Saturday, June 17, 2017

தமிழ் சமுதாயம் 2067 [4]


தமிழ் சமுதாயம் 2067 [4]

புதன் கிழமை, ஜூன் 14, 2017, 5:29

இன்னம்பூரான்
பிரசுரம்: வல்லமை: https://mail.google.com/mail/u/0/#inbox?compose=15cb387e2b43ecc1
unnamed (2)
தமிழ்மொழியை செவ்வனே கற்க விழைந்த கேரளத்து ராமசுப்ரமண்ய நாவலர் அவர்கள் சம்ஸ்கிருதத்தை ஆதாரஸ்ருதியாக எடுத்துக்கொண்டது அவரது நுண்ணிய அணுகுமுறையின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது; அவர் தமிழன் என்பதில் ஐயமில்லை. இலங்கை தமிழ்நாட்டு பிராந்தியத்தில் இல்லை. ஆனால் இலங்கைவாழ் தமிழர்கள், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், நம்மை விட தமிழார்வம் கொண்டவர்கள், தமிழ்த்தொண்டு செய்தவர்கள் தமிழர்கள் தான். வித்துவான் கணேச ஐயர் அவர்களின் தொல்காப்பிய உரை போற்றத்தக்கது. ஆறுமுக நாவலர், கலாநிதி கைலாசபதி என்று பெரிய பட்டியலே நிறுவலாம். எந்த கணக்கில் அவர்களையும், ஏ.கே.ராமானுஜத்தையும், ஜியார்ஜ் ஹார்ட்டையும் தமிழர் அல்ல என்று ஒதுக்க முடியும்? கடந்த சில நாட்களாக, உலகத் தமிழ் மாநாட்டில். பல தமிழறிஞர்கள் தமிழின் தற்கால நிலை பற்றி கவலை தெரிவித்தார்கள். மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் ஆய்வுகளின், பாடங்களின், ஒலி/ஒளி பரப்புகளின், மொழி வல்லுனர்கள் இயங்கும் அருமையான வழிமுறைகளும், நமது தமிழார்வத்தை விட பன்மடங்கு கூடியவை என்பதை நேரில் கண்டேன்.இனியாவது ராமசுப்ரமண்ய நாவலர்களும், அவரை போன்ற பற்பல பன்மொழி புலவர்களும், தமிழ்மொழியில் முன்னிலை அடைந்து தமிழர்களில் மேன்மக்கள் ஆனார்கள் என்பதை பெரும்போலோர் ஏற்றுக்கொண்டால், அந்த தாராள மனப்பாங்கு 2067 வரை. கவனத்துடன், பேணப்பட்டால், தமிழ் சமுதாயம் பட்டொளி வீசி பறக்கும். இதன் பொருட்டு, எனக்கு அண்மையில் கிடைத்த சில மேற்கோள்களை பகிர்ந்து கொள்கிறேன்.
“சங்ககாலக் கவிதைகள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவற்றிற்கு நிகரான சாதனைகளை நாம் இன்றும் உருவாக்கினால் தான், இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தினர் நம்மை மதிப்பார்கள். உலகம் நம்மை மதிக்கும். இன்றைய நம் தமிழ் வாழ்வை மறு பரிசீலனை செய்யும் ஆக்கங்கள் நம்மிடம் இல்லையென்றால், நேற்று இருந்தவரை பற்றி மட்டுமே பேசுவது பழம் பெருமை பேசுவதாகிவிடும்/
-சுந்தர ராமசாமி 15 06 98 வானொலி உரையிலிருந்து
ஜனத்தொகை கணக்கெடுப்போ, நகரங்களின் மாபெரும் பரப்பளவோ அல்லது தானிய அறுவடையோ ஒரு நாகரீகத்தின் மேன்மைக்கு உண்மையான சின்னங்கள் அல்ல. எத்தகைய மனிதனை அது உருவாக்குகிறது என்பது தான் அதற்கு மேன்மை கிடைப்பதை தீர்வு செய்யும்.”
– ரால்ஃப் வால்டோ எமெர்ஸன்: உலகம் போற்றும் தத்துவ ஞானி)
[The true test of a civilization is, not the census, nor the size of the cities, nor the crops — no, but the kind of man the country turns out. -Ralph Waldo Emerson, essayist (25 May 1803-1882) ]
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://chiasuanchong.files.wordpress.com/2012/03/lingua-franca.jpg?w=840








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com