Saturday, March 14, 2015

சிரிச்சு மாளலெ ~ 14: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (9)

சிரிச்சு மாளலெ ~ 14: 
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (9)




இன்னம்பூரான்
14 03 2015

மாட்டிக்கிட்டார் தும்மட்டிக்காய் பட்டர் என்றதொரு சொலவடை உண்டு. நமது தமிழ்நாட்டின் தும்மட்டிக்காய் பட்டர்கள் இருவர் உலகசாதனை படைத்து அழியாபுகழ்
பெற்ற கதை இது.
முதலாழ்வார்கள் மூவரும் திருமால் புகழ்பாடும் கட்டத்தில் அவனே வந்து நெருக்குவதை புரிந்துகொள்ளாமல் தவித்த பின், ‘திருக்கண்டேன்! பொன்மேனிக்கண்டேன்...’ என்று ஆசுவாசப்படித்துக்கொண்ட திருக்கோவிலூரில் போன வியாழனன்று (12 03 2015) ஒரு அதிசயம் நடந்தது. கலிகாலத்தில் கூட ‘தெய்வம் மனுஷரூபேண’ என்றபடி ஒரு சத்திய பிரமாணம் நடந்தேறியது.
கதை கேளு: 
திருக்கோவிலூர் தெருக்களிலே மக்கள் நடமாடமுடியாதபடி லஞ்சநடமாட்டம் பீடு நடை போட்டு வந்தது. பக்கத்து செட்டித்தங்கல் கிராமத்து பெட்ரோல் கடையில் ஊத்திக்கொண்டு, காசு கொடுக்க மறுத்தார்கள். திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று மார் தட்டிக்கொண்டு, பொய்கேஸ் போடுவேன் என்று பயமுறுத்தி 150 ரூபாய் வேறு பிடுங்கிக்கொண்டார்கள். ( போலீஸ் கியாதி அப்படி. கொடுத்தாங்களே மாமூல். அது வேறு கதை.) 
ஒரு அளவாளாவுதல்: 
எபெனெசர் & மணிகண்டன்: ‘டேய்! காரை நிறுத்துடா. ஆர்.சி. எடு. சட்னு எடுறா பேமானி! போலீசுக்கு வேறு வேலை இல்லை!
வண்டியோட்டி: அய்யாமார் ஆருன்னு தெரிலெங்களே. 
எபெனெசர் & மணிகண்டன்: இன்னா தகரியம் இருந்தா இப்டி கேட்பே, கேப்மாரி. எடுடா.
பயணி மோகன்: நீங்க ஆரு? ஐடி காட்டுங்க.
எபெனெசர் : டேய். நான் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர். இந்த அய்யா ஆஃபீஸரு. எங்க கிட்ட வாலா ஆட்றே. ஒட்ட நறுக்கிடுவேன், மவனே. ஆமாம். சொல்லிப்போட்டேன்.
மோகன்: நான் தான் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர். உங்களை கைது செய்கிறேன். கைபேசி அலறியது. களவாளிகள் ஜெயிலில். 
எதுக்கு சொல்ல வரேன்ன்னா! எதுக்குங்க. வேணாமுங்க.
மயக்கநிலையில் டிராஃப்பிக் ராமசாமியை கைது செய்துட்டாங்க. அவர் பிழைப்பதே துர்லபமாச்சு. கோர்ட்லே கீச்சு கீச்சுன்னு கத்தினாலும், படுபாவி 
தண்டல்காரன் தன் டகமையை செய்வான்லெ.திருக்கோவிலூர்லெ மட்டும் அல்ல. திருவண்ணாமலையிலும் நகைக்கடையில் கலாட்டா செய்தவர் போலீஸுஷ்! ஆஃபீசர்! நம்ம மதுரை சயராசூ பங்களுர்லெ நடுத்தெருவிலெ பொம்பளைப்பிள்ளையை அடிச்சு உதைச்சான் இல்லை. பங்களுர் போலீசுக்கு நல்ல மனசு. இது சின்ன குடும்ப பிரச்னை அப்டின்னு சயராசுக்கு வக்காலத்து வாங்கிக்கிணு... ஆண்டவா!
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://origin1.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/kaithi-2802.jpg