Saturday, May 23, 2015

நாளொரு பக்கம் 26

நாளொரு பக்கம் 26


 Sunday, the 22th March 2015

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே.
  • நறுந்தொகை 16


பனங்கனி சுவை பொருந்தியதானாலும், அதனுடைய விதையானது முளை விட்டு, வளர்ந்து வானளாவ செழுமை பெற்றிருந்தாலும், அதனடியில் ஒருவர் கூட அமர்ந்து அதன் நிழலில் இளைப்பாறமுடியாது. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது என்பது உருவகம் ( metaphor).

உருவத்தால் பெரியவர்கள் எல்லாரும் பெருமை உடையவர்கள் என்று கொள்ளலாகாது. அது தான் இந்த நறுந்தொகை எனப்படும் வெற்றி வேற்கை செய்யுளின் உட்கருத்து.
-x-

சித்திரத்துக்கு நன்றி: http://mrswarnerarlington.weebly.com/uploads/6/9/0/0/6900648/3040892.jpg?632

Friday, May 22, 2015

நாளொரு பக்கம் 25

நாளொரு பக்கம் 25

 Saturday, the 21th March 2015

भवन्ति नम्रास्तरव फलोद्गमैः
नवांबुभिर्भूमिविलंबिनो घनाः
अनुद्धताः सत्पुरुषा समृद्धिभिः
स्वभाव एवैष परोपकारिणाम् ||

-अभिज्ञानशाकुन्तलम् (महाकवि कालिदास) 
Mahakavi Kalidasa, the unrivalled Dramatist, Poet and the creative writer in Samskritham, is most renowned for his deft, aesthetic and memorable similes and metaphors. They adorn his works like inlaid gems of precious stones. 

The above stanza can be translated to mean: 

Laden with fruits that become heavier by the day, the trees  stoop to conquer - to enable people to pluck and enjoy the sweet fruits.

Similiarly, the clouds pour down the rain, as they can no longer hold the weight of the water.  There are many such descriptions in Tamil literature. In his spiritual exploration, not knowing Samskritham, Kannadasan referred to the limpid eyes of the Devi as “நீருண்ட மேகக்கண்கள்”.
Kalidasa continues in the same vein:

Noble men, when fortune embraces them, do not get puffed up with vainglorius haughtiness, but use their wealth to help others. 
-x-

சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b9/Kalidas_sudesamitran_poster.jpg

Thursday, May 21, 2015

நாளொரு பக்கம் 24

நாளொரு பக்கம் 24


Friday ,the 20th March 2015

I shall live badly if I do not write, and I shall write badly if I do not live. Françoise Sagan playwright and novelist (1935-2004). 

A contemporary creative writer, rose to international fame at age 19 when the English translation of her 1954 book - Bonjour Tristesse : Hello Sadness! reached No. 1 ranking  on the New York Times best-seller list. It was the story of a teenager accepting sexual disillushionment. It sold a million copies and has been translated in 20 languages; Her fame also dimmed somewhat, due to changing tastes.

Coming to the quote from her, it can be reasonably held that many writers dwell in their writings and that their writtings are authentic only if they reflect her/his soul.
-x-

பூதாதிகாசம் ஓரங்க நாடகம்

பூதாதிகாசம்
ஓரங்க நாடகம்
Inline image 1

இன்னம்பூரான்
28 02 2014

இடம்: கரும்புலியூர் ஆஸ்தானம்.
நேரம்: சாயும் காலம்.
பொருள்: அதுவும் இதுவும்.
ஏவல்: ஜரிகா புத்ரன் என்ற ....
பாத்திரங்கள்: பூதாதிகாசத்தனார் (தலை மாந்தர்)
மாத்ருதீபனார் ( அவருடைய மைத்துனர்)
         ஏழுமலை ( எடுபிடி)
அபய குசலாம்பிகை ( தலைவி)
(திரை விலகுகிறது)
வீட்டு முகப்பு: அபயகுசலாம்பிகை விலாசம். ஹால். சோஃபா இத்யாதி.
ஏழுமலை தூசி தட்டுகிறான். பூதாதிகாசத்தனார் சுருட்டுப் பிடிக்கிறார். சாம்பல் ரத்னகம்பளத்தில் விழுகிறது. மாத்ருதீபனார் மோட்டுவளையை பார்த்துக்கொண்டபடியே அளவளாவுகிறார். அபய குசலாம்பிகை பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டு, அதை பத்து மடங்கு அதிகப்படுத்துகிறான், மாடிப்படியிலிருந்து குதித்து ஆரவாரம் செய்து கொண்டு இறங்கின ஜரிகா புத்ரன். பூதாதிகாசத்தனாரின் சுருட்டை பிடுங்கி ஊதுகிறான். புகை மண்டலம். அவன் தான் ரெஸிடெண்ட் குட்டிச்சாத்தான். 

அ (அபய குசாலாம்பிகை):  [தனி மொழி] ‘எங்க அப்பா மஞ்சக்காணியாக கொடுத்த மாளிகை இது. ரத்னகம்பளத்தில் சாம்பல் போடுகிறார். ஒரு பிடி பிடிக்கிறேன் பாரு.’
[கட கடா என்று பாத்திரம் உருளல். குமுறலோ! கூப்பாடோ ! யான் அறியேன். ]
அ: (குரல் எழுப்பி.) ஏழுமலை. ஐயாவை ஒரு நிமிடம் உள்ளே வரச்சொல்லு. காப்பித்தண்ணி ஆறிப்போவுது. 
ஏ: அவரு எங்கே வரப்போறாரு. போத்தல் கேட்டாக. மச்சின பிள்ளையும் ஒரு கோப்பை வேணும்னாக.
ஜரிகா புத்ரன் மெனக்கட்டு வந்து காப்பியை குடித்து விட்டு, எஜமானியம்மாவின் மூக்குக்கண்ணாடியை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறான். அமைதிக்குரல் கொடுத்து, ஏழுமலை அதை மீட்டு பாகசாலையில் கொடுக்கும் போது ஜரிகா புத்ரன் இருந்த விஸ்கியை குடித்து விடுகிறான்.
அவனை தவிர, எல்லாரும் எரிச்சலோடு. அவனோ நிச்சலத்தத்துவன்.  மாத்ருதீபனாரோ சஞ்சலபுத்தி மனிதன். பூதாதிகாசத்தனாரோ ‘லொக்கு’ லொக்கு’ இருமல். காசநோய் உச்சக்கட்டத்தில். அவர் செத்தால் சொத்து நம் கையில் என்கிறான், ‘சூழ்ச்சி’ மாத்ருதீபம். அவனை அடக்கி வைத்திருப்பது, ஏழுமலை. அவன் தான் சீட்டாட அவனுக்கு கந்து வட்டியில் கடன் கொடுப்பவன். ஏகபுத்திரியாக ஏகபோகமாக வளர்ந்த அபய குசாலாம்பிகைக்கு ஏமாற்றம் தான் மிச்சம். குஞ்சு குளவான் இல்லை. சொத்து என்னமோ கரைந்து வருகிறது. அப்பன் வீட்டு சொத்து. ஆயிரம் பொய் சொல்லில்லே அவுக (அதான் பூதாதிகாசத்தனாருடைய அப்பன்காரரு) பொண்ணெடுத்தார். பையனுக்கு வேலை பர்மாவுலே இன்னாரு. அப்றம் தான் தெரிஞ்சது, அவரு பர்மா பஜாரை சொல்றாருன்னு. அதுக்குள்ளே விரைசா தாலிக்கட்டிப்பிட்டானே.
இனி நாடக மேடை:
மா (மாத்ருதீபனார்) : மாப்பிள்ளை சார்! இந்த குட்டிச்சாத்தானை கொன்னுப்போடணும். ஏழுமலை! அந்த துப்பாக்கி எடுத்துக்கிட்டு வா.
ஏ: துப்பாக்கிலெ ரவை இல்லிங்கலே. பரவாயில்லையா? ஜ.பு. அதை எடுத்து குளத்திலெ போட்டுட்டான்.
பூ (பூதாதிகாசத்தனார்): கொஞ்சம் மெதுவா பேசு மாத்ரு. உங்க அக்கா காதிலெ விளுந்தா ரணகளம் ஆயிடும். ஜ.பு. அவளுக்குத் தத்துப்பிள்ளை மாதிரி. அந்த மலையாளத்து மாந்திரீகனிடம் மந்திரிச்சுல்லெ உங்கப்பன் அவனை துணைக்கு அனுப்பினாரு.
மா: உங்கப்பன் அது, இதுன்னு பேசினா நான் பல்லை ஒடைப்பேன். உங்கப்பன் யோக்யதை தெரியாதா என்ன? அக்காவோட மஞ்சக்காணி பங்களாவுக்கு போலி பத்திரம் எளுதி வச்சவன் தானே. அந்த கணக்குப்புள்ளே அவரு கிட்டேயும் காசு வாங்கினான். எங்கிட்டேயும் வாங்கில்லெ, சொல்லிப்போட்டான். நாங்க சுதாரிச்சுக்கிணோம். அக்கா! கொஞ்சம் வாயேன்...
பூ: உனக்கு ஆயிரம் புண்ணியம் மாத்ரு. அவளை கிளப்பாதே. நான் கிளப்புக்குக் கூட்டிக்கிணு போய் உனக்கு தண்ணி ஊத்ரேன்.
அ: என்ன திட்டம் போட்றீக, மாப்பிளையும், மச்சானும். வக்கத்த புருஷன். கடங்கார தம்பி. எங்க அப்பா மட்டும் இருந்தா, உங்களை கட்டி வச்சு அடிச்சிருப்பார்.
பூ: (தனி மொழி): இங்க மட்டும் என்ன வாழ்ந்திருச்சாம். ஆட்டிப்படைக்கிறா.
ஏ: அம்மா! ஐயா வண்டிக்கட்ட சொல்றாரு. எனக்கு கொஞ்சம் காப்பி தண்ணி ஊத்தம்மா. ஓடிட்றேன்.
அ: ஹாலில் வந்து சத்தம் போடுகிறாள்: ‘என்ன நினச்சுக்கிட்டு வண்டி கட்ட சொன்னீக. நான் கோயிலுக்கு போறதா இல்லை. நேர்ந்து கொண்டிருக்கேனே, சிதற்தேங்காய் உடைக்கிறதா. உங்களுக்கு சுயமா சம்பாதிக்கிற புத்தி வரணும். நம்ம மாத்ருவுக்கு நல்ல பொண்ணா அமையணும் தான் வேண்டுதல். டேய்! ஜரிகா புத்ரா! ஐயாவுக்கு தூபம் போட்றா. கண்ணோல்லியோ.
பூதாதிகாசத்தனார் தெருவை நோக்கி ஓட்றார். மாத்ரு கொல்லை பக்கம் ஓட்றான். அங்கே தானே அக்காவிடமிருந்து திருடிய சங்கிலியை புதைத்து வைத்து இருக்கிறான். ஜரிகா புத்ரன் தோண்டி எடுத்துட்டா.
(திரை விழுகிறது)
டிஸ்கி: இது அன்றாடம் நடப்பது தான். நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சம் மாறலாம்.
சித்திரத்துக்கு நன்றி: https://d2nh4f9cbhlobh.cloudfront.net/_uploads/galleries/22032/poltergeist-1.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நாளொரு பக்கம் 23

நாளொரு பக்கம் 23

Thursday ,the 19th March 2015

வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், 

ஒப்ப வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், 

உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும், 

இம் மூன்றும் அருந் துயரம் காட்டும் நெறி.
திரிகடுகம் 5

கோயில் குளமாயினும் சரி, காவேரி பெருக்கு என்றாலும் சரி,  விவரம் தெரிந்தவர்கள் நினைத்த இடங்களில் இறங்கமாட்டார்கள். அத்தகைய இடங்கள் தான் வழங்காத் துறை எனப்படும். அங்கு இறங்கினால் வேகமாக அடித்துச் செல்லப்படலாம். சுழலில் மாட்டிக்கொண்டு மூழ்கி சாக நேரிடலாம். அக்கம்பக்கத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் போகலாம். ‘வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும்’ ஆழம் தெரியாமல் காலை விடுவது போல அமையலாம். தவிர்க்க வேண்டியதே, இது.

அம்மாதிரியே, நம்மிடம் விருப்பம் இல்லாத பெண்களை நாடுவது துன்பம் விளைவிக்கும். ‘ஒப்ப வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும்’ வேண்டா என்றால் நல்லாதனார்.
‘மதியாதார் தலைவாசல் மிதியவேண்டாம்’. அழையா விருந்தினராக, வலுவில் நுழைந்து விருந்துண்பது கேவலம். ‘உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும்,’ செய்கை நமக்கு அவமானத்தை ஈட்டித் தரும். 

எனவே, மேற்படி மூன்று இழிச்செயல்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே, இச்செய்யுளின் சாரம்.

-#-

Wednesday, May 20, 2015

Subramanian Swamy

Hindustan Times Hot News:
When BJP leader Subramanian Swamy was asked to bless a Tamil wedding, by handing over the mangalsutra to the groom, no one expected him to go ahead and try to tie the knot himself.
 
But he went ahead and did exactly the same!  

நாளொரு பக்கம் 22

நாளொரு பக்கம் 22

Wednesday ,the 18th March 2015

वदनं प्रसादसदनं सदयं हृदयं सुधामुचो वाचः ।
करणं परोपकरणं येषां केषां न ते वन्द्याः ॥
Who will not honor such a person - 

who keeps a smile on his face always, 

has compassion in his heart, 

whose speech is controlled, and 

always helps others.


A smile cheers up, compassion is a Divine attribute for the mortals to learn and practice and the speech under control will utter only the Subhashitham.
-x-

சித்திரத்துக்கு நன்றி: http://cdn.nammabookscom.netdna-cdn.com/image/cache/data/narmadha/164-500x500_0.JPG

Tuesday, May 19, 2015

நாளொரு பக்கம் 21

 நாளொரு பக்கம் 21

Tuesday,the 17th March 2015
“Each night, when I go to sleep, I die. And the next morning, when I wake up, I am reborn.” 


Mahatma Gandhi spoke direct. His words convey what they intend. We will gain immeasurably by not reading in between the lines.

Mahatma and his arch-adversary Sir Winston Churchill had the same approach to life and death, as laid down in the first quote. During the War, he left instructions that he was to be woken only for bad news, having gone to bed, saying , ‘Damn it all’! The War was over, Germany having surrendered. He was sleeping. They told him only when he woke up. As to Mahatma, Kingsley Martin says that the whole world was waiting for  the Quit India Proclamation with bated breath, and the Mahtma was curled up and was sleeping like an infant.
As to dreams, all of us dream and agree with him.
Thinking is nothing, but a reflection of one’s dreams in the broadest sense of the term.
Mahatma Gandhi is our Marga Bhandu in more ways than one.

=x=

சித்திரத்துக்கு நன்றி: http://www.verybestquotes.com/wp-content/uploads/2012/07/Mahatma-Gandhi-Quotes-Each-night-when-I-go-to-sleep-I-die.-And-the-next-morning-when-I-wake-up-I-am-reborn..jpg

Monday, May 18, 2015

நாளொரு பக்கம் 20

நாளொரு பக்கம் 20

Monday ,the 16th March 2015

பகை முன்னர் வாழ்க்கை செயலும், 
தொகை நின்ற பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், 
முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - 
இம் மூன்றும் சாவ உறுவான் தொழில்.

திரிகடுகம்  4


பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள்.  (அதாவது) நம்மீது பகையும், பொறமையும், காய்ச்சலும், காழ்ப்புணர்ச்சியும் உள்ளவர்கள் முன்னால் நமது மயிலாட்டமும் வேண்டாம்; ஒயிலாட்டமும் வேண்டாம். அதனால் தான் ‘துஷ்டனைக் கண்டால் தீர விலகு.’ என்றார்கள்.

கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும்.  இது ஒரு உவமை. எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், பொருத்தமும், பொருத்தமான உபகரணங்களும் தேவை.  அமாவாசை இருட்டில்,  தீவட்டி இல்லாமல் நடந்தால், அரவம் தீண்டலாம். The right tool for the right job.

நம்மீது பகையும், பொறமையும், காய்ச்சலும், காழ்ப்புணர்ச்சியும் உள்ளவர்களை விலக்கி விட்டு, மறுபடியும் கூட்டுச் சேர்த்துக்கொள்வதை விட வேறு வினை வேண்டாம்.

இவை மூன்றும்  சாவு நாடுபவன்  தேடி வருவித்து தன்னை வறுத்துக்கொள்பவனின் செய்கையாகும்.

கேவலமான சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை விட நாக்கைப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்ற சொலவடை தமிழில் உண்டு.


-#-
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Flickr_-_don_macauley_-_Shepherd_with_cows.jpg/220px-Flickr_-_don_macauley_-_Shepherd_with_cows.jpg

Sunday, May 17, 2015

நாளொரு பக்கம் 19

நாளொரு பக்கம் 19

Sunday ,the 15th March 2015

चिता चिंतासमा हि उक्ता बिन्दुमात्रविशेषतः ।
सजीवं दहते चिंता निर्जीवं दहते चिता ॥

Samskritham is a beautiful, well-structured language. 


It is said that a simple dot could just throw you off balance by expressing a powerful contrast, at the same time, hiding a more powerful identity.

चिंता denotes worry here.

चिता denotes the funeral pyre.

‘While the funeral pyre burns the dead, worry burns 

the living.’ goes the saying. 

चिता cannot be wished away.

चिंता can be cast away , making for peaceful living.