Thursday, December 1, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]


Update:
My follow up comments;

I thank the Hindu for not rejecting my first flush comments and congratulate the commentators for doing a much better job, than Visvak & Mahima & the Hindu, (and, of course, me!)individually and collectively thru 'Likes' & 'Dislikes' in critical  comments. The Hindu should not have claimed the 'access' privilege and exclusivity on a matter Google has filled reams of paper. Secondly, the Government of India has put the whole thing in http://www.pmindia.gov.in/en/assets-and-liabilities-of-the-union-council-of-ministers-2015-2016/ 
Jaitley's Return was on 21.06.16 long before the D Day. He had 4 savings a/cs  and two company deposits other the Cash (obviously) in hand 
Rs. 65,29,400/- . Luckily for me, my comments stand vindicated.


The Hindu is in the epicenter of Chennai/Tamil Nadu. 
There is no black money here. ONLY DARK MONEY amounting to billions held 
by a horde of minuscule to superheavy politicians and hangers on. Why shy away from exposing them? The Hindu should tell us now.

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]





இன்னம்பூரான்
30 11 2016

மற்ற செய்திகளை ஒத்தி வைத்து விட்டேன். இன்றைய ஹிந்துவில் வந்த தகவலும், அங்கு நான் பதித்த கருத்தும், இங்கு மேலதிக விமர்சனமும்.

தங்களிடம் பிரத்யேகமாக தருவிக்கப்பட்டதான ஆதாரங்களின் அடிப்படையில், ‘
‘ஹிந்து’ இதழ் இன்று கூறிய முடிவு:

The data also reveals that not everyone in the government’s roster of Ministers shares the Prime Minister’s enthusiasm for cashless transactions.

அந்த பதிவின் மீது என் கருத்து:
~True. You have opened the can of worms, which is going to spill ugly truths. The poser is not only to all of us, but, particularly to the Prime Minister and also Mr. Modi, as an Indian, presiding over this group of persons.
You have done a service for the nation and are charged with the responsibility of going the whole hog, relentlessly and unceasingly. Mr.Modi's cash holding is not much, Mine was Rs.5000/- since deposited.

செய்தி:
பொது மக்கள் க்யூ வரிசையில் வாட, அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் சுகவாசம் செய்கிறார்கள். அமைச்சர்கள் மார்ச் 31,2016 அன்றைய நிலவரப்படி, தங்கள் சொத்து பத்துகள் விவரங்களை வருடந்தோறும் பிரதமரிடம் அறிவிக்கவேண்டும். அதை காமன்வெல்த் மனித உரிமை கழகம் தொகுத்ததை, ஹிந்து இதழ் பெற்று அதன் அடிப்படையில் இந்த செய்தி என்று பறை சாற்றிக்கொண்டது. 

[என் விமர்சனம்: இந்த பட்டியல் என்றோ மோடியின் அரசு இயந்திரத்தால் தொகுக்கப்பட்டது; அதை ஏதோ தன்னார்வ பணி என்று மார்பை தட்டிக்கொள்வதும், அதை  ஒரு புதிய ஆய்வு போல,இன்று பதிவு செய்வதும், உள் நோக்கம் என்று தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கொள்ளை கொள்ளையாக சுருட்டுவதும், சுருட்டியதும், இங்கு பகிங்கிர ரகசியம். அவற்றை அச்சம் பொருட்டு ஹிந்து பதிவு செய்வதில்லை போலும். சரி. விஷயத்துக்கு வருவோம்.]

  1. மொத்தம் 76 அமைச்சர்கள்: 36 அமைச்சர்கள் இன்று வரை இந்த ஆணைக்கு இயங்கி விவரம் கொடுக்கவில்லை.  அவர்களில் கட்கரி, பரிக்கர், உமா பாரதி அடக்கம்.
  2. 23 அமைச்சர்கள் ரூபாய் 2 லக்ஷத்துக்குக் குறைவாக வைத்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்தனர்.
  3. 15 அமைச்சர்கள் ரூபாய் 2.5 லக்ஷத்துக்கு மேல் வைத்திருந்தனர்.
  4. அவர்களில் அருன் ஜெட்லி: 65 லக்ஷம் + ரொக்கம்; நாயக்: 22 லக்ஷம். ஹன்ஸ்ராஜ் 10+
  5. பிரதமர் மோடி: ரூபாய் 89,700/-.

ஹிந்து இதழின் நோக்கம் யாதாயினும், நாம் கவனிக்கப்படவேண்டியது:
  1. இந்த ‘கற்பிழந்த நோட்டு’ தாக்கீதுகளை பிரதமர் உரிய ரகஸ்யத்துடன் தான் அமல் படுத்திருக்கிறார். இல்லையெனில் கட்கரி வகையறா, ஜெட்லி வகையறா சுதாரித்துக்கொண்டிருப்பார்கள். 
  2. ஆணையை உதாசீனம் செய்த அமைச்சர்கள் மீது பா.ஜ.க. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பொது மன்றத்தில் வைக்க வேண்டும்.
  3. அருன் ஜெட்லி வாய் கிழிய ‘காசு வேண்டாம். காசில்லா செலவு செய்க’ என்று முழுங்குகிறார் (முழங்குகிறார்). அவர் 65 லக்ஷம் வைத்துக்கொண்டிருந்தது சட்டவிரோதம் அல்ல. எனினும், தார்மீக ரீதியில் அது விந்தையான/தவிர்த்து இருக்கக்கூடிய தொகை. அவர் அது பற்றி உண்மை கூறவேண்டும்; அது வந்த விதம் என்ன? அது ஏன் காசாக இருக்கிறது என்பதை பொது மன்றத்தில் விளக்கவேண்டும். அதை அவர் யார் யாரிடமிருந்து எதற்கு எதற்கு பெற்றாரோ, அவர்கள் வருமான வரி கட்டிய விவரமும், தான் வருமானவரி கட்டிய விவரமும் கூறவேண்டும். அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு அவர், ‘கருடா? சுகமா?’ என்று வடேராவை வினவக்கூடாது.
  4. எதையும் சீர் தூக்கிப்பார்ப்பது தான் நலம்.
  5. “சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி [திருக்குறள் 118]
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com




Wednesday, November 30, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]




கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]




இன்னம்பூரான்
30 11 2016

  1. இந்தியா விடுதலை அடைவதற்கு சில நாட்கள் (19 ஜூலை 1947) நமது அண்டை நாடாகிய கடாரத்தின் [பர்மா/மியான்மார்] தந்தை என்று போற்றப்பட்டவரும், அந்த நாட்டு பொதுவுடமை கட்சியின் தந்தையும், கலோனிய ஆட்சியில் பிரதமராகவும், நாட்டுக்கு விடுதலை பெற்றவரும் ஆன ஆங்க்ஸான் அவர்களும் அவருடைய அமைச்சரவையும் [7 நபர்] சுட்டுக்கொல்லப்பட்டனர்.  [தற்காலம் அவரது மகள் ஆங்க்ஸான் ஸு யி மிகவும் பிரபலம்.] அவருடைய காலத்துக்கு முந்திய பிரதமர் ஊ சா வின் கைக்கூலிகள் , அரசு நிர்வாகக்குழு அமர்வு அறையில் புகுந்து இந்த கைங்கரியத்தை செய்தனர். பிற்காலம் அந்த ஊ சா தூக்குமேடையில் ஊசலாடி செத்தான், சட்டரீதியாக. கோர்ட்டில், வெளியேறிய பிரிட்டீஷ் சிப்பாய்கள் ஊ சாவுக்கு பல துப்பாக்கிகளை விற்றது தெரிய வந்தது.
  2. அக்காலம் பள்ளி இறுதி ஆண்டு படித்து வந்த என்னை இது மிகவும் பாதித்தது. ஃபோரம் என்ற இதழ் நடத்தி வந்த ஜோஷிம் ஆல்வா அவர்கள் இதை எல்லாம் புரியும்படி எடுத்துக்கூறியிருந்தார். அக்காலம் என் தந்தை என்னிடம் கூறிய தகவல் (என்னிடம் வேறு ஆதாரமில்லை.) நேருவின் அமைச்சரவையை ஒழிக்க ஒரு அண்டை நாட்டு பயங்கரவாதிகள் கும்பல் பயணித்த லாரியை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மடக்கி, அவர்கள் எல்லாரையும் கொன்று நம் தலைவர்களை காப்பாற்றினார்கள். அதை சர்தார் படேல், (ஹோம் மினிஸ்டர்) நேருவிடம் எடுத்துக்க் கூறினார். தந்தையிடம் ஒரு ஆவணம்/ ஊடகம் இருந்தது. அதன் பெயர் எனக்குத் தெரியாது.
  3. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு பின் வந்த நேற்றைய இந்திய செய்தி:
  4. மதுரையில் 27 11 2016 அன்று அல் க்வைடாவுடன் சம்பந்தப்பட்டவர்களும், சித்தூர், கொல்லம், மைசூர், நெல்லூர், மல்லபுரம் ஆகிய இடங்களில் கோர்ட்டுகளில் குண்டு வீசியவர்களும் ஆன மூவர் கைது செய்யப்பட்டனர். நாலாவது ஆசாமி சென்னையில் அகப்பட்டான். மல்லபுரம் குண்டு வீச்சு நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் மூலம் தெரிய வந்த செய்தி: நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவது, அமெரிக்கன், ரஷ்யன், இஸ்ரேல் தூதரங்களையும், ஹைதராபாத் கோர்ட்டையும் குறி வைப்பது, அவர்களில் ஒருவன் பள்ளியை துறந்த மாஜி மாணவன். பி.காம் படித்த மற்றொருவன் கோழிக்கறி வணிகர். மூன்று பிராந்திய போலீஸ் படைகள் ஒத்துழைத்து, அவர்களை பிடித்தது. ஒருவரின் தந்தை குற்றச்சாட்டுகளை மறுக்கிரார்.
  5. மொத்தம் 22 இந்திய பிரபலங்களை பிலாக்கணத்திற்கு இலக்காக கொலை செய்வதாக, இவர்கள் உத்தேசமாம்.
  6. நவம்பர் 8க்கு பிறகு, கடந்த 20 நாட்களில்  விமானம் மூலம் கடத்த முயன்று பிடிபட்ட பணம்: 
மும்பாய்: 12.5 கோடி
டில்லி    6.2  “
கொல்கத்தா 5.9 கோடி;
மற்றவை: 4.4 கோடி;’

இது எல்லாமே கறுப்புத்தான் என்று சொல்லக்கூடிய சான்றுகளை அவர்கள் முன் வந்து அளிக்கவில்லை. தவிர முதல் வாரத்தில் 5 கோடி, பின்னர் 24 கோடி பற்றி விசாரணை நடந்தது. தவிர, கணக்கிடமுடியாத வகையில் ஹரியானாவிலிருந்து பல கோடிகள் ஒரு பிரத்யேக விமானத்தில் நாகாலாந்துக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள தலித் மக்களுக்கு வரி சலுகைகள் உண்டு. நோ வருமான வரி. அவர்களின் வரவு எகிறுவதாக சந்தேகம். 135 கிலோ தங்கமும் பிடிபட்டது. 

செல்லாக்காசாக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பல பயங்கரவாதத்துக்கு போகிறது என்று அரசின் கூற்று. நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஆங்க்ஸான் படுகொலையை போல... வேண்டாம். மோடியும் 22 பேர்களும் பிழைத்துப்போகட்டும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:


https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Aung_San_BNA.jpg/220px-Aung_San_BNA.jpg











இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com