Saturday, January 2, 2016

நாளொரு பக்கம்: III: 002



நாளொரு பக்கம்: III: 002
[Page of the Day]


இன்னம்பூரான்
ஜனவரி 2, 2016

I long for eternity because there I shall meet my unwritten poems and my unpainted pictures. -Kahlil Gibran (1883-1931) [Sand and Foam]

One longs to interpret the mystics and get lost in the conundrums for years. Suddenly, wisdom dawns in a flash from nowhere and is Gone With The Wind, by the time you put pen to paper. The fragrance, though, lingers; so, do Kahlil Gibran's unwritten poems and unpainted pictures. All of them are metaphors. The feel that remains with you during the everlasting spells of deep meditative reflections on nothing in particular, is the fragrance that endures.  The unwritten poems are those that you composed in your subconscious mind.  A many-splendored panorama of love and affection for kindred souls flit through my mind in a dream that I forget; it was a lovely poem, I said to myself then. The day I drowned in a temple pond in my early boyhood, I thought I would die and witnessed a grandiose procession of all my sins committed before reaching the age of five! Seenu, who saved me, said that the whole episode lasted two minutes. I still do not believe him as I had seen many a picture pre-painted for me!  The meaning eludes you. Is it not? So, is the case with me.

Perhaps, his oeuvre  about the erased foot-prints and the swept away foam stands for the ephemeral, the sea and the shore, in some vague manner, representing Kahlil Gibran’s very own ‘Eternal’. Let us recite the opening lines:

‘I AM FOREVER walking upon these shores,
Betwixt the sand and the foam,
The high tide will erase my foot-prints,
And the wind will blow away the foam.
But the sea and the shore will remain
Forever….’
-x-


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com










Friday, January 1, 2016

இனி ஒரு விதி செய்வோம்: 1

இனி ஒரு விதி செய்வோம்: 1

  • Friday, January 1, 2016, 5:30

இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
பிரசுரம் வல்லமை: http://www.vallamai.com/?p=65295

innam
தற்காலம் பொற்காலமில்லை என்று நாம் யாவரும் அறிவோம். பொற்காலம் என்ற சொல்லே ஒரு மயக்கம். மிடாஸ் என்ற ஐதிக அரசன் தொட்டதெல்லாம் பொன் ஆனதால், பட்டினியில் வாடினானாம். நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல காலம். உழைப்புக்கேற்ற ஊதியம். மகவுகளுக்கு தரமான கல்வி. பொறுப்பும், காருண்யமும், திறனும் கூடிய மருத்துவம். ஒளிமயமான வருங்காலத்தை அளிக்கக்கூடிய தனிமனிதனின் ஆற்றலும், சமூகத்தின் பரந்த மனப்பான்மையும், சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனைகளும், தடம் மாறாத அரசும்.
நாம் நிதர்சனமாக அன்றாடம் கண்டும் காணாது விடுபவை: சுண்ணாம்பு காளவாயிலும், செங்கள் சூளையிலும் கொத்தடிமைகள். முறுக்கு பிழிவது சிறார்கள். தேநீர் ஆற்றுவது சிறார்கள். ஆரம்பக்கல்வி அரசின் பொறுப்பு. இலவசம். அதைத் தட்டிப்பறித்தது அரசியல் சாஸனத்தின் உள்ளுறை குறைபாடு. தற்குறியாக ( எழுதப்படிக்கத்தெரியாதவர்களாக) இறந்தது பல ஏழை தலைமுறைகள். அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி அளிக்கப்பட்டது. அதை பிற்காலம் கல்வி தந்தைகள் சூறையாடியதற்கு யார் காரணம்? அக்காலம் பிரபலங்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் செல்வார்கள். தற்காலம், வீடு, மனை, வயற்காடு எல்லாவற்றையும் விற்றால் தான் ஏழைகள், காசை தட்டிப்பறித்து, அதன் பின்னர் பிரமாதமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில், நிவாரணம் நாட இயலும். இது எல்லாமே நமது சமுதாயம் அழுகிப்போகும் சின்னங்களே.
பொது வாழ்வு என்றொரு துறை இருக்கிறது. பொது நலம் நாடுவோர்களின் தோணி, அது. மக்கள் யாவரும் அந்தத் துறையில் அனுபவம் பெறவேண்டும். தனது நேரம், செல்வம், உழைப்பு எல்லாவற்றிலிருந்தும் கடுகளவாவது பொது நலத்துக்கு உழைக்க வேண்டும். சாதாரணமாக, சராசரி மக்களுக்கும் பொதுநலசேவைக்கும் காத தூரம் என்பதை, சில நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டை அலக்கழித்த மழையும், வெள்ளமும், சகதியும் தகர்த்து விட்டது. சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் ஓடோடி முன்பின் அறியாதவர்களுக்கு உதவினார்கள். சாதிமதபேதம் முதலில் தகர்ந்தது. இளைய சமுதாயத்தின் முதிர்ந்த மனப்பான்மையை கண்கூடாகப்பார்த்தோம். தலை வணங்கினோம். யாவரும் சேவகனானோம். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற சொற்றொடர் தாரகமந்திரமானது.
இனி ஒரு விதி செய்வோம்.
பிறந்த குழந்தைக்கு, நாமே முன்னோடியாகத் திகழ்ந்து, பொதுநல சேவை பாடங்கள் நடத்தத் தொடங்குவோம். வளரும் சிறார்களுக்கு சிறிய சிறிய பொறுப்புகள் கொடுத்துப் பழக்குவோம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.quickmeme.com/img/30/3000818e21952986f174bf51237dd650fa11b000adf99846bc2699b9a0113dbb.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நாளொரு பக்கம்: III: 001

நாளொரு பக்கம்: III: 001


இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
“வயது முதிர்ந்துவிடினும் - எந்தை
வாலிபக் களைஎன்றும் மாறுவதுஇல்லை;
துயர் இல்லை, மூப்பும் இல்லை, - என்றும்
சோர்வுஇல்லை, நோயொன்று தொடுவதுஇல்லை;
பயமில்லை, பரிவுஒன்றுஇல்லை, - எவர்
பக்கமும்நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவது இல்லை
நயம்மிகத் தெரிந்தவன்காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். 
~ [செய்யுள் 9: கண்ணன் என் தந்தை: மகாகவி சுப்ரமண்ய பாரதியார்]

தண்டியலங்காரம் என்ற தமிழிலக்கண நூல் ‘பாவிக அணி’ என்ற சொல் அலங்காரத்தை விளக்கும் போது, மையக்கருத்து அமைவதையும் அதை சுற்றி அமையும் மண்டலத்தை பற்றியும் எடுத்துரைக்கும். மகாகவி, கண்ணனை மையப்படுத்தி, அவனை பற்பல உறவுகளாகக் கற்பித்து பாடிய பாடல்களில் மென்மை (காதலன்), கனிவு (காதலி), யதார்த்தமும், பணியின் மேன்மையும் (சேவகன்) எல்லாமே பாவிக அணியாக அமையும். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று மேடையில் உசாவி விட்டு, வீட்டில் அவரை (முதியவர்கள் யாவரையும் தந்தை ஸ்தானத்தில் வைத்து அழைப்பதை மேநாடுகளில் காணலாம். பேச்சளவில் மட்டும்தான் என்று சிலர் சொல்லலாம். அதுவாவது உளதே!) உதாசீனம் செய்யாதவர்களுக்கும், பாமரனுக்கும் மகாகவியின் சொற்கள் புரியும்.

முதியோர் இல்லங்களில் வாழும் பெரியவர்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கவேண்டும். உடல்நலம் பேணுவது தற்காப்பு. மனவலிமையில்லையெனில் உடல் தளர்ந்து போகும். மனவலிமை ஒரு அப்பியாசமே. முதுமையையும் என்றோ சம்பவிக்கப்போகும் மரணத்தையும் இணைத்து கவலைப்படுவதோ,பச்சாதாபப்படுவதோ நலம் தரப்போவதில்லை. மேலும், கவலையில்லாத மனிதன் உலகில் இல்லா மனிதன். நடப்பது நடக்கட்டும் என்று விட்டேற்றியாக இருப்பது தான் விவேகம். முன்னேற்பாடுகள் நலம் தரும். அறிவு தேடலும், இளைப்பாறுதலும், நட்பும் பண்பும் கலந்த புதிய உறவுகளும்  வாழ்க்கைக்கு செழிப்பு சேர்க்கும். இது இப்படியாக இருக்க, மகவுகளும்,  மகாகவி போல பெற்றோரை எங்கிருந்தாலும் போற்றி வந்தால், அது கொடுப்பினையே. இங்கு சொல்லப்படுவது இருபாலாருக்கும் பொது. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், நயம் மிகுந்து, துயர் ஒழிந்தால், எதிர்வாடை வாட்டாது. 

இந்த வினாடி புத்தாண்டு ஜெனனம். யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மகாகவியின் சொல் பலிக்கட்டும்.  முதியோரும், வாலிபர்களும், சிறார்களும் ’நடுநின்று விதிச்செயல் கண்டு’ மகிழ்வோமாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://images.rapgenius.com/9f89b08a952f75c7160ea31d3cdea612.570x571x1.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com