Saturday, May 31, 2014

காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[1] : மோடி தர்பார்: 5

மோடி தர்பார்: 5

இன்னம்பூரான்
31 05 2014
காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[1]




கல்பட்டார் ஷரத்து 370 ன் வரலாறு கேட்கிறார். அது பற்றி இன்றைய ஹிந்து இதழில் எழுப்பப்பட்ட சில வினாக்கள், மாதிரிக்கு. எப்படி எப்படி ஆளுக்கொரு கேள்வியாகவும், அபிப்ராயமும், வரலாறறியா தர்க்கமுமாக, ஷரத்து 370 அடிபடுகிறது என்பதை முகாந்திரமாக வைத்து, கருத்துக்கூற. இந்திய திசைமாற்று கலையின் அபத்தம் அறிய வேண்டி, ஒரு தொடராகவே, இதை பதிவு செய்கிறேன். அதனால் உபதலைப்பாகை: காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[1.]
காஷ்மீரம் என்ற மாநிலத்தை இந்தியாவின் தலைப்பாகை எனலாம். ஆனால் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் மட்டும் அல்லாமல், தலையையும் கொய்து எடுத்துக்கொண்டு போகும். அந்த மாதிரியான அரசியல் பூகோளம். இந்த தலைப்பாகை பாகிஸ்தானுக்கும் பொருத்தம். அதனால் தான் தலைப்பகை. ஜம்மு (பெரும்பாலும் ஹிந்து மத ‘பண்டிட்’ இனம்), காஷ்மீர் (பெரும்பாலும் முகம்மதியர்), லடாக் (பெரும்பாலும் திபெத் சார்ந்த பெளதம்) என்ற மூன்று பிராந்தியங்கள் தான் காஷ்மீர் ராஜாங்கம்/‘சுல்தனத்’/ஸ்பெஷல் மாநிலம். 1946/27ல் சுயநலவாதியும், பெண்பித்துப் பிடித்து அலைந்தவனும், பயந்தாம்கொள்ளியுமான மஹாராஜா ஹரிசிங் செய்த குழப்பங்களே, இன்று வரை இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. 1925ல் என்று நினைக்கிறேன். பாரிசில் போட்ட கொம்மாளமும், ஒரு பெண்ணின் சகவாசமும், ஹரிசிங்கை ஒரு ப்ளேக்மைலரின் (தமிழில் என்ன?) கையில் சிக்கி, கோடிக்கணக்கான அரசு பணத்தைத் தொலைக்க நேரிட்டது. அந்த கதை பெரிசு. சொன்னால் மட்டுறுத்தல் செய்து விடுவார்கள். இந்த ஆசாமியின் குணாதிசயம் சொன்னேன். அவ்ளவு தான்.
இனி வினாக்கள்:
  1. பஞ்சாப் முதல்வர் பாதல்: எல்லா கட்சிகளையும் கட்டியணைத்து, செய்க. - அவருக்கென்ன ? சொல்வார்.
  2. ஆனானப்பட்ட சஷி தரூர் & மற்ற காங்கிரஸ் அனுதாபிகள்: எதற்கு வம்பு. அடுப்படிலெ உறங்கும் பூனை தூங்கட்டுமே. என்னே ஸென்சிட்டிவ் சமாச்சாரம்! வெங்கலக்கடையில் ஆனை புகரலாமோ! -உமக்கு என்ன சாரே! அன்னிக்கும் பொறுப்பு இல்லை. இன்னிக்கும் அதே!
  3. திரு பட்: ஶ்ரீநகரிலிருந்து: ஜம்மு & காஷ்மீரில் வசிக்காதவர்க்ள் தான் கருத்து அளிக்கிறார்கள். இந்த பிராந்திய கலாச்சாரத்துக்கும் வரலாற்றுக்கும் நம் அரசியல் சாஸனம் நிறுவிய பாலம் அல்லவோ, இது! - ஆமாம், பட். காஷ்மீரத்துக்கு மட்டுமா இந்த சலுகை. தமிழ்நாட்டுக்கும், பீஹாருக்கும் கொடுத்தால் என்ன?
  4. ஜனாப் நதீம்: பெங்களூரு: மைனாரிட்டி மீது மெஜாரிட்டி தன் கருத்தைத் திணிக்கலாமா? ஆர அமர காஷ்மீரத்துக்கு உள்ளது உள்ளபடி, அவர்கள் தயார் ஆகும் வரை காத்திருக்கலாமே! - ஜனாப்! 60 வருடமாக என்ன ஆச்சு? காசு, பணம், பாஞ்சு பாஞ்சு நல்லுதவி, ஒளிந்து உதவி, ராணுவ உதவி, வீர மரணம் எல்லாம் ஆச்சு. இன்னும் 500 வருடங்கள் வரை அப்துல்லா வாரிசு யதேச்சதிகாரமா?
  5. திரு. யாரகல்: பீஜப்பூர்: தேசீயமும், தனித்துவமும் உணர்ச்சி பூர்வமானவை. ஷரத்து 370 அதை காஷ்மீரத்துக்குக்  கொடுத்தால், இருந்து விட்டுப்போகட்டுமே. - நல்ல வாய்ஜாலமையா, இது. நம் சிவகங்கை மாவட்டம் இதை கேட்டால், அங்கும் ஷரத்து 370 கொடுக்கலாமா? அப்படியானால், இந்தியாவின் தேசீயமும், தனித்துவமும், குப்பையிலா!
  6. அபீத் பாபா_ காஷ்மீர். டில்லி முரண்டு பிடிப்பதால், லாபம் இல்லை. காஷ்மீர் சட்டசபையின் முன்னுமதியுடன், ஸ்பெஷல் மீட்டிங்க் போட்டு கேட்கவேண்டும். ஆமாம். சொல்லிப்போட்டேன்.- ஹூம்! ‘கிழிந்தது கிருஷ்ணகிரி’ என்று சொன்னால் பொல்லாப்பு!
  7. வர்மா: சிம்லா: இந்த ஷரத்து காஷ்மீர் மக்களுக்கு உதவி செய்ததா? இதன் அரசியல் பரிமாணங்கள் என்ன? இது பற்றிய சர்ச்சைகள் மதசார்பின்மை, தேசீயம், சமத்துவம், யோக்யதை எல்லாவற்றையும் கேலி செய்கிறது. நாடாளுமன்றம், இந்த ஷரத்தை மாற்றியமைக்கும் உரிமை உள்ளது. - வர்மா சார்! நீங்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். எமக்கும் அதே கதி.
  8. அம்பாடே, பூனே: நாடாளுமன்றம், இந்த ஷரத்தை மாற்றியமைக்கும் உரிமை உள்ளது என்றாலும் கனம் கோர்ட்டார் என்ன சொல்வாங்களோ? - பாயிண்ட் மேட், சார்.
ஒரு பழங்கதை: 1947 டிசம்பர் என்று நினைவு: இந்தியாவின் நண்பர் கிங்க்ஸ்லி மார்ட்டின் காந்திஜியிடம் காஷ்மீர் பற்றி பேசினார்.
மா: அய்யா! ஏன் இந்த காஷ்மீர் பூசல். பிடிங்கினது ஆதாயம் என்று பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீரை வைத்துக்கொள்ளட்டும். சமாதானமும், அமைதியும், நட்பும் நிலவட்டும். (அதாவது தலைப்பாகை இருவருக்கும், அரசியல் பூகோள ரீதியில். உவமை இனி பொருந்தாது.)
கா: நீ வெறும் இதழாளன். உனக்கு என்ன அரசியல் தெரியும்?
சற்றே மெளனம்:
கா: நீ சொல்வதில் பாயிண்ட் இருக்கிறது. மவுண்ட்பேட்டனும், ராஜாஜியும் இப்படித்தான் சொன்னார்கள்.
ஏற்கனவே நீஈ..ண்டு விட்டது. 1947ல் காஷ்மீரில் நடந்தது என்ன?
(தொடரும்)


Friday, May 30, 2014

மோடி தர்பார்: 4

மோடி தர்பார்: 4


இன்னம்பூரான்
30 05 2014


தருமமிகு தமிழ்நாட்டு மின் தமிழர்கள் வேகமாகவே தொலைக்காட்சி/நாளிதழ்கள் மூலம் அவர்கள் அறிந்ததையே, நான் சொல்வதால், மவுனம் காக்கிறார்கள் போல; வெளிநாட்டுத் தமிழரன்பர்கள் இதை மிகவும் எதிர்பார்க்கிறார்கள். சால்ஜாப்பு தன்னிலை விளக்கம் ஓவர்.

ஆட்சி நடப்பு நல்வழியில். மாஜி பிரதமரை அவருடைய இல்லம் சென்று சந்தித்தது, விவேகமே. என்னை கேட்டால், அவருடைய ஆலோசனைகளை முறையாக பெறுவதும் உதவும். கூடாநட்பை அறவே ஒழித்தால், மன்மோஹன் சிங் அவர்கள் நல்லதொரு மனிதர். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் யால்ட்டா கான்ஃபெரன்ஸ் நடந்தது. எதிர்க்கட்சித்தலைவர் ஆட்லீயை அழைத்துச்சென்றார், பிரதமர் சர்ச்சில். யாரோ வினவ, அவர் சொன்ன பதில்: எலெக்ஷன் வருது. நான் தோற்றுப்போகலாம். தொடர்ந்து இயங்க அவருக்கு எல்லாம் தெரியவேண்டும் என்றார். அப்படியே நடந்தது. இங்கும் மக்கள் நலன் முன் நிற்கட்டுமே.

பாட புத்தகங்களில் தன்னை பற்றி எழுதவேண்டாம் என்று திரு மோடி கேட்டுக்கொண்டதும் விவேகமே. சுய விளம்பரம் சர்வாதிகாரத்தின் முதல்படி. ஜார்ஜ் ஆர்வெலை கேளுங்கள்.  குஜராத், மத்யபிரதேஷ், ராஜஸ்தான் தாங்கள் எடுத்துக்கொண்ட முடிவுகளை ரத்து செய்யவேண்டும். ஃபருக் அப்துல்லா ஷரத்து 370 பற்றி குரல் எழுப்பியுள்ளார். அது அடங்கிப்போகும், பொருளற்றது என்பதால்.  வாசகர்கள் விரும்புவார்கள் என்ற நிமித்தம் கிடைத்தால், அதன் முழு வரலாறு எழுதலாம். 

நல்ல செய்திகள் வந்த வண்ணம். சீன பிரதமர் நற்செய்தி அனுப்பியுள்ளார். ரிஸர்வ் வங்கி கவர்னர் இணைந்து பணி புரியப்போவதாக சொல்கிறார். அரசு ஆதார் அட்டை அளிப்பதை தொடர்ந்து செய்யப்போவது நல்ல செய்தி. இன்னல்களை அகற்றவேண்டும், முதலில்.

பிரதமருக்கு கிருஹப்பிரவேஷ வாழ்த்துக்கள். ஜூம் 9 அன்று ஜனாதிபதியின் அரசு கொள்கை எதிரொலி சொற்பொழிவு, திட்டவட்டங்களை அறிவிக்கும். அப்போது ஒரு பிடி பிடிக்கலாம் அகில் பில்க்ராமி புதிய அரசை பற்றி குற்றம் குறை கண்டுள்ளார். அது பற்றி பிறகு பார்க்கலாம்.

தொடரும்.

சித்திரத்துக்கு நன்றி:http://www.meritsolutions.com.au/wp-content/uploads/2011/10/Selection_Decisions-150x200.jpg






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, May 29, 2014

மோடி தர்பார்: 3

மோடி தர்பார்: 3

இன்னம்பூரான்
29 05 2014



நாள்தோறும் நற்செய்திகள். இழையை திருத்தியமைக்க நேரமில்லை. பிரதமரின் துரிதநடை மெச்சத்தக்கது. அது தொய்ந்து போகக்கூடாது. சில விஷயங்கள் மட்டும் இப்போதைக்கு. அமைச்சரவையில் குஜராத் மாநிலத்துக்கு மோடி மட்டும் தான். எனக்கு லட்டு, அவனுக்கு குட்டு போன்ற சுயநல வாதங்கள் எடுபடவில்லை. தோப்புக்கு ஒரு பிரதிநிதி, துரவுக்கு மற்றொரு பிரதிநிதி என்றால், இந்தியாவுக்கு யார் என்று கேட்கத் தோன்றுகிறது. மாநிலங்களின் கோரிக்கைகள் மீது சிரத்தை காட்டவேண்டும் என்ற பிரதமரின் அறிவுரை போற்றத்தக்கதே. இந்தியாவின் ஃபெடரல் அரசியல் அமைப்பில் இணக்கமும், உகந்த வகையில் பங்கு அளிப்பதிலும், நன்மை தான் நிகழும். ஆனால், அவரவர்கள் முன்னுரிமை கோருவார்கள். காஷ்மீர சச்சரவை பாருங்கள். மூன்று தலைமுறைகளாக தன்னிச்சையாக ஆட்சி புரிந்த ஷேக் அப்துல்லா வம்சம் தன் சுயரூபத்தைக் காட்டி பாச்சா காட்டுகிறார்கள். 
  • ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகியவை தவிர, மற்ற சட்டங்களை, அந்த மாநில அரசின் சம்மதம் பெற்ற பிறகே, நாடாளுமன்றத்தின் தீர்மானங்கள், காஷ்மீரில் எடுபடும்; காஷ்மீர் மக்கள் குடியுரிமை, சொத்துரிமை, அடிப்படை உரிமைகளுக்கு அவர்களே ராசா. இந்திய சட்டங்கள் அதற்கு கீழே. இது தான் ஷரத்து 370 சிறப்பு அந்தோஸ்து! ‘அனுபவி ராஜா’ என்று ஆட்சி பிரமுகர்கள் சேர்த்த ஶ்ரீநகர் மத்திய பகுதி பல கோடி பொறும். சும்மா சொல்லக்கூடாது. காங்கிரஸ் தலைமையும் கொஞ்சம் நன்றிக்கடன் பெற்றுக்கொண்டது. 60 வருடங்களில் கோடானுகோடி கை மாறியதை மறுக்க இயலாது. இப்போது மடியில் கை போட்றமாதிரி, மீள் பார்வை பார்க்கலாமா என்றவுடன். ‘நாங்கள் இந்தியாவில் இருக்கமாட்டோம்’ என்று லுக் விடுகிறார், பேரன் ஓமர் அப்துல்லா. பேஷ்! என்னே தேசபக்தி!
  • ஆமாம்! அமைச்சர்களின் மடி மேல் கை போட்டு விட்டார், மோடி. உறவினர்களை உதவியாளர்களாக ( ரயில்வே அமைச்சர் பன்ஸல் (காங்கிரஸ்) அந்தத்துறையையே சொந்தபந்தங்களுக்கு தத்து கொடுத்து - எத்தனை தொந்திகள்!) நியமனம் செய்வதை தடுத்துவிட்டார். எழுத்து மூலம் ஆணை. தமிழ் நாட்டில் மட்டுமே, அந்த உதவியாளர்களின் சமூக விரோத நடைகள் எண்ணில் அடங்கா, ஜூனியர் விகடன் சர்வே படி. மோடி ஆர்டர் இங்கும் அமலில் இருந்தால் நமக்கு நல்லது.
  • பிரதமர் ஒரு வடநகரான். ஒருகாலத்தில் குஜராத்தின் தலை நகர், வட நகர். அண்ணன் தம்பிகளுக்குள் நல்ல இணக்கமாம். ஆனால், அதை விளம்பரம் படுத்துவதும் கிடையாது. துஷ்பிரயோகமும் இல்லை என்கிறது, வரலாறு. அய்யா ஆடை விரும்பி.அதில் ஒரு திருப்தி. இருந்து விட்டு போகட்டுமே. அதே மாதிரி கைக்கடியாரங்கள், காலணி மோஹம். எல்லாம் பரிசுத்தமே டைப். இவர் டெக்னாலஜி காதலர். அரசு பணத்திலும், சொந்த பணத்திலும் சிக்கனம். அம்பாஜி தேவி பக்தர்.
  • பிரதமரின் பிரதம காரியதரிசி ஆன ந்ருபேந்திரர், நரேந்திரருக்கு பொருத்தமான தேர்வு.
  • பிரதமர் வீர் சவர்க்காருக்கு அஞ்சலி செய்தது எதிர்பார்த்தது தான். அண்ணல் காந்திக்கும். நேருவுக்கும் அஞ்சலி செலுத்தியதும் நற்செயல்கள். பாகிஸ்தான் பிரதமரின் அன்னைக்கு பரிசு அனுப்பியதும், அவரிடமும், ஶ்ரீலங்கா அதிபரிடம், மூடி மெழுகாமல் பேசியதும், அவருடைய ராஜதந்திரத்துக்கும் மேலான ராஜாங்க அணுகுமுறையை காட்டுகின்றன. அவருடைய இணையதளம் சிறப்பாக அமையவில்லை என்பது என் கருத்து.
  • காத்திருந்து பார்ப்போம். 

(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி: http://i.dailymail.co.uk/i/pix/2013/10/28/article-2478511-190B830100000578-212_634x422.jpg

Monday, May 26, 2014

மோடி தர்பார் UPDATE



மோடி தர்பார் UPDATE
மோடி தர்பார்: அப்டேட்: 27th

பதவி வினியோகம் பற்றி ஹேஷ்யங்கள் பறந்த வண்ணம். அவரவர் கமுக்கமாக இருக்க உத்தரவு அமலில். 

அதிகார பூர்வமான ஜாபிதா இங்கே. நமது பிரதமர் அமைச்சரவை இலக்கணமான Sir Ivor Jennings; Cabinet Government அறிவுரைகளை போற்றி பணிந்துள்ளார். இது சுபசூசகம்.
இன்னம்பூரான்
27 05 2014


  1. Prime Minister Narendra Modi - Personnel, Public Grievances and Pensions Department of Atomic Energy Department of Space

  1. Rajnath Singh - Home Affairs Sushma Swaraj - External Affairs and Overseas Indian Affairs

  1. Arun Jaitley - Finance, Defence and Corporate Affairs Ministry

  1. Nitin Gadkari - Transport Ministry, Highways and Shipping Smriti Irani - Human Resource Development

  1. Venkaiah Naidu - Urban Development, Poverty Alleviation, Parliamentary Affairs

  1. Maneka Gandhi - Ministry of Women and Child Welfare DV Sadananda Gowda - Railways

  1. Uma Bharti - Water Resources River Development and Ganga Rejuvenation

  1. Najma A Heptullah - Minority Affairs Gopinathrao Munde - Rural Development, Panchayati Raj Drinking Water and Sanitation

  1. Ramvilas Paswan - Consumer Affairs, Food and Public Distribution Kalraj Mishra - Micro, Small and Medium Enterprises \

  1. Ananth Kumar - Chemicals and Fertilizers  &

so on:

Ravi Shankar Prasad - Communications and Information Technology, Law and Justice 

Ashok Gajapathi Raju Pusapati - Civil Aviation Anant Geete - Heavy Industries and Public Enterprises 

Harsimrat Kaur Badal - Food Processing Industries Narendra Singh Tomar - Mines, Steel, Labour and Employment 

Jual Oram - Tribal Affairs 

Radha Mohan Singh - Agriculture 

Thaawar Chand Gehlot - Social Justice and Empowerment

Dr Harsh Vardhan - Health and Family Welfare Ministers of State (including Independent Charge)

General VK Singh - Development of North Eastern Region (Independent Charge), External Affairs, Overseas Indian Affair

Inderjit Singh Rao - Planning (Independent Charge), Statistics and Programme Implementation (Independent Charge), Defence

Santosh Kumar Gangwar - Textiles (Independent Charge), Parliamentary Affairs, Water Resources, River Development and Ganga Rejuvenation Shripad

Yesso Naik - Culture (Independent Charge), Tourism (Independent Charge) 

Dharmendra Pradhan - Petroleum and Natural Gas (Independent Charge) 

Sarbananda Sonowal - Skill Development, Entrepreneurship, Youth Affairs and Sports (Independent Charge) 

Prakash Javadekar - Information and Broadcasting (Independent Charge), Environment, Forest and Climate Change (Independent Charge), Parliamentary Affairs 

Piyush Goyal - Power (Independent Charge), Coal (Independent Charge), New and Renewable Energy (Independent Charge)

Dr Jitendra Singh - Science and Technology (Independent Charge), Earth Sciences (Independent Charge), Prime Minister Office Personnel, Public Grievances & Pensions, Department of Atomic Energy, Department of Space 

Nirmala Sitharaman - Commerce and Industry (Independent Charge) Finance, Corporate Affairs GM 

Siddeshwara - Civil Aviation 

Manoj Sinha - Railways 

Nihalchand - Chemicals and Fertilizers

Upendra Kushwaha - Rural Development, Panchayati Raj, Drinking Water and 

Sanitation Radhakrishnan P - Heavy Industries and Public Enterprises 

Kiren Rijiju - Home Affairs 

Krishan Pal - Road Transport and Highways, Shipping 

Dr. Sanjeev Kumar Balyan - Agriculture, Food Processing Industries 

Mansukhbhai Dhanjibhai Vasava - Tribal Affairs Raosaheb Dadarao Danve - Consumer Affairs, Food and Public Distribution 

Vishnu Deo Sai - Mines, Steel, Labour and Employment 

Sudarshan Bhagat - Social Justice and Empowerment


மோடி தர்பார்
4 messages




Innamburan S.Soundararajan Mon, May 26, 2014 at 7:05 AM
To: mintamil , "vallamai@googlegroups.com"
மோடி தர்பார் பார்க்க வந்தால், மின்சாரம் போச்சு. ஓ! வந்திருச்சு.






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tthamizth Tthenee 

மின்சாரம் போயி  ஓ வந்துதா!

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc1947@gmail.com
http://www.peopleofindia.net




2014-05-26 17:35 GMT+05:30 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>:
[Quoted text hidden]


வேந்தன் அரசு Mon, May 26, 2014 at 7:49 AM

Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai
Cc: mintamil

மை ஈஸ்வர் கி சபத் லேகாஙூ


26 மே, 2014 8:16 முற்பகல் அன்று, Tthamizth Tthenee <rkc1947@gmail.com> எழுதியது:
[Quoted text hidden]


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Mon, May 26, 2014 at 9:29 AM

To: "vallamai@googlegroups.com"
Cc: mintamil , "Innamburan S.Soundararajan"
Bcc: innamburan88






மோடி  தர்பார் நடந்து வரும் விதம் உலகமே வியக்கும் அளவுக்கு விழாக்கோலம் பூண்டு, மிலிடரி கறார் தன்மையுடன், வினாடி கூட கரணம் தப்பமால், ஆயிரக்கணக்கான விருந்தினர்களை, இந்தியர்களும், வெளி நாட்டினருமாக,வரவேற்று, கனகச்சிதமாக் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. ஸோனியா காந்தி எல்லாருடன் இயல்பாக பழகினார். தம்பதி சகிதமாக வந்த மன்மோஹன் சிங் அவர்களை யாவரும் கனிவுடன் வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமரும், ஶ்ரீலங்கன் அதிபரும், ஆஃப்கனிஸ்தான் அதிபரும் சகஜமாக வளைய வந்தனர். ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ .ரவி சங்கர், தெங்கலை நாமம் திருதண்டி ஸ்வாமிகள், மற்ற சமயங்களின் துறவிகள், தொழிலதிபர்கள், மாஜி ஜனாதிபதி ஜனாப் அப்துல் கலாம், அடுத்து வந்த மாமி, மாஜி பிரதமர்கள், பதவி துறந்த பெரிய் மனுசாள், சினிமா நடிகர்கள் எல்லாரும் ஆஜர். குசலோபரி. பிரதமர் நரேந்திர மோடி வந்த பின் தான் உதவி ஜனாதிபதி வந்தார். ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி காரேறி வரவில்லை. பராக் பராக் சைன்யத்துடன் வீட்டிற்குள்ளிருந்து நடந்து வந்தார். ஒரு நோட்டம் விட்டேன். முக்கர்ஜி தா வயதான ஜெமினி கணேசன் மாதிரி, ஆனால் புன்னகை இல்லாமல், தோன்றினார். பிரதமர் பதவியேற்ற போது, அய்யா முகம் பிரகாசம் ஆனாது. எல்லாரும் ஆண்டவனை துணைக்கு அழைத்தார்கள். 45 அமைச்சர்கள் பதவி ஏற்றுகொண்டார்கள், இரண்டு மணி நேர நிகழ்வில். ஹேமமாலினிக்கு கொஞ்சம் வயசாகிவிடுத்துப் போல. மனகா காந்தி, ஒரு நமுட்டு சிரிப்புடன் ஸோனியாவை பார்க்க, அவர் முகத்தை நிச்சலமாக வைத்துக்கொண்டார், வழக்கம் போல. ராகுல் காந்தியின் கன்னத்தில் குழி விழவில்லை. அவர் காஸ்மட்டிக் புன்னகை வைத்துக்கொள்ளவில்லை. சீரியஸ் முகம், அடர்ந்த வளர விரும்பும் குட்டி தாடி. மனேகா காந்தி பதவி ஏற்கும் போது வருண் முகத்தில் பிரகாசம். திரு, சதானந்த கெளடா தன் பெயரை சொல்ல மறந்து விட்டார். முக்கர்ஜி தா அதை சரி செய்தார். அதே மாதிர் அஷோக் கஜபது ராஜு பசுபதியும் கொஞ்சம் தடுமாறினார்; சுதாரித்துக்கொண்டார். ஜெனெரல் வி.கே. சிங், பொன். ராதாகிருஷ்ணன்,  மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட், நிர்மலா சீதாராமனும். பேகம் நஜ்மா ஹெப்துல்லா ( மெளலானா ஆசாதின் பேத்தி) காபினெட் அமைச்சர்.
அடுத்த பகுதி நாளைக்கு.


இன்னம்பூரான்