Thursday, March 3, 2016

இன்னம்பூரான் பக்கம்: 5: “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?”

இன்னம்பூரான் பக்கம்: 5: “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?”
இன்னம்பூரான்
03 03 2016
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=66814

நவம்பர் 14, 2009 அன்று மின் தமிழில் ‘தாவீது பாக்கியமுத்து நன்றாகத் தமிழில் எழுதுவார். அவர் எழுதிய “பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?” என்ற கட்டுரையை படித்திருக்கிறேன்.’என்று ஒரு 1941வது வருட நிகழ்வை (அதாவது 75 வருடங்களுக்கு முன்னால்) பற்றி எழுதியிருந்ததை என் கண் முன்னால் வந்து வைத்தது: மாது சிரோன்மணி பத்ம பூஷண் எம். சாரதா மேனன் (டாக்டர்) அவர்களுக்கு தமிழ் நாட்டு அரசு அவ்வையார் விருது கொடுத்து, தன்னை கெளரவித்துக்கொண்ட இன்றைய தகவல்.
அவரை பற்றி ஹிந்து நாளிதழில் அக்டோபர் 31, 2011 அன்று வந்த கட்டுரை வரவழைத்த பின்னூட்டங்களின் சுருக்கம்:

Kurt Waschnig: ஆம். டாக்டர் சாரதா மேனன் சொல்வது சரி தான். கருணையை நாம் தான் வரவழைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு மனமும் மூளையும் துணை புரியவேண்டும்…‘டாக்டர்’ தலையெடுத்த காலகட்டத்தில், மனம் நலம் குன்றியோர் ஒதுக்கப்பட்டனர், பைத்தியம் என்று முத்திரை குத்தப்பட்டன்ர். அதனால் அவர்கள் சீறியெழுந்ததும் உண்டு. தன் மருத்துவ அனுபவத்தினால்,அதை உணர்ந்த ‘டாக்டர்’ SCARF அமைப்பை நிறுவினார்…அது வசிக்க இடம், மேன்மையான மனோநல ஆலோசனை, சிகிச்சை,பயிற்சி, வேலை வாய்ப்பு, நடமாடும் ஆஸ்பத்திரி, ஆராய்ச்சி, விழிப்புணர்ச்சி எல்லாவற்றிலும் தலைமை தாங்குகிறது…இது ஒரு பிரமாதமான வெற்றி. ஒரு பெண்ணரசியின் கருணை, கருணையின் புரிதல் சாதித்த சாதனை இது

K.P. safarulla: இவர் ஒரு தேவதை.

kothandaraman:புகழ்வாய்ந்த இந்த 88 வயது மன நல மருத்துவருக்கு பாரதரத்னா கொடுக்கவும்,நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கவும், தமிழ் நாட்டு அரசு பரிந்துரைக்கவேண்டும். ( இது சொல்லி ஐந்து வருடங்களுக்குப் பின் அவ்வையார் விருது.)

கட்டுரைச் சுருக்கம்:

டாக்டரின் ஆலோசனை அறைக்கு விலாசம் போடப்படவில்லை. மனோ நல வைத்தியர் என்ற சொல்லைக் கேட்டாலே கொதித்து எழும் schizophrenia patients பல வாரங்களுக்குப் பின் நன்றி கூற வருகிறார்கள். மனித நேயத்தின் மறு உருவான டாக்டர் திட்ட வட்டமாக
“மனம் தான் செயலை தீர்மானிக்கிறது. கனிவும், அன்பும் மனம் விரும்பினால் தான் இயங்குபவை. மூளையின் முன் அனுமதி இல்லாமல் ஒன்றும் நடவாது.” என்று கூறுகிறார்.
அவருக்கு மங்கலான ஒரு நினைவு: 1947ல் அவர் மனோநலம் படிக்க விரும்பினார். 65 வருடங்களாக அதே தவம். எதிர் நீச்சல்: எட்டாவது மகவான அவர் ஏழாவது பெண். பெற்றோருக்கு ஏமாற்றம்.
பால பருவத்தில் கடுஞ்சொல் வீசும் ஒரு கன்யாஸ்திரீயின் விவகாரத்தினால், இரண்டாம் வகுப்பு படித்த டாக்டர் ஒன்றாம் வகுப்பில் அமர்கிறார். தலைமை ஆசிரியை கேட்டதற்கு ‘என் சிக்கலை நானே தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.’என்கிறார். இது மறைந்த என் தம்பி பார்த்த சாரதியை நினைவூட்டுகிறது. ஒரு கன்யாஸ்திரீ அவன் தலையில் ஸ்கேலால் அடிக்கிறார். இவன் அந்த பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டான். மதர் ஸுபீரியர் வீட்டுக்கு வந்து மன்றாடினர். தந்தை ஒத்துப்பாடினார். அவன் தன் பிரச்னையை நானே தீர்த்துக்கொள்கிறேன் என்று திரு ரசலையா அவர்களிடம் பேசி வேறு பள்ளிக்குப் போகத்தொடங்கினான். இந்த மனோபாவம் போற்றத்தக்கது.

பெண்ணீயத்துக்குத் துணை போனது, அக்காலத்து கலோனிய அரசு. அவர்களுக்கு மருத்துவப்படிப்பு இலவசம். இன்றும் ஐ ஏ எஸ் எழுதுவது பெண்ணரசிகளுக்கு இலவசம். [தனி மொழி: அந்தக்காலத்தில் நான் மருத்துவம் படிக்க ஆசை கொண்டேன். பிராமணர்களை ஒடுக்க வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஒரு தடை. வறுமை மற்றொரு தடை. இன்று கூட ‘பெண்ணாய் பிறந்திருக்கலாகாதா?’ என்று அங்கலாய்க்கிறேன்.]

டாக்டர் மொழிப்பிரச்னையை கூட எளிதாக தீர்த்தார். தெலுங்கில் Bacteriology படித்து பாஸ் செய்தார்! 1961ல் சென்னை மனோ நல ஆஸ்பத்திரியின் தலைமை. பிரமாதமான புரட்சிகரமான சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொணர்ந்தார். 1978ல் அவர் ஓய்வு (இன்றும் ஓய்வில்லை, 93 வயதில்) பெற்ற போது மனோ நலத்துறை திடம் பெற்று இருந்தது. அதுவே பெரிய சாதனை.

நான் அதிகம் பேச என்ன இருக்கிறது?

அவரே பேசுவதை கேட்டுத் தெளிந்து செயல் படுங்கள்

இன்னம்பூரான் 
சித்திரத்துக்கு நன்றி:



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Attachments area

No comments:

Post a Comment