Tuesday, February 28, 2017

கோப்புக்கூட்டல் [1]

Innamburan S.Soundararajan

கோப்புக்கூட்டல் [1]

Innamburan S.Soundararajan Tue, Feb 28, 2017 at 8:55 PM


 கோப்புக்கூட்டல் [1]

ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [1]

மதராஸ் சட்டசபைக்கான தேர்தலில், ஃபெப்ரவரி 23ம் தேதி அதிகாலை கிடைத்த தகவல்படி, 109 இடங்களில் 78 இடங்களை தி.மு.க. கூட்டணி ( ஸ்வதந்திரா + கம்யூனிஸ்ட் மார்க்ஸிட்) கைப்பற்றியது. [இன்றைய கட்சி சார்பு வகையறா யாவரும் அறிந்ததே.] அவற்றில் 62 தி.மு.க.விற்கு மட்டுமே. காங்கிரஸ் கட்சிக்கு படு தோல்வி. அமைச்சர்கள் திருவாளர்கள் வி. ராமையா, என்.எஸ். மன்றாடியார், பி.கக்கன் தோற்றுப்போனார்கள். திரு வி.ராமையாவை தோற்கடித்த  திரு.பி.பொன்னம்பலம் ஒரு பள்ளி ஆசிரியர். 
[ படித்தது :ஹிந்து இதழ்]
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Innamburan S.Soundararajan Tue, Feb 28, 2017 at 9:17 PM

இன்றைய கோப்பு: [2]
மார்ச் 1, 2017
இது நடந்து ஐம்பது வருடங்கள் ஆயின.


***

இன்றைய கோப்பு: [2]

 01 03 2017

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியின் காரணம் 1965ம் வருடம் நடந்தேறிய மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்பு. அந்த காலகட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி கற்பிக்கப்பட்டது. அதற்கு சலுகைகள் இருந்தன. நான் அதன் பொருட்டான பொறுப்பை வகித்து வந்ததால், நடப்பதை உன்னிப்பாக கவனித்து வந்தேன். டில்லிக்கு அழைக்கப்பட்டு, சென்ற என் கூற்றை கேட்க, அரசுக்கு ஹிந்தி ஆலோசகராக பணி புரிந்த பிரபல கவிஞர் ராம்தாரி சிங் 'தினகர்' அவர்களின் தலைமையில் நடந்த நிகழ்வில், தமிழனின் ஆதங்கத்துக்கு, அச்சலுக்கு, வயிற்றுப்பாட்டுக்கு உரியன செய்யவில்லையெனின், நானும் ஹிந்தியை எதிர்ப்பவன் தான் என்றதை பாராட்டிய அவர், ஆவன திருத்தங்கள் செய்தார். என்னை ஊக்கப்படுத்தினார். ஆனால், உண்மையை மறைத்து, மாணவர்களை வழி நடத்தியவர்கள் பிரிவினையை தான் தூண்டினர். மத்திய அரசை விட குறைந்த புரிதல், மாகாண அரசியலர்களுக்கு. 

இந்த காலகட்டத்தில், பெரியார் விரும்பியது காமராஜரின் வெற்றி.அவர் தோற்று, அண்ணா முதல்வர் ஆனதை விரும்பாத ஈ வே ரா. அவர்கள், '... தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரி விடும் துரோகச்செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழி செயல் இல்லாத தமிழன் அரசியலிலோ,, மத இயலிலோ, தமிழ் இயலிலோ, தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கிறார்கள் என்று யாராவது காட்டமுடியுமா?" என்று காட்டமாக எழுதினார் (விடுதலை: 1.10.1967). ஒன்றுக்கொன்று முரணாக பேசுவது அவருடைய வழக்கம் என்றாலும். இவ்வாறு அனுபவத்தின் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளை, எளிதில் உதறி விட முடியாது என்பதை பிற்காலம் உறுதி செய்துள்ளது.
சித்திரத்துக்கு நன்றி: http://img.vikatan.com/news/images/vnr%20mdmk02.jpg



இன்னம்பூரான்