Saturday, June 13, 2015

நாளொரு பக்கம் 43

நாளொரு பக்கம் 43



 
Tuesday, the 7th April 2015
 
स्वभावो नोपदेशेन शक्यते कर्तुमन्यथा ।
सुतप्तमपि पानीयं पुनर्गच्छति शीतताम् ॥
கல்யாண தரகர்களில் ஒருவர் சொன்னாராம், ‘ நான் சிபாரிசு செய்யும் பையனுக்கு தாராளமாக உங்கள் பொண்ணை கொடுக்கலாம். 64 குணங்களில் அவனுக்கு இரண்டு தான் இல்லை. மற்றபடி தங்கமான பையன்’. பொண்ணை பெத்தவன் கவலை அவனுக்கு. அந்த இரண்டும் என்ன என்று கேட்டாராம். பதில்: ‘தனக்காவும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்!’.
இந்த பூவுலகில் பெரும்பாலோர் இப்படித்தான் ‘ரண்டுங்கெட்டான்’ என்ற உண்மையை மேற்படி சுபாஷிதம் டபால் என்று  போட்டு என்றோ உடைத்துவிட்டது: “ அடுப்பில் வைத்தால் தண்ணீர் வென்னீராகிறது. சற்று நேரம் கழித்து ஆறிவிடுகிறது. அது போல ஆலோசனை வழங்கி ஒருவரின் குணாதிசயங்களை மாற்றமுடியாது.”
இதையே, ‘நாய் வாலை நிமிர்த்த முடியாது.’ என்பார்கள். ஆனால், நாய் வாலை எதற்கு நிமிர்த்தவேண்டும்? அது பொருத்தமான உவமை அன்று.
In English: You can take the horse to water, but cannot make it drink.
அப்படியானால் என்ன் செய்யலாம்? தெரியவில்லை. சொல்லுங்கள்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://markewbie.weebly.com/uploads/4/0/3/9/40396485/7667532.jpg



இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com







No comments:

Post a Comment