Saturday, September 3, 2016

சிவகாமியின் செல்வன் 2

சிவகாமியின் செல்வன் 2

பெரியவர் தஞ்சை ஜில்லாவில் இருந்த பழைய கோயிலொன்றுக்கு சென்றார், அந்த ஊர் மக்களும் ,அதிகாரிகளும் அழைத்து செல்ல. ஆர்வத்துடனும், வியப்புடனும் அந்த கோயிலைச் சுற்றிப் பார்த்து விட்டு, 'இது யாரு கட்டினதுங்கிறே?' என்றார். எல்லாரும் வாயடைத்து நிற்க, ஒரு அதிகாரி மட்டும் இது பற்றி தெளிவான வரலாறு ஒன்றும் இல்லீங்கய்யா.' என்றார். சிர்த்துக்கொண்டே, மேலே இருந்த ட்யூப் லைட்டைபார்த்தவாறு, 'இத்தனை காலமா நிலைத்து நிக்கிற கோயிலைக் கட்டினவன் யாருன்னு தெரியல்லே; ஒரு மாசம் கூட ஒழுங்கா எரியாத இந்த லைட்டிலே... உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்கான் பாருன்னேன்!" என்றாரும். 

அவருக்கு சட்னு கோபம் வந்துரும்...
பிற பின்னர்.
[தொடரும்]

ஆதாரங்கள், மூலம் எல்லாம் இறுதியில் தரப்படும்.

Friday, September 2, 2016

சிவகாமியின் செல்வன் 7

சிவகாமியின் செல்வன் 7
இன்னம்பூரான்
செப்டம்பர் 2. 2016

“ஜீவாவை அனைவரும் போற்றினார்கள். காமராஜர் போற்றினார் - அவர் எப்படிப் போற்றினார் என்பதை நான் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கிறேன். ஒருகட்டத்தில், சென்னையில் தாம்பரம் பகுதியில் குடிசை வீட்டில்தான் வசித்தார். அந்த வீட்டில் மழை பெய்தால் குடிசை ஒழுகும். உள்ளே சேறும் சகதியுமாக இருக்கும். அப்படிப்பட்ட குடிசையில் தான் அவர் வாழ்ந்தார்.
அப்படி ஒருகட்டத்தில், அவர் கடுமையாகக் காங்கிரசை விமர்சித்துக் கொண்டு இருந்தார். 

காமராசர் முதலமைச்சர். அங்கே இருக்கின்ற ஒளவை ஆரம்பப் பாடசாலை ஆண்டு விழாவுக்கு வருகிறார். ஜீவா வசித்த குடிசை வீட்டுக்குப் பக்கத்தில் தான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியே ஜீவா தொடங்கிய பள்ளிக் கூடம்தான். ஆனால், ஆண்டு விழாவுக்கு ஜீவாவுக்கு அழைப்பு இல்லை. வருடம் 1961. காமராசர் விழாவுக்கு வருகிறார். அப்பொழுது சென்னை கலெக்டராக இருந்த திரவியமும் அங்கே வருகிறார். அவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான்.
விழாவுக்கு வந்தவுடன் காமராசர் திடீரென்று ஓரிடத்தில் இறங்கி, தெருவில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்தவர் ஓரிடத்தில் நின்று, இங்கே ஜீவானந்தம் வீடு எங்கே இருக்கிறது? என்கிறார். இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், அவர் நின்று கேட்கின்ற இடம் ஜீவாவின் குடிசை வீட்டு வாசல்தான். இங்கேதான் ஜீவானந்தம் இருக்கிறார் என்கிறார்கள். உள்ளே நுழைகிறார்.

வெளியூர் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து, எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும் என்று இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. அரவம் கேட்டு, யாரது? என்கிறார். காமராசரை பார்க்கிறார். என்ன விஷயமாக நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள்? என்கிறார். என்ன ஜீவா, ஒளவை பள்ளிக்கூடம் ஆண்டு விழா. நீங்கள் வரவில்லையா? என்கிறார் காமராசர்.
‘எனக்குத் தெரியாதே’ என்கிறார் ஜீவா. காமராசர் ஒரு பார்வை பார்க்கிறார். சட்டையைப் போட்டுவிட்டு வாருங்கள் என்று அழைத்துக் கொண்டுசெல்ல, காமராசருக்குப் போடப்பட்ட நாற்காலியில் ஜீவாவை அமர வைத்தார் காமராசர். (நான் வேறு இடத்தில் அறிந்து கொண்ட தகவல். தனக்கு இருந்த ஒரே உடுப்பை நனைத்து காயவைக்கிறார், ஜீவா. அதனால் பெரியவர் வைட்டிங்!}

அதை விட வேதனை என்ன தெரியுமா? மீண்டும் இன்னொருமுறை வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு வருகிறார். அந்தக் குடிசையின் நிலைமையைப் பார்க்கிறார். மழை கொட்டினால் உள்ளே தண்ணீர் பெருகிவிடும். அண்ணாந்து பார்த்தால் அந்த ஓட்டைக்குடிசை வழியாக வானத்தைப் பார்க்கலாம். என்ன ஜீவா நீங்கள் இந்தக் குடிசையில் இருக்கிறீர்கள். நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன். வருகிறீர்களா? என்கிறார் காமராசர்.

அதற்கு ஜீவாவோ, ‘இல்லை. இந்த நாட்டிலே வசிக்கின்ற எல்லா மக்களும் மாடி வீடு கட்டி வாழும்போது அடியேனும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருவேன்.’ என்றாராம்.

‘தூக்குமேடைச் சிங்கம்’ என்று கவிதையில் ஜீவா எழுதுவார். காமராசர் சொல்கிறார், சிங்கமடா, அவர் பேச்சைக் கேட்க வேண்டுமே, எரிமலை வெடிப்பதைப்போல இருக்கும். அதுவும் கம்ப இராமாயணத்தை அவர் பேசக் கேட்க வேண்டுமே, எப்பேர்ப்பட்ட தலைவர்! தொழிலாளிகளுக்காகவே போராடி வாழ்ந்து, குடிசை வாழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்ற அந்த மனுஷன், இப்படி வந்து குடிசையில் கிடக்கிறாரே என்று காரில் திரும்பிச் செல்லும்போது காமராசர் தமது உள் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே போனாராம்.


~ வைகோ

பின்குறிப்பு
தொடர் தொடர்ந்து வரவில்லை. பிறகு சரி செய்கிறேன். எனக்கு ஜீவாவை தெரியும். அந்த ஆதங்கம். மன்னிக்கவும்.

Thursday, September 1, 2016

சிவகாமியின் செல்வன் 1

I

சிவகாமியின் செல்வன் 1


Thu, Sep 1, 2016 at 6:53 PM

சிவகாமியின் செல்வன் 1

காமராசரின் மதம் பற்றிய பார்வையை பற்றிய தொகுப்பு பலருடன் அளவளாவியதை திரு. வீரபாண்டியன் என்ற சன் டி.வி தொகுப்பாளர் வழங்கியது. எனது அறியாமையினாலும், இயலாமையினாலும், அந்த இழையை என்னால் மீட்க முடியவில்லை. அதன் தொடர்பு இங்கே:

“வானவில்” 
பார்க்க:  ஆடி 2016 இதழ், பக்கம் 12-13    

*
அதன் கோணம் ஒரு புறம் இருக்க, 'பெரியவர்' என்று நெருங்கியவர்களால் அறியப்பட்ட 'சிவகாமியின் செல்வன்'  காமராஜர் என்ற பன்முகம் தாங்கிய மாமனிதரை பற்றி தற்கால தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால், இந்த தொடரை துவக்கத் துணிந்தேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் -திருவாளர்கள் டி.பிரகாசம், ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, பக்தவத்ஸலம், கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ராஜ்ய பரிபாலனத்தை, பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த நான் கூற விரும்புவது: 

அந்த பட்டியலில், பெரியவர் காமராஜர் ஒருவர் தான் மக்கள் நலம் மட்டுமே நாடி, பாமரனுடன் ஒன்றி, அதற்காக இடை விடாமல், பதவியை பொருட்படுத்தாமல், உழைத்தவர். ஐய்க்கண் அவர்களில் மேன்மக்களில் ஒருவர், அவர். மற்ற முதல்வர்களை பற்றி இங்கு கருத்து கூறப்போவதில்லை, திசை மாற்றத்தைத் தவிர்க்கவேண்டி.

அவரை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது: விடுதலை போராட்டத்தில், அடிபட்டு இரு இளைஞர்கள் மூர்ச்சையில் தெருவில் கிடக்கிறார்கள். ஒருவர் நமது பெரியவர். அடுத்து கிடந்தது, டி. பிரகாசம். பிற்கால அரசியலில் அவர்கள் இருவரும் எதிர் துருவங்கள்!

கீழ்க்கண்டது மீள்பதிவு:

"அண்டை வீட்டுக்காரன் என்ற வகையில் பெருந்தகை காமராஜர் அவர்களை நான் நன்றாக அறிவேன். நான் ஜூனியர் உத்யோகஸ்தன். அவர் முதல்வர். அடிக்கடி அவர் வீட்டு வாசற்படி அளவுளாவுதல் சில நிமிடங்கள் நடக்கும். ஏனென்றால், என் மூன்று வயது மைந்தனை அவருக்கு பிடிக்கும். நன்முத்துக்கள் உதிரும். நான் புரிந்து கொண்டது:

அவர் அரசியலர். மதம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. அது தான் விதுர நீதி எனலாம். ஆனால், அவர் மத நம்பிக்கையை தகர்க்கவில்லை. இழிச்சொல் பேசவில்லை. அத்தகைய இழிச்சொல்லை கல்வெட்டில் பதிக்கவில்லை. திரு. உத்தாண்டராமபிள்ளை என்ற உயர் அதிகாரி ஒரு மாமனிதர். இந்து மத கோயில்களின் நிர்வாகம் செய்து வந்தார். மரபுகளையும். நாணயத்தையும் மீறும் கோயில் ஊழியர்களை அவர் தண்டித்தார். காமராஜர் அமைச்சைரவையில் இருந்த திரு பக்தவத்சலம் கோயில் செல்லுமம் பக்திமான். அவருடைய தெய்வநம்பிக்கையை காமராஜர் மதித்து நடந்தார். ஒரு மத்திய அரசு அமைச்சர் திரு ராமசாமி ஒரு கோயிலில் ஆத்திரம் மிகுந்து நடந்து கொண்டார். மரபுகளை நிந்தித்தார். திரு.பக்தவத்சலம் அவர்கள் திரு. ராமசாமிக்கு இனி கோயில்களில் வரவேற்பு இருக்காது என்று ஆணை பிறப்பித்தார்.


அன்புடன்,
இன்னம்பூரான்
*
பெரியவர் சுதந்திர இந்தியாவின் மைல்கல்கள் ஆன நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களிலும், அவற்றின் பின்னணியிலும் முத்திரை பதித்தவர். இன்று கண்ணதாசன் அவரை பற்றி பாடிய கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.

சொத்துசுகம்
நாடார்,
சொந்தந்தனை
நாடார்
பொன்னென்றும்
நாடார்,
பொருள் நாடார்,
தான்பிறந்த
அன்னையையும்
நாடார்,
ஆசைதனை
நாடார்,
நாடொன்றே
நாடித்தன்
நலமொன்றும்
நாடாத
நாடாரை
நாடென்றார்.

பிற பின்னர்.
[தொடரும்]

இன்னம்பூரான்


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
தன் சுக துக்கங்களை நாடாத, தன் நாட்டு மக்களின் நலன் மட்டும் நாடிய தமிழ்நாடன் பற்றிய தங்களது பதிவு அருமை.
பெரியவரின் வாழ்க்கை நேரில் அறிந்தவர் என்ற வகையில் தங்களது பதிவுகள் சிறப்புப் பெருகின்றன ஐயா.
தொடர்ந்து பெரியவரின் சிறப்புக்களைப்
 பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த தங்களது பதிவுகளைப் படிக்க  ஆவலாய் உள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்




Tuesday, August 30, 2016

வெட்கக்கேடு

Innamburan S.Soundararajan

வெட்கக்கேடு


Wed, Aug 31, 2016 at 11:12 AM







வெட்கக்கேடு

Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Wed, Aug 31, 2016 at 11:08 AM

வெட்கக்கேடு


உலகெங்கும், அவ்வப்பொழுது, மனிதனின் ஒழுங்கீனம், களவாணி தன்மை, கொடுங்கோல் ஆளுமை, ஆகியவற்றைப் பற்றி தகவல்கள் வருகின்றன. இந்தியாவில் அவை அதிகமாக காணக்கிடைக்கின்றன. மும்பையின் செல்வந்தர் பகுதியான கஃப் பரேட், சென்னையின் அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையின் சில பகுதிகள் தவிர, பெரும்பாலும் நடைபாதைகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால், நடக்க லாயக்கில்லை. செல்வந்தர்கள் தான், இந்த குற்றத்துக்கு தலைமை தாங்குபவர்கள். அதருமமிகு சென்னையின் ராஜபாட்டைகளில், விதிகளை மீறி, தவறான எதிர் பாதைகளில் இருசக்கரவாஹனங்கள் ஓடோடி வருவதையும், அதை கண்டும் காணாமலும் காவல்துறையினர் அசால்ட்டாக இருப்பதும், குடித்து கார் ஓட்டுபவர்கள் சகட்டுமேனிக்கு கொலை செய்வதும் கண்கூடு. இந்த பீடிகை நாமே தன் தலையில் சகதியை வாரிப்போட்டுக்கொள்வதற்கு சில உதாரணத்துளிகள்.

இனி, பெரிய விஷயத்துக்கு போவோம். ஒடிஷா மாநிலத்தின் இயற்கை வளம் அபாரமானது. அங்குள்ள காலஹண்டி மாநிலம் விவசாயத்துக்கு உகந்த செழிப்பான பூமி. ஏழையின் காஷ்மீர் என்று கூட சொல்வார்கள். அத்தனை அழகு மிகுந்த பிரதேசம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி மழை கூட உண்டு. பழங்குடிகள் ஒடிஷாவின் மண்ணின் மைந்தர்கள். அவர்கள் பெரும்பான்மையைர் என்றாலும், ஊருக்கு இளைத்த இனம். பொலாங்கீர், காலஹண்டி, பூல்பானி என்ற அண்டை மாநிலங்களுக்குக் கலைக்டர்கள் நியமனம் செய்யும்போது, ஒரு பெரிய ஆய்வே நடக்கும், அந்த காலத்தில். மனிதநேயம் மிகுந்தவர்களும், ஏழைபங்காளனுமாக இருப்பவர்களை, நிர்வாகத்தில் யதார்த்ததை புரிந்து கொண்டு விதி அனுசரணை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற பரிவு தான் அதற்கு பின்னணி. 

1977=80 களில் ஒடிஷா மாநில பழங்குடிகளின் இயற்கை வள சொத்துக்களை (கெந்து இலை, சால் மர விதைகள் வகையறா) சூறையாடிய ஒப்பந்தக்காரர்கள் மிகவும் இரக்கமற்ற கும்பல் தான் என்பதில் ஐயமில்லை.  எனினும், இந்த மூன்று மாநில கலைக்டர்கள் என்னுடைய தணிக்கை அணுகுமுறையை அனுசரித்தார்கள். நானும் ஏழைபாழைக்கு உதவும் வகையில் விதிகள் தளர்த்தப்படுவதை ஊக்கப்படுத்தினேன். அந்த காலத்தில் இருந்த இந்த நல்லுறவால், பழங்குடிகளுக்கு நன்மை செய்ய முடிந்தது, எங்களுக்கு எதிராக அநாமதேயக்கடிதங்களை ஒப்பந்த்தக்காரர்கள் அனுப்ப ஏற்பாடு செய்தாலும்.

இந்த பின்னணியில் அண்மையில் நடந்த கொடூரத்தை பாருங்கள்.மஜ்ஹி எனப்படும் பழங்குடிகள் தன்மானம் காப்பவர்கள். திரு. தானா மஜ்ஹி அவர்களின் மனைவி திருமதி.அமனா தேய் காலஹண்டி மாநில மருத்துவமனையில் இறந்தார்: காசநோய். விதிப்படி அமரர் ஊர்தி இலவசமாக தரப்படவேண்டும். ஆனால், அவர் ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டியை விட பலவீனன் ஆதலால், தன் சிறிய மகள் பின் தொடர, அவர் மனைவியின் சடலத்தை சுமந்து,  நடக்கத் தொடங்கினார். பிறகு ஏதோ உதவி கிடைத்தது. அதை விடுங்கள். அவர் தன் மனைவிக்கு முக்கியமான மூன்றாம் நாள் சடங்கு செய்யமுடியவில்லை. கலைக்டர், உதவி கலைக்டர், அந்த கழுதை, இந்த கழுதை எல்லாம் இவரை விசாரணை செய்ய வேண்டுமாம். அந்த தினம் வலுக்கட்டாயமாக் இழுத்துச்சென்று அவரையும், அவரது மகளையும் கலைக்டர் அம்மா முன்னால் ஆஜர் செய்ததும், அந்த  பெண் சிகாமணி, ‘நீ தான் உன் மனைவியை கொன்றாயா?’ என்று வினவினாராம்.

இந்த அபகீர்த்தி உலகெல்லாம் பரவ, பஹ்ரைன் முதல்வர் நிதி உதவி செய்திருக்கிறார். பழங்குடி சமுதாயங்கள், விழிப்புணர்ச்சியுடன் போராட துவங்கி விட்டனர். நாம் அவர்களுக்கு ஜே போட்டால் போதாது. நமது சமுதாய இனபேதங்களை, பேச்சில் மட்டும் இல்லாமல், செயல் மூலம் ஒழிக்கவேண்டும்.

மேலும் நம்மை கலங்கவைக்கும் செய்திகள் உளன. சொன்னால் பொல்லாப்பு!

கீழ்க்கண்ட செய்தியை படித்து, வெட்கி தலை குனியுங்கள்.



இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, August 28, 2016

சுகவனம் 4


Innamburan S.Soundararajan

சுகவனம் 4


Mon, Aug 29, 2016 at 7:27 AM

சுகவனம் 4



இன்னம்பூரான்
28 08 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=71502


ஏழை பாழை என்றால், அதுவும் கிராமத்தான் என்றால், இளப்பம் தான். சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காய்ச்சலில் தவிக்கிறது. அந்த ஊரின் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள். டெங்கு போன்ற உயிர்கொல்லி காய்ச்சல்களுக்கு  இது வரப்பிரசாதம்.  காய்ச்சலுடன் யார் வந்தாலும், ஆஸ்பத்திரியில் பரிசோதனை தொடங்கி விடுகிறார்கள். டெங்கு மட்டுமல்ல. டைஃபாய்டு, எலிவிஷஜுரம் எல்லாம் அங்கு அடைக்கலம் நாடுகின்றன. 

அந்தோ பரிதாபம்! போனவாரம்  எழும்பூரில் உள்ள குழ்ந்தைகள் ஆஸ்பத்திரியில். திருவள்ளூரிலிருந்து போன ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன. ‘அதுவோ! இதுவோ1’ என்று காரணங்கள் பல கூறப்பட்டாலும், மாண்டார் மீண்டு வருவாரோ? [அப்டேட்: சற்று நேரம் முன்னால் மற்றொரு மழலை பலி.]

சுகாதார பின்னணியை நோக்குவுமாக. திருவள்ளூர் மாவட்ட்த்தின் ஜனத்தொகை  37 லக்ஷம் மக்கள்; அடர்த்தி தான். மாவட்டம் முழுதுமே சுற்றுச்சூழல் சுகாதாரம், ஸ்வச்ச பாரத் ஆகியவற்றை அறியாதவர்கள் போலும்! மக்களே இந்த அவலத்துக்குக் காரணம் என்கிறார்,சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

குதிரை திருடு போனபின் லாயத்தை பூட்டுவதைப் போல், வருடக்கணக்காக திறந்த சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை போன வாரம் சுத்திகரித்து, குழாய்கள் மூலம் சாக்கடைகளை மூடினாலும், அசுத்தமான நீர் தான் அளிக்கப்படுகிறது என்கிறார், ஒரு உயர் அதிகாரி. போதாக்குறையாக, கட்டுமான பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடப்பதால், ஏழை பாழை கூலிகள் அங்குமிங்குமாக சோத்துக்கு அலைந்து திரிவதே ஒரு அபாயம் என்க.

அதிகாரிகள் டெங்கு எதிர்பாராத போது வரக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். அதிவேகமாக பரிசுத்தப் ப்யணம் நடக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். அங்கன்வாடி ஊழியர்களை கவனமாக காய்ச்சல் செய்தி கிடைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. போலி டாக்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

பொன்னேரியிலும் இதே கதி தான். மருந்து சீட்டு இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு  தெய்வமே துணை.

இதற்கெல்லாம் நடுவில் ஒரு ஜோக். அமைச்சர் பார்வையிட வந்த போது மட்டும்  கொடுக்கப்பட்ட போர்வைகள், அவர் தலை மறைந்தவுடன் , பிடுங்கப்பட்டன!


© The Hindu

சித்திரத்துக்கு நன்றி:





























இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சுகவனம் 3

Innamburan S.Soundararajan




Sun, Aug 28, 2016 at 4:36 PM






சுகவனம் 3
1


Sun, Aug 28, 2016 at 4:32 PM



சுகவனம் 3



இன்னம்பூரான்
24 08 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=71428


மேற்படி நிறுவனத்தின் நீண்ட ஆய்வின் பயனாக வெளியிடப்பட்ட மற்ற அறிவுரைகள்:

1. சுகவனம் 2 ல் கூறப்பட்டது;
Keep Active: உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் என்றென்றும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நலம் பயக்கும். எறும்பு சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் காண்கிறோம். ஆண்சிங்கமோ படு சோம்பேறி. புலியை விட வேங்கையின் வேகம் அதிகம். மற்ற ஆய்வுகளும் சோம்பிக்கிடக்காமல், பல அலுவல்களில்  இயங்கும் மானிடரை வியாதிகள் அணுகுவது குறைவு என்று பல்லாண்டுகளாக அறிவித்து வந்துள்ளனர்.
Eat Well: உணவே மருந்து. அதை தக்கதொரு முறையில் தயாரித்து நன்றாக உட்கொள்வது நல்லது. அறுசுவை உண்டி அளிக்கும் சுவை போற்றத்தக்கது என்றாலும் சிறிய அளவில், இனிப்பையும், உப்பையும், எண்ணெயையும் குறைத்து, காய்கறிகளையும், பழவகைகளையும் உட்கொள்வது நலம். ஆய்வு செய்தவர்களில் பேலியோ டயட்டார்கள் இருந்திருக்கலாம். மாமிசம் உண்போரும் உணவை நல்ல வகையில் உண்ணலாம் -முட்டை,மீன், கோழிக்கறி என்று. அதை குறை சொல்வதற்கு இல்லை.
Drink Sensibly: மேல்நாடுகளில் பெரும்பாலோர் மது அருந்துபவர்கள். அவர்களின் கலாச்சாரத்தில் அது ஒரு அங்கம்  வகிக்கிறது. அதனால் தான் இந்த அறிவுரை. நம் நாட்டில் குடிமயக்கம் அடிக்கடி தென்படுகிறது. போன வருடம், ஒரு பயணத்தில் ஒரு டாஸ்மாக் கடை ‘வாழ்க வளமுடன்’ என்ற விலாசம் படைத்த வாடகை கட்டிடத்தில். அதன் வாசலில் அலங்கோலமாக கிடந்தனர், குடிமகன்கள். ‘வாழ்வே மாயம்’ என்று நினைத்துக்கொண்டேன்.
Keep in touch: மனிதனின் இயல்பு சுற்றத்துடன் வாழ்வது. அது குடும்பம், கூட்டுக்குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், மாநிலம், நாடு, உலகம் என்று பல பரிமாணங்கள் கொண்டது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கூடி வாழ்வது நலம் பயக்கும்.
Ask for Help: தட்டுங்கள். கதவு திறக்கப்படும். மற்றவர்களுக்கு உதவுவது ஒரு கலை. திறந்த மனம் வேண்டும். உதவும் மனப்பான்மை வேண்டும். அது உகந்த முறையில் இயங்க பயிற்சி பெறவேண்டும். இந்த விஷயத்தில் இங்கிலாந்தில் 80 வருடங்களாக, நாடெங்கும் சராசரி மனிதர்களால், குறிப்பாக, குடும்பத்தலைவிகளால், தன்னார்வத்துடன் இயங்கும் மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு இணை உலகில் எங்கும் கிடையாது. என் அமைதி வாழ்க்கை அதற்கு நிரூபணம்.
Take a Break: அவ்வப்பொழுது ஓய்வும், மனமகிழ்ச்சி நிகழ்வுகளும் மிக்க உதவும் என்பது யாவரும் அறிந்ததே.
Do something you are good at: எது செய்தாலும், தனக்கு உகந்ததை செய்வது எளிது; நிறைவு தரும். மற்றவர்களுக்கும் உதவும், நான் இந்த தொடரில் இறங்கியது போல.
Accept who you are: ஒருவர் போல் ஒருவர் இருப்பது இல்லை. காந்திஜி ‘கத்தியின்றி, ரத்தமின்றி...‘விடுதலை புரட்சி நடத்தினார். தமிழ்த்தாத்தா தமிழ் மணத்துடன் வாழ்நாளை கடத்தினார். பாமரனும் நல்லாட்சி புரியமுடியும் என்பதை காமராஜர் நடத்திக்காட்டினார். அவரவர்கள் இத்தகைய பட்டியலை தயார் செய்து கொண்டு, தன்னிலை விளக்கம் அளித்துக்கொள்ளலாம்.
Care for others: சொல்லித் தெரிவதில்லை, மனித நேயம். தொடரின் இறுதி கட்டத்தில் இது விவரமாக பேசப்படும்.

-#-
சித்திரத்துக்கு நன்றி: 
http://images.fineartamerica.com/images-medium-large/ebullience-regina-valluzzi.jpg


Mental Health Foundation Copyright © 2016. 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


__._,_.___



__,_._,___