Wednesday, May 6, 2015

நாளொரு பக்கம் 8

நாளொரு பக்கம் 8

http://www.vivekabharathi.in/wp-content/uploads/2014/09/ThiruvKalyanasundaranar-5r.jpg
Wednesday, the 4th March 2015
“...தாய்மொழியிற் கல்வி பெறுவது இயற்கை...பின்னை வேறு பல மொழிகளை பயிலலாம்: ஆராயலாம்...இந்நாளில் தூயத்தமிழர் இன்னாரென்றும், குடிபுகுந்து நிலைத்த தமிழர் இன்னாரென்று பிரித்துக்காட்டல் எவராலும் இயலாததொன்று...இப்போது தூய ஆரியர் இன்னார்’-’தூய தனித்தமிழர் இன்னார்’ என்று எவரே பிரிக்கவல்லார்?...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி...”
- தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம்:  6 2.1932

அவரவர் பெயர்களை அவரவர் விருப்பப்படி பதிவு செய்வது பண்பு. எனவே, சாதி அடையாளமில்லை. தமிழ்காந்தி என்று போற்றப்பட்ட தமிழ் பெருந்தகை, ஆசாரசீலர், தேசபக்தர், ஏழையின் தோழர் ஆகிய திரு.வி.க. அவர்களின் ஆழ்ந்த சிந்தனைகளை பின்னர் நாம் மறக்கடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் தான் மொழிபற்றுக்கு பதில் மொழி வெறி, இனபேதம், அவர் குறிப்பிட்ட பூசலும், ‘திருவிளையாடலும்’. சம்ஸ்கிருதத்துக்கு நிந்தனை. அவற்றிலிருந்து விடுதலை கிடைத்து விட்டால், நாம் அமோகமாக வாழ்வோம்.

-x-

சித்திரத்துக்கு நன்றி: http://www.vivekabharathi.in/wp-content/uploads/2014/09/ThiruvKalyanasundaranar-5r.jpg

No comments:

Post a Comment