Saturday, July 18, 2015

நாளொரு பக்கம் 67

நாளொரு பக்கம் 67



Saturday, 9th May 2015
காபந்து
இந்தியா எளிதில் விடுதலை பெறவில்லை. அந்த காலத்துத் தியாகசுடர்களின் வெம்மையில் நாம் குளிர் காய்கிறோம். இலவசத்துக்கும், காசு, பணம், பிரியாணி, சாராயம் போன்ற இழிவுகளையும், கழிவுகளையும் வெட்கம் இல்லாமல் உண்டு பருகி, காந்தி மஹானுக்குக் கொடுத்த வாக்கை மறந்து, தரம் கெட்ட வகையில் வாக்கு அளித்து, மக்களை சுரண்டுபவர்களை நம் பிரிதிநிதிகளாக நியமனம் செய்து, அதன் தீநிமித்ததை அனுபவிக்கிறோம். இது கடந்த சில நாடளாவிய தேர்தல்கள் பற்றிய பொது மக்களின் கணிப்பு. இருந்தும், சில தேர்தல்களில் பாமரமக்கள் மிகவும் போற்றத்தக்க பொறுப்புடன் வாக்களித்ததை மறப்பதற்கில்லை.
இந்த பின்னணியில் மற்ற நாடுகளிடமிருந்தும் கற்றுக்கொள்வதிலும் தவறு யாதும் இல்லை. ‘திருமங்கலம்’ என்ற அமங்கலச் சொல்லை தேர்தல் அகராதிக்கு கொணர்ந்த தமிழகம், இன்று இங்கிலாந்தில் நடக்கும் தேர்தலில் இருந்து சில நுட்பங்கள் கற்போமாக. இன்று காலை 7 மணிக்கு  50 ஆயிரம் மையங்களில் தொடங்கும் வாக்களிப்பு இரவு 10 மணி வரை நடக்கும். அப்போது வரிசையில் நிற்பவர்கள் எல்லாரும் வாக்களித்த பின் தான் சாவடிகளை மூடுவார்கள்.  ஏற்கனவே அஞ்சல் மூலம் 15% வாக்குக்கள் பதிவாகிவிட்டன. இணையம் மூலமாகவும் வாக்களிக்க வசதி உண்டு. பள்ளிகளிலும், சமூக மையங்களிலும், கோயில் மடங்களிலும், மதுசாலாக்காளிலும், வண்ணாந்துறைகளிலும், ஏன் ஒரு பஸ்ஸில் கூட சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. இரவு நடுநிசிக்குள் சில முடிவுகள் அறிவிக்கப்படும்; எல்லாம் நாளை மதியம் முன்னால் அறிவிக்கப்படும். சொல்லப்போனால், இரண்டு தேர்தல்கள் ஒரே சமயத்தில் -பார்லிமெண்டுக்கும், முனிசிபாலிட்டிகளுக்கும். 650 பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், 9000 கெளன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட, எல்லாம் 36 மணி நேரத்துக்குள் ஓவர். இங்கிலாந்துக்காரர்கள் சிக்கனத்துக்கு பேர் பெற்றவர்கள். அதனால், இத்தகைய ஏற்பாடு.
-#-

பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]

பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]
இன்னம்பூரான்
18 07 2015

சோதரிகளும் உள்ளடக்கம், சொற்றொடர் பொருட்டு.

தங்குத் தடையில்லாமல், மருத்துவரை நாடாமல், கருச்சிதைவு நிகழ்ந்தால், அதை விட வேறு வினை வேண்டாம். தயக்கமின்றி, அதை சிசுஹத்தி என்றே சொல்லலாம். ஒரு செய்தி. மும்பையில் 15-19 வயதிற்குட்பட்ட யுவதிகள் போன வருடம் 1,785 கருச்சிதைவு செய்து கொண்டார்கள் என்றும், மேலும் 15 வயதுக்குட்பட்ட 185 சிறுமிகளும் அவ்வாறு செய்தனர் என்றும், மொத்தத்தில் ஒரே வருடத்தில் 30,000 கருச்சிதைவுகள் நிறைவேறியதாகவும் சட்டசபையில் நேற்று (வெள்ளி: 17/7/15) அறிவித்த அமைச்சர் ஏக்நாத் கட்ஸே, வெளிநாடுகளிலிருந்து இணையம் மூலமாக, ரகசியமாக, இந்த சமத்கார யுவதிகளும், சிறுமிகளும் வாங்கியதாகவும் , மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் உயிருக்கே ஆபத்து என்றார். இது நகரவாசிகளின் நரகம் என்று அவர் சொன்னாலும் ஒரு தமிழகக் குக்கிராமத்தில் இப்படி நடந்து, மூடி வைத்த விவகாரம் எனக்கு கிடைத்தது. இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவில் சிறுமிகளும், யுவதிகளும் Plan B One-Step என்ற மாத்திரைகளை சட்டபூர்வமாக வாங்கமுடியும். அவர்களுக்கு நன்கு புரிந்த சமாச்சாரமே என்கிறார்கள், அதிகாரிகள். இங்கிலாந்தில் 24 வாரங்களுக்குள் எந்த பெண்ணும் கருச்சிதைவுக்கு மருத்துவரை, பெற்றோருக்குத் தெரியாமல் அணுகலாம்.  16 வயதுக்குட்ப்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது சட்ட விரோதம் என்றாலும், நடந்து போன விவகாரத்துக்கு தீர்வு காண்பார்களே தவிர தீவிரம் காட்டமாட்டார்கள். (எனக்கு நீதிபதி தேவதாஸ் அவர்களின் மனிதநேயம் நினைவுக்கு வருகிறது. - - -’..It is illegal in England, Scotland and Wales to have heterosexual sex under 16 - and in Northern Ireland under 17.However, in practice prosecutions are rare as long as both people consented and there is no evidence of exploitation or a large age difference.pregnancy, it is important that young people seek advice as soon as possible while there are still some choices left, they say.... BBC.)

சித்திரத்துக்கு நன்றி: http://s3.amazonaws.com/media.wbur.org/wordpress/11/files/2013/04/0405_planb2.jpg

 உசாத்துணை: பிபிஸி.http://news.bbc.co.uk/2/hi/uk_news/england/nottinghamshire/3942353.stm, Indian Express today.
-#=

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

அந்தோ பரிதாபம்!!! தொடர் [3] & [4]



அந்தோ பரிதாபம்!!! தொடர் [3]
இன்னம்பூரான்
ஜூலை 18, 2015

‘ஆவின்’ பாலில் கண்ட கண்ட இடங்களிலிருந்து எடுத்த தண்ணீர் கலந்த வைபோகமும், ஒரு அமைச்சர் வேலையிழந்த அலங்கோலமும் பழங்கதை. இன்றைய செய்தி: 

நங்கநல்லூர் லோகேஷ்வர் ராவ்  வாங்கிய ஆவின் பாலை காய்ச்சி அருந்திய சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டதாம்; ஆவின் பால் வாங்கிய கடையிலும், ஆவின் நுகர்வோர் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்த அவருக்கு சரியான பதில் கிடைக்காததால், நேரடியாக ஆவின் நிறுவனத்தில் புகார் கூறியுள்ளார்.
அந்த பால் பாக்கெட்டுகள் சோழிங்கநல்லூர் கிளையிலிருந்து தயாரிக்கப்பட்டதால், உடனே அந்த கிளையிலிருந்து வந்த ஆவின் நிறுவன அலுவலர் பாலின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பியுள்ளார். இதேபோன்று, நங்கநல்லூர் பகுதியில் வாங்கிய பால் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதாக, மேலும் சிலரும் புகார் தெரிவித்துள்ளனர். ஆமாம்! மண்ணெண்னெய் காசு கொடுத்து வாங்கணுமே. இந்தக்கலப்படம் தாக்குப்பிடிக்குமோ!
-#-

அந்தோ பரிதாபம்!!! தொடர் [4]

டாஸ்மாக் வசனம்: குடி குடியை கெடுக்கும். அது குடியை கொளுத்தும் என்று இனி எழுதப்பட வேண்டும். ராமதுரை நடுத்தெரு வாசி-  நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான்குளம் நடுத்தெரு. மனைவி முத்துலெட்சுமிக்கும் ஆறு வருடமாக, மதுமிதா, ஜெகதீஸ் என்ற இரு குழந்தைகள் பிறந்த பின்னும், நாட்தோறும் லடாய்.  தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த ராமதுரை மிடாக்குடியன்.  இதனால் அவர் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து வந்தார். இதனால் ராமதுரையின் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ராமதுரை கடன் வாங்கியும் குடிக்க ஆரம்பித்தார். இதில் அவருக்கு ரூ.70 ஆயிரம் கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் முத்துலெட்சுமியிடம் வந்து பணத்தை திருப்பி கேட்டனர். இதுகுறித்து அவர் தனது கணவர் ராமதுரையிடம் கூறினார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. மாறாக, குடித்து விட்டு வந்து மனைவி-குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று சின்னகோவிலான் குளத்தில் உச்சிமா காளியம்மன் கோயில் விழா நடந்தது. ராமதுரை வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்தார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த அவரிடம் முத்துலெட்சுமி ஏன் குடித்து அழிக்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதுரை சாப்பிடாமல் வெளியே சென்று படுத்து விட்டார். வீட்டினுள் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் படுத்து தூங்கினர். இரவு 11 மணிக்கு எழுந்த ராமதுரை சமையல் அறைக்கு சென்று மண்ணெணைய் கேனை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்று விட்டார். உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் உயிருக்கு போராடி அலறினர். ஆனால் கோயில் திருவிழா நடந்ததால் அவரின் அலறல் சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிக்குள்ளேயே உடல் கருகி இறந்தனர். போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ராமதுரை சின்னகோவிலான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். குடிப்பழக்கம் குடும்பத்தையே அழித்துவிட்டது என அப்பகுதி மக்கள் வேதனைப்பட்டனர்.

-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, July 17, 2015

கனம் கோர்ட்டார் அவர்களே: 22



கனம் கோர்ட்டார் அவர்களே: 22
Thursday, July 16, 2015, 16:56

இன்னம்பூரான்

பிரசுரம்: http://www.vallamai.com/?p=59663


சட்டம், சட்டம் போடப்பட்ட நிலைக்கண்ணாடி அல்ல. இயற்றப்பட்ட சட்டபுத்தகம் அடித்தளம். உச்ச நீதி மன்றம் அளித்தத் தீர்வுகளுடன் அதை இணைத்து, சட்டம் வகுக்கப்படுகிறது. காலகட்டத்துக்கேற்ப, அடித்தளமும் அசைக்கப்படலாம். இன்று அசைக்கப்பட்டு, தளர்க்கப்பட்டது.

என்ன தான் பெண்ணியம் வாதாடினாலும் ஆணாதிக்கத்தின் பிடி தளர்ந்து போவதில்லை. பெண்ணியம் பாய்க்கு அடியில் புகுந்தால், ஆணாதிக்கம் கோலத்துக்கு அடியில், மயில் ராவணன் போல் புகுந்து, தர்பார் நடத்துவது கண்கூடு. கீதா ஹரிஹரன் என்ற பிரபல எழுத்தாளர் 1999ல் தன்னுடைய மைந்தனின் பெயரில் சேமிப்பு ஒன்றை செய்து, தான் கார்டியன் என பதிவு செய்யப்படவேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் விண்ணப்பம் செய்தார். இது பற்றி 1890 ல் இயற்றப்பட்ட சட்டத்தின் 11வது ஷரத்துப்படி காப்பாளர் பொறுப்புக்கு அப்பனுக்கு முதல் உரிமை; ஆத்தாள் அடுத்த படி தான். நூறு வருடங்களுக்கு பின்னர் அதே தடியடி நடத்துவது கனம் கோர்ட்டாருக்கே சரியாக படவில்லை. ‘கணவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்த கீதா ஹரிஹரன் தான் உண்மையில் அந்த சிறுவனின் பாதுகாப்பாளர். கோர்ட்டார் அப்பனும் ஆத்தாளும் சரி சமமே’ என்று அன்று சொல்லியிருந்தாலும், இந்தியாவில் நடைமுறையில் அது கண்டு கொள்ளப்படுவதில்லை. அதனால் தான் என் ஆத்திரத்தை வெளிப்படுத்த வட்டாரச்சொற்களை பிரயோகிக்கிறேன். எங்கு போனாலும் தந்தையின் சம்மதம் கேட்கிறார்கள். இது பொருட்டு இரு அனுபவங்கள்:

1996ம் வருடம் எங்கள் வீட்டில் ஊழியம் செய்யும் பெண்ணின் பையனை, அவளுடைய விருப்பப்படி ஒரு பிரபல பணக்கார பள்ளியில் சேர்த்தேன். நான் பணம் கட்டும் போதும், மற்றபடியும் மிகவும் மரியாதையாக பழகிய பிரின்சிபால், ‘பையனின் தந்தையில் கையொப்பம், அவன் குடி போதையில் இருப்பதால், வாங்க இயலாது. அன்னையின் கைநாட்டுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்’ என்றவுடன் கொதித்தெழுந்தார். குடிகாரன் மகனுக்கு தான் இடம் தரமுடியாது என்றார். என் தரப்பு நியாயங்களை குப்பையில் கொட்டினார். நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்று சொன்னபின் தான் அடங்கினார். ஆனாலும் மற்ற கழுதைகள் (சக மாணவர்கள்) செய்த களேபரம் பொறுக்கமாட்டாமல், அவனை நானே வெளி கொணர்ந்து, அரசு பள்ளியில் சேர்த்தேன். இன்று பெரிய வேலையில் இருக்கிறான்.

இங்கிலாந்தில் தனித்து வாழும் அன்னைகளுக்கு அரசு உதவி செய்கிறது. ஒரு 18 வயது பெண், தாங்கொண்ணா கடன் பொருட்டு, ஆலோசனைக்கு வந்திருந்தாள், மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு. நிறை பிள்ளைத்தாய்ச்சி. 1890ம் ஆண்டு ஆணாதிக்கச்சட்டம் அருளிய வெள்ளைக்காரன் நாட்டில் அந்த பெண்ணுக்கு அரசு எல்லாம் செய்து கொடுக்கிறது. கருவின் தந்தை பற்றி கேட்டேன். ஏனென்றால், அவனிடமிருந்து நாங்களே வசூல் செய்து, செலவுக்கு பணம் கொடுக்கலாம். தெரியாது என்ற சொன்ன அந்த பெண், அரசு எனக்கு தனித்து வாழ இடம் கொடுக்கும் உரிமையை பெறவே, கர்ப்பம் தரித்தேன் என்று ஒரு போடு போட்டாள்.
இது நிற்க.

சமீபத்தில், நன்கு கல்வி கற்று நல்ல வேலையில் இருக்கும் ஒரு மாது தன்னுடைய ஐந்து வயது குழந்தை பெயரில் சேமிப்பு வைத்து, தன்னை கார்டியனாக நியமிக்க வேண்டி கீழ் கோர்ட்டில் விண்ணப்பம் செய்த போது, அப்பனை பற்றி 1890 சட்டப்படி இணைக்க வேண்டும் என்றார்கள். அப்பனின் பணிகளை பொதுப்படையாக சிலாகித்து, உயர் நீதி மன்றமும் ஒத்துப்பாடியது. இன்றைய ஹிந்து இதழ் தகவல் படி, உச்ச நீதிமன்றம், அவளுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஒரு புரட்சியையே உருவாக்கி விட்டது.

அதன் பலன்கள் இவ்வாறு அமையலாம்.

தனித்து வாழும் தாய்மார்களுக்கு சட்டபூர்வமான அங்கீஹாரம்;
மற்ற நாடுகளை போல் தாயும், தந்தையும் சரி சமானம்;
விவாகத்துக்கு அப்பாற்பட்டு பிறக்கும் குழவிகளுக்கு எல்லா உரிமைகளும் உண்டு;
விலை மாதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். எப்படியோ பிறந்துவிடும் குழந்தைகள் தள்ளுபடி ஆகமாட்டார்கள்;
தனித்து வாழ விரும்பும் பெண்கள் துணிவுடன் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாம்.
தனித்து வாழும் தாய்மார்களுக்கு அபவாதம் குறையும்.
பாரதமாதாவே! உன்னுடைய பெண் சிசுக்களுக்கும் நீ தானே மாதா. அவர்களை பேணி வளர்ப்பாயாக.
-#-
உசாத்துணை: இன்றைய ஹிந்து அப்டேட்.
சித்திரத்துக்கு நன்றி:https://milehighcritics.files.wordpress.com/2012/05/love-child.png?w=300&h=199

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com



ஜமாய் பாபு !!! தொடர் [1] & [2]


அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]
ஜமாய் பாபு !!! தொடர் [1]
கஜானா காலி !!! தொடர் [1]
பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]

இன்னம்பூரான்
ஜூலை 17, 2015

அன்றாடம் பற்பல தகவல் களஞ்சியங்கள் கூறையை பிரித்து கொட்டுவதால், மேற்கண்ட தலைப்புகளில், சுவாரஸ்யமானவை தந்தி போல் சுருக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படும். சட்புட்னு எழுதுவதால், உசாத்துணை மிஸ்ஸிங் ஆகலாம். இஷ்டப்பட்ட போது வரும்.

இங்கே:
ஜமாய் பாபு !!! தொடர் [1]




அது ஒரு மனமகிழ்மன்றம். எல்லாரும் ஜாலியா வருவாங்க. ஜாலியே அங்கு அவர்களுக்கு ஜோலி. இடத்தை அதிகாலையில் காலி பண்ணச்ச ஸூப்பர் ஜாலி. பேரே தேனொழுகும் பெயர்- ஹனிபோர்ன் ரயில்வே கிளப். காரியதரிசி சாம் போல்டர் போல்டா உள்ளே போய் பாக்கிறாரு; அதிர்ச்சியில் மயங்கி விழல்லை என்றாலும், கன்னா பின்னா என்று பீர் பாட்டில்களும், ஒயின் போத்தல்களும் சுக்குநூறாக உடைந்து கிடந்தன. திகில்லெ, ஐயா இங்கையும் அங்கையும் பார்த்தால் குடிகாரன் தடுமாறிக்கிணே ஒரு மாகியோ, வத்தலோ, வடாமோ, வறுவலோ அடுக்கிய பெட்டி மேலே உறங்கறாரு, பெருமூச்சு விட்டுக்கிணே. ஆரு? ஒரு அணில்! தண்ணி போட்ட அணில்!  சுத்தி முத்திபார்த்தார். ஒரே திகில்! அவரே திக்குமுக்காடிப்போய் (பேய் இங்கிலாந்திலே காமன்.) கண்டது யாதெனில், ‘... எங்கு பார்த்தாலும் போத்தல்கள். நோட்டும், சில்லறையும் சிதறியவாறு. பீர் பீப்பாயின் மூடியை எப்படியோ களட்டி, கைப்பிடி மேலே விழுந்து புரண்டு, திறந்து, பீர் சாந்தி நடத்தியிருக்கிறார், அணிலார். தள்ளாடிக்கிணே நகராறு. போதை தான் ஐயமில்லை! ஐயமில்லை!! ஐயமில்லையே!!!


ஜமாய் பாபு !!! தொடர் [2]

‘அணிலுக்கு இருக்கிற தகரியம், தெனாவட்டு, ஆம்பளைக்கு வராது.’ இது நம்ம கோணமூக்கு கோபுவோட பித்தளை வாக்கு. ஆனா நிஜம். சொல்வது எல்லாம் நிஜம். ஆஸ்ட்ரிலேயாவில், ஒரு அழகியை அழவைத்ததொரு அணில். அந்தம்மா போலீஸுக்கு ஃபோன் போட்டு சொல்றாக, ‘சார்! என்னை பின்னால் நிழல் போல் துரத்திக்கிணு வர அந்த பயலை என்ன பண்றது என்று தெரியவில்லை.இப்படிப்போனா, அப்டி வாரான். அப்டிப்போனா, இபடி வாரான். சொல்லிப்பாத்தேன். அவன் கண்டுக்கவே இல்லை. எனக்கு கஷ்டமா இருக்குது சார்.. ‘வந்தனன், வந்தனன்’ என்று அபயஹஸ்தத்தோட போலீஸ் கார் வந்து அவனை அரஸ்ட் பண்ணிட்டாங்க, சார். அவனொரு அணில்.
அடக்க ஒடுக்கமா இருக்கரவங்க, நம்ம க்ரூப்லெ தன்னை அணில் என்பார்கள். இனிமேல் அவங்க அனில் என்று சொல்லிக்கொண்டால் தான் தப்பலாம்.

தகவல்: இன்றைய  நாளிதழ் ஒன்று.

சித்திரத்துக்கு நன்றி:http://www.funnfun.in/wp-content/uploads/2013/12/drunk-squirrel-funny-wallpapers.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]




அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]
ஜமாய் பாபு !!! தொடர் [1]
கஜானா காலி !!! தொடர் [1]
பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]

இன்னம்பூரான்
ஜூலை 17, 2015

அன்றாடம் பற்பல தகவல் களஞ்சியங்கள் கூறையை பிரித்துக் கொட்டுவதால், மேற்கண்ட தலைப்புகளில், சுவாரஸ்யமானவை மட்டும் தந்தி போல் சுருக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படும். சட்புட்னு எழுதுவதால், உசாத்துணை மிஸ்ஸிங் ஆகலாம். இஷ்டப்பட்ட போது வரும்.

இங்கே:
அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]


  1. ‘தமிழக பாடநூல் கழகத்துக்கு இப்போது தலைமையே இல்லை. செயலாளரும் இல்லை. பொது மேலாளரும் இல்லை...(தாமதம்...வேண்டியவர்களுக்கு மட்டுமே ஆர்டர்கள்) ... ஆட்சி மாற்றம் வந்தபோதும் யாரும்...இத்தனை ஆண்டுகளாக முகவுரையை சரி செய்யாத அதிகாரிகள்...மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் புத்தகங்களை திருப்பி வாங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  ...ஜூ வி. 24 06 15.
  2. திருச்சிக்கு அருகே உள்ள குளக்கரை மாநகராட்சி மயானத்தில், இறந்து போன பாப்பாம்மாள் சடலத்தை ஓரம் கட்டி விட்டு, சட்புட்னு, ஊழியர்கள் உறவினர்களிடம், ;அவருடைய ‘அஸ்தியை’ பத்தே நிமிடங்களில் கலசத்தில் வைத்துக்கொடுத்தவுடன், சந்தேகத்துடன் தடாலடியாக உறவினர்கள் உள்ளே சென்றால், அங்கே பாப்பாம்மாள் பாடி கிடக்கிறது, அநாதையாக. அடி நொறுக்குப்பிட்டாங்க. பசங்களும் ஓடிட்டாக.... தினமலர்: 16 07 2015
  3. ஹெல்மட் போடாவிடின், வண்டி, உரிமம் எல்லாம் பணால் என்று டமாரம் போட்டபின், சென்னை செல்லும் வழியில் கண்ட காட்சிகள்: பேட்டைகளில் சட்டத்துக்கு மட்டம் தான். ஒரு வண்டியோட்டி கூட ஹெல்மட் போடவில்லை. மற்றபடி சர்வம் ஹெல்மட் மயம், பின் சீட் பெண்ணரசிகளைத் தவிர. நாலு நாள் ஆச்சு. பழைய குருடி கதவை திறடி. சில மஹானுபவர்கள் ஹெல்மட்டை எதிர்த்துக் கோர்ட்டுக்கு போனார்கள். அதிரடி நோ தான் பதில்!
[தொடரும்]



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVWzD8ovVVP7oEvxI9Ll8iW7vWb8YWBn-w7ynPJNZaCw2PI_MRksuIm_gNg8A3zy846ikgjD-PZalmP0eQ8pk04vCqyP1slxX2wWw1zz01NY3KCjpvPSYbb4slC8wmXEQYZ41az2_iMV8/s400/sans-titre+helmet.png

Thursday, July 16, 2015

நாளொரு பக்கம் 65


நாளொரு பக்கம் 65




Monday, the 4th May 2015

“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
  • - From “Auguries of Innocence” by William Blake

William Blake is not merely re-readable; he is refreshingly with us all the time.  So mystical are his writings that we think that we grasped his simple words; it is an illusion. We miss the wood for the trees and unless we re-read again and again, we miss the trees also! There are no simple answers and no single answer in Blake. This is true of Scriptures also.

The poem is a longer one and every line is fragrant. One could hardly do justice to these four lines in one page; one could write many books on each line. 
To see a world in a grain of sand...

Try it. So true it is. Whatever we behold, we see what our minds wish to see. A bewitching beauty passes by. One is physically attracted to her like a magnet. The other sees Divinity in her presence.  The third person, an elderly lady visualizes her daughter in law in her! The Beauty, Sirs, lies in the eyes of the beholder. So, one could , by turning his mind on Universal Love can visualize it in a ‘grain of sand.  And, the wild flower, by its sheer beauty and fragrance can turn your head and the ecstasy is the Gateway to the very Heaven. True. One can hold the very Infinity in own hand by the simple act of willing it. It is something akin to, I dare say, Nirvikalpa Samadhi.

To imprison Eternity into in hour is something of a tall order. Blake wrote these lines in 1803 and they saw print after seven decades. Much later, very much later, Einstein’s Relativity, Stephen Hawking’s approach to Time and the Hadron Collider seem to be on the way to grasp his mystical saying. I know this is incomplete. It is better to open the Idea, instead of wallowing in self-pity.
-x-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com






Wednesday, July 15, 2015

நாளொரு பக்கம் 61

நாளொரு பக்கம்  61



Saturday, the 25th April 2015

An age is called Dark not because the light fails to shine, but because people refuse to see it.

-James Albert Michener, novelist (1907-1997)

James Michener was no ordinary human. As a neonate, he was a ‘left over’and was rescued by his benefactors, who gave him their name. A prolific writer, he contributed to many charities. It is worth our while to explore his enigmatic epigram above.

Ships turn to the lighthouses for safelanding-guidance. Cardinal Newman prayed, “Lead! Kindly Light!’ . Gandhiji adopted it. We seek the inner light also, though we resort to delightful vagaries of vagueness, when asked to share the Bliss. Most of us from different backgrounds pray to the Life-giver in the Sun God. In other words, the inadequate human always craves for the illumination of wisdom. He strives, falters, gains and also loses the Paradise. James Mitchener is of the view that the Light is always there and its shine never gets dull; it is we, who falter and somehow manage to remain in the dark alleys.

The whole of his saying is a metaphor for our missing the wood for the trees and also the trees in the bargain, because of our shortsightedness.

-x-

Image Credit: http://i.ytimg.com/vi/q7i5D_9wNPo/0.jpg


Tuesday, July 14, 2015

நாளொரு பக்கம் 60

நாளொரு பக்கம் 60






இன்னம்பூரான்
ஏப்ரல் 22, 2015
சொல்லும் பொருளும் தான் மொழிக்கு மெருகு ஏற்றுபைவ. ‘நீர்’ என்ற சொல் தாகம் தணிக்கும் திராவகத்தையும் குறிக்கும்; உம்மையும் குறிக்கும். ஒரு சொல்லுக்கு இரு பொருள். பரம்பொருள், இைறவன், கடவுள், ெதய்வம் எல்லாம் ஒன்ேற. ஒரு பொருளுக்கு பல சொற்கள். கடவுள் ஒரு பொருளா என்பது ேவறு விஷயம். இது நிற்க.
சால்ஜாப்பு என்றதொரு சொல் தமிழில் உண்டு. அதற்கு ‘சாக்குபோக்கு’/ பொருத்தமற்ற சமாதானம் என்று அகராதி பொருள் கூறுகிறது. சவால்-ஜவாப் (வினா- விைட) என்ற ஹிந்தி சொல்லின் தமிழ் இறக்குமதி: சால்ஜாப்பு. நாம் தினந்தோறும் பல விஷயங்களுக்கு சமாதானம் சொல்கிறோம், பொருத்தமில்லாவிடினும். மகாகவி பாரதியாரின் ‘கண்ணன் என் ேசவகன்’ என்ற தத்துவப்பாட்டிலிருந்து சில வரிகள்”
'ஏனடா நீ ேநற்ைறக் கிங்குவர வில்ைல' ெயன்றால் பாைனயிேல ேதளிருந்து பல்லால் கடித்த ெதன்பார்;
வீட்டிேல ெபண்டாட்டி ேமற்பூதம் வந்தெதன்பார். பாட்டியார் ெசத்துவிட்ட பன்னிரண்டாம் நாெளன்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்...’
பொருத்தமான பொய் சொல்வது ெமத்த கடினம். ஒரு பொய்க்கு சால்ஜாப்புக் கட்ட பல பொய்கள் சொல்ல ேவண்டியிருக்கும். நம்பிக்ைக நீர்த்துப்போய்விடும். அதனால் தான் உலகப்புகழ்வாய்ந்த தத்துவ ஞானி ஆல்டோஸ் ஹக்ஸ்லீ கீழ்கண்டவாறு கூறினார்.
‘Several excuses are always less convincing than one. -Aldous Huxley, novelist (1894-1963)
*
Footnote: I have escaped today with one சால்ஜாப்பு !
சித்திரத்துக்கு நன்றி: http://comps.canstockphoto.com/can-stock-photo_csp16292953.jpg

இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com