Saturday, June 6, 2015

நாளொரு பக்கம் 38

நாளொரு பக்கம் 38






Thursday, the 2nd April 2015

தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள்.

திரிகடுகம் 8

தமிழில் தாரதம்யம் என்றதொரு சொல் உண்டு. இடம், பொருள், ஏவல் ஆகியவை கருதி, அதற்கேற்ப பொருத்தமாக செயல்படுவோருக்கு, தற்புகழ்ச்சிக்கு அவசியமே இல்லை. சான்றாக, தொன்மை, பழமை, பாரம்பரியம் ஆகியவற்றை ஆராயும் இடத்தில் நல்ல குடிப்பிறப்பு அருமையாக உதவும். கற்றோர்களும், புலவர்களும், மேதைகளும் வீற்றிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவு கை கொடுக்கும். போர்க்களத்தில் வாகை சூடுவது மட்டுமே குறி. அதற்கேற்ற துணிவு, ஆற்றல், கட்டுப்பாடு தேவை. இவை மூன்றையும் தானாகவே அறிந்து செயல்பட முடியும். 

அத்தகைய உயர்நிலை சூழ்நிலையில் ‘தம்மைக் கூறாப் பொருள்’ தலைமை வகிக்கும்.

-#-





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com


Friday, June 5, 2015

3.பேராசிரியர் தனிநாயகம் அடிகளார்

நான் வளைய வரும் மற்றொரு குழுவாகிய 'மின் தமிழில்'தன்னுடைய முகநூல் [தெய்வ சுந்தரம் நயினார்.] மூலம் தமிழறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் 3.பேராசிரியர் தெய்வசுந்தரம்
 அவர்கள் அவற்றை மீள்பதிவு செய்வதுடன், மற்றவர்கள் அவற்றை தாராளமாக அவரரது தொடர்புகளில் மீள்பதிவு செய்யலாம் என்று சொல்லியதுடன், எனக்கும் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு நகல் அனுப்பியுள்ளேன்.

அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்து இங்கு பதிவு செய்யும் மூன்றாவது இழை, இது. 'அன்றொரு நாள்' தொடரில் அடிகளாரை பற்றி நான் என்றோ எழுதியதின் மீள்பதிவு 3 A என்ற இலக்கம் படி அடுத்து வரும் அதற்கு அடுத்து கலாநிதி கைலாசபதி அவ்ர்கள்.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜூன் 6, 2015


3.பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் ( சேவியர் நிக்கல்ஸ் ஸ்ரனிசுலாசு) 

பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் ( சேவியர் நிக்கல்ஸ் ஸ்ரனிசுலாசு) ( 1913- 1980) … தமிழ் பயிற்றல் , தமிழாய்வு, தமிழ் நிறுவனங்கள், தமிழிதழ்கள் , தமிழ் மற்றும் தமிழர் உரிமை காப்பு … என்று பல தளங்களில் தமிழ்ப்பணி ஆற்றிய பேராசிரியர். ஈழம் பெற்றெடுத்த பேராசிரியர். இலங்கையிலே பள்ளிக்கல்வியை மேற்கொண்டு, 1934-39 – இல் ரோமில் கிறித்தவப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்று, கிறித்தவக் குருமாராக ஆனார். 1940-45 –இல் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியப்பணியைத் தொடங்கினார். 1945-47 – இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும், தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆய்வு மேற்கொண்டு எம்.லிட்., பட்டமும் ( ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ – “ Nature in Ancient Tamil poetry” ) பெற்றார். 1950-51 – இல் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். பின்னர் 1952-55 –இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1955-57 – இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டுக் கல்வியியலில் முனைவர் பட்டம் ( “Ancient European and Indian Systems of Education compared with Special Reference to Ancient Tamil Education”) பெற்றார். அதே காலகட்டத்தில் ஆக்ஸ்போர்டு வதம் ( Wadham) கல்லூரியில் ஆங்கில இலக்கிய விமர்சனம்பற்றிய பயிற்சியைப் பெற்றார். 1957-61- இல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் 61-69 – இல் மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 69 –இல் அங்குப் பணி ஓய்வுபெற்று, சில ஆண்டுகள் பாரிஸ் மற்றும் வேறு சில அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் தனது தாய்மொழியாகிய தமிழ்தவிர, ஆங்கிலம், மலாய், சிங்களம் உட்பட 13 மொழிகளில் திறன் படைத்தவர் என்பது மிகவும் வியப்புக்குரியது. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய ஆய்வடங்கல் தேவை என்பது அவரது கருத்து. அவரே முன்நின்று அச்சில் ஏறிய தமிழ் நூல்களைப்பற்றிய விவரங்களை உள்ளடக்கிய “ A Reference Guide to Tamil Studies - Printed Books” என்பதை வெளியிட்டார். Tamil Studies Abroad” என்ற ஒரு தொகுதிக்குப் பதிப்பாளராக இருந்தார். “ Tamil Culture” என்ற ஒரு இதழை 1954-இல் தொடங்கி, 1967 வரை அதைப் பொறுப்பேற்று நடத்தினார். 1554 – இல் வெளிவந்த தமிழ் – போர்த்துகீசிஸ் அகராதியைத் தேடிக் கண்டுபிடித்து, அச்சிலேற்றினார். கிறித்தவத் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதற்கான தமிழ் இலக்கியக் கழகத்தை உருவாக்கினார். “ Journal of Tamil Studies “ என்ற ஒரு புதிய ஆய்விதழை 1969-இல் தொடங்கினார். அந்த இதழ் இன்றும் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகிறது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் (“ International Association of Tamil Research – IATR) என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பைப் பல பேராசிரியர்கள் துணையுடன் 1964 – இல் தொடங்கினார். 1966 – இல் அதன் சார்பாக முதல் உலகத் தமிழ் மாநாட்டைக் கோலாலாம்பூரில் வெற்றிகரமாக நடத்தினார். பேராசிரியரது தமிழ் ஆராய்ச்சியின் சிறப்புபற்றிப் பேரா. செ. வை. சண்முகம் பின்வருமாறு கூறுகிறார் : ‘அவரது ஆய்வில் என்னைக் கவர்ந்தது அவருடைய சங்க இலக்கிய ஆய்வுகளே. அந்த ஆய்வுகளும் அதைப் பற்றிய வெளிநாடுகளில் செய்த சொற்பொழிவுகளுமே சங்க இலக்கியத்துக்கு உலக இலக்கியத் தகுதி கிடைக்க ஒரு காரணம்’ … ‘ தனிநாயக அடிகள் தமிழ் ஆய்வு இந்திய நிலையிலும் உலக நிலையிலும் பரவ முக்கிய காரணகர்த்தராகவும் இருந்தார். ஐரோப்பிய நூலகங்களில் இருந்த தமிழ் தொடர்பான நூல்களைக் கண்டு தெரிவித்ததன் மூலம் தமிழ் ஆய்வுக்குப் புதிய தரவுகளைத் தேடி தந்த பெருமைக்கு உரியவராகவும் அமைகிறார். அந்த ஆய்வு இன்றும் தொடர்ந்து தமிழுக்குப் புதிய தரவுகளைத் தந்துகொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியது’. ஆய்வுகளோடு தன்னைக் குறுக்கிக்கொள்ளாத பேராசிரியர் இலங்கையில் தமிழ்மொழிக் காப்புக்காகப் போராடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற அங்குள்ள அரசின் கொள்கையை எதிர்த்துப் பல தளங்களில் பேராசிரியர் போராடியுள்ளார். தமிழ் வரலாற்றில் பேராசிரியர் தனிநாயகம் அடிகளாருக்குச் சிறப்பான இடம் உண்டு. பேராசிரியர்பற்றிப் பல நூல்களும் கட்டுரைகளும் மலர்களும் வெளிவந்துள்ளன. மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளங்களைப் பார்க்கவும். http://www.ulakaththamizh.org/JOTSpdf/018103113.pdfhttp://ta.wikipedia.org/s/70zhttp://keetru.com/index.php…




உசாத்துணை: https://www.facebook.com/deivasundaram.nainar/posts/495297773961038

நாளொரு பக்கம் 37

நாளொரு பக்கம் 37

Wednesday, the 1st April 2015

वदनं प्रसादसदनं सदयं हृदयं सुधामुचो वाचः ।
करणं परोपकरणं येषां केषां न ते वन्द्याः ॥

There is such a thing called personal magnetism. Some call it charisma. It is formless, but is visible even to the visually challenged. Stroking the cheeks of Jawaharlal Nehru, Helen Keller commented on his mellow kindness. You cannot discover its whereabouts, as it lies deep within. You cannot hear it, as it lies hidden in words, not uttered.
You see it toiling around, but cannot figure it out.

And, it is ever-present everywhere, as thought, word, and deed.

Literally translated, this Shubhashitham means:

“Who will not honor such a person - who keeps a smile on his face always, has compassion in his heart, whose speech is controlled, and always helps others.”

-x-


Thursday, June 4, 2015

பேராசிரியர் சுப. திண்ணப்பன் -பேராசிரியர் தெய்வசுந்தரம்


நான் வளைய வரும் மற்றொரு குழுவாகிய 'மின் தமிழில்'தன்னுடைய முகநூல் [தெய்வ சுந்தரம் நயினார்.] மூலம் தமிழறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் பேராசிரியர் தெய்வசுந்தரம் 
 அவர்கள் அவற்றை மீள்பதிவு செய்வதுடன், மற்றவர்கள் அவற்றை தாராளமாக அவரரது தொடர்புகளில் மீள்பதிவு செய்யலாம் என்று சொல்லியதுடன், எனக்கும் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு நகல் அனுப்பியுள்ளேன்.

அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்து இங்கு பதிவு செய்யும் இரண்டாவது இழை, இது.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜூன் 5, 2015


பேராசிரியர் சுபதிண்ணப்பன் … அகவை 80. தமிழ் இலக்கியம்இலக்கணம்மொழியியல்மொழிபயிற்றல் ஆகியவற்றில் வல்லவர் கடந்த பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் நாடறிந்த தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியராக விளங்குகிறார்தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பிதமிழ் ( ஹானர்ஸ் – 1959 ) பட்டம் பெற்றுஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் பட்டயம் பெற்றார். 1960 – 67 –இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றினார். 1965 – இல் பழமொழி நானூறு மொழிநடைபற்றி ஆய்வு மேற்கொண்டுஎம்.லிட்பட்டம் பெற்றார். 1967 –இல் மொழியியல்துறையில் இணைந்தார்பின்னர் சீவகசிந்தாமணி மொழிநடைபற்றி ஆய்வேட்டை அளித்துமுனைவர் பட்டம் (1978) பெற்றார். 1970 – 73 – இல் மலேசியாவில் கோலாலாம்பூர் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுக்கான ஆசிரியராகப் பணியாற்றினார். 1973 –இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திரும்பி , இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்மீண்டும் 1979 – 82 வரை மலேசியாவில் பணியாற்றினார். 1982 முதல் இன்றுவரை சிங்கப்பூரில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (NUS) தெற்காசிய ஆய்வியல் நிறுவனம்,  நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) தேசியக் கல்வியியல் நிறுவனம் (NIE), சிம் பல்கலைக்கழகத்தின் (SIM)  தமிழ்மொழிப் பிரிவு ஆகியவற்றில் பல்வேறு பணிகளில் அமர்ந்து பணியாற்றி வருகிறார்பல்வேறு மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயராய்வு மேற்கொண்டுள்ளார். 1989 –இல் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், 1990 –இல் இங்கிலாந்து இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வுப்பணியை மேற்கொண்டார்சிங்கப்பூர் குடிமகனாகவே இன்று ஆகிவிட்டார்அங்குத் தமிழ்மொழிப் பாடத்திட்டக்குழுபாடநூல் உருவாக்கம் ஆகியவற்றில் அங்குள்ள கல்வி அமைச்சகத்தின் குழுக்களில் மிக முக்கியமான பங்கை ஆற்றிவருகிறார்கருத்துப்புலப்படுத்தநோக்கில் தமிழ்க்கல்விகணினிவழித் தமிழ்க்கல்வி ஆகியவற்றில் ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளார்இவரது கல்வி மற்றும் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிபல்வேறு நிறுவனங்கள் இவருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளனஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1973-75 – இல் எனக்கு வரலாற்று மொழியியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர்மாணவர்களுக்கு இனிய பேராசிரியர்சிங்கப்பூர் செல்கிற தமிழகத்துத் தமிழ்ப்பேராசிரியர்கள் இவரது விருந்தோம்பலைப் பெறாமல் தமிழகம் திரும்பமுடியாது.    







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நாளொரு பக்கம் 36

நாளொரு பக்கம் 36


Tuesday, the 31th March 2015
There are stars whose radiance is visible on Earth though they have long been extinct. There are people whose brilliance continues to light the world though they are no longer among the living. These lights are particularly bright when the night is dark. They light the way for humankind. 
-Hannah Szenes(1921-1944): poet, playwright, and paratrooper
Prophecy is, it seems, hanging in the air, like a fragrance that stays with you, unseen. Hannah was a legend in her own life-time, spanning a mere two decades and three years. Her poetic lines, 
“ My God, My God, I pray that these things never end,
The sand and the sea,
The rustle of the waters,
Lightning of the Heavens,...” 
remain embedded in the conscience of Israel, whose National Heroine, she is. She was parachuted into Yugoslavia by the British army, with 36 others during World War II to rescue the Hungarian Jews bound for the German death camp at Auschwitz. Arrested and tortured, she adamantly refused to divulge the details of her mission. She was executed by the firing squad.
What she said , she lived. She lit the way for humankind.


-#-

Wednesday, June 3, 2015

1.பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் - பேராசிரியர் தெய்வசுந்தரம்


நான் வளைய வரும் மற்றொரு குழுவாகிய 'மின் தமிழில்'தன்னுடைய முகநூல் [தெய்வ சுந்தரம் நயினார்.] மூலம் தமிழறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் பேராசிரியர் 
தெய்வசுந்தரம் அவர்கள் அவற்றை மீள்பதிவு செய்வதுடன், மற்றவர்கள் அவற்றை தாராளமாக அவரரது தொடர்புகளில் மீள்பதிவு செய்யலாம் என்று சொல்லியதுடன், எனக்கும் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு நகல் அனுப்பியுள்ளேன்.

அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்து இங்கு பதிவு செய்யும் முதல் இழை, இது.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜூன் 3, 2015
1.பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (1901-80) …. பேரா. தெ.பொ.மீ. என்று அன்போடும் மரியாதையோடும் அனைவராலும் அழைக்கப்படும் மொழியியல் மற்றும் தமிழ்ப்பேராசிரியர். பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகத் திகழ்ந்தவர். தமிழ்மொழி வளத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர். தமிழாய்வு உலகத்தில் ஒரு புதிய 
தலைமுறையை உருவாக்கியவர். மொழி ஆய்விலே உலகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை, வளர்ச்சியைத் தமிழுக்குச் செயல்படுத்திக் காட்டியவர் ... செயல்படுத்தும் ஒரு தலைமுறையை உருவாக்கியவர். மொழியியல் என்ற ஒரு அறிவியல்துறை இந்தியாவிலே … குறிப்பாகத் தமிழகத்திலே அறிமுகமாவதற்குக் கலங்கரைவிளக்கமாய் நின்று ஒளி பாய்ச்சியவர். 18 மொழிகள் தெரிந்த ஒரு பன்மொழிப் புலவர். ‘பல்கலைச் செல்வர்’. ‘ அறிவுலகின் குருதேவர்’. சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (1920) பட்டம் … பின்னர் பி.எல். (1922) பட்டம் … எம்.ஏ., (1923) பட்டம்… வரலாறு, பொருளியல், அரசியல் மூன்றிலும் எம்.ஏ., பட்டங்கள் … பல்வேறு அரசியல் பணிகள். 1934 –க்குள் பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., பட்டங்கள். 1944-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர். 1955 – ஆம் ஆண்டுகளையொட்டி, பூனாவில் ராக்பெல்லர் பவுண்டேஷன் உதவியுடன் நடைபெற்ற மொழியியல் பட்டயப்படிப்புக்குப் பேராசிரியராகப் பணி. 1958-இல் இவருடைய கடும் முயற்சியினால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை நிறுவப்பட்டு, அதன் தலைவராகச் ( இலக்கியத்துறைப் பேராசிரியர் பணியோடு) செயல்பட்டார். 1961 – ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியரானார். 1966-இல் மதுரையில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டவுடன், அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, மூன்றாண்டுகள் பணியாற்றினார். 1970 –இல் இவருக்கு மதுரைப் பல்கலைக்கழகமும், 1977-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1973-74 இல் திராவிடமொழியியல் கழகத்தின் சிறப்பாய்வாளராகத் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு இவருக்குக் ’கலைமாமணி’ பட்டமும், இந்திய நடுவண் அரசு ‘ பத்மபூஷன்’ பட்டமும் வழங்கிச் சிறப்பித்தது. அமெரிக்கா. ஜப்பான், ரஷியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று தமிழின் புகழை நிறுவினார். 1980 ஆம் ஆண்டு மறைந்தார். இன்று நம்மிடையே வாழும் பேராசிரியர்கள் பொற்கோ, கி.அரங்கன் , கருணாகரன் , கமலேஸ்வரன், ஞானசுந்தரம் உட்பட பெரும்பேராசிரியர்கள் எல்லோரும் இவருடைய மாணவர்களே. 1962 – ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேனாட்டு அறிஞர்களுக்குத் தமிழ்மொழி வரலாற்றை விளக்க அவர் ஆற்றிய உரையே “ History of Tamil Language”. இதைப் பூனே பல்கலைக்கழகம் வெளியிட்டது. தற்போது இதனுடைய தமிழாக்கமும் ( ‘தமிழ்மொழி வரலாறு’) ‘காவ்யா’ பதிப்பகத்தின் உதவியினால் நமக்குக் கிடைக்கிறது. 1977 –இல் அவருடைய மேற்கூறிய தமிழாக்க நூல் வெளியானபோது அவர் தனது முன்னுரையில், தனது நூல் 1962 –க்கு முற்பட்ட மொழியியல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அதற்குப் பின்னர் புதிய மொழிக்கொள்கை தோன்றி வளர்ந்துள்ள சூழலில் பழைய நூலை மறுபடியும் அப்படியே வெளியிடுவது மன்னிக்கமுடியாத குற்றமேயாகும் என்றும் கூறுகிறார். இருப்பினும் ஒருவகையான சூழல் நெருக்கடியில்தான் இந்த வெளியீட்டை ஒத்துக்கொண்டதாகவும் கூறி, தனது முன்னுரையில் 36 பக்கங்கள் புதிய மொழியியல் கொள்கைகளை விளக்குகிறார். சாம்ஸ்கி ( Chomsky), ஃபில்மோர் (Fillmore), ஹாலிடே (Halliday), மெக்காலே ( MeCawley) என்று மொழியியலார் பலரின் மொழிக்கொள்கைகளை அவர் மிக எளிமையாக விளக்கிக் கூறியுள்ளது ஒரு நேர்மையான ஆய்வாளர் எப்படி இருக்கவேண்டுமென்பதை ஆய்வுலகத்திற்கு எடுத்துக்காட்டி நிற்கிறது. இலக்கியம், இலக்கணம், மொழியியல் பற்றிய இவரது நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் இவரது பெருமையைத் தமிழ்வரலாற்றில் நிலைத்து நிற்கச் செய்யும். பேரா. தெ.பொ.மீ. நிறுவிய மொழியியல்துறையின் மாணவன் என்ற முறையிலும் அவரது நேரடி மாணவராகிய பேரா. பொற்கோ அவர்களின் மாணவன் என்ற முறையிலும் பேரா. தெ.பொ.மீ. அவர்களின் புதல்வி முனைவர் காமேஸ்வரியின் சொற்புள்ளியியல் - மொழியியல் ( Lexicostatistics) மாணவன் என்ற முறையிலும் நான் பெருமை கொள்கிறேன்.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, June 1, 2015

அன்பும் அழகும் ஆராதனையும்

Innamburan S.Soundararajan

அன்பும் அழகும் ஆராதனையும்
11 messages

Innamburan S.Soundararajan Fri, Oct 4, 2013 at 5:47 AM


அன்பும் அழகும் ஆராதனையும்

இன்னம்பூரான்
Unknownமஹாகவி பாரதியார் புதுவை மாந்தோட்டம் ஒன்றில் அமர்ந்து ‘குயில் பாட்டு’பாடினார். அந்த தோட்டம் மறைந்து விட்டது. குயில் என்னமோ பறந்து விட்டது. பாரதியார் அமரராகி விட்டார். பாடல் தங்கிவிட்டது. மறையாது. நமதுநினைவலைகளும் எங்கெங்கோ சஞ்சாரம் செய்பவை.
அவை பேசத்தொடங்கி விட்டன.
அழகிய சோலை. மலர்க்கொடிகள். பூத்துக்குலுங்கும் செடிகள், காயும் கனியுமாக தாவரமயம். அமர்ந்திருந்த கவிஞருக்கு ஆனந்தமாக இருந்தது. ஒட்டுமாங்கனி தொங்கும் கைக்கெட்டிய கிளையில் ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து அமர்ந்தது. கொஞ்சம் மெளனம். அது மெல்லிய குரலில் இசை பாடத் தொடங்கியது. அமரிக்கையாக அவர் கேட்டுக்கொண்டிருந்தார். சிறகுகள் அடித்துக்கொண்டன. தன்னழகை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கிளியிடம் பேச்சுக்கொடுக்க ஆசை, கவிஞருக்கு. காத்திருந்தார்.
***
என்ன பார்க்கிறாய்?
உன் அழகு என்னை கட்டி இழுக்கிறது.
அதற்குத் தான் என்னை படைத்தார்.
நான் உன்னை ஆராதிக்கவேண்டும் என்று தான் விரும்பினார், இல்லையா?
பூஜை சாமக்கிரியைகள் எல்லாம் தயாரா?
அவள் தன் அழகுக்கு மெருகேற்றிக்கொண்டிருந்தாள்.
இவருக்கோ லாஹிரி ஏறிக்கொண்டிருந்தது.
பஞ்சவர்ணம்! உன்னை ஆராதித்து ஒரு கவிதை படைக்கப்போகிறேன்.
ஓ! அப்படியா! நான் லாவண்யா. என்னழகைப்பார்.
அவள் ஒய்யாரமாக தன் கழுத்தை ஒடித்துக்கொண்டாள்.
இசை இன்பவெள்ளமாயிற்று.
சற்றே பறந்து மற்றொரு கிளையில் அமர்ந்தாள்.
ஊம்! கவிதை எங்கே?
கவிஞர் கவிதை இயற்றலாம் என்று எதுகை, மோனை தேடும்போது…
அப்பனே! எனக்கு சந்தேஹமாக இருக்கிறது.
உன் சொல்லணியில் என் இசை தொனிக்குமோ?
இல்லை, கண்ணே.
சரி, போகட்டும் என் பஞ்சவர்ணங்கள் அழகை வீசி அடிக்குமே. அது வருமோ?
எப்படிம்மா அது இயலும்?
அதெல்லாம் போகட்டும். நான் சிறகடித்து, றைக்கை விரித்து உயர உயர பறப்பேனே?
அதுவாவது வருமோ?
என்னால் முடியாத காரியம், கண்ணே. எந்த கவிஞனும் இவற்றை பற்றி எழுதலாம்.
சொல்லணியில் அவற்றை தத்ரூபமாக எப்படி புகுத்து அமைக்க இயலும்?
அப்படியானால் கவிதையில் நான் எப்படி இருக்கமுடியும்?
கேலியாக சிரிக்கிறாள்.
இல்லை அழகியே. உன் மேல் எனக்கு எத்தனை அன்பு தெரியுமா?
என்ன பேச்சு இது?
சொல்லணிக்கும் அன்புக்கும் என்ன சம்பந்தம்?
பஞ்சவர்ணம் பறந்தாள், உயர, உயர.
களைத்துப்போன கவிஞர் கவிதை மறந்தார்; வீடு திரும்பினார்.
மனைவி கேட்டாள்.
என்ன செய்தீர்? ஒளியும், களைப்பும் கலந்து உள்ளனவே.
அன்புடன் அழகை ஆராதித்தேன்.
எது பறந்தது?
எது மறைந்தது?
எது நிறைந்தது?
தெரியவில்லை.
***
எனக்கு எழுத வராது. ஒரு தாக்கம். ஹரிவம்சராய் ‘பச்சன்’ அவர்கள் எழுதிய 16 வரி கவிதை ஒன்றை படித்ததின் தாக்கம். மையக்கருத்து அவருடையது. தழுவல் என் பொறுப்பு. ஆம். அவர் அமிதா பச்சனின் தந்தை தான். அதற்கும் அவருடைய ‘அன்பு’ என்ற கவிதைக்கும் என்ன சம்பந்தம்?
பிரசுரம்: வல்லமை:Friday, October 4, 2013, 5:19










திவாஜி 
great!




shylaja Fri, Oct 4, 2013 at 8:34 AM

மிக அழகு.  அதிலும் பாரதியை  முதலில் கொண்டுவந்து ஆராதனையை ஆரம்பித்தீர்களே அது  உயர்வு!



coral shree 
அன்பின் இ ஐயா,

அருமை! மிகவும் இரசித்துப் படித்தேன். நன்றி.

அன்புடன்
பவளா


Tthamizth Tthenee 
அற்புதமான​  சொல்லாட்சி
 
அற்புதமான  கற்பனை
 
அழகு கொஞ்சுகிறது கிளியிடமும்   உம்மிடமும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Subashini Tremmel 

எனோ முன்னர் இசையாசிரியரியரிடம் கற்றுக் கொண்ட .. 
பச்சைக் குழந்தையடி கண்ணின் பாவையடி சந்த்ரமதி 
பாடல் திடீரென ஞாபகத்திற்கு வந்தது. அழகின் ஆராதனை தொடரட்டும்.

சுபா



Nagarajan Vadivel 

2013/10/4 Subashini Tremmel <ksubashini@gmail.com>
எனோ முன்னர் இசையாசிரியரியரிடம் கற்றுக் கொண்ட .. 
பச்சைக் குழந்தையடி கண்ணின் பாவையடி சந்த்ரமதி 
பாடல் திடீரென ஞாபகத்திற்கு வந்தது.

மிஞ்ஞானி​

[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Fri, Oct 4, 2013 at 9:32 PM
T
சொல்லவேண்டியதை சொல்லி விடுகிறேன், ஸுபாஷிணி. 
1945:
அண்ணல் காந்தியின் ஆணைக்குட்பட்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கால்பந்து விளையாடிய தூசிப்படலத்துடன், புரோகிதர்கள், குடும்பத்தலைவிகள் கூட ஹிந்தி படித்த போது, என் மனதை உலுக்கிய கவிதை இது. நுட்பம் புரியவில்லை.ஆனால், பிற்காலம் சாந்தி நிகேதனில் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்த ஏ.எஸ் அவர்களின் பாடமே தனி முத்திரை கொண்டது. நான் ஹரிவம்சராயின் மதுஷாலா என்ற கவிதையின் மீது மனதை பறி கொடுத்தேன்.

2013:
என் தங்கையின் பேரனுக்கு அதே பரிக்ஷை அதே பாடம். என் 1945ம் வருட நினைவு உருப்பெற்றது, உமக்கு சந்திரமதி பாடல் நினைவில் வந்த மாதிரி. ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கு எல்லாம் நன்றி.

பார்வதி இராமச்சந்திரன். 
சமுத்திரத்தில் கால் நனைத்துத் திரும்பிய பின்னும் அலைகள் மனதில் ஓய்வதில்லை. அது போல் இந்தக் கவிதையும்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.



Innamburan S.Soundararajan Fri, Oct 4, 2013 at 9:39 PM
To: "vallamai@googlegroups.com"
நம்மடவர் தினமும் சமுத்திரத்தில் கால் நனைப்பவர் தானே. எவெரெடியூப்இன்னம்பூரான்

2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tsparu2001@gmail.com>
[Quoted text hidden]


Aadhiraa 
மிக மிக அருமையான பாரதி புகழ்.  
[Quoted text hidden]
அன்புடன்,
முனைவர். ப. பானுமதி 
(ஆதிரா முல்லை)

Sunday, May 31, 2015

நாளொரு பக்கம் 35

நாளொரு பக்கம் 35


Monday, the 30th March 2015

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா.
- திரிகடுகம் 7

இந்த செய்யுளின் உவமைகள் பாராட்டத்தக்கன. ஒன்று: பொருத்தம். இரண்டு: அழுத்தம். மூன்று: படிப்பினை. 

நோஞ்சானால் பயில்வானை தாக்குப்பிடிக்க முடியுமா? சிறுதுரும்பும் பல் குத்த உதவும். ஆனால், அதனால் குண்டாம்தடிக்கு ஈடு கொடுக்கமுடியாது. நல்லாதனார் கூறிய உவமை: உள்ளல் என்ற சின்ன பறவை வாளை மீனை எடுக்கமுடியாது. அதே மாதிரி, ‘சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்’ செல்வந்தனாக இருந்தாலும் சான்றோர் அவையில் அஃஃறிணையான நன்மரம் தான். இதையெல்லாம் பார்த்தால், ஆழ்ந்த உறக்கத்தில் கண்ட கனவை ஊமையால் சொல்ல முடியாது என்ற உருவகம் நினைவுக்கு வருகிறது என்கிறார்.
தமிழில் உள்ள அறநூல்கள் ஒரே விஷயத்தைக்கூட சுவை கூட்டி, உவமான உவமேயங்களுடன், பல அணிகள் சேர்த்து, எப்படிப் பார்த்தாலும் உறைக்கும் படி உரைப்பது வழக்கம்.
-#-


சித்திரத்துக்கு நன்றிள் http://i.somethingawful.com/u/garbageday/2013/drew/ragesoap.jpg

நாளொரு பக்கம் 34

நாளொரு பக்கம் 34


Sunday, the 29th March 2015

सन्तप्तायसि संस्थितस्य पयसो नामापि न ज्ञायते
मुक्ताकारतया तदेव नलिनीपत्रस्थितं राजते ।
स्वात्यां सागरशुक्तिमध्यपतितं सन्मौक्तिकं जायते
प्रायेणोत्तममध्यमाधमदशा संसर्गतो जायते ॥

Saatveekam, Raajasam, Thaamasam are the three categories under which the people are labelled. All this depends on the company. A serene person can be turned into a hooligan by liquor. An upright and courageous householder may take to renunciation, as Lord Buddha did. The Prodigal Son may return to his father’s hearth, repenting his straying away into bad company. Many a permutation and combination of these three categories and sub-categeries are encountered daily by us.
The metaphor of water in this apt Subhashitham is non-pareil.  A drop of water on a hot iron evaporates so fast that you do not even get to see it. The same drop, well-rounded, shines beateously like a pearl on a lotus leaf. It turns into a genuine pearl indeed, if this tiny drop enters a seashell on the auspicious day of Svathi Nakshatra. 
-x-