Sunday, August 23, 2015

என்னத்தைச் சொல்ல? -8 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6

என்னத்தைச் சொல்ல? -8 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)

இன்னம்பூரான்
ஆகஸ்ட் 23, 2015

தாடி பத்தி எறியச்சே, பீடிக்கு நெருப்பு கேட்டானாம்! நம் நாட்டில் நடக்கும் விநோதங்களில்
சில, சிரிக்கவும் முடியாது: அழவும் முடியாது. தலைலெ துண்டுப் போட்டுக்கொண்டுட்டுக்கொண்டு, வங்காள விரிகுடாவில் முழுக்கு போடவேண்டியது தான். பாடியை வச்சுக்கிணு, விதண்டாவாதம் செய்வார்கள் தண்டல்காரர்கள்.

சூடான செய்தி. செருப்பை கையில் எடுத்துக்கொள்ளவும். அடிக்கணும் இல்லையா? விஷாலக்கிளமையில் காலை 6.18 க்கு பரைய்லி எனப்படும் ஸ்டேஷன் பக்கத்து ஷம்ஷான் பூமி ( தெரிஞ்சு தான் பேர் வச்சாங்களோ!!!), தண்டவாளத்தில் விழுந்து, ரயில் ஏறி, நசுக்கி ஒரு இளைஞர் செத்துப்போனான். பாடியை எடுப்பதில் தகற்ற்றாறு. ஜிஆர்பி போலீசும், பரைய்லி போலீசும் லத்திச்சண்டை போடல்ல. அதான் பாக்கி. வாயால் ஒருவரை ஒருவர், யார் பாடியை எடுக்க ஜூரிஸ்டிக்‌ஷன் பற்றி வாய்ச்சண்டை மணிக்கணக்காக போட, அந்த சவத்தின் மீது 16 ரயில் வண்டிகள் ஓடி விட, சவம் சபித்துக்கொண்டே ஓலமிட்டது என்று தோற்றம். ஆறு மணி நேரம் கழித்து வந்த டாப் ஆபீசர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் லடாய்! அப்றம் சவத்தை மூட்டையாகக் கட்டி, சவக்கிடங்கில் எறிந்தார்கள். பரிசோதனை நடந்ததாம். எதை என்ன பண்ணி அறுக்கமுடிந்தது என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்! அப்றம் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் நடக்குமாம். மண்ணாங்கட்டி! தெருப்புழுதி! அறிவு கெட்ட மாந்தர்கள்.

இந்த மாதிரி தான் அன்றொரு நாள் ஒரு கயவன் அடையாறு பகுதியில் தன்னை பெற்ற அன்னையை தெருவில் செம்மையாக அடித்து, சாக்கடையில் தள்ளி பேயாட்டம் ஆடினான். குடிக்க காசு தரவில்லையாம். இரண்டு போலீஸ்காரர்கள் ( சாஸ்திரி நகர் & பெசண்ட் நகர்) பீடி குடித்துக்கொண்டு நின்று இருந்தனர். நான் புகாரித்தேன். என் பதவியை அறிவித்து, டி.ஜி. என் சக மாணவர். அந்த கழுதையை அரெஸ்ட் செய்யுங்கள் என்றேன். ‘சார்! உங்களுக்கு ஏன் வம்பு. இவன் பெரிய புள்ளி’ என்றார்கள். நான் குறுக்கிடப்போனேன். எனக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவர், என்னை இழுத்துப் பூட்டி, ‘சார்! அவன் ரெளடி ஷீட்டர். கொலையும் செய்வான்’ என்று கை கூப்பி வேண்டிக்கொண்டார். வீட்டுக்கு ஃபோன் செய்து, அவர் புகாரிக்கவே, நமக்கு செம டோஸ்! 

என்னத்தைச் சொல்ல!
-#-
உசாத்துணை: 
Dna_Article_Middle_300x250_BTF

சித்திரத்துக்கு நன்றி: http://www.vinavu.com/wp-content/uploads/2008/11/சாரு-நிவேதிதா-ஜெயமோகன்.jpg

இன்னம்பூரான்