Thursday, March 27, 2014

கவர்மெண்ட் லாங்குவேஜூ: 1

கவர்மெண்ட் லாங்குவேஜூ: 1
http://farm3.static.flickr.com/2242/2328920329_4b361bf737_m.jpg

“எவரொருவர் வழக்கமாக ஒரு நாயை வைத்திருக்கிறாரோ, அவரே, அந்த நாயின் செயல்களுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். விதி விலக்கு: வேறு ஒருவர் அந்த பதவி வகித்தால். இது முனிஸிபாலிட்டி ஆணை.
~ லைசஸ்டர் முனிசிபாலிட்டி: 2013

இன்னம்பூரான்
27 03 2014

சித்திரத்துக்கு நன்றி: http://farm3.static.flickr.com/2242/2328920329_4b361bf737_m.jpg

சொன்னால் விரோதம்: 2

 - innamburan@gmail.com - Gmail

சொன்னால் விரோதம்: 2
Inline image 1
‘கரையானை ஒரு நாள் மருந்து அடித்துக் கொல்ல முடியாது. அடித்தளம் புகுந்து வேரொடு களைய வேண்டும்...எத்தனை நாட்கள் தான் நாம் சால்ஜாப்பில் காலம் தள்ளமுடியும்? பெண்களை தாழ்த்தும், இழிவு படுத்தும் வன்முறைகளை தடுக்க நாம் என்ன தான் செய்ய வேண்டும்? ...I have thrown the guantlet. You do what you like.’ என்று 13 நாட்களுக்கு முன் எழுதியதற்கு பதிலாக, ‘பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளை வளர்க்கும்போதே பெண்களை மதிக்கணும் என்பதை கற்றுக்கொடுக்கணும். ‘ என்றார் ஒருவர்; அயோத்தி தாசப் பண்டிதர் சிந்தனைகளை முன்வைத்து  ‘பகுத்தறிவு வாதத்தை கற்றோர் மத்தியில் பரப்பாமல் குமுகத்துன் கடைக்கோடியில் வாழும் எளிய மனிதர்கள் தங்கள் தாழ்வுக்கான காரணத்தை அறிய ஒரு அறிவாயுதமாக அளிக்க வேண்டும்.  குறிப்பாகப் பெண்கள் தங்களின் தாழ்வுக்கான காரணத்தை உய்த்துணர அறிய கடந்த கால வரலாற்றைத் திரிக்காமல் தொன்மம் புனைவில்லாமல் அறிய வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றார் உளவியல் நன்கு அறிந்து, தெளிவுடன் செப்பும் மற்றொருவர். மற்றபடி மெளனம் அனர்த்த சாதகமாக பரிமளித்தது. இதற்கு நடுவில் ஒரு practising forensic psychiatrist உடன் ஆக்கப்பூர்வமான உரையாடல் நடந்தது. அது எல்லாம் நிற்க. ஒரு அமெரிக்க நடவடிக்கையையும், இந்திய புள்ளி விவரமும் பார்த்தோம். இப்போது ஜப்பானை பார்ப்போம்.
ஜப்பானில் பெண்களின் மேல்படிப்புக்கு அரசும், சமுதாயமும் மற்ற உலகநாடுகளை விட அதிகமாக முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால், அத்தனையும் வீண். சம்பளத்துக்கு ஊழியம் செய்பவர்களில் 63% தான் பெண்கள்; அது மேன்னாட்டு சதவிகிதத்தை விட மிகக்குறைவு. முதல் குழந்தை பிறந்தவுடன் அவர்களில் 70% வேலைக்குப் போவது இல்லை, பெரும்பாலும் நிரந்தரமாக; அமெரிக்காவில் அது 30%.
ஜப்பானிய பிரதமர் திரு. ஷின் ஜோ ஏப் நாட்டின் செல்வநிலையை பெருக்க பெண்கள் மிளிரவேண்டும் என்கிறார். ஆணும் பெண்ணும் சரி சமானமாக வேலைச்சந்தைக்கு வந்தால், 80 லக்ஷம் ஊழியர்கள் அதிகரிப்பார்கள், நாட்டின் செல்வம் 15 % அதிகரிக்கும் என்று ஒரு உலகப்புகழ் நிதி நிறுவனம் சொல்வதை ஆதரிக்கிறார். மழலைகள் மையம், தாய்ப்பால் பிரச்னை என்று நுட்பமான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி, பிரச்சாரம் செய்கிறார். இத்தனைக்கும் 2005ல் அவர் பழமை வாதி தான். பெண்கள் முன்னேறினால் கலாச்சாரம் பாதிக்கப்படும் என்று கூட சொன்னார். அவருடைய கட்சியின் சிகாமணி ஒருவர், ‘பெண்கள் குடும்பத்தலைவியாக இருப்பது தான் சாலத்தகும். மழலைகள் பெருகும். காலாகாலத்தில் அதிகப்படி ஊழியர்கள் கிடைப்பார்கள்’ என்று ஜெர்மனியின் ப்ஃரெட்ரிக் தெ க்ரேட் மாதிரி திருவாய் மலர்ந்து அருளினார். ப்ஃரெட்ரிக் தெ க்ரேட் அவர்களின் திரு வாசகம், ‘நிலா காய்கிறது. 20 வருடங்களுக்கு பிறகு நமக்கு சிப்பாய்கள் பலர் கிடைப்பர்!’ ஜப்பானில் நடந்தது என்னமோ எதிர்மறையாக. கிட்டத்தட்ட பெண்ணொருத்திக்கு ஒரே பிள்ளை என்ற சராசரி வந்தது. 2050 வாக்கில் வேலைக்கு ஆள் கிடைப்பது 40% டவுன் என்ற ஞானோதயம் ஏற்பட்டது. எளிதான, நியாயமான தீர்வுகளை புறக்கணித்தால், இது தான் கதி. (இந்தியா சம்பந்தப்பட்டவரை குடும்பக்கட்டுப்பாடு முக்கியம். அது தளர்வதுக்குக் காரணம் ஆண்களும் என்று சொல்லலாம்.)
மேலும் சொல்லப்போனால், ஊழியமும் பிள்ளைப்பேறும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல. மேல்நாடுகள் அதற்கு உதாரணம். ஜப்பானிய/ இந்திய கிராமீய வாழ்க்கை அதற்கு உதாரணம். 2000 ஆண்டு காலகட்டத்தில் திரு. ஷின் ஜோ ஏப் அவர்களின் பெண்ணிய அமைச்சரான திருமதி. யோகோ காமிகாவா, பெண்கள் முன்னேற்றம் தென்படவில்லையே என்று திகைத்துப்போனதாக சொல்கிறார்.
இது எல்லாம் ஒரு பீடிகை தான். சொல்ல நிறைய விஷயம் உளது. பார்க்கலாம். ஒரு வினா:
“இந்தியாவில் குடும்பத்தலைவிகள், அதுவும் குழந்தைகள் காலேஜ் போன பிறகு, தன்னாரவப்பணியில் அசகாய வேலைகள் செய்யலாம். தற்காலத்தில் அப்படி இயங்குபவர்களின் வரலாறு இருக்கிறதா? சென்னையில் இருப்பவர்கள், கூப்பிட்டு பயிற்சி அளிக்கப்பட்டால் வருவார்களா?
நன்றி, வணக்கம்.
உசாத்துணை:
சித்திரத்துக்கு நன்றி:http://www.noolulagam.com/book_images/1742.jpg
பி.கு. என் வலைப்பூவில் இது தொடரும்.

தோணித்து! போட்டேன்: இன்னம்பூரான் பக்கம் 7 – அதீதம்

இன்னம்பூரான் பக்கம் 7 –

அதீதர்களே!

அடுத்த வாரம் டிசம்பர் 11 அன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அவர்களின் ஜன்மதினம். அதை பற்றி நினைத்த மாத்திரம் நான் வலுக்கட்டாயமாக நாம் ‘வீர சுதந்திரம்’ பெறுவதற்கு முன்னால் இருந்த கால கட்டத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். 1930-43 களில் பாரதியாரின் குடியிருப்பு, மாணவர்கள் நாவில் மட்டுமே. அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். எளிதில் படிக்கக்கிடைக்காது. சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

நான் சொல்லப்போவது இன்றைய சூழ்நிலையில் எடுபடாமல் போகலாம். பாரதி போற்றியதெல்லாம் அகக்கண்ணுக்கும், புறக்கண்ணுக்கும் புலப்படவில்லை என்பார்கள் இன்றைய தேசீய தலைவர்கள் என்று ஊடகங்களில் பெரிதும் பேசப்படுகிறது. கரி, வைரம், நீர், ஆகாயம், மலை, இரும்பு, ஏழ்மை எல்லாவற்றிலும் துட்டு பார்க்கிறார்களாம். இந்திய தணிக்கைத்துறை கரடியாக கத்துகிறது. நான் அவ்வப்பொழுது நினைத்துக்கொள்வது உண்டு ~ மஹாகவி இதையெல்லாம் பார்த்தால் என்ன சொல்வார் என்று? என்ன சொல்வார்?
‘என்று தணியும் இந்த பாழுங்காசுக்கு வந்த மோகம்?’ என்று பாடுவார்.

சில வருடங்கள் முன்னால் தஞ்சை மேலராஜவீதியில் இருக்கும் கொங்கணேஸ்வரர் பாடசாலைக்கு விஜயம் செய்தேன். தலைமை ஆசிரியர் எடுத்துக்கொடுத்த என் மூன்றாம் வகுப்பு பற்றிய பதிவின் நகலை கொடுத்த போது மனம் அலை பாய்ந்தது. எனக்கு பாலு சார் தான் எல்லாம் என்றேன். நான் அவருடைய மகன் என்றார், அருகில் இருந்த நண்பர். அந்த பாலு சார் சொல்லிக்கொடுத்த படி திலகர் திடலில் நான் டிசெம்பர் 11, 1941 அன்று பக்திப்பரவசத்துடன் ஆற்றிய சொற்மாரி கேட்டு ஒரு பெரியவர் சபையிலேயே என்னை கட்டிக்கொண்டு அழுதார். பரிசாக கிடைத்த நூல்கள் இரண்டு: பாரதியாரின் கதைக்கொத்தை யாரோ கொத்திக்கொண்டு போய்விட்டார்கள். என் வாழ்க்கையை வகுத்த பகவத் கீதையை என் பெண் பத்திரமாக வைத்திருக்கிறாள். கலோனிய அரசின் உளவுத்துறை குறிப்பு எடுத்துக்கொண்டதாம். எனக்கு ஒரே பெருமை. அத்தை தான் திருஷ்டி கழித்து விட்டு, என்னை மறைத்து வைத்தாள். இதெயெல்லாம் பாடசாலையின் மாணவர்களுக்கு சொன்னபோது எனக்கு அதீத பெருமை!
ஐந்து வருடங்களுக்குப்பிறகு உசிலம்பட்டி ஜில்லா போர்ட் கள்ளர் ரெக்ளமேஷன் பள்ளி. எந்த கணக்கில் என்னை மாணவர் தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள் என்று அறியேன். ஆனால், நான்தான் சட்டாம்பிள்ளை! தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் அண்டை வீடு. குடும்ப நண்பர். நான் அவருக்கு செல்லம் வேறு. ஒரு நாள் காலை பிரார்த்தனையில் ‘வந்தே மாதரம்’ பாடச்சொன்னேன். ஒச்சத்தேவனும் பாடினான். தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டு நின்றார். ஆக்ஷேபிக்கவில்லை. மறுநாள் தற்காலிக பதவி நீக்கம். திரு. சிவசுப்ரமண்ய ஐயருக்கு தற்காலிக பதவி உயர்வு. நாங்கள் ஹர்த்தால் செய்தோம். ஐயரோ அப்பாவுக்கு ஆப்த நண்பர். அவர் வந்து கேட்டும் நாங்கள் ஹர்த்தாலை வாபஸ் வாங்கவில்லை, ஜனாப் அவர்கள் பதவிக்குத் திரும்பும் வரை. ஏதோ ஒரு மாதிரியாக என்னை கைது செய்து, உடனுக்குடனே விட்டும் விட்டார்கள்.
இதெல்லாம் தம்மாத்தூண்டு சமாச்சாரங்கள். மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்  ஒரு நாள் தமிழ்த்தென்றல். திரு.வி.க. அவர்களின் தேசபக்தன் இதழ் அலுவலகத்துக்கு வந்தார். உதவி ஆசிரியராக இருந்த பரலி.சு.நெல்லையப்பர் எல்லாரையையும் பக்குவமாக தயார் செய்து வைத்திருந்தார். பாரதி விஜயம் பற்றி மற்றொரு உதவி ஆசிரியரான திரு.வெ.சாமிநாத சர்மா எழுதியிருந்ததை ஒரு நூலுக்காக ஆங்கிலப்படித்தினேன். அதனுடைய தமிழாக்கத்தை யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;…’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி…’ என்று குரு வந்தனம் செய்து,
‘வந்தாரே அமானுஷ்யன்;
சட்டையில் காலரில்லை;
ஆனா டை கட்டி தொங்குதடா,
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,
தோளின் மேல் சவாரி,
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி!
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி.
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, விடை பெறுகிறேன். உங்கள் யாவரையும் அந்த ஆதிபராசக்தியின் திருவருள் ரக்ஷிக்கட்டும்.

பிரசுரம்: அதீதம் இதழ்
சித்திரத்துக்கு நன்றி: http://bharathiyar.gratussolutions.com/sites/all/themes/bharathiyar/images/bharathiar1.jpg

Tuesday, March 25, 2014

DANDI MARCH: GANDHIJI: RAJAJI: SALT SATHYAGRAHA APRIL 6: 84 YEARS AGO


DANDI MARCH: GANDHIJI: RAJAJI: SALT SATHYAGRAHA APRIL 6: 84 YEARS AGO.

Innamburan

தண்டி யாத்திரை, வேதாரண்யம் யாத்திரை, ஒரு பிடி உப்பு. ஆயிரம் தடா அக்காரவடிசில்

இன்னம்பூரான்

Monday, March 24, 2014

நட ராஜா! ஹே! நடராஜா!நட, வந்து விடு.

நட ராஜா! ஹே! நடராஜா!நட, வந்து விடு.


அற்புதமான கலைவண்ணங்களை திருடுவதும், அவற்றை மேல்நாட்டு ம்யூசியங்கள் எக்கச்சக்கம்மாக விலை கொடுத்து வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. சென்னை யில் சிறைப்படுத்தப்பட்ட சுபாஷ் கபூர் என்ற சிலாபகரண சிகாமணியிடமிருந்து $ 50 லக்ஷத்துக்கு ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் நடராஜர் சிலையை வாங்கியதை பற்றி இன்றைய ஹிந்து இதழில் மேலதிகத்தகவல்:
அந்த நாட்டு கலைத்துறை அமைச்சரும், அரசு வழக்காடும் துறைத் தலைவரும் ஆன திரு. ஜியார்ஜ் ப்ரேண்டிஸ், தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட இந்த ஆயிரமாண்டு தொன்மையான நடராஜர் சிலையை ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் வாங்கிய கவனக்குறைவான விதத்தைக் கண்டித்துப்பேசியிருக்கிறார். சந்தேகங்கள் இருந்தன; மழுப்பி விட்டார்கள் என்கிறார். அதை தமிழ்நாட்டுக்குத் திருப்பி விட வேண்டும் என்பதை பற்றி அயல்நாட்டு அமைச்சரிடம் பிரஸ்தாபித்து இருக்கிறார். அந்த கலைக்காட்சியகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.நாகஸ்வாமியிடம் கலந்து ஆலோசித்தப்பின்னர் தான் வாங்கினோம் என்று சொன்னதை டாக்டர் ஆர்.நாகஸ்வாமி மறுத்திருக்கிறார். அது மட்டுமல்ல. ஷேன் சிம்ப்ஸன் என்ற மரபு ஆராய்ச்சி சார்ந்த வழக்கறிஞர் ‘சான்றுகள் ஒன்றும் பெரிதாக இல்லை; விசாரணை போதாது; இந்த சிலை எங்கிருந்து வந்தது என்ற விவரம் இல்லை; இது கோயிலிலிருந்துத் திருடப்பட்டது என்ற வலுவான ஐயம் எழுகிறது’ என்று 2008லியே எச்சரிக்கை விடுத்தார். அதை ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் கண்டு கொள்ளவில்லை. 
இதே மாதிரி தான் சிவபுரம் நடராஜர் சிலை லண்டன் ஓல்ட் பெய்லி கோர்ட்டில் சமத்தாக மூலையில் நின்று கொண்டிருந்தார். கோயில் அர்ச்சகர் சாக்ஷி அளிக்க வந்த போது, சிலையாக பிரத்யக்ஷமாக நின்ற நர்த்தனசுந்தரரை தழுவி அணைத்து, ‘உனக்கு இங்கு காயம் செய்து விட்டானே. அங்கு கீறல் என்று அழுதார். வியந்த ஜட்ஜிடம் ‘ எனக்கு தெரியாதா? நான் எத்தனை வருஷம் அவனுக்கு நீராட்டம் செய்திருக்கிறேன் என்று தேம்பினார். நிச்சியம் இவர் சிவபுரத்து வாசி தான் என்று, அதை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். நடராஜரும் நம் ஹை கமிஷனுக்கு வந்து சேர்ந்தார். அவரை அங்கு 1990ல் தரிசித்தேன்.
தமிழகம் ஆஸ்ட்ரிலியாவிலும், உலகெங்கும் உளது. நாம் மற்ற அரட்டைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, ஒருசேர திரண்டு, ‘நட ராஜா! நட, வந்து விடு’ என்று அவனை மேளதாளத்துடன் அழைத்து வர வேண்டாமா?
அன்புடன்,
இன்னம்பூரான்

24 03 2014
Image Credit: http://www.radioaustralia.net.au/international/sites/default/files/imagecache/ra_article_feature/images/2012/08/3/4175840-4x3-700x525.jpg

ANDAL HOLY WEDDING [5 & Final]


23 03 2014

ANDAL HOLY WEDDING [5 & Final]

TODAY’S EPISODE: BLISS




இன்னம்பூரான்





Next Episode

Ambrosia (Amitha) with a pinch of salt !

Reply here or mail to innamburan@gmail.com





https://www.youtube.com/watch?v=rHFrzunDL9Q