Saturday, May 28, 2016

இன்னம்பூரான் பக்கம் [5]: மனோதிடம். [2]

இன்னம்பூரான் பக்கம் [5]: 
மனோதிடம். [2]

“இதயத்தையும் ஆத்மாவையும் என் பணியில் ஆழப்பதித்து விட்டேனா? அதனுள் என் மனதைத் தொலைத்து விட்டேன்.”
- வின்செண்ட் வேன் கோஹ் 
I put my heart and my soul into my work, and have lost my mind in the process. 
Vincent Van Gogh

37 வருடங்கள் மட்டுமே (1853 - 1890) வாழ்ந்த டச்சு நாட்டு ஓவிய கலைஞர் வின்செண்ட் வேன் கோஹ் (உச்சரிப்பு வேற்றுமை அதிகம்.) அதிசயமானதொரு மனிதர். இருபதாம் நூற்றாண்டு கவின் கலைக்கு அடிகோலியவர் அவர் என்று சொன்னால் மிகையாகாது. அவருடைய கை படாத ஓவிய வகைகள் இல்லை எனலாம். ஸெல்ஃபி முதற்கொண்டு மனித உருவங்கள், இயற்கை காட்சிகள், அசையா பொருட்படம், செடிகொடிகள், விளைநிலங்கள், மலர்கள் எல்லாமே முன்னும் பின்னுமான காலகட்டங்களில், அவருடைய கைவண்ணமாக உருவெடுத்தன.

சிறுவனாக இருந்தபோதே வரைய தொடங்கினாலும், சுகவீனமும், தனிமையும், அலைச்சலும் அவரை மிகவும் வாட்டின. ஆகவே, இருபது வருடங்கள் வரையாமல் இருந்த வின்செண்டின் அழியாபுகழ் வாய்ந்த ஓவியங்களை தனது ஆயுள் முடியும் காலகட்டத்தில் தான் வரைந்தார். 32 வயதில் அவர் வரைந்த The Potato Eaters என்ற ஓவியம் பெரிதும் பாராட்டப்பட்டது. அடுத்த வருடமே பாரீஸ் நகரம் சென்றார். கதிரவனின் கதிர்கள் அவரை மிகவும் கவர்ந்தன. சாமான்ய மண்ணின் நிறத்தை அசகாயமாக கையாண்ட வின்செண்ட் பலவிதமான நிறங்களில் வரைய தொடங்கினார். தனது குறுகிய வாழ்க்கையின் இறுதி பத்து வருடங்களில் தான் தன் இதயத்தையும், ஆத்மாவையும் ஓவியம் வரையும் கலையார்வத்துக்கு தானம் செய்து விட்டார் -2100 ஓவியங்கள், அவற்றில் 860 ஆயில் பைய்ண்டிங். அவை யாவும் இன்றளவும் போற்றப்படுகின்றன.

அவர் சொல்வது சரி தான். இதயத்தையும், ஆத்மாவையும் ‘என் பணி கலைத்தொண்டு செய்து கிடப்பதே என்று சொல்லி தன் மனதைத் தொலைத்த வின்செண்ட் 37 வயதில் தன் ஆவியையும் மாய்த்துக்கொண்டார், தன்னே தானே சுட்டுக்கொண்டு. ஏன் என்ற வாதம் இன்றும் தொடருகிறது. அது பற்றி நான் பேசவில்லை.

உயிருள்ளவரை அவரையோ, அவரது ஓவியங்களையோ சீந்துவாரில்லை. பிற்காலம் அவரை ‘ஓஹோ’ என்று கொண்டாடுகிறது.
கோபன்ஹேகன் சென்றுள்ள சுபாஷிணி இவருடைய படங்களையும் தேடிப்பிடித்துப் பார்த்து எழுதவேண்டும்.
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

இந்திய தேர்தல் 2016



அண்மையில் இந்தியாவில் நடந்த தேர்தல் பற்றி  CONFLUENCE என்ற ஆங்கில இதழில் உடனக்குடன் பதிவான என் கட்டுரை இங்கே:
அன்புடன்,
இன்னம்பூரான்


Attachments area