Saturday, October 22, 2016

வம்பும் தும்பும் ~4


வம்பும் தும்பும் ~4


இன்னம்பூரான்
22 10 16

எல்லாரும் தவிச்சுப்போய்ட்டோம். நோ இண்டெர்னெட். நோ தொலை பேசி. ஒரு பாடா வந்தது. லாவம். வந்து வேறே சொல்லி விட்டுப்போனார்கள்.

அந்த காலத்தில் மஹா கனம் பொருந்திய சேஷைய்யா சாஸ்திரிகள் திருவிதாங்கூர் திவானாக இருந்த போது ஒரு பட்ஜெட் திட்டம் வந்தது, ஒரு ரோடு போட. திவான் அவர்கள் அதை நிராகரித்து எழுதினார், ‘ அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவேஜு இல்லாதத்துக்கு என்னத்தை செய்யலாம்?’.  அந்த மாதிரி ஐவேஜு இல்லாமல் தவிக்கிறது, லக்ஷ்மணபுரி நகரத்தின் கண்டோன்மெண்ட் பகுதி திட்டங்கள். எங்கே போச்சு ஐவேஜு? 

திருமதி ரீதா பஹுகுணா அவர்கள், தன் சகோதரரை கூட வியப்பில் ஆழ்த்தி, காங்க்ரஸிலிருந்து பிஜேபிக்கு ‘டபால்னு’ கூடு விட்டு கூடு தாவி விட்டார். உடனே ஜகதலபிரதாப வக்கீலைய்யா கபில் சைபால் அவர்கள் ‘அம்மா என் துட்டை எடுத்துக்கிட்டு ஓடிட்டாங்க.’ என்று பிரலாபித்தார். அதுவும் எப்டி? ரீதா பறந்து போகும் புள் என்று? தேவையா?இதை நான் லண்டன் கார்டியன் படிக்கும் போது  இந்த நிமிட நிகழ்வாகக் கண்டு, மேய தொடங்கினால், குட்டு வெளிப்படுகிறது. ரீதா மாமி பிஜேபி என்ற புக்ககம் வந்த உடனேயே, திரு.சைபாலுக்கும், கலெக்டர் சாஹிபுக்கும், அந்த ஐவேஜை சிறைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம் என்று எழுதியிருக்கிறார். ஆக மொத்தம், லக்ஷ்மணபுரி நகரத்தின் கண்டோன்மெண்ட் ‘எங்கே போச்சு ஐவேஜு? ‘ அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவேஜு இல்லாதத்துக்கு என்னத்தை செய்யலாம்?’ என்று அலறுகிறார்களாம்!
-#-
சித்திரத்துக்கு நன்றி; 





No comments:

Post a Comment