Friday, January 27, 2017

மாரியாத்தா செத்துப்போனாள்



pastedGraphic.pdf
Denied proper funeral, Tamil Nadu ragpicker cremates grandmother in public place
TNN | Jan 27, 2017, 08.25 AM IST
மாரியாத்தா செத்துப்போனாள்pastedGraphic_1.pdf
TRICHY: In a stark display of indifference to the plight of the wretched, villagers of Nerusalakudi, near Vaaladi, refused to allow a ragpicker to bury his grandmother's body on the local church premises or cremate it on the cremation ground. The distraught man had no option but to cremate the body in a public place using dry leaves. Murugesan, a 45-year-old toy seller who also picked rags, found Mariammal, 75, dead on Wednesday morning in the tent where they lived. She had been ailing for the past few days and the chilly weather had worsened her condition.

Murugesan, who could not afford to take the body to Velankanni, his native place, first contacted the local church administration.The authorities refused to allow the body to be buried on the premises.


pastedGraphic_2.pdf
Murugesan with his pushcart (Photo: R Baskar)
His next choice was the village cremation ground, but the villagers too rejected his plea to perform the funeral. Murugesan decided to cremate the body in an open place near the village using dried leaves. Soon after he lit the pyre, villagers informed the Lalgudi police. They rushed to the spot and found the body partly burned.They doused the fire, recovered the body and arranged for a proper funeral.
"It was a natural death.Since he didn't get permission to bury or cremate the body in the village, he cremated the body in an open place. We stopped it and arranged for a proper funeral," said SI Rajeswari.

Police ruled out foul play in the woman's death and arranged for a certificate from the village administrative officer. Trichy superintendent of police T Senthilkumar told TOI that he was not aware of the incident. "But the police always explore all avenues to help the people.Today's incident is one such case," he said.



வாய்பேச்சு வீரர்களும், எருது பாய்ச்சல் தீரர்களும், திராவிட செம்மல்களும், மரீனா புரட்சியாளர்களும்,
ஆரியத்தை கொளுத்தும் வரலாற்று பெட்டகங்களும்,எந்த இழவு நடந்தாலும் பார்ப்பனரை தூஷிப்பவர்களும் ஆன தமிழர்கள் செத்தாலும் ஏழைக்கு கொள்ளி வைக்க இடம் தரமாட்டார்கள். மாரியாத்தாவும் அவர்களை விட்டு வைக்கமாட்டாள்.

சித்திரத்துக்கு நன்றி: http://keetru.com/literature/poems/images/Sorrow_lady_500.jpg

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டு/ இருவர் மரணம்/ இழப்பீடு

ஜல்லிக்கட்டு/ இருவர் மரணம்/ இழப்பீடு

Innamburan S.Soundararajan Wed, Jan 25, 2017 at 11:03 AM

Bcc: 

ராப்பூசல் ஜல்லிக்கட்டில்  நடந்த இந்த துர்மரண நிகழ்வை உள்ளது உள்ளபடியே தொலைக்காட்சியில் கண்ட போது மனம் பதைபதைத்தது. தமிழ் பண்பும் அங்கு சிதைக்கப்படுவதை கண்டு கவலை மிகுந்தது. இன்றைய சூழ்நிலையில் ட்றம்ப் கூட ஜல்லிக்கட்டை ஆதரிக்காமல் பேசினால், மெரினா கடற்கரையில், 'மாணவர்களால்'உதைப்பட்டு சாவார். ஆகவே, கலித்தொகை ஏறுதழுவலுக்கு ஒவ்வாத வகையில் தற்காலம் நடத்தப்படும் பந்தய சூதாட்டம், இளைஞர்கள் சாவு, காளையில் பீதி, அவசர சட்டம், போராட்டம், பொது மக்கள் அவதி ஆகியவற்றை பற்றி பேச காந்திஜியும், பாரதியாரும் நடுங்கக்கூடிய நன்னாள், இது.

எது எப்படியிருந்தாலும், அகாலமரணம் அடைந்த ராஜாவின்,மோஹனின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

இரு வினாக்கள் எழுகின்றன:

1. திருமாவளவன் அவர்கள்,அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் சொந்த நிதியிலிருந்தோ/ கட்சி நிதியிலிருந்தோ, மற்ற ராப்பூசல் கிராமத்தில் அந்த காளையை பழக்கிய செல்வந்தரோ ஏதாவது உதவினார்களா?
2. இந்த துர்மரணங்கள் விபத்தினால் நிகழவில்லை. வரவழைத்துக்கொண்டவை, சுய விருப்பத்தின் அடிப்படையில். ராஜா ஏழை; குடும்பஸ்தர். மோஹன் படித்த மேதை. வரிப்பணத்தை மேற்படி இழப்பீடுகளில் செலவழிப்பது சரி தானா?
சிந்தனை செய்யுங்கள். காழ்ப்புணர்ச்சி தவிர்க்க வேண்டுகோள்.

இன்னம்பூரான்
*******************************
புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாகட்டிடத் தொழிலாளியான இவருக்கு மனைவி கலாமகன்கள் பொன்மணிநிதர்சன்உள்ளனர்.
ராப்பூசலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றபோதுவாடிவாசலில் ராஜா நின்றுள்ளார்அங்கு சீறிப் பாய்ந்து வந்த காளைராஜாவின் இடுப்பில்முட்டியதால் காயம் அடைந்த ராஜா உயிஇழப்பீடுரிழந்தார்.இதேபோலகீரனூர் அருகே யுள்ள லெட்சுமணபட்டியைச் சேர்ந்த மோகன்எம்.., எம்.பில்படித்தவர்அதிமுக ஆதரவாள ரான மோகன்அமைச்சர் சி.விஜய பாஸ்கருடன் இருந்துராப்பூசல் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடு களைக்கவனித்துள்ளார்.
இந்நிலையில்நேற்று நடை பெற்ற ஜல்லிக்கட்டின்போது காளையை அடக்க மோகன் முயன்ற அவரது இடுப்பில் காளை முட்டியதால் இலுப்பூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்பின்னர்இருவரது சடலங்களும் புதுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை முடித்து ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன.
அவர்களையே நம்பி இருந்த அவர்களது குடும்பத்தினரை தவிக்கவிட்டுச் சென்றதாக இவர்களது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.'
~ தி இந்து ஜனவரி 23, 2017

'ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் நிறைவேற்றிவிட்டோம் என தமிழக அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்புதுக்கோட்டையில் தமிழக அமைச்சர் ஒருவரால் தொடங்கிவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 2 பேர் பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர்சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவதில் அக்கறைகாட்டாமல் அவசர சட்டம் கொண்டுவந்ததற்கு சொந்தம் கொண்டாடுவதில் மட்டுமேஆர்வம் காட்டிய தமிழக அரசின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்உயிரிழந்த இளைஞர்களது மரணத்துக்குதமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய்இழப்பீடு வழங்கவேண்டும்காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும்தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கவேண்டும் என விடுதலைசிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். '

~ தினத்தந்தி &  தி இந்து ஜனவரி 23, 2017


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, January 22, 2017

எங்கே தொலைந்து போனாள், வீரி?

எங்கே தொலைந்து போனாள், வீரி?

Innamburan S.Soundararajan Sun, Jan 22, 2017 at 9:49 PM



எங்கே தொலைந்து போனாள், வீரி?



Friday, September 4, 2015, 5:00
– இன்னம்பூரான்.
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்: செப்டம்பர் 4, 2015

என்றுமில்லாதத் திருநாளாக, இன்று பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன்: ’36 வயதினிலே’. பெண்ணினம் படும் அவத்தைகளை மென்மையாகவும், அழுத்தம்திருத்தமாகவும் நடித்துக்காட்டினார், நடிகர் ஜோதிகா. நினைவுகள் நம்மைக் கேட்டுக்கொண்டு வந்து போவது இல்லை. அவற்றின் போக்கே அலாதி. இறைவனைத் துதிக்கும்போது காதலி தோன்றுவாள்; அவளுடன் அன்யோன்யமாக இருக்கும்போது, என்றோ நம்மிடம் வளர்ந்த பூனைக்குட்டி நினைவில் தோன்றுவான். அந்த மாதிரி, ஜோதிகாவின் நடிப்புத்திறனால், எனக்கு வீரியை பற்றிய கவலை பற்றிக்கொண்டது.

கதாபாத்திரங்கள் எல்லாம் சுத்த கற்பனையே என்று சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் உண்மையைப் பாயாய் சுருட்டிப் பதிவு செய்வார்கள். விமர்சனம் செய்பவரும், தன் பங்குக்கு, ‘இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி’ என்று ஒத்துப்பாடுவார். வீரியின் பெயரை கூட, நான் மாற்றவில்லை. மாற்றினால், அது கதையின் வழுவாக அமையும். அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும், ‘உள்ளது உள்ளபடி’ ஊரையும், மற்ற விவரங்களையும் கொடுக்க நான் தயாராக இல்லை. அவள் பழங்குடி இனம் தான். லம்பாடி என்று பெயர். அதற்காக நான் வம்படிக்கப்போவதில்லை. சொல்வது எல்லாம் நிஜம்; ஆங்காங்கே பொருத்தமான மிகையும், கற்பனையும் துணை புரியும்.

நாங்கள் வடநாட்டின் ஒரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுப் போனபோது, ஏற்கனவே நண்பராக இருந்த முன்னவரின் வீட்டிலேயே நாங்கள் வசிக்க நேரிட்டது. பல அன்றாட அலுவல்களைப் பற்றி பெண்ணரசிகள் பேசிக்கொண்டனர். அதன் பயனாக, கதவோரம் நின்று கொண்டிருந்த பேரழகி வீரி அவர்களின் சிபாரிசின் பேரில் எங்களுக்கும் ஏற்பாடு ஆனது. சில எச்சரிக்கைகளும் தமிழில் கொடுக்கப்பட்டன. அன்றிலிருந்து, வீரி ராஜ்யம் தான். சூது வாது அறியாத 16 வயது பதுமை போன்ற பெண். சிவப்புத்தோலுக்கு மதிப்பு கொடுக்கும் சமுதாயத்தில், அவளுடைய மாநிறம் தூக்கி அடித்தது. புயல் மாதிரி தான் உள்ளே நுழைவாள். கதவைத் திறந்து வைத்திருப்போம். இல்லையெனில் மணி அடித்து கலாட்டா செய்து விடுவாள். ஊரைக் கூட்டி விடுவாள். எதிர் வீடு உள்ளூர் கலெக்டரது. அவர் வீட்டில் மணி அடித்து விட்டு, எங்கள் திறந்த வீட்டில், ‘கை வீசம்மா! கை வீசம்மா’ என்று அட்டகாசமாக நுழைந்து விடுவாள். அந்த மாநிலத்தில் வீட்டுக்குக் கடைநிலை ஊழியர் கிடையாது. அவரே கதவை திறுந்து வந்து, ‘ஓ! வீரியா?’ என்று சிரித்து விட்டுப் போய்விடுவார். யாருமே அவளிடம் கடுஞ்சொல் சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவள் ஒரு குழந்தை.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் வியர்த்தமாயின. அறைகளில் கண நேரத்தில் கூட்டி, பெருக்கி, மெழுகும் வீரி, குளியல் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாள். அது முடிந்த பின் ஜொலிப்பாள்; சோப்பு கணிசமாகக் கரைந்திருக்கும். பவுடர் டப்பா காலி. கூந்தல் தைலம் காலி. வஸந்தா, அவளுக்கு வேண்டிய ஒப்பனைச் சாமான்கள் வாங்கித்தருவதாகவும், எங்கள் பிரத்தியேக சோப்பு வகையறாவை விட்டு வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். எங்கிருந்து கிடைத்ததோ, அவளே பட்டியல் கொடுத்தாள்: பியர்ஸ் க்ளிசரைன் சோப்பு, பாண்ட்ஸ் பவுடர், ஹிமாலயா ஸ்னோ, குஸுமாஞ்சலி என்ற கூந்தல் எண்ணைய். எனக்கு சம்பளம் போதாது என்பதால், நாங்கள் அந்த உயர்தர அலங்கார பொருள்களுக்கு போகவில்லை என்றாலும், அவளுக்கு வாங்கிக்கொடுத்தோம், லாக்டோ காலமைன் உள்பட. நோ யூஸ். அவள் அவற்றுடன் மற்றதையும் உபயோகிப்பாள்; பேசிப்பயன் இல்லை. ஆனால், அவள் மாதிரி வஸந்தாவின் அடர்ந்த கூந்தலுக்கு அகில் புகை சாற்ற, வீரிக்கு இணை வீரியே. சமையல் அறை சூபர்விஷன் செய்யும்போது இரண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, ‘நன்றாயிருக்கிறது’ என்று சான்றிதழ் கொடுப்பாள். ஆகமொத்தம் வீட்டுக்குச் செல்லப்பெண்.
ஒரு நாள் தனக்கு கல்யாணம் என்று சொன்னாள். ஒரு நோஞ்சல் பையனை கொண்டு வந்து, அவன் தான் முறை மாப்பிள்ளை என்றாள். ஏதோ சொல்லி விட்டு, எங்கள் எதிரிலேயே ஒரு ஷொட்டு வாங்கிக்கொண்டான். நாங்கள் திருமணத்துக்கு சீர் எடுத்துச் சென்றிருந்தோம். சிறிது நேரம் தான் இருக்க முடிந்தது. ஒரே டான்ஸ். கொம்மாளம். வேலையை விட்டு விட்டாள். குலத்தொழிலாகிய கிருஷ்ணன், ராதை வகையறா களிமண் பொம்மைகளைச் செய்து தென்னாட்டில் கூவிக்கூவி விற்கப்போவதாகச் சொன்னாள். பல வருடங்கள் கடந்தன. ஒரு நாள் பல்லாவரம் பக்கம் காரில் சென்ற போது வீரி சாயலில் ஒரு பெண்ணைப்பார்த்து, வஸந்தா திரும்பவந்து கவனித்து, உறுதி செய்து கொண்டபின், இறங்கி குசலம் விசாரித்தோம். மூன்று குழந்தைகள்; வாடிய முகம்; மெலிந்து போன உடல். களைப்பு. ஒரு பாடாக, அருகாமையில் இருக்கும் அவர்கள் கூட்டத்தில் இவர்களது பொம்மைகளை ஒப்படைத்து விட்டு, அந்தக் குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்தோம். முசுடாகவே இருந்த அவள் புருஷன் பீடி பிடிக்க வெளியில் போய்விட்டான். குழந்தைகள் புரண்டு விளையாடின. ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கு, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தெரியும் போலிருக்கிறது!

பெருங்குரல் எடுத்து அழுதாள். கணவன் சோற்றுக்குப் பணம் கொடுப்பதில்லை, குடிகாரன், அடிப்பவன் என்றாள். அவனுக்கு மேலும் இரு தாரங்களாம். பஞ்சாயத்தில் விவாகரத்து கேட்டாள், லம்பாடி இன வழக்கப்படி. அந்தக் கட்டப்பஞ்சாயத்து மறுத்து விட்டதாம். மேலும் பல இன்னல்கள் பற்றிச் சொல்லி தேம்பினாள். அதை உங்களிடம் சொல்லமாட்டேன். ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து விட்டு, அவர்களைக் கொண்டு போய் விட்டு வந்தாலும், நாங்கள் ஆவன செய்யவில்லை என்ற சோகம் எங்களை வீட்டு நீங்கவில்லை.
எங்கே தொலைந்து போனாள், வீரி?

சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com