
எனக்கும் நேரு மாமா பத்திக் கொஞ்சம் தெரியும்! அவர் பிறந்த நாள் குழந்தைகள் நாள் என்று முதல் முதலாக அறிவிக்கப்பட்டபோது பள்ளியில் ஒரு பச்சை சோப்பு டப்பா பரிசு கொடுத்தார்கள் எனக்கு! ஏன் என்று எனக்குப் புரியவில்லை! :-)….

cMon, Nov 14, 2011 at 5:15 AM

ஆகா, அருமை .... மறைந்திருக்கும் புதையல் அனைத்தும் மெல்ல மெல்ல வெளி வரும் போல் உள்ளதே..... இ ஐயா செய்யும் மாயம் இப்போதெல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு! ராஜம் அம்மா, சீதாம்மா பேரா. நாகராஜன் ஐயா , கண்ண் பரமாத்மா....இப்படி அனைத்து புதையல் தளங்களையும் இழுத்துக் கொண்டு வந்து வெளிப்படுத்த வேறு யாரால் ஆகும்.... சூப்பரோ சூப்பர்!
[Quoted text hidden]
--

                                                            


Nehru-1.tif
211K

Innamburan Innamburan Mon, Nov 14, 2011 at 7:31 AM

தன்யனானேன். பற்பல தங்கச்சுரங்கங்கள்.   சாம்பவசிவத்தின் அப்பா, திருநாவுக்கரசின் தந்தை, புலவர் முத்துக்கருப்பனாரின் தந்தை போன்றோரின் பாமரகீர்த்தி வரவேண்டும். ஒரு வேடிக்கை. அந்த சிறியக்கூட்டத்தில், நேருஜி என் மூன்று வயது மகனை தட்டிக்கொடுத்தார். அவன் ஹிந்தியில் அப்போது பிளந்து கட்டுவான். 'முஜ்ஸே ஹாத் மிலாயகா? நஹீன்?' (எனக்கு கைலாகு கொடுப்பீர்களா? இல்லையா?). என்று முறைத்தான். கைலாகு கொடுத்து, தூக்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து, இருவரும் நிதானமாக,சிற்றுண்டி அருந்தினார்கள். நாங்கள் காத தூரத்தில்.இன்னம்பூரான்
14 11 2011
இன்னம்பூரான்
[Quoted text hidden]


Nehru-1.tif
211K

cMon, Nov 14, 2011 at 8:14 AM

எத்துனை அருமையான நினைவலைகள்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று நிரூபித்து விட்டார் தங்கள் மகன், முளை விடும் போதே! வாழ்த்துகள் அவருக்கும்.பகிர்விற்கு நன்றி ஐயா.
[Quoted text hidden]
[Quoted text hidden]


Nehru-1.tif
211K

N. K.Mon, Nov 14, 2011 at 10:09 AM

நான் காந்தித்தாத்தாவைப் பார்த்ததில்லை. ஆனால் நேரு மாமாவைப் பார்த்திருக்கிறேன். 

அப்போது மானாமதுரைவாசம். நேருமாமா வைகைப் பாலத்தைக் கடந்து எங்கோ செல்கிறாராம். காலையிலிருந்து கையில் சின்னக் கொடியுடன் நாங்களெல்லாம் பாலத்தின் மீது காத்திருந்தோம். சில மணி வாட்டலுக்குப் பிறகு வண்டி வந்தது. நேருமாமா ஷெர்வாணியுடன் கையசைத்த வண்ணம். சென்ற முறை டெல்லி போன போது இந்த டெல்லி தர்பார் கருப்பு சூட்டொன்று வாங்கி வந்தேன். எப்போதாவது போடுவதுண்டு. (http://www.subaonline.net/nakannan/ ஒரு சின்னப்படம் இங்கு ஒளிந்து கொண்டு இருக்கிறது). எப்படித்தான் அந்த வேகாத வெய்யிலில் அந்தவுடை போட்டுக்கொண்டு சிரிக்க முடிகிறதோ?


2011/11/14
ஆகா, அருமை .... மறைந்திருக்கும் புதையல் அனைத்தும் மெல்ல மெல்ல வெளி வரும் போல் உள்ளதே..... இ ஐயா செய்யும் மாயம் இப்போதெல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு! ராஜம் அம்மா, சீதாம்மா பேரா. நாகராஜன் ஐயா , கண்ண் பரமாத்மா....இப்படி அனைத்து புதையல் தளங்களையும் இழுத்துக் கொண்டு வந்து வெளிப்படுத்த வேறு யாரால் ஆகும்.... சூப்பரோ சூப்பர்!

--



GMon, Nov 14, 2011 at 11:10 AM

தேட வேண்டி இருக்கே படத்திலே.  நானும் பள்ளி நாட்களிலேயே நேருவைப் பார்த்தேன். அனைவரின் நெஞ்சிலும் பசுமையான நினைவுகள்.
2011/11/14 N. Kannan


நா.கண்ணன்

[Quoted text hidden]

Mon, Nov 14, 2011 at 11:13 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
எழுதுங்க அம்மா.  எங்க குடும்பத்திலே இப்போப் பெரியவங்க அந்தக் காலங்களைப் பற்றிச் சொல்லக் கூடியவர்களே இல்லை. ...  எதிரே ரேடியோ மாமா என்று அழைக்கப்பட்ட ரேடியோ பட்டாபியின் வீடு இருக்கும்.






N. K Mon, Nov 14, 2011 at 11:54 AM

2011/11/14 Geetha Sambasivam
> தேட வேண்டி இருக்கே படத்திலே.  நானும் பள்ளி நாட்களிலேயே நேருவைப்
> பார்த்தேன். அனைவரின் நெஞ்சிலும் பசுமையான நினைவுகள்.
>
படம் பார்த்து கதை சொல் :-))

அது கருப்பு கோட்டு! வட இந்திய மந்திரிகள் போட்டுக்கொள்வது!

க.>

[Quoted text hidden]

rMon, Nov 14, 2011 at 4:29 PM

ஜோரான படங்கள்!! முறைத்த பார்வைக் கண்ணன், அரும்புமீசைக் கண்ணன், குறும்புச் சிரிப்புக் கண்ணன் ... இப்படியெல்லாம் உருவாகிவந்திருக்கிறீர்கள்! "குடும்ப நூலகம்" தொடங்கவேண்டும் என்று ஒரு முறை சொல்லியிருந்தீர்கள். செய்துவிட்டீர்களே! பாராட்டு!
:-) :-) :-)

NMon, Nov 14, 2011 at 11:10 PM

எனக்குக் கூர்தலியல் (பரிணாமவியல்) பிடிக்கும்! அதன் விளைவு. நான்
தொட்டிலில் தவழ்ந்து கொண்டிருக்கும் படமுண்டு. யார் வீட்டில் கிடக்கிறது
என்று தெரியவில்லை. தேடிப்பிடித்து அங்கு போட வேண்டும்.

யாரோ கேட்டார்கள்! நீ பதின்ம வயது கண்ணனாக மாறும் வாய்ப்புக் கிடைத்தால்
போவாயா என்று. மாட்டேன் என்று தோன்றுகிறது. வாழ்வு தந்த அனுபவங்களுக்கு
நன்றியுடையவனாகி இப்போது உள்ள அனுபவப்புரிதலுடன் இருக்கவே ஆசை. மீசை
வைத்துக் கொண்டால் கொரியாவில் பயப்படுகிறார்கள் :-)



2011/11/15 rajam <rajam@earthlink.net>:
> ஜோரான படங்கள்!! முறைத்த பார்வைக் கண்ணன், அரும்புமீசைக் கண்ணன், குறும்புச்
> சிரிப்புக் கண்ணன் ... இப்படியெல்லாம் உருவாகிவந்திருக்கிறீர்கள்! "குடும்ப
> நூலகம்" தொடங்கவேண்டும் என்று ஒரு முறை சொல்லியிருந்தீர்கள்.
> செய்துவிட்டீர்களே! பாராட்டு!
> :-) :-) :-)

[Quoted text hidden]

கி.கா Tue, Nov 15, 2011 at 9:36 AM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
> அன்றொரு நாள்:
நவம்பர் 14:
>> ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)
>காரைக்குடிக்கு வந்து மத்தியமின் வேதியல் ஆய்வுக் கூடத்தைத் திறந்து
வைத்த போது எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்துள்ளேன்.  அவற்றைச்
சேகரித்து வள்ளல் பிறந்தநாள் அன்று மின்தமிழிலில் வெளியிட
முயற்சிக்கிறேன்.

> மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.> அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி
> தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை
> தெரிவிப்பார்.
இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை உள்ளதல்லவா!


> ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத
> விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி,
> வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன்.
படம் இருந்தால் அன்போடு போடுமாறு வேண்டுகிறேன்.

என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை
> வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன்,
> இப்போது.
இப்போதும் இப்படியொரு கொடுப்பினை உண்டல்லவோ!
இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

அன்பன்
கி.கா.




rose.jpg
3K

கி.காTue, Nov 15, 2011 at 9:39 AM

ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

சிறுவன், மாணவன், பட்டதாரி, ஆய்வாளர், ஆய்வு நிறைஞர் என அடுத்தடுத்த
படங்கள் அனைத்தும் அருமை. வயது கூடிக்கொண்டே போக.... முடிகுறைந்து கொண்டே
போகிறது.

On 11/15/11, Narayanan Kannan <nkannan@gmail.com> wrote:
> எனக்குக் கூர்தலியல் (பரிணாமவியல்) பிடிக்கும்! அதன் விளைவு. நான்
> தொட்டிலில் தவழ்ந்து கொண்டிருக்கும் படமுண்டு. யார் வீட்டில் கிடக்கிறது
> என்று தெரியவில்லை.குழந்தைப் படத்தையும் பார்க்க ஆவல்.

Innamburan Innamburan Tue, Nov 15, 2011 at 10:09 AM
To: 
நன்றி,  அந்த படங்களை வெளியிடுங்கள். பார் அட் லா அவர்களின் விசிறியாகிய  நான் காரைக்குடி வந்து, மத்திய மின் வேதிய ஆய்வுக்கூடத்தின் முதல் டைரக்டர் டாக்டர் பி.பி.டே அவர்களை பேட்டி கண்டு எங்கேயோ பிரசரிக்கக்கொடுத்தேன். வேதிய ஆய்வில் ஆர்வமிருந்தால், என்னை வேலைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். நான் தான் வேறு திசையில் சென்று விட்டேன்.
[Quoted text hidden]

N. KTue, Nov 15, 2011 at 10:29 AM

2011/11/15 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>:
> ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
>
> சிறுவன், மாணவன், பட்டதாரி, ஆய்வாளர், ஆய்வு நிறைஞர் என அடுத்தடுத்த
> படங்கள் அனைத்தும் அருமை. வயது கூடிக்கொண்டே போக.... முடிகுறைந்து கொண்டே
> போகிறது.
>
 Purely genetics! ஐயா!

எனக்கு விவரம் தெரிந்த போது என் தந்தை என் போன்ற தலையுடன்தான் இருந்தார்.

முழுக்க மொட்டையடிக்கூட ஆசையுள்ளது. முடி குறையக் குறைய அழகு கூட
வாய்ப்புள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் எனக்கு முக்கியம் என்பதை நான்
பார்ப்போருக்கு சகிக்கக்கூடியவனாக உள்ளேனா என்பதில் அக்கறை கொள்கிறேன்.
இது ஆப்பிள் நிறுவனத்தின் நோக்கு!

T TTue, Nov 15, 2011 at 3:57 PM

பார்த்தேன், படித்தேன்

இன்றுதான் இணையத் தொடர்பு கிடைத்தது

மிகவும் அருமை

அன்புடன்

Tue, Nov 15, 2011 at 4:40 PM



முடி குறையக் குறைய அழகு கூட
வாய்ப்புள்ளது.

ஆண்களைப் பொருத்தவரை இது ஓரளவு உண்மையே! :-) அழகு என்பதைவிட மெருகு என்ற சொல் இன்னும் நன்றாகப் பொருந்தும். 


முழுக்க மொட்டையடிக்கூட ஆசையுள்ளது.


முழுக்க மொட்டையடிக்கவும் வேணாம்;  கலிக்கு வந்துவிட்டுப் போகும்வரையிலாவது ... மீசை/தாடி வைத்துக்கொள்ளவும் வேணாம்! மீசை/தாடி எனக்குப் பயம். :-) :-) :-) 


No comments:

Post a Comment