Saturday, December 26, 2015

நாளொரு பக்கம் 44


நாளொரு பக்கம் 44

Wednesday, the 8th April 2015



Ludwig Wittgenstein has been considered by many as the most influential Western philosopher since Immanuel Kant. He had wide-ranging interests -moving from engineering to philosophy to becoming an elementary school teacher to military service, all the while deeply delving in philosophical investigations.
‘Bertrand Russell, his pupil Ludwig Wittgenstein  and their colleague G. E. Moore – the pioneers of Analytic philosophy – shared the view that ‘all sound philosophy should begin with an analysis of propositions’ (Russell 1992: 9; first published in 1900). In Russell and Wittgenstein such analysis was centrally a matter of logic.’
Viewed in this background, it come as no surprise that he uses the simile of a combination lock. In sum, Phlosophy is an alluring Spreadsheet.
-x-

Thursday, December 24, 2015

நாளொரு பக்கம் 43

நாளொரு பக்கம் 43


Tuesday, the 7th April 2015

स्वभावो नोपदेशेन शक्यते कर्तुमन्यथा ।
सुतप्तमपि पानीयं पुनर्गच्छति शीतताम् ॥

கல்யாண தரகர்களில் ஒருவர் சொன்னாராம், ‘ நான் சிபாரிசு செய்யும் பையனுக்கு தாராளமாக உங்கள் பொண்ணை கொடுக்கலாம். 64 குணங்களில் அவனுக்கு இரண்டு தான் இல்லை. மற்றபடி தங்கமான பையன்’. பொண்ணை பெத்தவன் கவலை அவனுக்கு. அந்த இரண்டும் என்ன என்று கேட்டாராம். பதில்: ‘தனக்காவும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்!’.

இந்த பூவுலகில் பெரும்பாலோர் இப்படித்தான் ‘ரண்டுங்கெட்டான்’ என்ற உண்மையை மேற்படி சுபாஷிதம் டபால் என்று  போட்டு என்றோ உடைத்துவிட்டது: “ அடுப்பில் வைத்தால் தண்ணீர் வென்னீராகிறது. சற்று நேரம் கழித்து ஆறிவிடுகிறது. அது போல ஆலோசனை வழங்கி ஒருவரின் குணாதிசயங்களை மாற்றமுடியாது.”
இதையே, ‘நாய் வாலை நிமிர்த்த முடியாது.’ என்பார்கள். ஆனால், நாய் வாலை எதற்கு நிமிர்த்தவேண்டும்? அது பொருத்தமான உவமை அன்று.
In English: You can take the horse to water, but cannot make it drink.
அப்படியானால் என்ன் செய்யலாம்? தெரியவில்லை. சொல்லுங்கள்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://markewbie.weebly.com/uploads/4/0/3/9/40396485/7667532.jpg

Wednesday, December 23, 2015

SEASON'S GREETINGS & A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016

SEASON'S GREETINGS & A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016

INNAMBURAN

23 12 20115




IMAGE CREDIT & COPYRIGHT & THANKS TO GOOGLE




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, December 21, 2015

நாளொரு பக்கம்: 42

நாளொரு பக்கம்: 42


Monday, the 6th April 2015
பாரம்பரியம், மரபு போன்ற சொற்கள் நம்மை வரலாற்றின் முன்பக்கங்களுக்கு எடுத்து செல்கின்றன. தற்காலத்தில் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு, பழங்காலத்து ஆளுமை இருந்திருக்கிறது என்று புரிந்து கொண்டோமானால், அவற்றை பற்றி மேலும் மேலும் அறிய அவா எழும், ஆர்வம் உள்ளோருக்கு. ஆர்வமில்லாதவர்களுக்கும் மேலும் அறிய ஆவல் ஏற்படலாம். 

இனியவை நாற்பது, இன்னா நாற்பது போன்ற அறம் சாற்றும் நூற்கள், திருக்குறளுக்கு இணையாகவே அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. ‘இனியவை நாற்பது’ என்ற கடைச்சங்க நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

இறைவணக்கத்துக்கு பின் வந்து முதல் செய்யுளை காண்போம். 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. ~ [1]

பிச்சை யெடுத்துண்டாயினும் கற்பனவற்றைக் கசடறக்கற்றல் மிக இனிது.  அங்ஙனம் கற்ற கல்விகள் நல்ல சபையில் உரையாட, அளவளாவ, தர்க்கம் செய்ய வந்துதவும். அதுவும் இனிதே. முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது வாய்ச்சொல் இனிது. அது போலவே  சான்றோரின் துணைக் கொள்ளுதல் தெளியவுமினிது.
இத்தருணம்
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
என்று புறநானூறு கூறும் 177 செய்யுள் கண் முன்னே வந்து நிற்கும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.geotamil.com/pathivukalnew/images/stories/crit_7.jpg


Saturday, December 19, 2015

நாளொரு பக்கம் 41

நாளொரு பக்கம் 41


Sunday, the 5th April 2015
“The thing that makes you exceptional, if you are at all, is inevitably that which must also make you lonely. “
- Lorraine Vivian Hansberry (May 19, 1930 – January 12, 1965)

Lorraine, whom we tragically lost to pancreatic cancer at her prime, was the first black woman to write a play performed on Broadway. Her family had struggled against segregation, challenging a restrictive covenant and eventually provoking the Supreme Court case Hansberry v.Lee. Her best known work, the play ‘A Raisin in the Sun’ highlights the lives of Black Americans, living under racial segregation in Chicago. 
Martin Luther King, Jr. paid her this tribute: "Her creative ability and her profound grasp of the deep social issues confronting the world today will remain an inspiration to generations yet unborn."
Reading her quote, knowing her background, one cannot resist the hard-won lesson of Life, she shares with us.  One has to learn to live with himself or herself only for long spells at great deprivation of social life, if one has to achieve something exceptionally great.
-x-

Image Credit::https://i2.wp.com/www.rugusavay.com/wp-content/uploads/2013/07/Lorraine-Hansberry-Quotes-5.jpg

Friday, December 18, 2015

நாளொரு பக்கம் 40

நாளொரு பக்கம் 40

Saturday, the 4th April 2015
Rajrishi Bhartruhari,popularly believed to be the brother of King Vikramaditya,was a ruler, moral preceptor, poet and romantic, all combined into one singular personality. He authored three immortal classics  of one hundred verses each- Neeti Satakam (Moral values), Vairagya Satakam (Renunciation or philosophical) and Srungaara Satakam (About Love). One citation here.
प्रारभ्यते न खलु विघ्नभयेन नीचैः
प्रारभ्य विघ्नविहता विरमन्ति मध्याः।
विघ्नैः पुनः पुनरपि प्रतिहन्यमानाः
प्रारब्धमुत्तमगुणा न परित्यजन्ति ॥ 1:26

Prarabhyate na khalu vighnabhayena neechaih
Praarabhya vighnavihataa viramanti madhyaah
Vighnaih punah punarapi pratihanyamaanaah
Prarabdhamuttama janaah na parityajanti    

We have three kinds of people, who are engaged in getting things done. Some never take the very first step, lest obstacles stop them in the track. They rank lowest. Some begin well, but halt in their track, even if something minor impedes their advance. We have the achievers too. They persist in their endeavour until they reach their goal, overcoming all obstacles en route.
-x-
Image Credit:http://4.bp.blogspot.com/-yi9EOc9J5Lk/UmgMC8VLeqI/AAAAAAAAAYY/MtTnxlBiUYo/s1600/keep-calm-and-get-stuff-done-3.png
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, December 16, 2015

நாளொரு பக்கம் 39

நாளொரு பக்கம் 39


Friday, the 3rd April 2015
People are like stained glass windows: they sparkle and shine when the sun is out, but when the darkness sets in their true beauty is revealed only if there is a light within. 
-Elisabeth Kübler-Ross, psychiatrist and author (1926-2004) 

Elisabeth Kübler-Ross became a celebrity psychiatrist with her ground-breaking book, "On Death and Dying.", as the Western world attaches great importance to Grief-counseling in a professional approach. She founded Shanti Nilaya in California as a  healing center for the dying and their families.

We will benefit by listening to the advice from such a distinguished star. She advocates our exercising our minds to illuminate our living styles, by using the apt simile of the stained glass in the Church windows, each one an art-creation. Just as they sparkle when the sun is out, our enlightened mind will liven us up, if only we know the secret of enlightening it,from within.

Lead! Kindly Light! 

-x-


விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

இன்னம்பூரான்
15 12 15
Published: Vallamai 15 12 2015
http://www.vallamai.com/?p=64717#comments

ஆராய்ச்சிமணி அடித்தக் கறவைப்பசுவுக்கும், வண்ணாத்தியிடம் ஜஹாங்கீர் துப்பாக்கி நீட்டியதும் வகுக்கப்பட்ட விதியல்ல; நீதிபோதனை.
மின்னிதழ்களிலும், மின்குழுமங்களிலும் தற்காப்புக் கருதி நான் நீண்டகாலம் எழுதுவதில்லை.‘நாவினால் சுட்டவடு..’ என்று தெரியாமலா சொன்னார், வள்ளுவர் பெருந்தகை? மதிக்கப்படாவிடினும், மிதிபட வேண்டாம் அல்லவா! இது நிற்க.
சிந்தனையும் சொல்லும் இணைந்து செயல்படுபவை. ஆங்கிலத்தில் algorithm என்ற சொல் கொடி கட்டிப்பறக்கிறது; சாதனை படைக்கிறது; அதற்கு’ வழிமுறை’ என்று தமிழ்ப் பொருள் கூறப்படுகிறது. என்னுடைய கணிப்பில் அது மேலான,புடம் போட்ட வழிமுறை. நான் மதிக்கும் algorithm: ‘விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன்.’ என்பதே. இன்று ‘மருத்துவத்தின் மூன்று வி (நீ)திகள்’ என்ற தலைப்பில் சித்தார்த் முக்கர்ஜீ என்ற மருத்துவர் எழுதிய கட்டுரை ஒன்றை படித்ததின் விளைவாக எழுகிறது, இந்தத் தொடர். நான் விதித்துக்கொண்ட விதியை மீறி, நீதி பேசுகிறது. குறைப்பிரசவம் ஆனாலும் ஆகலாம். அப்போது விட்டு விட வேண்டியது தான். விதி யாரை விட்டது? இதுவும் நிற்க.
சென்னை வெள்ளத்தில் நகரே சிதிலம் அடைந்தது. தமிழ்நாடு முழுதும் சேதம் அடைந்தது. மனம் பதைத்து, பல தடங்கல்களை கடந்து, மூட்டைகளை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு டிசம்பர் 7 அன்று எடுத்து சென்றால், அத்தியாவசிய பொருள்கள் மிகுதியாக வந்தன; மிகுதியாகப் போயின. செல்வந்தர்கள் பால் பாக்கெட்டுக்குக் கையேந்தினர். ஏழை பாழை தாராளமாக் வழங்கினர். பேதமில்லாத உலகம். எண்பதைத் தாண்டிய முதியோர்களுடன் பள்ளி மாணவர்கள் இணைந்து செயலாற்றினர்; நம் வீட்டு சிறுவர்/சிறுமிகளோ, உலகின் பலபகுதிகளிலிருந்து whatsapp மாயா மச்சீந்திரா உபாயங்கள் மூலம் உடனக்கடி அபயம் அளித்து வந்தனர். Blue Cross நிறுவனத்தின் Dawn அவர்கள் அசகாய வேலை செய்து உயிர் மீட்டனர். மற்றும் பல மனிதநேய நிகழ்வுகள், உருக்கமான செய்திகள், எண்மெய்ப்பாடுகளும், வளைய வந்த மனித அபிமானங்களும், சுவபாவங்களும், பல பாடங்களைக் கற்பித்தன. மேற்படி செயல்பாடுகளில் ஒன்று கூட விதிக்கு உட்பட்டவை அன்று. அன்றாட இயல்பு வாழ்க்கையில் இவை இடம் பெற்றிருக்கப்போவதில்லை. அவை நீதிதேவதையின் வழிமுறை.
மேல்தளத்து (அதாவது பாதுகாப்பாக இருந்த) மக்கள் ரூல் பேசினார்கள். அரசை கண்டித்தார்கள். ஆக்கிரமிப்புகளை பற்றியும், நீராதாரம் பற்றியும், ‘அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்’ என்று முடியா வழக்குகளை சகதியிலும், ஊடகங்களிலும், மின்/மின்னா குழுக்களிலும் பேசி வந்தனர். பிராவகத்து போராளிகளுக்கு இதெல்லாம் இரண்டாம் பக்ஷம். அவர்கள் விதியை மறந்தனர். நீதியை நாடினர்.
வாழ்வியலில் நாம் சிரத்தையுடன் (பஹுகார்யமாக), அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு, பக்குவமான தீர்வுகளை நாடுகிறோம். வாகை சூட முடியவில்லை; பகை தான் புகைக்கிறது. சில உதாரணங்களுடன், இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.
Lord Keynes said, ‘In the long run, we are all dead’. ஆம். நிரந்தரவாழ்க்கை யாருக்கும் கிடையாது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். நமது ஊர்களில் 99.99 % வீடுகளில் வாசற்படி தெருவை ஆக்கிரமித்து இருக்கும். நடைபாதைகள், சின்னச்சின்ன குருவிகளுடன் செத்துப்போயின. அரசு கட்டிடம் வாசலில் நடை பாதைக்கு முள்வேலி பாருங்கள்! இது குடிமகனின் செயலா! அரசின் கொடுமையா? ‘இன்று வீட்டுமனை விலை ஆகாயத்தைத் தொடுகிறது. ஏரிக்கரையில் ஒரு குட்டிப்பகுதியை கைப்பற்றி, குடிசை போட்டு, காரை வீடு; மாடி வீடு; பல தளங்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என்று, கேட்ட லஞ்சத்தைக்கொடுப்பது விதிக்கும் முரண்; நீதிக்கும் முரணாக விதியை உலுக்கிவிட்டேன்.’ என்பவர்களின் முதலையீடுகளை, ஏன் உயர் அதிகாரி செல்வி அமுதா இடிக்கமாட்டார்? நீரை வெளியேற்ற வேண்டி,அவசர கட்டத்தில் சில சில உப விதிகள் அடிபட்டுப்போயிருக்கலாம். ஆனால் நீதி நிலைத்து நின்றதே.
லஞ்ச லாவண்யத்தின் தீமைகளை பற்றி எமது சிறிய சிந்தனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. வாய்ச்சொல் வீரர்களை பற்றியும் பேச்சு எழுந்தது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அநீதி; விதிக்கு முரண். இந்தியாவின் முதல் லஞ்சஒழிப்புச் சட்டத்தில் லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை உண்டு. ஆனால், வழிமுறை அவ்வாறு இல்லையே. இந்தியா முழுதும் நாம் நாட்தோறும் கண்ணாரக்காண்பது கோடிக்கணக்கான லஞ்சம், ஊழல், சால்ஜாப்பு, அரசியல் வாதிகளில் பலரின் தீவினைகள். இந்தப்பின்னணியில் ஏரி ஏன் உடையாது? நதி ஏன் பெருக்கெடுக்காது? கடல் ஏன் கொந்தளிக்காது? வீடு ஏன் முழுகாது? உயிர் ஏன் பிரியாது? ஒவ்வொரு கட்டுமானத்திலும் – ஏரிக்கரை, தூர் வாருதல், ரோடு, கட்டிடங்கள், பாலங்கள், அன்றாட பராமரிப்பு – இவைகளில் உள்ள குறைகள், ‘ஈயத்தைப் பார்த்து இளைத்ததாம் பித்தளை’ என்ற வகையில் இன்று சந்தி சிரிக்கின்றன. இவைகளெல்லாம் விதிகளின் கீழ்படிதலாக, நீதியை கற்பழித்துக் கட்டப்பட்டனவையே. சாணக்ய நீதிப்படி உரியகாலத்தில் விதி மீது சதி செய்தவர்களை கடுமையாக தண்டிக்காதவர்களையும் தண்டிக்க வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதை உரத்த குரல் எழுப்பி கண்டிப்பவர்களும், அரசு உயர் அதிகாரியின் விளக்கங்களும் விதியை பற்றி விளாசலாம். நீதி எங்கே போயிற்று? முதற்கண்ணாக, தமிழ்நாடு சென்னையை விட பெரியது. தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது என்ன? கடலூர் மூழ்க, செம்பரம்பாக்கம் என் செய்தது?
இரண்டாவதாக, நமக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். விசாலமான நோக்கு வேண்டும். இரக்க சுபாவம் வேண்டும். மருத்துவத்தில் முதலுதவி கொடுப்பது வரிசை விதியை விலக்கும் நீதி. அது போல ஏழைபாழைகளுக்கு முதலில் வாழ்வாதாரம் கொடுத்து எல்லாருக்கும் உடனடி உதவி கொடுக்க வேண்டும். நம்மால் ஏன் ராணுவம் போல் இயங்கவில்லை என்பதை பரிசீலனை செய்யவேண்டும். வெட்கக்கேடு! பரிதவிக்கும் மக்களை விட்டு, மேட்டுக்குடி வீஐபிகளை காப்பாற்ற சொன்னார்கள், அதிகார மையங்கள் என்று ராணுவம் கூறும் போது, நாக்கிப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது.
எந்த எந்த அளவில் எந்த எந்த அன்றாட அரசு ஆணைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பது ஒரு பூடகமான விஷயம். இலைமறைவு; காய் மறைவு. விதியை மீறும் நீதி அழிப்பு. காங்கிரஸ் ஆட்சியிலேயே சென்னையில் வீடுகளை வாடகைக்கு விடும் தீர்மானங்களை அமைச்சர்கள் கையில். பிற்காலம் அது புழக்கடைக்கு வந்தது. எல்லாத்துறைகளிலும் அன்றாட தலையீடுகள் தான் பேயாட்டம் ஆடின. காவலராயினும், ஆசிரியராயினும், குமாஸ்தாவாயினும், பொறியாளராயினும், அந்தந்தத்துறைத்தலைவர்கள் கையாலாகதவர்களாயினர். உயர் அதிகாரிகள் கொள்கை வகுப்பதும், அதற்கு நேரமும், அடிப்படை ஞானமும் இல்லாத நிழல் மனிதர்களும், அவர்களின் கூடாநட்பு கொண்ட அமைச்சர்களும், அன்றாட வரத்துப்போக்குக்களில் விதி மீறி, நீதி தவிர்த்து நடமாடும் காலம் பழுத்தது. அணைகள் பாதுகாப்பையும், அரவணைப்பையும் காலங்காலமாக அந்தந்தத்தலத்தில் பொறுப்பும், பதவியும் வகிக்கும் உதவி பொறியாளர் தான் செய்கிறார் என்பதை தலைமை அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.
இனி ஒரு விதியும் அதை வழிமுறை நடாத்தும் நீதியையும் கொணருவோம். மாநிலம் முழுதும் எல்லா பிராந்தியங்களும், நீர்நிலைகளும் பற்றிய முழு உண்மை நிலை, எந்த விதமான கலப்பில்லாமல், அசல் புள்ளி விவரங்களுடன், மெத்த விசாரணையின் அறிக்கையுடன் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். அதற்கு முன்னால், பல விதங்களில் தண்டோரோ போட்டு மக்களின், அதிகாரிகளின், ஆர்வலர்களின் சாக்ஷியம் பெறப்படவேண்டும். அது நேர்காணலில் நடக்க வேண்டும். ஒவ்வொரு ஆவணத்தின் வரலாறு வேண்டும். Logging என்ற உடனடி தகவல் பதிவு செய்யப்பட்டதா என்ற விஷயத்துக்கு சத்தியபிரமாணமும் வேண்டும். மற்றபடி சான்றும் வேண்டும். என்ன நிவாரணம் கிடைக்கிறதோ அதை விட, விதி வகுக்கும் திறனும், நீதி வழங்கும் மூதறிஞர்களும் கிடைப்பது தான் தேசத்தின் விதியை நிர்னயிக்கும்.
நீதியில்லையேல் பீதி: நீதியில்லையேல் வீதி; நீதியில்லையேல் மீதியில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:https://arthamullainiyamanam.files.wordpress.com/2013/05/074sattam.jpg
இன்னம்பூரான்
இன்னம்பூரான்
இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் அவரது பூர்வீகம். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.

அண்ணாகண்ணன் ( அமுதசுரபி மாஜி ஆசிரியர்) wrote on 16 December, 2015, 13:07


ஒரே கட்டுரையில் சிக்கல்களை அலசி, தீர்வுகளை முன்வைத்துள்ளார். இவற்றை நடைமுறைப்படுத்த, திடமான தலைமையுடன் மின்னாளுகை நுட்பங்களைச் சிறப்புறப் பயன்படுத்த வேண்டும்.

Tuesday, December 15, 2015

நாளொரு பக்கம் 38


நாளொரு பக்கம் 38



Thursday, the 2nd April 2015

தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள்.

திரிகடுகம் 8

தமிழில் தாரதம்யம் என்றதொரு சொல் உண்டு. இடம், பொருள், ஏவல் ஆகியவை கருதி, அதற்கேற்ப பொருத்தமாக செயல்படுவோருக்கு, தற்புகழ்ச்சிக்கு அவசியமே இல்லை. சான்றாக, தொன்மை, பழமை, பாரம்பரியம் ஆகியவற்றை ஆராயும் இடத்தில் நல்ல குடிப்பிறப்பு அருமையாக உதவும். கற்றோர்களும், புலவர்களும், மேதைகளும் வீற்றிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவு கை கொடுக்கும். போர்க்களத்தில் வாகை சூடுவது மட்டுமே குறி. அதற்கேற்ற துணிவு, ஆற்றல், கட்டுப்பாடு தேவை. இவை மூன்றையும் தானாகவே அறிந்து செயல்பட முடியும். 

அத்தகைய உயர்நிலை சூழ்நிலையில் ‘தம்மைக் கூறாப் பொருள்’ தலைமை வகிக்கும்.

-#-


Monday, December 14, 2015

தன் வினை தன்னை சுடும்!


தன் வினை தன்னை சுடும்!
இன்னம்பூரான்


http://www.huffingtonpost.in/2015/12/14/modis-effigy-congress_n_8804868.html?utm_hp_ref=india

Cong workers accidentally set themselves afire while burning Modi effigy

  • HT Correspondent, Hindustan Times, Shimla
  •  |  
  • Updated: Dec 14, 2015 19:38 IST


Congress workers run after they catch fire while trying to burn Prime Minister’s effigy in Shimla on Monday. (Deepak Sansta/HT Photo)


A Congress protest in Shimla took a fiery turn on Monday when some party workers accidentally set themselves on fire while burning an effigy of Prime Minister Narendra Modi after an eager participant lit a match as petrol was still being poured on the rag figurine.

Congress Workers Set Themselves On Fire By Accident, Trying To Burn Modi's Effigy

Posted: Updated: 

Print


A protest by some Congress workers took a fiery turn on Monday when they accidentally set themselves on fire while trying to burn Prime Minister Narendra Modi's effigy in Shimla.
According to reports, at least five Congress activists sustained burn injuries. 

The protest march was held by the Congress workers against NDA allegedly targeting Congress president Sonia Gandhi and party vice-president Rahul Gandhi in the National Herald case. 
The fire got out of control when an eager participant lit a match as petrol was still being poured on the rag figurine, reports Hindustan Times. 
The incident took place near Deputy Commissioner’s office where PCC president Sukhwinder Singh Sukhu had led a peaceful demonstration after the party’s call for state-wide protests. 
Two party workers suffered minor burn injuries and one of them identified as Manoj Adhikari had to be rushed to hospital. He is out of danger now.
Eyewitnesses said the party workers, who had assembled close to the Central Telegraph office (CTO), were raising anti-Modi slogans 
“A Sikh gentleman had turned up with a bottle filled with petrol and poured on the effigy amidst slogans and cheers. The fire flared -up and engulfed some of the activists,” a party leader told Indian Express.

நாளொரு பக்கம் 37

நாளொரு பக்கம் 37


Wednesday, the 1st April 2015

वदनं प्रसादसदनं सदयं हृदयं सुधामुचो वाचः ।
करणं परोपकरणं येषां केषां न ते वन्द्याः ॥

There is such a thing called personal magnetism. Some call it charisma. It is formless, but is visible even to the visually challenged. Stroking the cheeks of Jawaharlal Nehru, Helen Keller commented on his mellow kindness. You cannot discover its whereabouts, as it lies deep within. You cannot hear it, as it lies hidden in words, not uttered.
You see it toiling around, but cannot figure it out.

And, it is ever-present everywhere, as thought, word, and deed.

Literally translated, this Shubhashitham means:

“Who will not honor such a person - who keeps a smile on his face always, has compassion in his heart, whose speech is controlled, and always helps others.”

-x-



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, December 12, 2015

நாளொரு பக்கம் 36

நாளொரு பக்கம் 36


Tuesday, the 31th March 2015
There are stars whose radiance is visible on Earth though they have long been extinct. There are people whose brilliance continues to light the world though they are no longer among the living. These lights are particularly bright when the night is dark. They light the way for humankind. 
-Hannah Szenes(1921-1944): poet, playwright, and paratrooper
Prophecy is, it seems, hanging in the air, like a fragrance that stays with you, unseen. Hannah was a legend in her own life-time, spanning a mere two decades and three years. Her poetic lines, 
“ My God, My God, I pray that these things never end,
The sand and the sea,
The rustle of the waters,
Lightning of the Heavens,...” 
remain embedded in the conscience of Israel, whose National Heroine, she is. She was parachuted into Yugoslavia by the British army, with 36 others during World War II to rescue the Hungarian Jews bound for the German death camp at Auschwitz. Arrested and tortured, she adamantly refused to divulge the details of her mission. She was executed by the firing squad.
What she said , she lived. She lit the way for humankind.

-#-




Wednesday, December 9, 2015

மொழிகளில் இலக்கியம் மிளிர்வது


இன்றைய அமர்வில் ‘தமிழ் இலக்கியம் -1:மையோ! மரகதமோ!மறிகடலோ! மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா அழகுடையான்!’ என்ற இன்னம்பூரானின் பதிவும் அதன் தொடர்பாக அவர் அளித்தக் கீழ்க்கண்ட உரையும் எடுத்துக்கொள்ளப்பட்டன. 


மேற்படி உரை:
தமிழ் இலக்கியம்: ஒரு அறிமுகம்.
இன்னம்பூரான்
8 12  2015

“மொழிகளில் இலக்கியம் மிளிர்வது ஐம்புலனுக்கும் இனிமை தரும் தன்மை உடையது. இயல், இசை, நாடகம் மூன்றுமே தமிழ் மொழியின் இலக்கியத்தில் அங்கம் வகிப்பதால், செவி இன்பம், கண்கொள்ளாக்காட்சி,வாய்ப்பாடு, தமிழ் மணம், மனநிறைவு  ஆகியவை இலக்கியத்தின் உள்ளுறைந்து, ஐம்புலன்களின் வீணை மீட்டும். எல்லா மொழிகளிலும் வீணை, கோட்டு வாத்தியம், தம்புரா, குழல், நாதஸ்வரம், மாண்டலின், சிதார் எல்லாம் உண்டு.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடைபெறும் நமது அமர்வுகளில், சிறுகதைகளில் தொடங்கி, கட்டுரைகளையும் கண்டு, இன்றிலிருந்து தொன்மை காலத்து தமிழ் இலக்கியங்களின் சில பக்கங்களை புரட்டுவோமாக. இங்கு இருக்கும் தமிழ் புலவர்கள் மேலும் மெருகு ஏற்றலாம். ஆர்வலர்கள் ஊக்கமளிக்கலாம். ஆறு வருடங்களுக்கு முன் எனக்குத் தமிழ்ஞானம் சொற்பமே. இன்று புலவர்களுடன் சரளமாக பழக முடிகிறது. ஆர்வமிருந்தால், நீங்களும் இத்தகைய அனுபவம் பெறுவீர்கள். இனி வரும் அமர்வுகளில் நீங்கள் விரும்புவை யாவை என்பதை அறியவே, இந்த திசை மாற்றம். நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் இலக்கியங்களை சுவைத்து மகிழ, ஒரு ஆயுட்காலம் போதாது. எனவை பெரும்பாலோரின் விருப்பத்தை அறிந்து, இயங்குவது நல்லது. இந்த உரையை ஒலிப்பதிவு செய்வதே, அதன் பொருட்டும், இணையத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து என் வலைப்பூவை படிக்கும் நண்பர்களின் விருப்பம் பொருட்டுமே. குறிப்பிட்ட நேரத்தில் உரையை முடித்து விட இதுவும் உதவும்.
‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்ற நம்மாழ்வார் பாசுரமே இதற்கு ஆதாரமாக அமைந்து விட்டது. சுவை என்பது உள்ளத்தில் தோன்றும் சுவையாகிய உணர்ச்சி என்க. அச்சுவையை நாம் யாவரும் அள்ளி, அள்ளி பருக வேண்டி, சுவையில் தென்படும் எண்வகை மெய்ப்பாடுகள் (நகை, அழுகை, இளிவரல்,மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை) நமது பழைய மூல இலக்கணமும், வாழ்வியலுமான தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்றாகிய மெய்ப்பாட்டியலில் விவரமாகவும், தெளிவுடனும் கூறப்பட்டுள்ளன. 
இசை கேட்கும் போதும், நாட்டியம் பார்க்கும்போதும், சித்திரக்கலையை போற்றும் போதும் நாம் அனுபவிக்கும் சுவை, இலக்கியத்திலும் புதையல் போல கிடைக்கிறது என்பதற்குத்தான், ‘மையோ! மரகதமோ!, மறிகடலோ! மழை முகிலோ! ஐயோ! இவன் வடிவு’ என்ற சொல்லாக்கம், இராமகாதையிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது. வழியிடையே காட்சிகள் கண்டு இராமனும் , இலக்குவனனும், சீதா பிராட்டியும்  உளமகிழ்ந்து செல்லுதல் பற்றிய முழுச் செய்யுள் இங்கே:
மெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.
[1926: இராம காதை]

நீலமேக ஸ்யாமளனின்  செறிவான கருமைக்கு மழை
உவமையாயிற்று, மரகதம் பசுமை நிறம்; குளிர்ச்சி
தருவதாதலின் நிறத்தோடு தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல் நீலநிறம்
படைத்ததாய் இடையறாது இயங்கிக்கொண்டுள்ளது; ஆதலின்,  இயங்குகின்ற
இவனது சோபைக்கு உவமையாயிற்று.  நாம் தற்காலம் பார்த்துப் பார்த்து இளைத்து, களைத்து போக செய்த மழை முகில்  கருநிறம் படைத்து நீர் என்னும் பயனும் உடையது; உயிர்களுக்கு நலம் செய்வது என்பதால் உவமையாயிற்று. ‘கருமையும், தண்மையும், இடையறாஇயக்கமும்,
தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி காணல் அன்றி இவை
நான்கும் ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு உவமை
காண்டல் அரிதாயினமை பற்றி அதிசயித்து இனி உவமை சொல்ல
மாட்டாமையாகிய இரக்கமும் தோன்றி ‘ஐயோ’ என முடித்தார்’ என்கிறார்கள், கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
“அச்சோ ஐயோ என்னே எற்று எவன்எனுஞ்சொல் அதிசயம் உற
இரங்கல்” என்பது  சூடாமணி நிகண்டு. 

இலக்கிய சுவை எல்லை கடந்த அனுபூதி. தங்கு தடையின்றி, பொங்கு தமிழாக பரிமளிக்கும் இலக்கிய படைப்புகளை ஒருவிதத்தில் பார்க்கப்போனால் சுயம்பு/ தான்தோன்றி எனலாம். திருக்குறள் அற நூல்; புற நானூறு வெளி உலகம் சார்ந்தது; அகநானூறு உள்ளொலி என்க; சிலப்பதிகாரம் வரலாறு; மணிமேகலை போதனை.
இராமகாதை ஶ்ரீரங்கத்தில் நாதமுனிகள் முன்னிலையில் அரங்கேற்றப்படது. பாயிரம் முதலில். அதில் பிரதம ஸ்தானம் கடவுளுக்கு: இராமகாதைக்கு ‘தமிழ்க்கடல்’ திரு.தி.வே. கோபாலய்யர் தந்தருளிய படலக்கதைச் சுருக்கமே ஒரு இலக்கியம் என்று கூறினால், அது மிகையாகாது. இனி பொருளலங்காரம் விளக்க ஒரு இராமகாதையின் பகுதி:

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

[சாராம்சம்] எல்லா உலகங்களையும் தம்  சங்கற்பத்தால்  படைத்தலையும், அதை நிலைத்திருக்குமாறு  காப்பதையும்,  முடிவுறாததும் அளவற்றதுமாகிய  விளையாட்டாக உடையவராகிய அவரே  தலைவர்.அன்னவர்க்கே  நாங்கள்  சரண். அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம். ‘உலகம்’ என்ற  மங்கலச் சொல்  கவிச்சக்கரவர்த்தியின்
வாக்கில்  முதலாக  எழுகிறது.   படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை  அருந்தொழில் பரமனுக்கு   மிக   மிக   எளிது   என்பதை  ‘விளையாட்டு’   என்ற சொல்லாட்சி குறிக்கிறது. திருவெம்பாவை 12ல் ‘ காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி’  என 
முத்தொழிலை இறைவன்  விளையாட்டாக   மாணிக்கவாசகர்  பாவிப்பது, இவ்விடம் குறிப்பிடத்தக்கது. 

“எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் செயல்களைத் தொடர்ந்து விளையாட்டாக செய்து வரும் பெருமானாரையே நாம் சரணாக பற்றியுள்ளோம்...” (‘தமிழ்க்கடல்’ திரு.தி.வே. கோபாலய்யர்). இன்றைய அமர்வு தமிழிலக்கியத்தின்  விஸ்தீர்ணத்தை சுட்டிக்காட்ட அமைந்ததால், எல்லாமே சிறுதுளிகள் தான். ஆயினும், எல்லாமே இலக்கியம் தான்!

சிலப்பதிகாரம் தேனொழுகும் இனிமை தங்கி நிற்கும் இயல்புகளை போற்றும். மாதவி ஒரு கணிகை. ஒப்பற்ற அழகு. ஆயகலைகளில் தேர்ந்த 12 வயது சிறுமி, அவள். மன்னன் முன் தன் நாட்டியத்திறனை காட்ட அரங்கேற்றம் செய்ய துணிந்தாள். இளங்கோவடிகள் மிகவும் விவரமாக, படிப்படியாக அந்த நடனத்தின் புகழ் பாடுகிறார். அதில் ஒரு பகுதிக்கு பொருள் காண முயன்றபோது ‘அன்றொரு நாள்: ஏப்ரல் 29’ என்ற தலைப்பில் 29 04 2012 அன்று நான் எழுதிய  ‘கிழக்கில் ஒரு மேற்கு!’ என்ற கட்டுரை கிட்டியது.
சுருங்கச்சொல்லின்,
அசையும், ஓசையும், இசையும் அபூர்வ சஹோதரிகள். யார் எங்கே எதை அருமையாக இசைத்தாலும், எம் கண் முன்னே தோன்றுவது தொன்மை வாய்ந்த நாடக மேடை, திரைகள், கச்சிதமாக அளவெடுத்து அழகுறை அமைத்த அந்த அரங்கத்தில் அகவை பனிரெண்டே ஆகிய மாதவியின் நடனம், பாட்டு, ஆசான்கள், இலக்கணம், மரபு. சபையே மகுடிக்கு மயங்கிய நாகமாக சுருண்டு கிடந்தது. இளங்கோ அடிகளார் இசையை ரசித்த விதத்தை இங்கே காணலாம்.

யாழும், குழலும், சீரும், மிடறும்
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித
தேசிகத்திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப்பாடலும் கொளுத்தும் காலை-
வசை அறுகேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன்.
~ (சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 26 - 36 வரிகள்)
“அந்த ‘அசையா மரபின் இசையோன்’ ஒருவரையும், அவருடைய குழுவையும் சைண்ட் லூயிஸ் இசை அரங்கில் கண்டு, அவர்கள் அளித்த இசை விருந்தை பருகியபோது, நினைவலைகள் ஒரு நிமிடம் இரண்டாம் ஆயிரம் ஆண்டுகள் பின் சென்று, ‘நான்கடி, எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடியாக வரும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம், சந்தம் என்றெல்லாம் மனமுழுதிலும் அலை பாய்ந்தன, பீத்தோவன் என்ற இசை ஆசானின் கவின் நிறைந்த அரிதான படைப்புகளும், உள் புகுந்து, அலைகளை சற்றே சலசலத்தன. அதா அன்று. மற்றொரு நினைவலையும் தனிப்பாட்டை ஒன்றில். கடலலை ஓய்ந்தாலும் நினைவலை ஓய்வதில்லை அல்லவா! இந்த தரணி தனில் நிரந்தரமானவை, இந்த நினைவலைகள் தான். என்றென்றும் சுழற்சியில் இருப்பவை அவை தான்... “ ஆம். இலக்கியம் பிரபஞ்சமெங்கும் நிறைந்து இருக்கும்.
ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகள் வெளி வரும். அதற்கு முன்னோடி மணிமேகலை எனப்படும் காப்பியத்தின் முத்திரை, மையக்கருத்து, அசையாப்பொருள்:

“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும் அல்லது 
கண்ட தில்லை.”
இது [ரோட்டி, கப்டா ஒளர் மக்கான்!] பற்றி, சாஹித்ய அகாடமியின் தரப்பில் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ படைத்தப் பேராசிரியர் மு.வரதராசன் அவர்கள் கூறியது: 
“...அத்தகைய அறனெறியைப் போற்றி, உணவு வற்றாத பாத்திரமாகிய அமுதசுரபிலிருந்து உணவை எடுத்து எல்லோர்க்கும் உதவினாள். கூன், குருடு ஊமை செவிடு நோயாளிகள், திக்கற்றவர்கள் எல்லோரிடத்தும் அன்பு கொண்டு உதவி புரிந்தாள்...சிறைச்சாலை எல்லாம் அறச்சாலை ஆக்குமாறு அரசனை கேட்டுக்கொண்டாள்...”

மணிமேகலை ஒரு அருமையான காப்பியம். அது அளிக்கும் தரும நீதிகளை எடுத்துரைக்க பல காலம் பிடிக்கும்.
இது மூன்று இலக்கியங்களின் அறிமுகதுளிகள். நமது தொன்மை இலக்கியங்களின் தமிழ் இன்றளவும் புழக்கத்தில் உளது. அடுத்த அமர்வில் மேற்படி இலக்கியங்களிலிருந்து:
  • இராமன் கெளசலையிடமிருந்து விடை பெறுவது, குகனுடன் படகில், வாலி வதம், விபீஷண சரணாகதி போன்ற பல பகுதிகளும்;
  • சிலப்பதிகாரத்தில் திருமண அழைப்பு வைபவம், மணமக்கள் இன்புறுவது, மாதவி அரங்கேற்ற நடனங்கள், மதுரையில் நீதி, கண்ணகி விண்ணுலகம் எய்தது போன்ற பல பகுதிகளும்;
  • மணிமேகலையில் மலர்வனத்தில் மணிமேகலை, அமுத சுரபி பெறல், உதயகுமரன் வருகை, மணிபல்லவத்தில் மணிமேகலை, சிறையும் அறமும் போன்ற பல பகுதிகளும்
எடுத்து, சுவையுடன் படிக்கலாம். 
எல்லையில்லா இலக்கியவரவுகள் வைட்டிங் லிஸ்டில்.
இனி உங்கள் விருப்பமறிந்து அடுத்த அமர்வை கூட்டலாம், அது இன்றைய அமர்வின் அடுத்த கட்டமாகக் கூட இருக்ககூடும்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்.
சித்திரத்துக்கு நன்றி: http://www.siruppiddy.net/wp-content/uploads/2012/09/Tamil-500x273.jpg