Friday, August 4, 2017

நாளைய செய்தி இன்று காலை: 5 7 2017



நாளைய செய்தி இன்று காலை: 5 7 2017



தோழா/ழி!

இப்பொல்லாம் கவர்னமெண்டு தடால் புடால்னு ஆர்டர் போடுது. பங்களுர்லெ தான் பாக்கிறீங்களே. அமைச்சரெல்லாம் நமைச்சலில் குமைவதை. இன்று/நாளை நடுநிசியில் ஒரு ‘நீட்’ ஆக இருக்கும் ஆணை அமலில் வருகிறது. நம்ம ‘தண்டோரா கிழவன்’ தான்; பிச்சு உதற்ரராங்காணும்.

டம் ! டமா ! டாம் ! டுபுக்! டம் ! டமா ! டாம் ! டுபுக்! 

ஐயாமாரே! அம்மாமாரே! கருவில்லுறைபரே! கேட்டுக்குங்க! சுதாரிச்சுக்குங்க!
உஷார்!

“ இதனால் சகல ஜனங்களுக்கும், பிராணிகளுக்கும், விருக்ஷங்களுக்கும் தெரிவிப்பது யாதெனில், இனி ஆதார் கார்ட் இல்லாமல் இம்மியும் அசையாது; அம்மியும் அரைக்காது; மம்மியும் டெலிவராள். சுருங்கச்சொல்லின், நோ ஆதார்! நோ பெர்த். மண்டூகம்! ரயில்வே பெர்த் இல்லைடா. பிள்ளைப்பேறு. என்னுடைய மச்சினி மைதிலிக்கு பேறுகாலம். பொறுப்பில்லாத அவ புருஷன் டெட்ராய்ட்டுக்குப் போயிட்டான், அந்த கட்த்ரோட். நான் தான் எல்லாம் பாத்துக்கணும். டாக்டர் பாத்தாச்சு. அப்பப்போ டெஸ்ட் எல்லாம் பண்ணியாச்சு. டாக்டர் கிட்ட கெஞ்சி கூத்தாடி நார்மல் டெலிவரி வச்சுக்கோடி அம்மா என்று திருப்பதி லட்டு ஒன்று கொடுத்து அவளை தன்னை கட்டியாச்சு. ஐய்யயோ! ஆதார் கார்டுக்கு எங்கே போவேன்! கதவுலே சாஞ்சுண்டு நான் குரலெடுத்து அழுகிறேன். கண்ணீர் ரொம்பினதை அண்டாவில் நிரப்பி வைத்துக்கொண்டாள், என் தர்மபத்தினி. துணி துவைக்க உதவும்; தண்ணி வந்து மாமாங்கம் ஆச்சு என்றாள். அவள் மிகை படுத்திச்சொல்லுவாள்.

அதை விடுங்க. மைதிலி இடுப்பை பிடித்துக்கொண்டு சாஞ்சுண்டு நடந்தாள். முனகினாள். வலிக்கிறது அக்கா என்றாள். அப்போ பாத்து எதித்தாத்து அம்புஜம் பாட்டி வந்தாள். 

பா: ஏண்டா கோபு. பெருமாளை சேவிச்சுட்டு ஆம்பளைக்குழந்தையா லக்ஷணமாக பொறக்கணும்னு வேண்டிக்கோ. கர்ப்பரக்ஷாம்பிகைக்கு புஷ்பப்பல்லக்கு எடுக்கிறேன் அப்டினு வேண்டிக்கோடிம்மா. இல்லைனா, தெய்வ குத்தம் பொண்ணா பொறந்துடும். 

மை: பாட்டி! உங்களை ஆரு வரச்சொன்னா? எனக்கு பொண்ணு தான் வேணும்.

பா: கோபு! அவ கிடக்கா. ஒம்மாச்சி ஏமாத்தமாட்டார். ஆமாம். ஆதார் ஃபார்ம் எடுத்தண்டையா. இல்லைன்னா தாயையும், சேயையும் பிரிக்கதற்கு சுஷ்மாவை தான் கூப்பிடணும்.

கோ: (எரிச்சலுடன்) எடுத்தாண்டுச்சு, பாட்டி.

பா: நல்லதுக்கு சொல்றேண்டாப்பா. 
  1. அப்பா விண்ணப்பித்தால் ஃபார்ம் प.
  2. அம்மா விண்ணப்பித்தால் ஃபார்ம் प. प.
  3. அப்பா யாரென்று தெரியாவிட்டால், ஃபார்ம் प. प. प.
  4. அம்மா யாரென்று தெரியாவிட்டால், ஃபார்ம் प. प. प. प.
  5. ஆண் குழந்தையானால் ஃபார்ம் प. प. प. प. प. प.
  6. பெண் குழந்தையானால் ஃபார்ம் प. प. प. प. प. प. प.
  • அதெப்பட்டி சாத்தியம் என்றேன். அந்த டைம், மைதிலி லேபர் ரூம்லெ இருக்கச்ச.
    அந்தப்பக்கம் அகஸ்மாத்தாக எழுந்தருளிய நிர்வாகாதிகாரி சொன்னார், “ சார்! நாங்க கவர்னெமெண்டு ரூல் போட்றோம். இருந்தாலும், இல்லாவிட்டாலும், எல்லா விதமான பிரச்ணைகளுக்கும் ஆர்டர் போட்றணும். நாளைக்கு மரபணு விஞ்ஞானம் வளர்ந்து ஆண்களும் பிரசவம் செய்தால்.....
    அவர் சொல்லி முடிக்கல்லை. சிசு ‘ஓ’ என்று சிரித்தது. பொடிநடையா, ‘எங்கிட்ட ஆதார் இல்லையே’ என்று செப்பி விட்டு. ஒரு எக்காளத்துடன் ஓலா டாக்சியில் வீட்டுக்கு போய்விட்டது.

    பாட்டி: ஆணா? பெண்ணா? என்று கேட்டாள். நான் சொல்ல வில்லை. பிறந்தபின்னும் பால் அறிவிக்கக்கூடாதாமே? நிஜமா?
    இன்னம்பூரான்
    சித்திரத்துக்கு நன்றி:








    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    No comments:

    Post a Comment