Wednesday, July 22, 2015

ஜமாய் பாபு !!! தொடர் [3]

ஜமாய் பாபு !!! தொடர் [3]


இன்னம்பூரான்
ஜூலை 22, 2015

அந்தப்புரங்களில் கூடகோபுரங்களும் உண்டு; மாடமாளிகைகளும் உண்டு; வானளாவும் உப்பரிகைகளும், புஷ்பமாரி பொழியும் நந்தவனங்களும் உண்டு. எங்கும் காதலும், காமமும் ஆட்சி செலுத்துவதாக ஒரு மர்மமும் உண்டு. சீனியர், ஜூனியர், சப்ஜூனியர் ராணிமார்கள் கோலோச்ச நினைத்தாலும் அந்தப்புர ஓனர் ராசா ஒருத்தன் தானே. அவனால் எத்தனை ராணிமார்களை தாக்குப்பிடிக்க முடியும்?
நமது மாண்புமிகு மக்கள் மன்றத்தை ராசாவாக பாவித்தால், ஒதுக்கப்பட்ட உப்பரிகைகளுக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் மக்கள் பிரதிநிதிகளால் எத்தனை வீண்செலவு! 47 ஜமாய் பாபுகள்! ஜாலினா ஜிம்கானா என்று விருந்தினர் விடுதிகளிலும், நக்ஷத்திர ஹோட்டல்களிலும், படா படா பங்களா ஒதுக்கப்பட்டபின்னும், ஜொலிக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் 'SD Bandi vs Divisional Traffic Officer, KSRTC & others' (Civil Appeal number 4064 of 2004) என்ற வழக்கில் தீர்வு கண்டபடி பழையன ஒரு மாதத்திற்குள் கழிந்தால் தான் புதியன புக முடியும் என்பதால், பல பங்களாக்களில், உரிமம் இழந்த பின்னும் குந்தியிருக்கும் மாஜிகளிடமிருந்து 47 ஜமாய் பாபுகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவான ரூபாய் 24 கோடியை வசூல் செய்ய வேண்டும். அஜீத் சிங் போன்ற மாஜி அமைச்சர்கள் போடாத சண்டை கிடையாது. எல்லாம் மக்கள் செலவில் சொகுசு வாழ்க்கை நடத்த ~சட்டவிரோதமாக. தயார் நிலையில் உள்ள இல்லங்களுக்கு செல்லாமல், ஐந்து நக்ஷத்திர சொகுசு வாழ்க்கை நடத்துபவர்களிடமிருந்தும் வசூல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு இல்லத்தில் பெரும்பாலோர் இப்படி வாசம் செய்கிறார்கள். என்னத்தை செய்ய?


உசாத்துணை

சித்திரத்துக்கு நன்றி: http://img1.myhomeideas.timeinc.net/sites/default/files/image/2008/new/1662790_living-room_xl.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment