Friday, October 2, 2015

"செல்லுலாயிட் வெங்காயம்"

"செல்லுலாயிட் வெங்காயம்"

இன்னம்பூரான்
02 10 2015
கனவு காணாத மானிடர்கள் அரிது. நனவில் இருப்பது கனவில் வந்தாலும் சங்கடம் தான். அது திரிந்து பிரிந்து வரும். எண் சாண் உடம்புக்கு இடது கால் கட்டை விரல் பிரதானமாக வரலாம். தலை பிரிந்து தனியே ஓடலாம். ‘கனவே! கனவே! ஒரிஜினல் கனவே! வா! வா!’ என்று வந்தாலும் வம்பு. உள்ளதை உள்ளபடி பெல்ஜியம் கண்ணாடி போல காட்டி, இலக்கியம் போல ஒரு கலக்குக் கலக்கி விடும். போதுமப்பா இந்த பீடிகை, சமாச்சாரத்தை சொல்லுடா! என்றார், அந்த பெரிசு; தாடியும் மீசையுமாக இருந்தாலும் தாட்யமாக இருந்தார். துர்வாசரொருபாகமாக இருந்த வசிட்டர் போல் தோற்றம். அவர் சொல்லில் திடம் இருந்ததால், என்னால் தப்பி ஓட முடியவில்லை, அந்த சொப்பனத்தில், மூன்றே பாத்திரங்கள்: பெரிசு, டவுசருக்கு மாறின இளசு, ஒம்மாச்சி. 

கனவில் வந்தது ஒரு ஓரங்க நாடகம். ஒம்மாச்சியே விதூஷகன். டிக்கெட் வாங்காமல் நான் குட்டிச்சுவர் மேல் குந்தியிருந்ததால், யானொரு பாத்திரமில்லை. அரங்கத்தில் ஒருமுக எழினியும் பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும் தன்னிச்சையாக, விலகியும், ‘பொத்’ என்று விழுந்து, மறைத்தும், பாடாத பாடு படுத்தின. அத்தருணம், இது தெய்வசங்கல்பம் என்று மோப்பம் பிடித்த ‘டவுசர்’  பெரிசை பார்த்து செப்பியது யாதெனில்:

“ ஐயா! ராமானுஜ தயா பாத்திரம் என்று ஜபியுங்கள். நல்லதே நடக்கும், திரை விலகி நிற்கும், நாமும் கூத்தடிக்கலாம்.” “என்னப்பா! மடியிலேயே கையை போடுகிறாய். நானோ அண்ணன் பெயரை அலங்கரிக்கிறேன். தம்பியின் தயவு நாடலாமா?” என்று சொல்லிவிட்டு, பெரிசு இடத்தை காலி செய்தது. இளசு, மனைவி கொற்றவையுடன்,  திருக்கோட்டியூர் சென்று பூசை புனஸ்காரம் செய்து விட்டு, வீடு திரும்ப, அன்னை கருணாவிலாசம் அவர்களை பாராட்டினார். தந்தை தயாபரன் அவர்களை ரகசியமாக பாராட்டினார். அண்ணன்  குஸ்திக்கு அழைத்தார். மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவின் அலுவலகத்தில் சரணடைய நினைத்து விழுந்தடித்து ஓடிய இளசை, சிலாரூபத்திலிருந்த பெரிசு, ‘நில். என்னை பார். என் காலடியைப்பார். என் பொன்வாக்கை படி. பகுத்து அறிக.’ என்றார்.

அன்னாருக்கு பல கூழைக்கும்பிடுகளை போட்ட வண்ணம், இளசு, ‘நாங்கள் ப்ரத்ய்ங்கா தேவியிடம் தங்கள் கோட்பாடுகள் பரவவேண்டும் என்று விண்ணப்பம் செய்தோம். திருவேங்கிடத்தான் கிட்ட போய் வேறே கும்பிடணும்.’ என்றார், அளவிலா தயக்கத்துடன். சினம் கொப்பளிக்க, பெரிசு இளசை நோக்கிக் கூறீனார்,.
“ நீ ஒரு "செல்லுலாயிட் வெங்காயம்".
திரை விழுந்தது. கனவும் கலைந்தது. உவமையும் நன்றாகவே தெய்வாதீனமாக அமைந்து விட்டது.
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://i.ebayimg.com/00/s/MTUzNVgxNTAw/$(KGrHqZHJBwE-d,bnSpvBPsV524+ig~~60_35.JPG

Thursday, October 1, 2015

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்


இன்னம்பூரான்
அக்டோபர் 2, 2015

Take that thine is, and go thy way: I will give unto this last, even as unto thee.
-Matthew 20:14

நீரின்றி அமையாது உலகு. நூலின்றி அமையாது அவ்வுலகின் மேன்மை. பொருளாதாரம் என்ற சொல்லைத் தவிர்த்து பொருளியல் என்று எகனாமிக்ஸ் என்ற துறையை வகைப்படுத்துவது சாலத்தகும்.  அத்துறையில் நான்கு நிபுணர்கள் இருந்தால், ஐந்து கருத்துக்கள் வலம் வரும் என்று கேலி செய்வதுண்டு. ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ, ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற பொருளியல் தந்தைகளால் போதிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளியல் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்னால் கூட, நமது பாடபுத்தகங்களில் கோலோச்சின. பின்னரும்!  இத்தனைக்கும் 1860லேயே அதில் புதைந்திருந்த பாகுபாடுகளை, சமுதாய அநீதிகளை அலசி உதறிய ஜான் ரஸ்கினின் ‘Unto This Last’ என்ற நூல் வலம் வந்து, சில மாற்றுக்கருத்துக்களை முன் வைத்தது. சான்றோரை சிந்திக்க வைத்தது. அக்காலத்து பொருளியல் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கியது. அந்த நூல் புரட்சிக்கு வித்திடுகிறது என்று முதலாளித்துவம் அஞ்சியது.

விவிலியத்தில் ஒரு குட்டிக்கதை. திராக்ஷை தோட்டம் ஒன்று. முதலாளி காலையில் சில கூலிகளையும், பின்னர் சில கூலிகளையும் ‘ஆளுக்கொரு தம்பிடி’ என்று சொல்லி அமர்த்தினார். அவ்வாறே கொடுத்தார். சிரமத்துக்கு ஏற்ற கூலியில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டிருந்தவர்களிடம், ‘நான் அநியாயம் செய்யவில்லையே! பேசியதை கொடுத்தேன். ["Friend, I do thee no wrong. Didst not thou agree with me for a penny? Take that thine is, and go thy way. I will give unto this last even as unto thee."] என்றார். சரி தான். ஆனால் சரியில்லை தான்.

அண்ணல் காந்தி புரட்சிக்கு வித்திடும் இந்த நூலை 1904ல், ஒரு ரயில் பிரயாணத்தின் போது படித்த போது, ‘ எடுத்த புத்தகத்தை முழுதும் படிக்காமல் வைக்க முடியவே இல்லை’ என்று தன்னுடைய சுயசரிதையில் பின்னர் எழுதினார். அவர் மேலும் சொன்னது, “...என்னை பிடித்து ஆட்டியது அந்த நூல். அதன் இலக்குகள் தான் எனக்கு அடிப்ப்டை போதனை...என் வாழ்வை அதற்கிணங்க அமைத்துக்கொள்வேன்... என்னுடைய மனத்தின் ஆழத்தைத் தொட்ட இந்த நூல் என் கோட்பாடுகளுக்கு கலங்கரை விளக்கு. என் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது, அது” என்றார்.
சுருங்கச்சொல்லின், மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களை மஹாத்மா ஆக்கியது, இந்த நூல் தான். இங்கு நான் பொருளியல் பேசவில்லை.அதற்கு பல பரிமாணங்களும், பரிநாமங்களும் உண்டு. அண்ணல் காந்தியை பற்றி பேசி, அவரை, அவரது ஜன்மதினமன்று, வணங்குகிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.dominantbooks.com/pic/book/big/8178886669.jpg


Sunday, September 27, 2015

புலி வருது! புலி வருது! புலி வருது!



புலி வருது! 

Kairi, the darling tigress of Orissa was rescued from the Similipal forests as a cub by my close friend Saroj Raj Chaudary, the Conservator of Forests. Mothering the cute little one posed no problem. Blackie adopted her as to matter born; Kairi, disobendient ever, will obey her totally. There is a true sensitive story about both. Later about it.