Saturday, July 11, 2015

நாளொரு பக்கம் 59

நாளொரு பக்கம் 59



Thursday, the 23th April 2015 
पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्।
सन्तः परीक्ष्यान्यतरद्भजन्ते मूढः परप्रत्ययनेयबुद्धिः॥ 
Puranam means the Ancient. Just because something was utttered long long ago, that does not become sanctified and must be obeyed -for example , crossing the seas, disfiguring the widows, practicing untouchability and a host of obsolete practices.
A poem may be in a novel format. Many a contemporary poem is short and sweet and care little for cadence, rhyme, rhythm, lyrics and all that. That does not belittle its intrinsic worth.
The Wise discern. They critically examine the Old & the New impartially and arrive at the right decision on which to adopt and which to abandon. Unlike the Wise, the foolish one depends on the judgement of others.
Literally translated, this Subhashitham says, 
“Everything is not good simply because it is old; nor a poem should be condemned simply because it is new; the wise resort to the one or the other after (proper) examination; (only) a fool has his mind led by the judgement of another.”
-x-


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, July 10, 2015

நாளொரு பக்கம் 58

நாளொரு பக்கம் 58


Wednesday, the 22th April 2015

கல்கத்தாவில் ஒரு பெரிய பணக்காரன் ஒரு சமயம் ஶ்ரீராமகிருஷ்ணரிடன் வந்து குதர்க்கமாக வாதஞ்செய்தான். ஶ்ரீராமகிருஷ்ணர் அவனிடம், ‘பயனில்லா வாதங்களினால் விளையும் நன்மையென்ன? சுத்தமான நம்பிக்கையுள்ள மனத்துடன் பகவத் நாமாவை ஜெபி. அது உனக்கு நன்மை தரும்.’ என்றார். இந்த நற்போதனையைக் கர்வம் மிகுந்த அம்மனிதன் கவனியாது, மரியாதையின்றி, ‘நீங்கள் எல்லாம் அறிந்து விட்டீர்களா?’ என்று கேட்டான்.  ஶ்ரீராமகிருஷ்ணர் கூப்பிய கைகளுடன் பணிவாய். ‘உண்மை தான்; என்னால் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை தான். ஆனாலும், துடைப்பமானது தான் அசுத்தமாகயிருந்தாலும் தன்னால் துடைக்கப்பட்ட இடத்தை சுத்தமாக்குமே’ என்றார்.
-ஶ்ரீமத் பிரம்மானந்த சுவாமிகளால் தொகுக்கப்பட்டதிலிருந்து.
-#-
இன்னம்பூரான்

Wednesday, July 8, 2015

நாளொரு பக்கம் 57

நாளொரு பக்கம் 57

Tuesday, the 21th April 2015
An honest man speaks the truth, though it may give offence; a vain man, in order that it may. 
-William Hazlitt, essayist (1778-1830)
Virtually forgotten by contemporary literary trends, William Hazlitt was first and foremost an essayist of renown in his time; he was versatile though and was even a painter. In this particular quote, we can see his using the same words with such a subtle nuance that there is word-play, but, with serious intent. 
Truth is not always pleasant - say the stark truth behind red sanders. An honest man will not flinch from telling the truth about the mafia, though it may displease the High & Mighty.  A vain man also tells the truth - about the concert being not up to the mark in his reckoning - with the specific intent to cause offence to the musician.
In other words, the truth gets tarnished when the intention is to cause hurt. Truth, the supreme virtue, is mere dust, if the handler is vainglorious, ego-centric, hurtful. Even if it causes offence by its very nature, if spoken by an honest man, people are more likely to take to the lesson than take offence.
-x-

Image Credit: http://us.123rf.com/450wm/flybird163/flybird1631207/flybird163120700051/14309020-truth-and-lie-choice-symbol.jpg

Tuesday, July 7, 2015

கில்ஜாய்’ கோமளா மாமி: Mark II

இது ஒரு மீள்பதிவு:
*
இதுவும் ஒரு பிரகிருதி
கில்ஜாய்’ கோமளா மாமி

இன்னம்பூரான்

ராஜா பாதர் தெருவிலே அந்த நெய்கொட்டான் மரத்துக்குப் பக்கத்து முடுக்கு தெருவில் மூணாவது வீட்டில்  ஏழாவது ஒண்டுக்குடித்தனக்காரி தான் அவள். நாப்பதிலெருந்து அறுபது வயசுக்குள்ளெ. ஒரு நாள் கைகேயி மாதிரி விரித்த தலை அலங்கோலமா நிக்கச்சே அறுபது வயசுன்னு தோணும். அவளே ஆரணி பட்டுப்புடவை சரசரக்க கார்த்திகை தீபம் ஏத்தச்சே நாப்பது வயசு மாதிரின்னு, (நான் என்னத்தைக்கண்டேன்.) சுடுகஞ்சி ஆராமுது சொன்னான்.  அவனுக்கு சுடுகஞ்சின்னு பேர் வச்சதே, அவள் தானே. அந்த கதை பெரிய கதை. சொன்னா, ஊர் சிரிச்சுப் போய்டும். தூணுக்குப் புடவை கட்டினாக்கூட மோகித்து போற ஆராமுது ஒரு பொம்மனாட்டிப்பித்து. இவ கிட்ட எங்கே மாட்டிண்டான், எப்போ மாட்டிண்டான், எதுக்கு மாட்டிண்டான்னு கேட்டா மழுப்புவான். நாக்கைத்துருத்தி சிரிச்சுப்பான். ‘போடா! சோப்ளாங்கி! உனக்கு வயசு பத்தாது’ என்று சொல்லி கை கொட்டி சிரிப்பான். உனக்கு இங்கிலீஷ் தெரியுமோ? இனண்டோ னு ஒரு வார்த்தை. சொல்லாம சொல்றது. தண்டியலங்காரத்திலெ விபாவனை அணி, விபரீத அணி என்றெல்லாம் சொல்றாளே, அது மாதிரியா ன்னு கேட்காதே. நான் என்னத்தைக்கண்டேன்? படித்துக் கரை கண்டவாளைக்கேளு. எது எப்படியோ? ‘சுடுகஞ்சியின்’ இனண்டோ எல்லாம் பொய். 

வாழாவெட்டின்னு கோமளா மாமியை பத்தி அம்புஜம் பாட்டி அலுத்துண்டா ஒரு நாள், அவளோட நாராசம் பொறுக்காம. வாஸ்தவம். அவளோட துக்கிரிநாக்குலெ மாட்டிண்டா சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா. குடக்கூலியை ஒழுங்கா முதல் தேதியே, ‘தண்ணி வரல்லை; ஓடு மாத்தினாத்தானே, ஒரே தேளு; சாக்கடை அடச்சுண்டு இருக்கு.’ இப்படி லொட்டு, லொசுக்கு மண்ணாங்கட்டி என்று ஆயிரம் கம்ப்ளையிண்டோட கொடுப்பாளா, ஸ்டோர் ஓனர் மணி ஐயருக்கு ஒரு மாதிரியா இருக்கும். மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது. ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். ‘கில்ஜாய்’ கோமளா மாமி குடித்தனம் இருந்தாலும் பிரச்னை. காலி பண்ணாலும் பிரச்னை.

ஒரு உரையாடல்:

மணி ஐயர் (தனி மொழி): தெரியாமலா ‘கிருத்திரமம்’ கிட்டு அவளுக்கு ‘கில்ஜாய்’ னு பேர் வச்சான். ஊரையே வாழாவெட்டியாக பண்ணிடுவாளே! ( செயற்கை புன்வறுவல் வரவழைத்துக்கொள்கிறார்).

மணி ஐயர்: கோமளம்! (அவர் பார்வை அப்போ சரியாக இருக்காது. கோமளத்தின் கண்ணிலிருந்து அது தப்ப முடியுமோ? ஊஹூம்!) போனமாசம் தானே வடிவேலு சாக்கடையை க்ளீன் பண்ணான்.  நான் சொன்னா நன்னா இருக்காது. நீ கண்ட குப்பையை போட்றே. அதான்.

‘கில்ஜாய்’ கோமளம்: ‘ஐயர்வாள்’! நீங்க சொல்றது உங்களுக்கே நன்னாருக்கா! எச்சுமி மாமீ! (மணி ஐயரின் பார்யாள்) உங்காத்து....

மணி ஐயர்: (தனி மொழி) ஊர் வம்புனா அவளுக்கு லட்டு தின்ன மாதிரி.  வாய்ச்சவுடால்லெ அவளை மிஞ்சறத்துக்கு ஆள் பிறக்கணும். அதான் அவ புருஷன் ‘வெத்துவேட்டு’ வெங்கிட்டு காததூரம் ஓடிப்போயிட்டான்.
*
மணி ஐயருக்கு சமாதானம் ஆகல்லெ. எந்த புத்துலெ எந்த பாம்பு இருக்கோ? ‘கில்ஜாய்’ கவுத்துவிட்டுட்டா! முனிசிபாலிட்டிக்கு அநாமதேய மனு  கொடுத்தாட்டாள்ணா! எதற்கும் ஆலோசனை கேட்போம் என்று அம்புஜம் பாட்டியாத்துக்குப் போனார். மாயவரத்திலேயே அவள் ஒரு விஐபி. சிங்கிள் உமன் பஞ்சாயத்து. அவளுடைய ஹஸ்பெண்ட் ராகவைய்யங்காருக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆஸ்திகர். நேர்மையான வக்கீல். அவர் காலத்துக்கு அப்றம் அம்புஜம் மாமி எலெக்ஷனுக்கு நிற்க வில்லையே தவிர, அவள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஐபி. அவள் சொன்னாள், “மணி! சில பேர் போக்கை மாத்தமுடியாது. கோமளம் கேட்டதைப் பண்ணி கொடுத்துடு. அவளும் ஒண்ணு கிடக்க ஒண்ணு கேட்டுண்டு தான் இருப்பாள்.’ 
இன்னம்பூரான்
27 11 2013
இன்னம்பூரான்



*
திரு. இன்னம்பூரான்!
இது எங்கே எழுதியது? எதற்கு எழுதியது? யார் எழுதியது என்று கேட்கத்தேவையில்லை. நீங்கள்தான் என்று யூகிக்கின்றேன். படிக்க சுவாரசியமாக இருந்தது. வட்டார வழக்கு பலே!
ப.பாண்டியராஜா
*
நன்றி, ஐயா,
அடியேன் தான் அஞ்சு நிமிடம் முன்னால் என்னுடைய பொழுதுபோக்குக்காக  எழுதியது.  நான் தான் உசாத்துணை ஆசாமியாச்சே. மற்றவர்கள் படைப்பு என்றால் சொல்லி விடுவேன். சொற்கள் இரவல் வாங்கலாம். அவை பொது சொத்து. இது ஒரு தொடர். எண்ணிக்கை மறந்து விட்டேன். எல்லா பிரகிருதிகளும் யான் அனுபவத்தில் கண்ட மாந்தர்களே.
இன்னம்பூரான்
*
அருமையான அனுபவங்கள் - இயல்பான கதைமாந்தர் - சரளமான நடை - இனிமையான பகிர்வு தங்களது. தொடருங்கள்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
*
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்...சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா.
சிறுசா இருந்தால் வாயைப் பிளந்துண்டு கேக்கலாம்,
பெரிசா இருந்தால் காதைப் பொத்திக்கிட்டு செவியைத் தீட்டிக்கலாம்,

நான் 
இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.
நான் 
இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.

Your are a social auditor என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

அன்பன்
*
இது சிறுகதை இல்லை.
கடுகுக்கதை.
மூட்டைக்காரம் உள்ளே.
பொம்மனாட்டின்னு
கொஞ்சம் ஈரங்காட்டினா
அந்த பொம்மனாட்டிகளுக்கே
ஆயிரம் துரோகம் அது.
நாட்டாம மாமிக்கே
நடுக்கம் தான்.
மனுஷாளை
தோல உரிக்காமலேயே
அவா
நெறம் உரிச்சு
நன்னாக்காட்டிட்டேள்.
ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப்
ஹ்யூமன் பெர்ஸனாலிடி.
"இனா"ன்னா
இமயம் தான்
"சொல்"லையே பல்ல புடிச்சு
வித்தை காட்டுவதில்.
-ருத்ரா பரமசிவம்
*
ேரிலியே நடப்பது போன்ற ஒரு நடை 
அருமை 
வாழ்த்துகள் ஐயா 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
*
இவாளால்லாம் பேசிக்கிறதைப் பாத்தா, அதுவும் ருத்ர வீணையிலேயே 'ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப் ஹ்யூமன் பெர்ஸனாலிடி.' அப்டிண்ணு மீட்டிப்பிட்டா என்றால், அடுத்த கட்டத்துக்குக் காய் நகர்த்தலாமோ, ஐயாமார்களே, அம்மாமார்களே?
இன்னம்பூரான்
01 12 2013
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://orig05.deviantart.net/af39/f/2015/165/f/8/the_killjoys_by_autirobo1996-d8xcv7m.png

நாளொரு பக்கம் 56

நாளொரு பக்கம் 56




Monday, the 20th April 2015
कुलस्यार्थे त्यजेदेकं ग्रामस्यार्थे कुलं त्यजेत् |
ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ||
A Time comes when even an ordinary mortal displays superhuman courage ~ the Tigress guarding the cubs, the warrior in the battle-field and so on. The Indian Military Academy subscribes to and proudly displays the 
CHETWODE MOTTO
“ The safety, honour and the welfare of your country comes
first, always and every time,
The honour, welfare and comfort of the men you
command comes next.
Your own ease, comfort and safety comes last, always and everytime.”
To our utter consternation, the humdrum civilians seldom understand the continuing sacrifices silently borne by our Armed Forces. Families are separated; daily living, say in the Himalayan ranges, is harsh; the supreme sacrifice of laying down one’s life is expected of them. Let us learn to be humble and honour them and the veterans.
The above Subhashitham succinctly explains the above theme as under:
“ One should sacrifice one's self-interest for the sake of one's family, one's family for the sake of one's town members, one's town members for for the sake of one's nation, and sacrifice the whole earth for the sake of one's soul's enlightenment.”
-x-






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Google TV

Absolutely enchanting! Tk U Google for the lovely Search Engine dressed up today.

https://www.google.co.in/webhp?tab=mw&ei=gX-bVfzsDoKP-QGi0YGABQ&ved=0CAQQqS4oAQ

Sunday, July 5, 2015

நாளொரு பக்கம் 55

நாளொரு பக்கம் 55


Sunday, the 19th April 2015

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும், தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்
ஊர் எலாம் நோவது உடைத்து

- திரிகடுகம் 11

ஒரு நாட்டிய அரங்கம். யாவரும் பார்க்க விழையும் பிரபல நர்த்தகிகளின் நாட்டியம் அறிவிக்கப்பட்டாலும், அழைப்பு இல்லையேல் நுழைவு இல்லை. அங்கு சென்று வாயிற்காப்போரின் மறுப்பை பெறுவது தவிர்க்கக்கூடிய அவமானம். பொது மன்றத்திலோ அல்லது ராஸ்தாவிலோ, ஒருவன், குடி போதையில், உளறிக்கொட்டி, கிளறி மூடுகிறான். ஏளனத்துக்கு ஆளாகிறான்? தேவையா? அன்றே சொன்னாள், அவ்வைப்பாட்டி, ‘ மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்.’ நம்மிடம் நம்பிக்கை இல்லாமலோ, பிடித்தம் இல்லாமலோ, வெறுப்பினாலோ, விலக்க விரும்புவர்கள் இல்லத்துக்கு படையெடுப்பது, அவமதிப்பை தேடிப்பிடிக்கும் அசமஞ்சம். அதையும் தவிர்க்கவேண்டும் என்று உபாயம் சொல்கிறார், நல்லாதனார். 

-#-
சித்திரத்துக்கு நன்றி: http://screencrave.com/wp-content/uploads/2009/05/theunivitedheader09-5-1.jpg